Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1970ம் ஆண்டு வரலாற்று நிகழ்வுகள் மீளவும் அரங்கேறுகின்றன - எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

M-A-S.jpg

சிறிலங்காவின் இனப்பிரச்சினையில் 2012 நவம்பர் 27 என்பது ஒரு வித்தியாசமான மைல்கல்லாக காணப்படுகிறது. இந்த நாளன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர் தின நிகழ்வைக் கொண்டாடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி ஒன்றினுள் அத்துமீறி நுழைந்தனர். 

இதற்கு மறுநாள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் நால்வரை சிறிலங்கா காவற்துறையின் கீழ் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைதுசெய்தனர். இதனுடன் தொடர்புபட்ட வேறு 40 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தவிர வேறெவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சொந்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த மாணவர்கள் 'புனர்வாழ்வுக்காக' அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பழைய வரலாற்றுச் சம்பவங்களுடன் தற்போதைய நவம்பர் 27 சம்பவத்தை ஒப்பீடு செய்துகொள்வதென்பது மிக முக்கியமானதாகும். 

1970களின் ஆரம்பத்தில் சிறிலங்காவில் வாழ்ந்த தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். குறிப்பிட்ட சில முக்கிய உரிமைகன் இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு தனிப்பட்ட பரிந்துரைகளும் பெரும்பான்மை அதிகார வர்க்கத்தால் தோற்கடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து வெளிநடப்புச் செய்தது. இதன் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தனது நாடாளுமன்றப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். 

தமிழ் மக்கள் தமது தீர்மானத்தில் உறுதியாக நிற்பதையும், தமிழ் மக்கள் சிறிலங்காவின் முதலாம் குடியரசு யாப்பை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்த தலைவர் செல்வநாயகம் சிறிலங்கா அரசாங்கம் மீண்டுமொரு தேர்தலை நடாத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அப்போது அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தியாகராஜா, அருளம்பலம் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் பதவியிலிருந்தனர். இந்தத் தேர்தலை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்த போதிலும் இறுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 

இக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. அதாவது தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதைத் தடுப்பதற்காக தரப்படுத்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழ்ப் பெற்றோர் தமது பிள்ளைகள் உயர்கல்வி கற்கவேண்டும் என்பதற்காக தமது நிலங்களை விற்றும் அடகுவைத்தும் அவர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்தனர். தமிழ் மக்கள் இவ்வாறு ஓரங்கட்டப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கு இளையோர்கள் புலம்பெயர்ந்தனர். பின்னர் இவர்கள் முதலாவது ஆயுதக் குழுக்களாக உருவெடுத்தனர். 

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்களில் ஈழ மாணவர்களின் பொதுச் சங்கம் மற்றும் மாணவர்களின் ஈழப் புரட்சிகர அமைப்பு என அழைக்கப்படும் ஈரோஸ் ஆகியனவும் உள்ளடங்குகின்றன. இவ்விரு அமைப்புக்களும் மாணவர் அமைப்புக்கள் என்பது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 

இந்த மாணவர் அமைப்புக்கள் தோற்றம் பெற்று சிறிது காலத்தின் பின்னர் உருவாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது மாணவர் அமைப்புக்களின் தோற்றத்தின் பகுதியானது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். 1970களின் மத்தியில் தமிழ் இளையோர்கள் தமக்கான உயர் கல்வி உரிமை மறுக்கப்பட்டமை போன்ற பல்வேறு காரணங்களால் தமது போராட்டங்களைத் தீவிரப்படுத்தினர். இவ்வாறு ஓரங்கட்டல்களை எதிர்த்து தமிழ் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 

இவர்கள் ஜனநாயக வழியில் போராட்டங்களை நடாத்திய போதிலும் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றங்களும் முன்வைக்கப்படாது நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்படாது தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தமிழ் இளையோர்களில் 40ற்கும் மேற்பட்டவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு விசாரணைகளுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர். 

கொழும்பில் அணிசேரா உச்சி மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெறுவதற்கு முன்னர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட மாணவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுள் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் ஒருவராவார். 

எழுச்சி கொண்ட தமிழ் இளையோரின் ஆர்ப்பாட்டங்களையும் நடவடிக்கைகளையும் முறியடிப்பதற்காக வீரதுங்கவின் தலைமையில் 'பயங்கரவாதத்தை' ஆறு மாதங்களில் ஒழித்தல் என்ற நோக்குடன் சிறிலங்காவின் வடக்குக்கு இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்தே தமிழ் இளையோர் தாம் ஆயுதம் தூக்க வேண்டும் என உந்தப்பட்டனர். மாலை நேரங்களில் வீதிகளிலும் சந்திகளிலும் கூட்டமாகக் காணப்பட்ட தமிழ் இளையோர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கடும் தாக்குதல்களுக்கு உட்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 

தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத தமிழ் இளையோர்கள் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து கொண்டனர். இவர்களில் சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு கெரில்லா நடவடிக்கைக்கான இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டனர். இவ்வாறு பயிற்சிகளை முடித்துக் கொண்ட இளையோர் சிறிலங்காவுக்கு திரும்பி வந்த பின்னர் சிறிலங்க இராணுவத்தை எதிர்த்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். 

1983 யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பெரியளவிலான வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பெருமளவான தமிழ் இளையோர்கள் அப்போது பாதாள உலகத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் இணைந்து கொண்டனர். இது மறுக்கமுடியாத உண்மையாகும். 

1983களின் பின்னான காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட யூலைக் கலவரம் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் எதிர்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையாக பார்க்கப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எந்தவொரு தமிழ் ஆயுதக் குழுக்களும் தோற்றுவாயாக இருக்கவில்லை. நாட்டில் பயங்கரவாதம் தோன்றுவதில் சிறிலங்கா அரசே முதன்மைக் காரணமாக இருந்துள்ளது. 

வன்முறைகளும் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளும் மே 2009 வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. மே 2009ன் பின்னர் இரு தரப்புக்களுக்கிடையில் யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் கூட, வன்முறைகள் வேறுவடிவங்களில் தொடரப்படுகின்றன. தமிழ்ப் பொதுமக்களைக் குறிவைத்து இவ்வாறான வன்முறைகள் தற்போது தொடரப்படுகின்றன. 

யுத்தத்தின் முடிவில் இடம்பெயர்ந்த மக்களில் பல நூற்றுக்கணக்கனோர் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை. சிறிலங்காவில் தமிழர் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இராணுவத்தால் நில அபகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதுடன், பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் சில சட்டங்களின் கீழ் பல நூற்றுக்கணக்கான இளையோர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் தென்பகுதியில் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்புக்களை தாங்கிக் கொள்ளும் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் வடக்கில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக சார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. 

2009 மேயிலிருந்து தமிழ்ப் பொதுமக்கள் சிறிலங்கா அரசை எதிர்த்து எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடாத போதிலும் கூட, தமிழ் மக்களை எதிர்ப்பதிலும், அவர்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதிலும் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடுகிறது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை கூட சிறிலங்கா அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அங்கீகாரம் வழங்குவதில்லை. 

1970 வரை தமிழ் மக்களின் சுயமதிப்பு, கௌரவம் போன்றவற்றுக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக பெரும்பான்மை அதிகார வர்க்கத்தால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்கள் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலை இன்று வரை தொடர்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் வரலாற்றில் நடந்த அதேவிதமான சம்பவம், தற்போது அதாவது 40 ஆண்டுகள் கழிந்த பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ளது. 

குறிப்பாக தமிழ் இளையோர்கள் இலக்குவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் அதேவேளையில், குறிப்பாக தமிழ் மாணவர் சமூகம் இதில் முதன்மைப்படுத்தப்படுகின்றனர். மீண்டும் 40 வரையான தமிழ் இளையோர்கள் கைதுசெய்யப்பட்டு எந்தவொரு விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டதின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 'சொந்த வேண்டுகோளின் பெயரில் இவர்களுக்கான புனர்வாழ்வுகள் வெலிக்கந்தை இராணுவ முகாமில் வழங்கப்படுவதாக' அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாம்பலிலிருந்து மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் எழுவதாக சிறிலங்கா அரசாங்கம் இந்த உலகை நம்பவைக்க முயல்கிறது. இதற்காகவே இவ்வாறான தடுப்புக்கள் சட்டரீதியற்ற ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செய்தியானது புலிகளின் எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தும். ஆனால் உண்மையில் இரு தரப்பினரும் தமிழ் இளையோர்களினதும் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்க முயற்சிக்கின்றனர். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மேதின ஆர்ப்பாட்டத்தின் போதும் ஏனைய சில ஆர்ப்பாட்டங்களின் போதும் புலிக் கொடி ஏந்தப்பட்டமையின் ஊடாக அரசாங்கம் எதனை உருவகப்படுத்த முயற்சிக்கின்றது என்பதன் எடுத்துக்காட்டாகும். எதுஎவ்வாறெனினும், சிறிலங்கா அரசாங்கத்தின் எந்தவொரு நகர்வுகளும் நாட்டில் பயனுள்ள மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக்கும். 

கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் இளையோர் இந்தப் பொறிக்குள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ விழுந்துவிடக் கூடாது. வரலாற்றிலிருந்து எவரும் பாடங்களைக் கற்றுக் கொள்வதில்லை என்பதை வரலாறு எமக்கு கற்றுத் தருகிறது. ஆனால் இந்தப் பாடத்தை எவரும் கண்டுகொள்வதில்லை என்பது ஒரு கெட்டவாய்ப்பாகும். 

வழிமூலம் : The Sunday Leader 

மொழிமாற்றம் : நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20130104107537

  • கருத்துக்கள உறவுகள்
இந்த மாணவர் அமைப்புக்கள் தோற்றம் பெற்று சிறிது காலத்தின் பின்னர் உருவாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது மாணவர் அமைப்புக்களின் தோற்றத்தின் பகுதியானது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
இது சரியா பிழையா யாழ்கள அரசியல் ஆய்வாளர்களே ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.