Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட-கிழக்கில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பு: புள்ளிவிபரத்தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வட-கிழக்கில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பு: புள்ளிவிபரத்தகவல்
ஞாயிற்றுக்கிழமை, 06 ஜனவரி 2013 22:31 
வடக்கில் யுத்தத்தின் பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
 
கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
 
இதில் அதிகூடிய எண்ணிக்கையாக 38 ஆயிரத்து 321 மாணவர்கள் வடமாகாணப் பாடசாலைகளில் இருந்து இடையில் விலகியிருப்பதாகவும், 
 
கிழக்கு மாகாணத்தில், 24 ஆயிரத்து 614 மாணவர்கள் இடையில் விலகியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.
 
இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
நாட்டில் இலவச கட்டாயக் கல்வி நடைமுறையில் இருக்கின்ற போதிலும், பாடசாலைகளில் இடை நிலை வகுப்புகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகிச் செல்வது கவலைக்குரியது என 'சேவ் த சில்ரன்' என்ற சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேனகா கல்யாணரட்ன தெரிவித்திருக்கின்றார்.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவே மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிச் செல்வதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.
 
வறுமையில் வாடும் குடும்பங்களில் சிறுவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
 
பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதிருப்பது, ஏனைய அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலிருப்பது போன்ற காரணங்களினாலும், மாணவர்கள் இடையில் தமது கல்வியைக் கைவிட்டுச் செல்கின்றனர் என்றும் மேனகா கல்யாணரட்ன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
 
வடமாகாணத்தில் யாழ் குடாநாட்டில் பாடசாலைகளில் இருந்து பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் இடைவிலகியிருப்பது அதிர்ச்சியளிக்கத்தக்க விடயம் என கூறியுள்ள யாழ் வணிகர் கழகம், இடை விலகியுள்ள மாணவர்கள் மீண்டும் தமது கல்வியைத் தொடர்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது.
 
இது குறித்து கருத்து வெளியிட்ட யாழ் வணிகர் கழகத் தலைவர் ரட்னலிங்கம் ஜெயசேகரன், யாழ் அரச அதிபர் மற்றும் பிரதேச அரச அதிகாரிகளின் உதவியோடு முதல் கட்டமாக 491 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
'அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு பெறுவதற்குக் குறைந்த பட்சமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதனால், இடைநிலை வகுப்புக்களில் இருந்து கல்வியைக் கைவிடுபவர்கள் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பைப் பெற முடியாமல் போவதுடன், அவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறிக்கு உள்ளாகிவிடும். 
 
இதன் காரணமாகத்தான் இடைவிலகுகின்ற மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்குரிய நடவடிக்கைகளை யாழ் வணிகர் கழகம் எடுத்திருக்கின்றது' என்றும் யாழ் வணிகர் கழகத் தலைவர் கூறினார்.
 
இதனிடையில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து 2012 ஆம் ஆண்டில் மாணவர்களின் இடைவிலகல் வீதம் குறையத் தொடங்கியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Jaffna%20children01.jpg

 

இலங்கைவின் வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட அதிகளவான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2011ல் இலங்கைத் தீவு முழுமையும் 126,000 வரையான மாணவர்கள் தமது பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகியதாக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு இடைவிலகிய மாணவர்களில் அதிகம் பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jaffna%20children.JPG

2011ல் இலங்கைவின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 38,321 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேபோன்று பாடசாலையை விட்டு விலகிய கிழக்கு மாகாண மாணவர்களின் எண்ணிக்கையானது இரண்டாவது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 24,614 மாணவர்கள் 2011ல் கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாக கல்வி அமைச்சின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைவில் இலவச கல்வி முறை நடைமுறையிலுள்ள போதிலும், இவ்வாறு பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவாதானது அதிர்ச்சி தருவதாக சிறுவர் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் நிலவும் வறுமை காரணமாக பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை பாதியில் நிறுத்துவதாக ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு வறுமையில் வாடும் சிறார்கள், தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன் இவ்விரு மாகாணங்களிலும் போதியளவு ஆசிரியர்கள் காணப்படவில்லை. கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை. இவ்வாறான காரணங்களால் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறான மாணவர் விலகலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் இடைவிலகும் நிலை அதிகரித்துச் செல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கதே. 

செய்தி வழிமூலம் : UO

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.