Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமான அவுஸ்திரேலியா வருவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் இணக்கப்பாடு:-

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ytUWWxuqqPw[/xml]

 

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

நான்கு அம்சத் திட்டமொன்று தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

 

சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுப்பது தொடர்பில் இலங்ழைக அரசாங்கததுடனும், கடற்படையினருடனும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 

இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த பொப் கார் இன்றைய தினம் தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டார்.

இந்த விஜயம் தொடர்பில்ழ இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

நீர்ப் பரப்புக்களில் ஒத்துழைப்பு, புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், ஆட்கடத்தல் நடைபெறும் இடங்களுக்கான வசதிகளை குறைத்தல் உள்ளிட்ட நான்கு விடயங்கள் குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போர் பணத்தை இழப்பதுடன் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடும் என வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.

 

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கையுடன் பூரண ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சட்டவிரோதமான அவுஸ்திரேலியா வருவோர் 72 மணித்தியாலத்துள் நாடுகடத்தப்படுவர்!

 

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் வகையில் சட்டவிரோதமாக குடியேறுவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தஞ்சம் கோருவோரை தாம் பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்களாகவே கருதுவதாவும், அவர்கள் அவுஸ்திரேலியாவில் வருமானத்தை ஈட்டி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

 

இன்றைய செய்தியாளர் மாநாட்டின் போது அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி அகதி அந்தஸ்து கோருவோரை நாம் பொருளாதார தஞ்சக் கோரிக்கையாளர்களாகவே கருதுகின்றோம். அவர்கள் அவுஸ்திரேலியாவில் வருமானம் ஈட்டலாம் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்து செல்கின்றனர். 

மக்கள் இவ்வாறு பயணிப்பதானால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. ஏனெனில் அவுஸ்திரேலிய அரசு புதிய சட்டதிட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதாவது சட்டவிரோதமாக குடியேறி புகலிடம் கோருவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 800 பேர் இவ்வாறு நடுகடத்தப்பட்டுள்ளனர்.

 

நிலைமை இவ்வாறிருக்க பணம் சம்பாதிக்கும் நோக்கில் சில கடத்தல்காரார்கள் மக்களை ஏமாற்றி, அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெறலாம், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை வளர்த்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

இவ்வாறு ஏமாறும் மக்களும் பணத்தை கொடுத்து, உயிர் ஆபத்து மிக்க பாதுகாப்பற்ற பணங்களை மேற்கொள்கின்றனர். இதில் சிலர் உயிரிழந்து இருக்கினறனர்.

 

எனவே இனிவரும் காலங்களில் அவ்வாறு யாரும் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறினால் அவர்கள் 72 மணித்தியாலத்திற்குள் திருப்பியனுப்பப்படுவர் என்ற கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களைத் தடுப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து ஒரு செயற்திட்டமொன்றையும் மேற்கொள்ளவுள்ளோம். 

 

கடல்வழி பாதுகாப்பு ஒத்துழைப்பு, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உட்பட 4 அம்ச வேலைத்திட்டமென்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86666/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.