Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நஞ்சுக் கோழிகளை விற்கும் பன்னாட்டு உணவகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நஞ்சுக் கோழிகளை விற்கும் பன்னாட்டு உணவகங்கள்

 
201201-185790-kfc-big-value-box-whole.jp
மனிதர்கள் வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியமானது. தனது உணவை தானே உற்பத்தி செய்து கொள்ளக் கற்றுக் கொண்டதால் தான் மனித இனம் இன்று மாபெரும் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இல்லை எனில் காடுகளில் தான் அலைந்துக் கொண்டிருப்போம். அத்தகைய உணவுக்குப் பல்வேறு சமூகங்களும், கலாச்சாரங்களும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. உணவுகள் இல்லாத கொண்டாடட்டங்களோ, வைபவங்களோ உலகில் எங்குமே இல்லை எனலாம். ஒரு தாய் தனது மகவுக்குப் பால் புகட்டுவதன் பாசப் பிணைப்பு, குடும்பங்களின் ஒற்றுமை, உறவுகளுக்கு இடையிலான சுமூகம், சமூகக் கட்டமைப்பு என அனைத்துமே உணவை ஆதாரமாகக் கொண்டே இயங்குகின்றது அல்லவா. நாம் உயிர் வாழ உணவு இன்றியமையாதது ஆகும். 
 
அதுவும் சந்தைப் பொருளாதாரத்தில் எழுச்சிப் பெற்றுள்ள துரித உணவகங்கள் வெறும் நாவின் ருசிக்காகவும், அதனை அறுவடை செய்து பணம் பறிக்கும் முறையாகவும் மாறிவிட்டன. அவசர வாழ்வில் இன்று பலர் தாம் உண்ணும் உணவு எத்தகையது என்பதை அறிய முற்படுவதே இல்லை. அதற்கான நேரமும் நமக்கு இருப்பதும் இல்லை. 
 
அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த ஒரு செய்தியை இவ்வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அந்தச் செய்தி என்னைத் தூக்கி வாரிப் போட்டது எனலாம். எங்கோ எதோ ஒரு தேசத்தில் நடந்த சம்பவம் என நம்மால் அதனை உதறிவிட முடியாது. இலை மறை காயாக அதனைப் போன்ற கொடூரங்கள் உலகம் முழுவதும் நடந்த வண்ணமே இருக்கின்றது. 
 
சீனாவில் இயங்கி வரும் பன்னாட்டு உணவு நிறுவனங்களான KFC, McDonald போன்றவற்றுல் சமைத்துப் பரிமாறும் கோழிகள் உண்ணத் தக்கதாய் இல்லாமல்இருந்ததையும், அதன் பின்னால் இருந்த மோசடியையும் சீனாவின் நடுவண் தொலைக்காட்சி வெளிக்காட்டியது. 
 
இந்த உயர்தரப் பன்னாட்டு உணவு விடுதிகளுக்குக் கோழிகளை வழங்குவோர், அக்கோழிகளுக்கு அதிகளவான Hormone, Anti-biotic போன்றவற்றைக் கொடுத்துள்ளனர். இதனால் நாற்பதே நாட்களில் 30 கிராமில் இருந்து 3.5 கிலோகிராமாகக் கோழிகள் ராட்சத வளர்ச்சியடைகின்றன. 
 
இதனைப் பரிசோதித்த சீன அதிகாரிகள் மோசடி நடந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். அதனை முதலில் மறுத்த உணவகத்தார் பின்னர்ப் பரிசோதிக்காமல் கோழிகளைக் கொள்முதல் செய்தமைக்குப் பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளனர். KFC நிறுவனத்தின் 40 % ஆன வருமானம் சீனாவில் இருந்தே வருவதாக ஒரு தகவல் கூறுகின்றது. இவ்வாறான உணவகங்கள் மேற்கில் கடுமையான சட்டத் திட்டங்களைப் பின்பற்றுகின்ற போதும் வளரும் நாடுகளான சீனா, இந்தியாவில் போதிய அக்கறை செலுத்தாமல் இருப்பது வேதனையான உண்மையாகும். 
 
அது மட்டுமில்லாமல் சந்தைகளில் விற்கப்படும் கோழிகள் பலவும் கூட மருந்துக்களை உட்கொள்ளச் செய்து கொழுக்க வைத்திருக்கக் கூடும் சம்பவங்களும் பலவிடங்களில் நடந்துள்ளன. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அங்காடிகளில் விற்கப்படும் கோழிகளின் இறகுகளைப் பரிசோதிப்பதன் மூலம் அக்கோழிகள் நல்ல முறையில், நல்ல தீனிகள் இட்டு, எந்தவித தடை செய்யப்பட்ட மருந்துக்களைப் புகட்டாமல் வளர்க்கப்பட்டு உள்ளதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும் எனக் கூறியுள்ளனர். 
 
அவர்கள் நடத்திய ஆய்வில் பல தொழிற்சாலைகள் கோழிகளுக்குக் ஆபத்தான பொருட்களைத் தீனிகளாக இட்டுள்ளது தெரியவந்துள்ளது. 
 
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் பலவற்றிலும் மன அழுத்தங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளான Prozacபோன்றவைகளைப் பயன்படுத்தியுள்ளானர். கோழிகளுக்கு அதிகளவு மன அழுத்தம் ஏற்பட்டால் அதன் மாமிசம் கடினமாக இருக்கக்கூடும் என்பதால் அவற்றுக்கு இவ்வாறான மன அழுத்த மருந்துகளைக் கொடுத்துள்ளனர். 
 
நாச்மேன் குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கோழிகளுக்கு அதிகளவு காபீன்(Caffeine) கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோழிகள் அதிக நேரம் உறங்காமல் இருக்கும் எனவும், அதிகளவு உணவு உட்கொண்டால் அதன் எடைக் கூடும் எனவும் அறியமுடிகின்றது. 
 
அது மட்டுமில்லாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் பலவற்றுக்கும் தடை செய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிக்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது(antibiotics). இதில் அதிர்ச்சித் தரக்கூடிய செய்தி என்னவெனில் Tylenol, Benadryl, Prozacபோன்றவைகளையும் கோழிகளுக்குக் கொடுத்துள்ளனர். 
 
இதனை உட்கொள்வோருக்கு பல பின் விளைவுகளும், நோய்களும் ஏற்படக் கூடும். மிக முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கச் செய்யும் உடற்குறைகள் ஏற்படக் கூடும். "சூப்பர் பக்" தொற்றுக்களும் ஏற்படக் கூடும் அபாயம் உள்ளது. 

'' மனிதர்கள், மற்றும் அங்காடிகளில் விற்கப்படும் கோழிகளில் E.Coli தொற்றுக்கள் எந்தளவு இருக்கின்றது என்பதை ஆராய்ந்து வருகின்றோம் '' எனக் கனடாவின் மக்கில் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் 
அமீ மாங்கஸ்
 கூறுகின்றார். 

உணவைக் கொடுத்தவன் உயிர் கொடுத்தவன் என மணிமேகலைக் காப்பியம் போற்றுகின்றது. அந்த உணவை உண்டாக்குவோரை போற்றியே உலகில் பல விழாக்கள் எழுந்துள்ளன. உணவை அளிப்பவர்களையே தெய்வங்களாகப் போற்றுவதும் மரபாக உள்ளது. 
 
ஆனால் தொழிற்புரட்சிக்கு பின்னர் எழுந்த உணவு சார்ந்த வியாபாரம் என்பது உணவை ஒரு பணம் பறிக்கும் முறையாக மாற்றிவிட்டனர். முக்கியமாக இருப்பத்தொன்றாம் நூற்றாண்டில் உணவு சார்ந்த வியாபாரம் என்பது கோடிகளில் புரளும் மாபெரும் வர்த்தகமாக உள்ளது. ஆனால் இந்த உணவை உண்டாக்குவது முதல் சமைத்து பரிமாறுவது வரையில் இந்த நவீன உலகம் எத்தகைய ஜீவகாருண்யத்தோடு இயங்குகின்றது என்பதை நாம் எப்போதும் கவனத்தில் எடுத்துள்ளோமா சொல்லுங்கள். 
 
அண்மையில் மலையாளத்தில் ''உஸ்தாத் ஹோட்டல்'' என்ற ஒரு திரைப்படத்தைக் காண நேர்ந்தது, உணவு வழங்குவது வெறும் ருசிக்காவோ, பணம் சம்பாதிக்கவோ மட்டுமில்லை அதனைத் தாண்டி அதில் ஒரு மாபெரும் சமூகப் பொறுப்பு உள்ளது என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தது. அது எவ்வளவு உண்மை, ஏனைய வியாபாரங்கள் போலில்லாமல் உணவு வியாபாரம் என்பது மனித உயிர்களை மையமாக வைத்திருப்பது ஆகும். உணவு வியாபாரங்களில் பொது நலமும், ஜீவகாருண்யமும் இல்லை என்றால் அதைவிட இழுக்கு வேறு எதுவுமில்லை.

மிக முக்கியமாக நாம் உண்ணும் உணவுப் பொருட்களின் தராதரங்களை அறிந்துக் கொள்ள முற்படுவதே நமது உடல்நலத்தைக் காப்பாற்றும். 

 

http://www.kodangi.com/2013/01/international-fast-food-chains-involved-in-chinas-chicken-scandal.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.