Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயமுறுத்தும் புகைப்படங்கள் – அதிகார வர்க்கத்தின் நவீன ஆயுதம்!!

Featured Replies

முன்னொரு காலத்தில் “ட்குலா”, “மக்கேப்பிறே” போன்ற சினிமாப்படங்கள் வெளிவந்து மக்களை அச்சமூட்டின. அவை வெளிவந்தகாலத்தில் பலர் இரவில் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அஞ்சியதுண்டு.

அவை சினிமாப்படங்கள்! உண்மை போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தவல்லவை. படங்களின் சலனத் தோற்றங்களுக்கு ஏற்ப இசையும் சேர்ந்து பயத்தை ஏற்படுத்திவிடும்.

ஆனால் இப்போது சில நிழற்படங்கள் அசைவு எதுவுமின்றி, இசையோ, பயங்கர ஓசையோ இல்லாமல் பலரைப் பயமுறுத்திவிடுவதுடன் அடங்கி ஒடுங்கி நடுங்கிப் பணிவையும் ஏற்படுத்திவிடுகின்றன.

கடந்த வருடத்தில் இப்படி ஒரு நிழற்படம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது. அந்தப் படத்தில் ஒரு அரச உத்தியோகத்தர் மரத்தில் கட்டப்பட்டு தலைகுனிந்தவாறு நின்றார். அருகில் அமைச்சர் மேர்வின் சில்வா சண்டிக்கட்டுடன் நிற்கிறார்.

அதாவது அமைச்சர் நுளம்புகளை ஒழிக்க தனது பரிவாரங்களுடன் களனிக்கு விஜயம் செய்த போது அப்பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர் அங்கு சமூகமளிக்கவில்லை. உடனே கோபம் கொண்ட அமைச்சர் அந்த அரச பணியாளரை இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்துத் தண்டனை வழங்கிவிட்டார்.

அந்தப்படம் பத்திரிகைகளில் வெளிவந்து அரச பணியாளர்களை அடிவயிறு கலங்கப்பயமுறுத்தி விட்டது.

Mervin_Gasbenda_J.jpg

அதன் பின்பு அமைச்சர்கள் விஜயம் செய்யும் போது அரச பணியாளர்கள் அங்கு பிரசன்னமாவது எழுதாத சட்டமாகக்கப்பட்டு விட்டது. தேவை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன வேறு எந்த வேலை இருந்தாலும் அப்படியே போட்டது போட்டபடி விட்டுவிட்டு அமைச்சர் முன் சமூகமளித்து விடுவார்கள்.

அது மட்டுமல்ல பிரதேச, மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களுக்குக்கெல்லாம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அழைக்கமாட்டார்கள். அல்லது அவர்கள் வரமுடியாத வகையில் பிந்தி அழைப்புக்களை அனுப்புவார்கள்!

அவர்கள் பாவம்! யாருக்குத்தான் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு அவமானப்பட விருப்பம் வரும்.

ஒது ஒரு புகைப்படத்தின் சக்தி.

இப்போது அதை விடச்சக்தி வாய்ந்த ஒரு புகைப்படம், பழையது ஆயினும் அதனை பொருத்தமான நேரத்தில் “சண்டே லீடர்” பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.

mervin_silva_mr.jpg

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச ஆசனத்தில் அமர்ந்திருக்க, அருகில் சில அமைச்சர்கள் நின்றிருக்க, அமைச்சர் மேர்வின் சில்வா ஜனாதிபதியின் காலடியில் நிலத்தில் விசுவாசமான மனித ஜீவனாக அமர்ந்திருக்கிறார்.

இப்படத்திற்கு என்ன சக்தி எனக் கேள்வி எழலாம்! உண்டு; நிறையவே உண்டு;

அண்மையில் களனி பிரதேச சபை உறுப்பினர் மடவல அவரின் வீட்டின் அருகில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வாவின் பிரதேச இணைப்புச் செயலாளர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய களனி பிரதேசத் தலைவர் இக்கொலைக்கும் மேர்வின் சில்வாவுக்கும் தொடர்பு உண்டெனவும் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இப்போ ஜனாதிபதியின் காலடியில் மேர்வின் அமர்ந்திருக்கும் படம் வெளிவந்துள்ளது. அது சொல்லும் செய்தி மேர்வின் ஜனாதிபதியின் அன்புக்குரிய செல்லப்பிள்ளை என்பது தான்.

இனி மேர்வினைக் கைது செய்யும்படி வலியுறுத்தவோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்யவோ களனி பிரதேச சபைத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் துணிவு வருமா?

அது அந்தப் புகைப்படத்தின் மகத்தான சக்தி!

இவை தொடர்பாக ஒரு முதிர்ந்த அரசியல் வாதி கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி பிரதம நீதியரசரின் பதவி நீக்கக் கடிதத்தில் கையெழுத்து வைப்பதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் பேனா எடுத்துக் கொடுப்பதாக ஒரு புகைப்படம் வெளிவந்திருந்தால் அதுவும் ஒரு சக்தி மிக்கதாக இருந்திருக்கும் என்றார்.

நீதிபதி ஒருவரை தொலைபேசி மூலம் மிரட்டியதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது ஒரு வழக்கு நடக்கிறதல்லவா என்றார் அவர் மெல்லிய சிரிப்புடன்.

 

இப்படியாக அதிகார மமதை பிடித்தவர்கள் மக்களையும் நியாயம் கோருபவர்களையும் அச்சுறுத்தும் அதேவேளையில் அவர்களை தூங்க விடாமல் அச்சுறுத்தும் புகைப்படங்களும் உண்டு. ஆம்! அவை இலங்கையின் ஆட்சியாளர்களின் போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள். அவை இப்போ நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கின்றன. ஆனால் அவை கொழுந்துவிட்டெரியும் போது சகல தீயனவும் எரிந்து சாம்பலாகிவிடும் என்பது நிச்சயம்.

 

தமிழ்லீடருக்காக

கல்பனா

 

http://tamilleader.com/2013/01/18/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.