Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'உலக வறுமை ஒழிப்புக்கு ஓரிடத்தில் செல்வம் சேருவதும் முக்கிய காரணம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
121116202208_uganda_poverty_304x171_bbc.

 

உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருடம் பெறப்பட்ட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

 

கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது.

அதற்கு மாறாக உலகில் மிகவும் கடுமையான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒண்ணேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது.

130101072613_india_poverty_304x171_bbc_n

ஒரு சிலர் கைகளிலேயே எல்லா பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று, அடுத்த வாரம் சுவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந்த சந்திப்பு ஒன்றில் ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.

உலகின் ஏற்றத்தாழ்வை ஒழிக்க உலகத் தலைவர்கள் ஸ்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

அளவுக்கு அதிகமான செல்வம் என்பது, '' பொருளாதார ரீதியான செயற்திறனின்மை, புல்லரித்துப் போன அரசியல், சமூக ரீதியான பிளவு ஆகியவற்றை காட்டுகிறது'' என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

121120135439_poverty_mother_304x171_bbc_

அனைத்து மனித சமூகத்தின் நலனுக்காக உலக பொருளாதார முறைமையில் மாற்றம் வரவேண்டும் என்று அது கூறியுள்ளது.

உலக சனத்தொகையில் ஒரு வீதமான செல்வந்தர்கள் கடந்த 20 வருடங்களில் தமது வருமானத்தை 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.

உலக வரி முறைமைகளில் மாற்றம் செய்யப்படுவதுடன், இலவசமான பொதுச் சேவைகளிலும் சுகவீனமுற்றவர்கள் மற்றும் வேலையற்றவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் அது உலக நாடுகளின் தலைவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உலக நாடுகளின் தலைவர்கள் தமது மட்டத்தில் முதலில் ஏற்றத்தாழ்வை சரி செய்ய வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு, பலவீனமான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஒக்ஸ்பாம் வலியுறுத்தியுள்ளது.

உலக பொருளாதார முறைமையில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது என்று ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் தலைமை இயக்குனரான பார்பரா ஸ்டோக்கிங் கூறியுள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/01/130119_oxfarmreport.shtml

 உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருடம் பெறப்பட்ட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
 

 

Food Chain போல ஒருவன் பணக்காரன் ஆக வேண்டும் என்றால் பல பேர் வறுமையாக வாழவேண்டும்  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.