Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம் காங்கிரஸுக்குள் பெரும் குழப்பம்! - திவிநெகுமவை ஆதரிப்பதா? இல்லையா? கருத்து மோதல் உச்சம்!!

Featured Replies

முஸ்லிம் காங்கிரஸுக்குள் பெரும் குழப்பம்! - திவிநெகுமவை ஆதரிப்பதா? இல்லையா? கருத்து மோதல் உச்சம்!! 'திவிநெகும' சட்டமூலம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதனை எதிர்ப்பதா? அல்லது ஆதரிப்பதா? என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் பாரிய கருத்து முரண்பாடு தோன்றியுள்ளது.

இந்தக் கருத்து முரண்பாடு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூடிய முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டத்தில் பகிரங்கமாகியுள்ளது.

மு.காவின் அதியுயர்பீடக் கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு 11மணிவரை நடைபெற்றது. இருந்தபோதிலும் 'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் தீர்க்கமான முடிவின்றியே கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.

'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் சில விடயங்களுக்கு திருத்தங்களை முன்வைப்போம். அத்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆதரிப்பதென்றும் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்ப்பதென்றும் பொதுவான கருத்தொன்று கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இதுவிடயமாக கருத்துத் தெரிவித்த கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸனலி, 'அற்பசொற்ப சலுகைகளை அனுபவிப்பதற்காக திவிநெகும சட்டமூலத்தை ஆதரிக்க முடியாது' என்று வாதிட்டார்.

ஆனால், 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்திருக்கிறது. குறித்த சட்டமூலம் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவோம். எடுத்ததற்கெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதை விட்டுவிடவேண்டும். முஸ்லிம்களைப் பற்றி அரசும் சிங்கள இனத்தவரும் தவறாக நோக்குவது எதிர்காலத்தில் பாதகங்களை ஏற்படுத்தலாம். எனவே, இதுவிடயத்தில் நன்கு சிந்தித்து செயற்படவேண்டும்' என முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்.

மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், பஷீர் சேகுதாவூத் ஆகியோர் திருமண நிகழ்வொன்றுக்கு சென்றிருந்தமையால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.அப்துல் மஜீத், 'அபிவிருத்தி விடயங்களில் நாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றோம். எமது பலத்தை அரசுக்கு வெளிப்படுத்த இது நல்ல சந்தர்ப்பம்' என கருத்து வெளியிட்டார்.

இவ்வாறாக முரண்பாடான கருத்துக்கள் நிலவுவதை அவதானித்த செயலாளர் நாயகம் ஹஸனலி, முன்னர் தான் தெரிவித்த கருத்திலிருந்து பின்வாங்கியவராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக நடந்துகொள்ள இடமளிப்போம் என்றார்.

இந்தக்கருத்துடன் முரண்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளரும் அதியுயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், 'கட்சி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும். நினைத்த மாதிரி நடப்பதென்றால் கட்சி எதற்கு?' என்று கேள்வி எழுப்பினார்.

இறுதியாக கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்,

'18ஆவது திருத்தச்சட்டத்திற்கும் ஆரவளித்தோம். ஆனால், நடந்தது ஒன்றுமேயில்லை. அரசு எமக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தெரியவில்லை. நீதியமைச்சை வழங்கிவிட்டு அதிலும் தலையீடுகளை செய்கிறது. அந்த அமைச்சிலும் எதுவுமேயில்லை.

எனவே, 'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் திங்கட்கிழமைவரை பேசுவோம். அனைவரும் ஏற்கக் கூடிய ஒருமுடிவுக்கு வருவோம்' என்றார்.

இதன் பின்னர் நேற்று சனிக்கிழமை காலை கட்சியின் மிக முக்கியமானவர்கள் சிலரை தனது இல்லத்துக்கு அழைத்து மு.கா. தலைவர் ஹக்கீம் பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

1/6/2013 2:42:57 AM

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=27bc1a55-9d74-496a-9467-b03fc8384037

  • கருத்துக்கள உறவுகள்

ஆணியே புடுங்காமல் இருப்பதுதான் தங்களுக்கு நல்லது...

மு.கா. எம்.பிக்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை தேவையாம்

 

திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

 

கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் சமர்பிக்கப்பட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.


எனினும் கட்சியின் தலைமைத்துவத்தின் அனுமதியின்றி திவிநெகும சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களித்தார்கள் என குற்றச்சாட்டில் ஒழுகாற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

 

இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலியால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.


இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் அங்கீகாரத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட திவிநெகும சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளர்.

 

இவ்வாறான நிலையில் எப்படி எங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


அப்படி மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை மேற்கொள்வதென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

 

திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதவாக வாக்களித்தமைக்கு விளக்கம் கோரி கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலியினால் அனுப்பப்பட்ட கடிதமொன்று இன்று கிடைத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.


இதேவேளை, கட்சியின் அதியுயர் பீடத்தின் அனுமதியுடனேயே நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

 

நாங்கள் திருத்தம் மேற்கொள்ளபட்ட திவிநெகும சட்டமூலத்திற்கே வாக்களித்தோம் என அவர் குறிப்பிட்டார்.


அத்துடன் மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்கும் திருத்தம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் வழங்கப்பட்ட 14 திருத்தங்களும் சட்டமூலத்தில் இணைத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையில் உறுதியளித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

 

"ஆனால், கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் எந்தவித திருத்தங்களையும் மேற்கொள்ளாமலேயே இந்த சட்டமூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். அத்துடன் கால அவகாசம் வழங்கும்படி மாகாண சபையில் கோருமாறே மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது" என ஹசன் அலி தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுகாற்று நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதன் அறிக்கை கட்சியின் உயர் பீட கூட்டத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுகாற்று நடவடிக்கை நிறைவடைந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56538-2013-01-09-09-38-11.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.