Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மணி, சூரியகந்த படுகொலைகளை ஞாபகப்படுத்தும் மாத்தளை எலும்புக்கூடுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

matala_bones_002-100x100.jpg

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை இலங்கையரால் குறிப்பாக தமிழர்களால் அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது. ஆம் இலங்கை வரலாற்றில் கறுப்புப்ள்ளியை ஏற்படுத்திய ஒரு விடயமாக இது அமைந்தது.முழு உலகையே இலங்கையை கேள்விக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளிய விடயங்களில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம்.
இதேபோல் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு விவகாரமாக சூரியகந்த மனித புதைகுழியைக் குறிப்பிடலாம்.
இதிலிருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டதுடன் உலக அரங்கில் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இதேபோன்று மிருசுவில் மனித புதைகுழி விவகாரம், துரையப்பா மைதான புதைகுழி விவகாரம் ஆகியனவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
அவ்வகையில் தற்போது மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை எலும்புக்கூடுகள்
மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தினுள் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதற்தடவையாக மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
வைத்தியசாலை வளாகத்தில் உயிரியல் வாயுப் பிரிவொன்றை நிர்மாணிக்கும் முகமாக அத்திபாரக் கிடங்கு தோண்டும் நடவடிக்கையின் போதே இவை முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் 6 எலும்புக் கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேடல்களை அடுத்து மொத்தமாக இதுவரை 67 ( இக் கட்டுரை எழுதப்படும் வரை) எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் தொடர்ச்சியாக தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இச் சம்பவமானது இலங்கையில் சற்று பரப்பை ஏற்படுத்தியது. இவை யாருடைய எலும்புக்கூடுகள்? எக்காரணத்திற்காக இங்கு புதைக்கப்பட்டன? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணமிருந்தன.
வைத்தியசாலை வளாகத்தினுள் புதைக்கப்பட்டுள்ள போதிலும் இவை தொடர்பான எவ்விதமான உத்தியோகபூர்வ பதிவுகளும் காணப்படவில்லை. இது தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லாததையடுத்து வதந்திகளும் ஏராளமாகப் பரவத்தொடங்கின.
இதுமட்டுமன்றி பல்வேறு தரப்பினராலும் பல்வேறு வகையாக இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. வைத்தியசாலை வளாகத்தினுள் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 40 வருடங்கள் பழைமையானதென உடனே செய்திகள் வெளியாகின.
இதேபோன்று எலும்புக்கூடுகள் 1971 அல்லது 1988-1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களுடையது என ஒரு சாரார் கருத்து வெளியிட ஆரம்பித்தனர்.
அக்காலப்பகுதியில் மாத்தளையின் பல பகுதிகளில் இராணுவ முகாம்களும், சித்திரவதை கூடங்களும் அமைக்கப்பட்டிருந்ததாகவும் எனவே நிச்சயமாக இவை ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவையே எனக்கூறி அவர்கள் தங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்கின்றனர்.
ஒரு சாராரோ இவை ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களினுடையது அல்லவென தெரிவிக்கின்றனர்.
மாறாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியம்மை நோய் பரவியதாகவும் எனவே இது அந்நோயின் தாக்கத்துக்குள்ளாகி கொல்லப்பட்டவர்களினுடையது எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அக்காலப்பகுதியில் நோய்த்தொற்றுக்குள்ளாகியோர் அவர்களது வீடுகளுக்கு செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லையெனவும் அவர்களே அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோல் பெரியம்மை நோயானது உலகிலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் அதுவொரு தொற்று நோய் என்பதால் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளினால் அவை மீண்டும் பரவும் அபாயம் நிலவுவதாகவும் வதந்திகளையும் கிளப்பியுள்ளனர்.
ஒரு சாரார் இவை 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகளே எனக் கூறி வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு தரப்பினரால் பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. இதில் எதை நம்புவது? என பொதுமக்களுக்கு குழப்பமாக உள்ளது.
எனினும் தொடர்ச்சியாக வெளியாகிவரும் தகவல்களை மாத்தளை மாவட்ட சட்ட வைத்திய ஆலோசகர் அஜித் ஜயசேன முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை முடிவடையும் முன்னர் எதனையும் உறுதியாகக் கூற முடியாதென அவர் கூறுகின்றார். தொடர்ச்சியாக வெளியாகிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியுள்ள அவர் ஊடகங்களும் உடனே எவ்விதமான முடிவுகளுக்கும் வரக்கூடாதென தெரிவித்துள்ளார்.
இதே வைத்தியசாலை வளாகம் 20110 ஆம் ஆண்டும் உயிரியல் வாயுப் பிரிவுகள் இரண்டை நிர்மாணிப்பதற்கென தோண்டப்பட்டதாகவும் அஜித் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது பல ஆதாரங்கள் அழிந்து போயிருக்கலாம் எனவும், அதன்போது மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அஜித் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வெளியாகும் உறுதி செய்யப்படாத தகவல்கள் அனைத்தும் குறித்த விசாரணையை திசை திருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல் இக்கொலைகள் 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிளர்ச்சியுடன் தொடர்புபட்டதல்லவெனவும் அக்காலப்பகுதியில் பெரியளவிலான படுகொலைகள் இடம்பெறவில்லையெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இவை 1988- 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என சிலர் சந்தேகிக்கின்றனர். அக் காலப்பகுதியில் இக்கொலைகள் இடம்பெற்றிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவ்விடயம் தொடர்பில் தற்போது மும்முரமாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் சுமார் 67 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதுமட்டுமன்றி தேடல் பணிகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் மேலும் பல எலும்புக்கூடுகள் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறு நிலவுவது கவலைக்குரிய விடயமாகவுள்ளது.
பொலிஸ் இரகசியப் பிரிவினரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் தொல்பொருளியல் ஆய்வாளர்களும் எலும்புக்கூடுகளை ஆராயும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விடயமானது மக்களிடையே ஒருவித அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மனித உடல்கள் எவ்வித மரியாதையுமன்றி, யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய விடயமாகும்.
நாகரிக வளர்ச்சியடைந்த சமூகமொன்று இறந்த உடலொன்றை மரியாதைகள் எதுவும் வழங்காமல் அடக்கம் செய்யுமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
அவ்வாறு செய்யப்படுமானால் அது எத்தகைய சமூகமொன்றின் நடவடிக்கையாக இருக்குமென்பதும் ஆராயப்படவேண்டியுள்ளது.
அதேபோல் இவ்விவகாரத்தை மனித சமுதாயத்திற்கெதிரானவொரு பாரிய குற்றமாக கருதவேண்டியுள்ளதுடன் அதன் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பெனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மக்களும் இது தொடர்பில் வெளியாகும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் உத்தியோகபூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்கவேண்டியது அவசியமாகின்றது.
அரசியல் கட்சிகள் பலவும் இது தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
அதேபோல் அதிகாரிகளும் சுயாதீனமான, எவ்வித தலையீடுகளும் அற்ற நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
அரசும் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி உண்மை நிலையை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதும், விசாரணை முடிவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியான நியாத்தை வழங்கும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

- சண்முகராஜா கவிந்தன் -

http://www.sarithamnews.com/?p=1339

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.