Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோச்சடையானுக்காக மெளனம் காக்கும் ரஜினியின் துரோகத்தை கமல் புரிந்து கொண்டாரா?

Featured Replies

தற்போது விஸ்வரூபம் படத்திற்காக கமல் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி நிலையை திரையுலக ரசிகர்கள் அனைவரும் மிகவும் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கின்றனர். 92 கோடி ரூபாய் தன்னுடைய சொந்த பணத்தை செலவழித்து எடுத்த படத்தை அவருடைய விருப்பப்படி திரையிட விடாமல திரைமறைவு வேலைகள், குழிதோண்டும் வேலைகள் முதலிய நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் எந்த ஒரு நடிகர் இருந்தாலும், உண்மையிலேயே நொந்து நூலாகி போயிருப்பார். ஆனால் எதற்கும் அஞ்சாமல், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று தைரியமாக கூறும் கமலின் வீரம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

 

 

கமல் திரையுலகிற்கு செய்த உதவிகள் ஏராளம். ஆனாலும் இன்று அவருடன் நடித்த நடிகர்கள், நண்பர்கள் அனைவருமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம்.  சிலர் அவருக்கு உதவி செய்வதாக நினைத்து, அவருடன் கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. தன்னுடைய உயிர் நண்பர் என்று கூறிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுகுறித்து மெளனமாக இருப்பது, அவர் கமல் மேல் வைத்திருக்கும் போலியான நட்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

 

 

ரஜினி மட்டும் ஒரே ஒரு வார்த்தை கூறினால் போதும், இந்த பிரச்சனை உடனே முடிவுக்கு வந்துவிடும். கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தியேட்டர் தர மறுக்கும் தியேட்டர்களுக்கு கோச்சடையான் படம் தரப்படமாட்டாது என்று ஒரே ஒரு வரி எச்சரிக்கை அறிக்கை வந்தால் போதும், உடனே தியேட்டர் அதிபர்கள் அலறியடித்துக் கொண்டு, ஓடி வந்து விஸ்வரூபத்தை திரையிட முன்வருவார்கள். ஆனால், இதில் தலையிடப்போய், தனது படத்திற்கு அதுவும் சொந்த படத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என நினைத்து பதுங்கி இருக்கும் ரஜினியை இனிமேலும் தன் நட்பு வட்டத்தில் வைத்துக்கொள்ள் வேண்டுமா என்று கமல் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையையே மாற்றக்கூடும் அளவிற்கு வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, இந்த விஷயத்தில் மெளனம் காப்பது, முழுக்க முழுக்க சுயநலம் இன்றி வேறு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.

 

 

கோச்சடையான் படத்திற்காகத்தான் ரஜினி பின்வாங்குகிறார் என்று கோலிவுட் முழுவதுமே புலம்பிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரஜினி மேலும் அமைதி காப்பது சுயநலத்தின் உச்சகட்டம். ரஜினிக்கு இது ஒன்றும் புதிதல்ல. குசேலன் பட வெளியீட்டின்போது எழுந்த பிரச்சனையை சமாளிக்க கன்னடர்களிடன் வருத்தம் தெரிவித்தவர்தான் ரஜினி. தனது இரண்டு மகள்களின் திருமணத்தின்போது, ரசிகர்களை அவமானப்படுத்தி, ஒருவேளை சாப்பாடு போடக்கூட மனசில்லாத ரஜினி, நட்புக்கு எங்கே மரியாதை தரப்போகிறார். பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர கோழையாய் இருக்க மாட்டேன் என்று சில நாட்களுக்கு முன், வீராவேசமாக பேசிய ரஜினியின் வீரம் எங்கே போனது.

இவற்றையெல்லாம் ஒரளவிற்கு புரிந்து கொண்டதாலோ என்னமோதான், கமல் தன்னுடைய பிரஸ்மீட்டில், " இது புதுவழி... என் சுயநலத்திற்காக நான் எடுத்துக் கொண்ட தனி வழியல்ல" என்று கூறியிருக்கிறார் போலும்.

 

 

இந்த படத்தில் தன்னுடைய ஐம்பது வருட உழைப்பின் சொத்து முழுவதையும் போட்டுவிட்டு, வாழ்வா? சாவா? என இக்கட்டான நிலையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு ஒருவகையில் தனது உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டுகிறது விஸ்வரூபம். திரையுலகில் திரைமறைவு வேலைகளும், குழுபறிக்கும் கும்பல்களும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் இதில் கொஞ்சம் அதிகம் தென்படுகிறது. கமல்ஹாசனை இதோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறது ஒரு கூட்டம்.

 

புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது ரூ.100 கட்டணத்தை பெற்றுக்கொண்டு, பத்து ரூபாய் டிக்கெட்டை கொடுத்து மக்களையும் அரசையும் ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் தியேட்டர் அதிபர்கள், நியாயத்தை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள். திருட்டு விசிடி தியேட்டர் அதிபர்களின் துணை இல்லாமல் எடுக்கவே முடியாது. திருட்டு விசிடிக்கு அவர்களே வழிகாட்டிவிட்டு, வெளியே நாடகமாடும் கும்பல்தான் இவர்கள். இவர்களிடம் நியாயமாக வியாபாரம் செய்ய நினைக்கும் கமல்ஹாசன் தோற்றுப்போனால், நீதிதேவதையே தோற்றுப்போனது மாதிரிதான்.

 

40 ஆண்டுகால நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் கமல், ரஜினியின் அபூர்வ புகைப்படங்கள்....

Edited by easyjobs

இந்த கட்டுரை எழுதியவர் ரஜனியின் படங்கள் இக்கட்டில் இருக்கும் போது கமல் எப்படி (?? :)) உதவினார் என்றும் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.