Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பியத் தடை முட்டாள்த்தனமானது -பிறையன் செனிவிரட்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பியத் தடை முட்டாள்த்தனமானது- புலிகளின் முன் உள்ள தெரிவு யுத்தம்தான்: பிறையன் செனிவிரட்ன

ஈழப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னுள்ள தெரிவு யுத்தம்தான் என்று சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் உறவினரும் மருத்துவருமான பிறையன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார்.

"புதினம்" இணையத்தளத்துக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையானது தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்கு எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?

பதில்: ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்பட்ட முட்டாள்த்தனமான முடிவு என்றே இதை நான் கூறுவேன். இது விடயத்தில் சில கருத்துக்களை அலசுவது பொருத்தமாக இருக்கும்.

- சமாதான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தக்கோரும் நாடுகள் இந்தத் தடை மூலம் என்ன விடயத்தை சொல்லவிழைகின்றன? அமைதி சாராத வழியில் தீர்வை காணுமாறு வலியுறுத்துகின்றனவா? அப்படியானால் அது எந்த வழி என்று உலகுக்கு தெரியும்படி அவர்களால் கூறமுடியுமா?

- விடுதலைப் புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு சிறிலங்கா. அப்படியிருக்கையில் அந்த அமைப்பு மீது தாங்கள் தடையை விதிக்காமல் மற்றைய நாடுகள் தடைபோட வேண்டும் என்று வலியுறுத்தி வருவது எதற்காக? இந்த கபட நாடகத்தை ஆடுவது எதற்காக?

- சரி! இந்தத்தடை மூலம் விடுதலைப் புலிகளுக்கு சேரும் நிதியை முடக்கியாயிற்று. வன்னியிலுள்ள மக்களை பராமரிப்பது யார்? சிறிலங்கா அரசாங்கமா? இதுவரை அவர்கள் அதை செய்யவில்லையே. ஆகவே தமிழனும் தமிழனுக்கு உதவி செய்யக்கூடாது. தாமும் உதவி செய்யமாட்டோம். உதவி செய்பவனையும் விடமாட்டோம் என்றால் அவர்களை சாக விடுங்கள் என்பதுதான் தடை மூலம் விடுக்கப்படும் செய்தியா?

- தடை விதிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு அனைத்து நாடுகளிலும் அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. தடை மூலம் சர்வதேச சமூகம் இதைத்தான் செய்ய விரும்புகிறது என்றால் அது வரவேற்கக்கூடியது.

- பிரிட்டனில் என்ன நடந்தது? ஐரிஷ் புரட்சி இராணுவமான ஐ.ஆர். ஏயை தடை செய்த பிரிட்டன் அரசு அத்தடையை பின்னர் நீக்கியது. ஏன்? தனது சொந்த அனுபவத்திலிருந்து கூட பிரிட்டன் இன்னமும் பாடம் கற்கவில்லையா?

கேள்வி: தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்ன விதமான தந்திரோபாயத்தை தமிழர் விவகாரத்தில் கையாள்கிறார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்..?

பதில்: இதற்கான பதில் மிக எளிதான ஒன்று.

தமிழீழ விடுதலைபப் புலிகளை பலமிழக்கச் செய்யும் ஒரு படிமுறையையே மகிந்த தற்போது கையாண்டு வருகிறார்.

அப்படியானால் அமைதிப் பேச்சு அவை இவை எல்லாம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் வெறும் பம்மாத்து. காலத்தை இழுத்தடிப்பதற்கு மகிந்த தூக்கியுள்ள கருவிதான் அமைதிப் பேச்சு. இந்தக் காலப்பகுதிக்குள் தமது ஆயுதங்களையும் ஆளணியையும் பெருக்கி விடுலைப் புலிகளை அழித்தொழித்து பலவீனப்படுத்தி தமிழ்மக்களையும் பூண்டோடு அழிக்கும் திட்டம்தான் அது.

பேய் பிசாசுகளின் மீது நம்பிக்கை வைத்து வழிபாடு செய்வது போன்ற மகிந்தவின் இந்த திட்டத்தைத்தான் 1994 இல் பதவிக்கு வந்த சந்திரிகா செய்தார். தற்போது மகிந்த செய்கிறார்.அவ்வளவுதான்.

கேள்வி: ஈழப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது விடுதலைப் புலிகளுக்கு முன்னுள்ள தெரிவு என்ன என்று நினைக்கிறீர்கள்..?

பதில்: யுத்தம்தான். ஜே.வி.பி மற்றும் சிஹல உறுமய ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ள ராஜபக்ச அரசுடன் செய்யக்கூடிய நடவடிக்கை தற்போதைக்கு யுத்தம்தான். அதைதவிர வேறு ஒன்றும் உசிதமான தெரிவு தற்போதைக்கு புலிகளுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கேள்வி: தமிழர்களின் பிரச்சினையை சிறிலங்காவின் கடும்போக்குள்ள அரசு ஒன்று கையாள்கிறது என்று தெரிந்தும் சர்வதேச சமூகம் தமிழர்கள் விடயத்தில் சரியான முடிவை எடுப்பதாக தெரியவில்லையே ஏன்.?

பதில்: ஆயுத விற்பனை என்ற விடயத்தை கருத்தில் கொண்டு இயங்கும் வரை உலக நாடுகள் நீதியான முடிவை எடுக்கமாட்டாது.

அந்த ஆயுதங்கள்தான் தமிழ்மக்களை எந்தக்காரணமும் இன்றி கொலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

விற்கப்படும் ஆயுதங்கள் அந்தந்த நாடுகளில் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன என்று தெரியாமல் உலக நாடுகள் ஆயுத விற்பனையை மேற்கொள்கின்றன என்று நினைக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை.

அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு இது தொடர்பில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளன. அப்படியில்லை என்று நீங்கள் நினைத்தால் அந்தத் தூதரக அதிகாரிகள் எப்போதோ பதவி மாற்றப்பட்டிருப்பார்கள்.

கேள்வி: சிறிலங்கா மற்றும் விடுதலைப் புலிகள் விடயத்தில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் என்ன விதமான பங்களிப்பை நல்கி வருகின்றன என்று நீங்கள் கருதுகிறீர்கள்? சமீப காலமாக அத்தகைய தலையீட்டில் மாற்றம் காணப்படுவதாக உணர்கிறீர்களா.?

பதில்: ஈழம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கோட்பாடு என்கிறது அமெரிக்கா. அதை சொல்வதற்கு அவர்கள் யார்?

ஈழம் தரக்கோரி அவர்களிடம் யார் கேட்டது?

அமெரிக்காவிடம் ஒரு கவர்ச்சிக் கனி உள்ளது. அதாவது தன்னிடம் உள்ள பழைய ஆயுதங்களை காட்டி அது தொடர்பில் ஆசை காட்டி மற்றைய நாடுகளை மயக்குவதே அது.

நான் அமெரிக்காவுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தியா இருக்கும் வரை திருகோணமலையை அமெரிக்காவால் ஒன்றும் செய்யமுடியாது. தற்போது அமெரிக்கத் தூதுவராக மாற்றலாகியுள்ள புதிய தூதுவருக்கும் இதைத்தான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: தற்போதைய நிலையில் யுத்தம் வெடித்தால் என்ன நடக்கும் என்று கருதுகிறீர்கள்? வெளிநாடுகளின் தலையீடுகள் ஏதாவது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா.?

பதில்: வெளிநாட்டுத் தலையீடு என்று எதைச் சொல்கிறீர்கள்? அமெரிக்காவையா..? ஈராக்குடன் மாரடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா இன்னொரு தலையிடியை விலை கொடுத்து வாங்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அடுத்தது யார் இந்தியாவா? 1989 இல் சிறிலங்கா விடயத்தில் விரல்களை சுட்டுக்கொண்ட இந்தியா இன்னொரு முறை சிறிலங்கா விடயத்தில் கை வைக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கமுடியாது.

அண்மையில் இந்தியா சென்று உதவி கேட்ட மகிந்தவிடம் நாட்டுக்கு போய் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களை நடத்துங்கள் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிவைத்தமை இதனால்தான்.

தமிழ்நாட்டில் புதிய முதல்வர் கருணாநிதி, பெரும்பான்மை பலத்துடன் வலுவுடன் உள்ளார். ஈழத்தமிழ் ஆதரவாளரான அவர், மன்மோகன் சிங் அரசை தனது பிடியில் வைத்துள்ளார்.

அண்மையில் திருகோணமலை அகதிகள் இந்தியாவுக்கு சென்றபோது இனியும் நாம் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது என்றார் பிறையன் செனிவிரட்ன.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறையன் செனவிரட்டினாவின் கட்டுரைகளினைப்பார்க்க(ஆங்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.