Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்கிறது வைரமுத்து - இளையராஜா மோதல்!

Featured Replies

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. வைரமுத்துவின் மகன்கள் திருமணத்துக்கு அவர் இளையராஜா வீட்டுக்கே சென்று பத்திரிக்கை கொடுத்தும் இளையராஜா வரவில்லை. அவர் மனைவியே பத்திரிகை வாங்கினார். அவரே திருமணத்துக்கு வந்தார். இளையராஜாவின் மனைவி மறைந்தபோது வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் ஒரே விழாவில்கூட இதுவரை கலந்து கொண்டதில்லை.

 

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமுத்துவும் முன்னணியில் இருக்கும் இரு வார இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இருவருமே ஒருவரை ஒரு காரசாரமாக தாக்கி எழுதி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு சினிமா பாடகராக என்ற செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு இளையராஜா அளித்த பதில் இசை அமைப்பாளருக்கு உதவியாளர் போல எடுபிடி வேலை செய்ய வேண்டும், யாரும் கேட்டால் இசை அமைப்பாளர் என் நண்பர் என்று சொல்ல வேண்டும். தன் பெயரில் மன்றம் வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு விளம்பரம் வைக்க வேண்டும். அடிக்கடி புத்தகம் வெளியீட்டு விழா நடத்தி மற்றவர்கள் புகழ்வதை கேட்டு மகிழ வேண்டும். பணம் செலவு செய்து நிறைய விருதுகளை வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது மறைமுகமாக வைரமுத்துவை தாக்கி எழுதப்பட்டதாகும்.


சமீபத்தில் வைரமுத்துவிடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த வைரமுத்து ஒரு முறை ஜெயகாந்தன் தன் மகன் திருமணத்தை என் திருமண மண்டபத்தில் நடத்தினார். அந்த திருமண அழைப்பிதழை ஒரு இசை அமைப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். பத்திரிகையில் மண்டபத்தின் பெயரை படித்த இசை அமைப்பாளர் நான் அந்த மண்டபதுக்கு எப்படி வருவது என்று கேட்டிருக்கிறார். உடனே வராதவருக்கு எதற்கு அழைப்பு என்று அந்த பத்திரிகையை பிடுங்கி வந்து விட்டார் ஜெயகாந்தன் என்று குறிப்பிட்டிருக்கிறார். வைரமுத்து குறிப்பிடும் இசை அமைப்பாளர் இளையராஜாதான் என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் மறைமுகமாக உங்களை தாக்கி வருகிறார்களே? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து கர்வத்தின் உச்சத்தை தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிர குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது, குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட சிகிச்சை தருவதே சிறந்தது என்று கூறியிருக்கிறார். அதோடு என்னை மறைமுகமாக தாக்குபவர்களுக்கு சைகோசிஸ் என்ற மனநோய் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

 

மோதல் முற்றி வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படித் தாக்கிக் கொள்வார்களோ தெரியவில்லை.


இந்த பங்காளிச் சண்டைக்கு முடிவே இல்லையா?

 

http://tamil.yahoo.com/%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%9C-050000799.html

  • தொடங்கியவர்
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமுத்துவும் முன்னணியில் இருக்கும் இரு வார இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இருவருமே ஒருவரை ஒரு காரசாரமாக தாக்கி எழுதி வருகிறார்கள்.

 

சில வாரங்களுக்கு முன்பு சினிமா பாடகராக என்ற செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு இளையராஜா அளித்த பதில் இசை அமைப்பாளருக்கு உதவியாளர் போல எடுபிடி வேலை செய்ய வேண்டும், யாரும் கேட்டால் இசை அமைப்பாளர் என் நண்பர் என்று சொல்ல வேண்டும். தன் பெயரில் மன்றம் வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு விளம்பரம் வைக்க வேண்டும். அடிக்கடி புத்தகம் வெளியீட்டு விழா நடத்தி மற்றவர்கள் புகழ்வதை கேட்டு மகிழ வேண்டும். பணம் செலவு செய்து நிறைய விருதுகளை வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது மறைமுகமாக வைரமுத்துவை தாக்கி எழுதப்பட்டதாகும்.

 

போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை ... நட்பையே அழித்து ஒட்டுமொத்த தமிழக வண்ணத்திரையையே தலைகுனிய வைத்து வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனிடம் சிறிதுகாலம் வேலை செய்த அனுபவத்தில் அவரைப் போலவே வைரமுத்துவும் வேகமாக வரிகளைத் தரவேண்டும் என இளையராஜா எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லையே.. கவிஞர் பூங்காக்களில் அமர்ந்து வரிகளைத் தேடிக் கொண்டுவந்து தருவதற்குள் இசையமைப்பாளர் பொறுமையை இழந்துவிட்டார். :D

 

அதுமட்டுமில்லாமல், கொண்டுவந்த வரிகள் கொடுத்த சந்தத்தை மாற்றுவதுபோல் அமைந்தபோதெல்லாம் சண்டை வந்துள்ளது. இந்தச் சிக்கலை என்னால் உணர முடிகிறது. சந்தங்களுக்கும் பின்னணி இசைக் கோர்ப்பிற்கும் ஆழமான தொடர்பு உண்டு. சந்தங்களை மாற்றுவதால் பின்னணி இசை சிதைந்துபோகும். ஆனால் பல இசையமைப்பாளர்கள் இவ்வளவுதூரம் நுணுக்கம் பார்ப்பதில்லை. அதனால் அவர்கள் இதைப்பற்றிப் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை. வெறும் காலப்பிரமாணத்துக்குள் வரிகள் வந்தால் போதுமென்று விட்டுவிடுவார்கள். :D
 

  • தொடங்கியவர்

இளையராஜாவிற்கும் இரகுமானுக்கும் இடையில் கூட பொறாமை என்று முன்னர் ஒரு செய்தி வந்திருந்தது.

பழனி பாஸ்கர், மன்னார்குடி.

 

''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா?''

 

''நீண்ட ஆண்டுகளாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என் மௌனமே பதிலாக இருந்தது. இன்று அந்தப் போலி மௌனத்தின் பூட்டை உடைக்கிறேன்.

பாரதிராஜா - இளையராஜா இருவரும் தமிழ் சினிமாவில் தடம் சமைத்தவர்கள்; தத்தம் துறையில் தலைமை பூண்டவர்கள். அவர்கள் பெற்ற வெற்றியில்தான் நான் ஒட்டிக்கொண்டேனே தவிர, என்னால் அவர்கள் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், என் வருகைக்கு முன்னும் பிரிவுக்குப் பின்னும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.

 

பிரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய முடியுமா என்கிறீர்கள். ஆனால், ஒரு தலைமுறை கடந்துவிட்டது. சமூகம் இடம்பெயர்ந்துவிட்டது. சரக்கு உன்னதமாக இருந்தாலும் சந்தையின் தேவை மாறிவிட்டது.

 

இப்போது இணைந்தால் பழைய பாணி எடுபடுமா? அறுபதாம் கல்யாணத்துக்குப் பிறகும் தம்பதிகள் ஒரே அறையில் தங்கலாம். அதற்குப் பெயர் முதலிரவா?

வாத்தியங்களில் இருந்த இசை தொழில்நுட்பத்துக்குத் தாவிவிட்டது. மீண்டும் பழைய பாணியில் பாடல்கள் அமைத்தால் நவீனமாக இல்லை என்பார்கள். நவீனமாக இசையமைத்தால் பழைய பாடல் போல் இல்லை என்பார்கள். ஆகவே, எங்களின் பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருப்பதுதான் ரசிகனுக்கு விஷப்பரீட்சை இல்லாத விருந்தாக இருக்கும். எனவே, நாங்கள் இணைவது என்றாவது சாத்தியமாக இருக்கலாம்; இயங்குவது சாத்தியமாக இருக்குமா?''

 

மேற்சொன்ன பதிலும் விகடனில் வைரமுத்து வின் விகடன் மேடை எனும் அவரது கேள்வி பதிலில் வந்தது தான். ஆனால் இந்தப் பதிலால் மீடியா வியாபாரிகளுக்கு வியாபாரம் இல்லை என்பதால் கவனிக்கப்படச் செய்யவில்லை.

 

மூலம்: http://www.vikatan.com/anandavikatan/Exclusive/26505-vairamuthu-question-and-answer.html#cmt241

(விகடன் உறுப்பினர்களுக்கு மட்டும் இது வேலை செய்யும்)

 

ஆனால் எமக்கு? ஈழத்தமிழர்களுக்கு?

 

நாம் பொது எதிரியை விட்டு விட்டு மற்ற எல்லார் மீதும் வீணாக கவனத்தை குவிக்க வைக்கப்படுகின்றோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.