Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயன் காலண்டரின்படி உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு.

Featured Replies

மாயன் காலண்டரின் கூற்றுப்படி உலகம் அழிந்தால், அதிலிருந்து தப்பிக்க கலிபோர்னியாவை சேர்ந்த Ron Hubbard என்பவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடைய, லெதர் சோபா, பிளாஸ்மா டிவி அடங்கிய உருண்டை வடிவ ஆடம்பர வீடு ஒன்றை கட்டி விற்பனை செய்து வருகிறார்.

 

மிகப்பெரிய குண்டுவெடிப்பையும் தாங்கக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டின் உள்ளே, ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ளது போன்ற ஆடம்பர வசதிகள் கொண்டது. இந்த வீட்டை ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை வாடகைக்கோ அல்லது முழு விலை கொடுத்து விலைக்கோ வாங்கிக்கொள்ளலாம் என Ron Hubbard அறிவிப்பு செய்துள்ளார். மாயன் காலண்டரின் பட உலகம் அழிய நான்கே நாட்கள் இருப்பதாக எண்ணி, உலக அழிவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்பவர் இந்த வீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என இவருடைய அறிவிப்பு பலரைக் கவர்ந்திருப்பதால், இந்த வீட்டில் வாடகைக்கு வரவும், விலைக்கு வாங்கவும் பலர் முன்வருகின்றனர்.

 

இந்த வீடு நியுக்ளியர் அணுகுண்டு, மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தும் வேதியியல் குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் எனவும் இதன் விலை  £46,000. முதல் உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் பாதுகாப்பாக உள்ள இந்த ஆடம்பர வீட்டை வாங்குவதற்கு, மாயன் காலண்டர் மேல் நம்பிக்கை வைத்துள்ள பலர் வாங்குவதற்கு போட்டி போடுகின்றனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

 

 

ஆடம்பரமான அழிவில் இருந்து பாதுகாக்கும் உருண்டை வீட்டின் அதிஅற்புத படங்கள் பார்க்க.....

இது ஏற்கனவே யாழ் கள அங்கத்தவர்களுக்காக நிர்வாகத்தினர் வழங்கிய வீடுகளின் படங்களை  ஒத்ததாகவுள்ளது.எங்கோ தப்பு நடந்துள்ளது போல

  • கருத்துக்கள உறவுகள்

மாயன் காலண்டரின் கூற்றுப்படி உலகம் அழிந்தால், அதிலிருந்து தப்பிக்க கலிபோர்னியாவை சேர்ந்த Ron Hubbard என்பவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடைய, லெதர் சோபா, பிளாஸ்மா டிவி அடங்கிய உருண்டை வடிவ ஆடம்பர வீடு ஒன்றை கட்டி விற்பனை செய்து வருகிறார்.

 

இன்னும்... உலகம் அழிய மூன்று நாள் தான்... இருக்குது.

அதற்கிடையில்... கனடாவில் இருந்து, ஓடர் பண்ணி... இந்த வீட்டை வாங்கிக் கட்டுவதற்கு நேரம்... காணாது.

அதுகிடக்க... உலகம் அழிஞ்சாப் பிறகு ரி.வி. வேலை செய்யுமா?

இன்னும்... உலகம் அழிய மூன்று நாள் தான்... இருக்குது.

அதற்கிடையில்... கனடாவில் இருந்து, ஓடர் பண்ணி... இந்த வீட்டை வாங்கிக் கட்டுவதற்கு நேரம்... காணாது.

அதுகிடக்க... உலகம் அழிஞ்சாப் பிறகு ரி.வி. வேலை செய்யுமா?

 

 இப்படியெல்லாம் குறுக்கு கேள்விகள் கேட்கப்படாது :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு மழை, மீன்மழை, கடல்பாம்புகள் படையெடுப்பு - அசாதாரண நிகழ்வுகளால் பதற்றத்தில் சிறிலங்கா

 

சிறிலங்காவில் அசாதாரண நிகழ்வுகள் சிலவற்றால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டு வருகிறது. 

மாயன் நாட்காட்டி குறித்த வதந்தி சிறிலங்காவில் அதிக பீதியை ஏற்படுத்தியிருந்த நிலையில், விண்கற்கள் சில விழுந்த சம்பவங்களும் கடந்த வாரம் இடம்பெற்றன. 

இதனால் பீதியுற்றிருந்த மக்களுக்கு நேற்று, காலி, மாத்தறை பகுதிகளில் பெய்த சிவப்பு மழை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. 

ஏற்கனவே சிறிலங்காவின் பல இடங்களில் சிவப்பு மழை பெய்திருந்தது. 

பொலநறுவையில் அசாதாரணமாக நாய்கள் இறந்து கிடந்ததற்கும் சிவப்பு மழையின் தாக்கமே காரணம் என்றும் கூறப்பட்டது. 

இந்தநிலையில், நேற்று மாத்தறை, கிரிந்த, புஹுல்வெல்ல பிரதேசத்திலும் சிவப்பு மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் வரை இந்த மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேவேளை, காலியில் மத்தேகம, வந்துரம்பையிலும் நேற்று சுமார் 15 நிமிடங்கள் சிகப்பு மழை பெய்துள்ளது. 

மேலும் கம்புறுப்பிட்டியவில் நேற்று மழையுடன் பெரிய மீன்களும் வானத்தில் இருந்து வீழ்ந்துள்ளன. 

இதனால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருந்தொகைப் பாம்புகள் நேற்று மாலை படையெடுத்துள்ளன. 

இரண்டு தொடக்கம் நான்கு அடி நீளம் வரையான இந்தப் பாம்புகளை காண பொதுமக்கள் கூடி வருகின்றனர். 

கடந்த 2004ம் டிசம்பர் 26ம் நாள் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரும், இதுபோன்று கல்லடிப் பாலத்தில் பெருந்தொகைப் பாம்புகள் படையெடுத்திருந்தன. 

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட முன்னரும் இதுபோன்று கல்லடிப் பாலத்துக்குக் கீழ் பெருந்தொகைப் பாம்புகள் படையெடுத்து வந்தன. 

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட நினைவு நாள் நெருங்கி வரும் நிலையிலும், மாயன் நாட்காட்டி பற்றிய வதந்தி பரவியுள்ள நிலையிலும், நிகழ்ந்து வரும் இத்தகைய அசாதாரண சம்பவங்கள் சிறிலங்கா மக்களிடையே பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

எனினும், சிவப்பு மழை, மீன் மழை, பாம்புகளின் படையெடுப்பு, நாய்களின் அசாதாரண மரணங்கள், விண்கற்கள் பற்றிய அச்சம் போன்ற சந்தேகங்களைத் தீர்க்க, தகுந்த விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அளிக்க சிறிலங்கா அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20121218107461

அழியாதுங்க அழிச்சிடுவாங்க

  • கருத்துக்கள உறவுகள்

மேகம்  கடல் தண்ணீர் குடித்தால் மீன்களுடன் மழை பெய்வது இயற்க்கை தானே. எதுக்கும் எதுக்குமோ தேவை  இல்லாமல் முடிச்சுப் போடுகிறார்கள்.

மேகம்  கடல் தண்ணீர் குடித்தால் மீன்களுடன் மழை பெய்வது இயற்க்கை தானே. எதுக்கும் எதுக்குமோ தேவை  இல்லாமல் முடிச்சுப் போடுகிறார்கள்.

 

 நோ.... நோ.....செய்த பாவங்கள் சும்மாய் விடாது பாருங்கோ! செய்தது அரசாகினும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் மக்களல்லவா.என்ன செய்வது செய்த பாவங்கள்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.