Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியம்

Featured Replies

சாதியம் எனது பார்வையில்

 
ஈழம் பிரிட்டனின் ஆட்சியில் இருந்த காலப்பகுதி..…. தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவர் கொழும்பில் இருந்து வரும் போது காலணி அணிந்திருந்ததற்காக ஒரு சாதிக்கலவரம்….. தாழ்ந்த சாதி என்ற வார்த்தைப்பிரயோகத்தை விட தாழ்த்தப்பட்ட சாதி என்பது மிகப்பொருத்தமாக இருக்கும். மூன்று தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உயிருடன் குடிசையொன்றில் போட்டு கொளுத்தப்பட்டார்கள்…… இது அண்மையில் ஒரு வயோதிபர் கூறிய தகவல். இதெல்லாம் அந்தநேரத்தில சர்வ சாதாரணமாய் நடந்தது தம்பி என்றார். அது மட்டுமல்ல உயர் சாதியினரின் கிணற்றில் தண்ணீர் அள்ளியதற்காக கொலைசெய்யப்படுவதும் உயர் சாதிப்பெண்ணை காதலித்ததற்காக கொலை செய்யப்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் ஓரளவு சாதிவெறி குறைந்து சிரட்டையில் நீர்வார்ப்பதும் மூக்குப்பேணிபயன்படுத்துவதாகவும் இருந்தது. அப்போதும் தீண்டாமை கொடுமை குறையவில்லை. கிணற்றில் நீர் அள்ளமுடியாது. உயர் சாதியினரின் வயலில் கால்வைக்கமுடியாது….. இப்படி ஏகப்பட்டவை…ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இதேநிலைதான். ஏன் உலகமெங்கும் இந்த சாதிய வெறி தலைவிரித்தாடியது. தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பியரிடையே நிறப்பாகுபாடு எம்மவர்களிடையே சாதி பாகுபாடு.
 
Burn+with+alive.jpg
 
இதிலிருந்து ஒன்றை புரிந்துகொள்ளலாம் சாதிய அமைப்புமுறை என்பது நம்மூர் மேதைகளின் கருத்தைப்போல தனியொரு மதத்தாலோ அல்லது ஒரு குழுவாலோ வலிந்து திணிக்கப்பட்டதல்ல. அது தனிமனித சுயநலம். ஒவ்வாரு மனிதனுக்கும் எந்த வகையிலாவது தன்னை மற்றவனிலும் பார்க்க உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதற்கு நானோ நீங்களோ எவருமே விதிவலக்கல்ல. அந்த குறுகிய மனப்பான்மைதான் சமுதாயரீதியாக மாபெரும் சாபக்கேடாக இருக்கிறது. ஏதாவது ஒன்றை சுயமாக உருப்படியாக சாதித்து தன்னை முன்னிலைப்படுத்த வக்கில்லாதவர்கள்தான் பிறப்பாலாவது தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். அதிலும் வேடிக்கை என்னவென்றால் சாதி “A” சாதி “B”வை அடக்கியாளும்போது சாதி “B” தன்னிலும் தாழ்ந்த சாதி என்று கூறி இன்னொரு சாதி “C”யை வாட்டிவதைக்கும்.
எனக்கு தெரிந்த ஒரு பாடசாலையில் சத்துணவுத்திட்டத்தின் போது சில மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு வேண்டாம் என கூறியிருக்கின்றனர். காரணம் சமையல் செய்யும் பெண் அவர்களைவிட தாழ்ந்த சாதியாம். இத்தனைக்கும் அவர்களே மேல்ஜாதியினரிடம் குட்டுப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு தங்களுக்கு கீழே ஒருசிலராவது இருக்கவேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது. இவர்கள் இப்படியிருக்கும் வரை எதுவுமே மாறப்போவதில்லை.
 
பிரபலமான மூன்று மதங்களில் உள்ள பிரிவுகள்
Hindu.jpg
Christian.jpg
Muslim.jpg
நன்றி - Indian Matrimonial (இங்கதான் எல்லா லிஸ்டும் கிடைக்குது)
 
ஆனால் சாதியத்தை எண்ணை ஊற்றி வளர்த்துவிடும் பெரும்பொறுப்பு எப்போதுமே ஆளும்தரப்புக்குரியதுதான். இம்சை அரசன் 23ம் புலிகேசியில் சொன்னதுபோல சிறு தீப்பொறியை ஊதி ஊதி பெரிதாக்கிவிட்டால் அதன் உஷ்ணத்தில் காலம் முழுவதும் ஆளும் தரப்பு குளிர்காயலாம். இதற்கு சிறந்த உதாரணம் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்திய சாதிவாரி கணக்கெடுப்பு.
 
தர்ஹாவை வணங்குதல், இந்து மற்றும் முஸ்லிம் பண்டிகைகளை கொண்டாடுதல், அதே நேரத்தில் பார்ப்பன புரோகிதரை வைத்து திருமணம் செய்தல் போன்ற கலப்பு அம்சங்களுடன் தான் முஸ்லிமா இந்துவா என்றொரு பிரக்ஞை இல்லாமலேயே பல சமூகங்கள் இருந்து வந்தன. இவர்கள் மோல்சலாம்கள் என அழைக்கப்பட்டார்கள். அதே போல குஜராத்தில் வாழ்ந்த ஜாலா என்கிற சமூகத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் இந்துவாக கருதப்பட்டு இந்து ரஜபுத்திரர் அல்லது கோலி சாதியினரை திருமணம் செய்துகொள்வார்கள். பெண்கள் முஸ்லிம்களாக கருதப்பட்டு முஸ்லிம்களை திருமணம் செய்துகொள்வார்கள். (நன்றி – தினக்குரல்)
 
இவர்கள் முன்வந்து கணக்கெடுப்பாளர் நீ முஸ்லிமா? இந்துவா? என இரண்டில் ஒன்றை தெரிவுசெய் என்று பிடிவாதம் பிடித்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? காலப்போக்கில் தனித்த இந்து அல்லது தனித்த முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். அப்புறமென்ன அடிதடிக்கு பஞ்சமிருக்காதே.
 
இப்போது மறுபடியும் சாதிவாரி கணக்கெடுப்பை இந்தியா ஆரம்பிப்பதால் தோன்றும் பக்கவிளைவுகள் தெளிவாகவே தெரிகின்றன. மிகவும் தாழ்த்தப்பட்ட தலித் போன்ற மக்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பால் இடஒதுக்கீட்டின் மூலம் நன்மைகிடைக்குமே தவிர இடைநிலைச்சாதியினருக்கும் மேல்நிலை சாதியினருக்கும் தமது சாதியை நிலைநிறுத்தவும் சாதியின் பெருமையை மற்றவர்கள் மீது திணிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும். ஆளும் வர்க்கம் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறையுள்ளதென்றால் தலித் போன்ற அழுத்தத்திற்குட்பட்டு இருக்கும் மக்களுக்கென்று இடஒதுக்கீட்டை கொடுக்காமல் அவர்களையும் ஏனைய மக்களுடன் சரிநிகர் சமமாய் வாழ்வதற்கு வழிசெய்து கொடுக்க முன்வரவேண்டும். ஆனால் இவர்கள் செய்வதோ இடஒதுக்கீடு என்ற ஒரு மாயையை காட்டி சாதித்தடிப்பைத்தான் மேலும் மேலும் ஊக்குவிக்கின்றனர்.
 
 
Untouchable+Rules.jpg
 
ஈழத்தின் நிலையோ கொஞ்சம் மாற்றத்துக்குள்ளாகியிருக்கிறது. கடும்போக்காளர்களாக இருந்த சாதியவாதிகள் இனப்பிரச்சினை என்ற ஒரு பொதுப்பிரச்சினை தோன்றியபோது கொஞ்சம் விட்டுக்கொடுக்கவேண்டியதாயிற்று. ஆனால் யுத்தகாலத்திலும்சரி இப்போதும் சரி ஈழத்திலும் சாதியம் முற்றாக ஒழிந்துவிடவில்லை. இந்திய இராணுவம் ஈழத்தில் வெறியாட்டம் ஆடியபோது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சில நாட்கள் மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். அந்த வாழ்வா சாவா என்ற இறுதி நிமிட வாழ்க்கையில் கூட நமது சாதி வெறியை அரங்கேற்றியவர்கள் இருக்கிறார்கள். தாழ்ந்த சாதிக்காரர்களை கோயிலைவிட்டு வெளியேற்றுவதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். இப்போதும் கூட சிலபிரதேசங்களில் சாதிக்கு சாதி தனித்தனி கோயில், பொது மண்டபங்கள் என்று தமது சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
 
சாதியத்தை ஒழிக்க ஈழத்திலும் சரி தமிழகத்திலும் சரி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒருபோதும் நூறு வீத வெற்றியை தரவில்லை. ஈழத்தில்  முன்னெடுக்கப்பட்ட சாதிய ஒழிப்பு நடவடிக்கைகள் அவற்றின் வல்லமை குறைந்ததும் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளன.
 
தமிழகத்தில் பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் பார்ப்பனர்களை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்ததே தவிர அடைப்பட்ட சாதியினரிடையே இருந்த உட்பிரிவுகளை களைவதற்கு உதவவில்லை. அம்பேத்கரும் தலித்துகளுக்காக போராடிய அளவுக்கு ஏனைய சாதிப்பிளவுகளை தீர்க்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இன்னும் இன்னும் எத்தனையோ பேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதிய ஒழிப்புக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும் அவற்றின் செயல்திறன் மந்த கதியில்தான் உள்ளது.
 
காரணம் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல சாதியம் ஒரு தனிமனித சுயநலத்தால் உருவான களை. அதை ஒவ்வாரு மனிதமனத்திடமிருந்து அகற்றுவதற்கு நிச்சயம் நீண்டகாலம் தேவைப்படும். ஆனால் அதற்குள் சாதியவெறி எத்தனைபேருடைய உயிரைக்குடிக்குமோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால் சாதியத்துக்கெதிரான புரட்சியை கைவிடாமல் போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அப்போதுதான் சாதியம் என்ற களை நம் சமுதாயத்திலிருந்து வேரோடு களையப்படும்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.