Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாயவின் இயந்திர மனிதன் கே.பி. ஆரம்பித்துள்ள செஞ்சோலை

Featured Replies

உலகின் மிகப் பெரிய மனிதநேயப் பணியகங்களில் ஒன்றான ‘செஞ்சோலை’யை தமிழீழத்தில் ஆரம்பித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர். மானுட தர்மம் என்னவென்பது அங்கு போதிக்கப்படவில்லை. செயலுருவம் பெற்றிருந்தது.

 

உலகமே பார்த்து அதிசயித்த அரும்பெரும் தலைவரின் மடிமீது அமர்ந்து குலுங்கிச் சிரிக்கும்போது உலகமே தம்வசமிருப்பதாக செஞ்சோலை செல்வங்கள் நினைப்பதுண்டு. குழந்தைகளோடு குழந்தையாக சிரித்து மகிழும் ஒப்பற்ற தலைவரின் மனிதத்தைப் புரிந்து புல்லரித்துப் போனவர் ஏராளம்.

 

அது ஒரு வரலாற்றுப் பதிவு. காலச் சக்கரத்தின் கண்ணாடி. அதில் புலம்பெயர் தமிழர்களுக்கும் சிறியதொரு வகிபாகம் உண்டு. செஞ்சோலை வளர்ச்சிக்காக தலைவர் திட்டங்களை முன்வைத்தபோது அவற்றிற்கு உதவியவர்கள் அவர்கள்.


ஆனால், அந்தப் புனிதப் பயணத்தை வழிமறித்து அடக்கி ஒடுக்கியவர்கள், புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பதற்காக இன்று மீண்டும் ‘செஞ்சோலை’ என்ற பொய் முகத்தோடு உலவ ஆரம்பித்துள்ளார்கள்.

 

கோதபாயவின் இயந்திர மனிதனான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இதனை ஆரம்பித்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் உள்ள ஊடகங்களின்மூலம் தற்போது சிறிலங்கா அரசின் தூதுவராலயங்களூடாக மீண்டும் ‘செஞ்சோலை’ என்ற விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

 

வங்கிக் கணக்கு இலக்கங்கள் கொடுக்கப்பட்டு அவற்றிற்கு பணம் அனுப்புமாறு புலம்பெயர் தமிழர்கள் கேட்கப்படுகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் இவ்வாறன போலி விளம்பரங்களை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் ஒருசில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.


கோதபாயவின் சிந்தனையில் உதித்த அவரின் இயந்திர மனிதன் கே.பி.யினால் கையாளப்படும் இந்தப் போலி விளம்பரங்களை நம்பி புலம்பெயர் தமிழர்கள், குறிப்பிடப்படும் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்பதே விடயம் அறிந்தோரின் வேண்டுகோளாகும். அவ்வாறு பணம் அனுப்பினால், அது நேரடியாக கோதபாயவின் கரங்களையே சென்றடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

 

கே.பி.யை பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பெறுபதற்கு என்னென்ன வழிகளுண்டோ, அவை அனைத்தையும் பயன்படுத்த கோதபாய திட்டமிட்டுள்ளார். ‘காந்தரூபன் அறிவுச்சோலை’, மருத்துவ உதவி போன்றவற்றிற்கும் கே.பி. மூலமாக புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதி சேகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.


கோதபாய எந்த ரூபத்தில் வந்தாலும், புலம்பெயர் தமிழர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். கே.பி. இதுதொடர்பாக வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தட்டுத்தடுமாறிய காரணம் அவருக்கே தெரியும்.

 

செஞ்சோலை திட்டத்தை அமுல்படுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டது என்பதும், அதற்கு அரசின் அனுமதி உண்டென்றும் அவர் தெரிவித்த கருத்துகளில் தடுமாற்றம் தெரிந்தது. இருபது பிள்ளைகளை இனிமேல்தான் ஒன்றுசேர்த்து செஞ்சோலை அமைப்பை செயற்படுத்த வேண்டும் என அவர் குறைப்படுவதிலும் யதார்த்தம் காணப்படவில்லை.


தமிழர்களினால் கட்டி வளர்க்கப்பட்ட மிகப் பெரிய புனிதமான இலட்சியத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கோதபாய செஞ்சோலையை ஆரம்பித்துள்ளார். ஆனால், தமிழ் மக்களிடமுள்ள மிகப் பெரிய கேள்விக்கு கோதபாய இன்னமும் பதில் சொல்லவில்லை.

 

செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை சிறார்கள் எங்கே? அவர்களை என்ன செய்தீர்கள்? முள்ளிவாய்காலின் இறுதி நாட்களில் அவர்களும் இராணுவத்திடம் சரணடைந்தார்களே! அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

வெளிவந்துள்ள ஒருசில தகவல்களில் மிகச் சொற்பமான தகவல்களே வெளிவந்துள்ளன. கொழும்பு, இரத்மலானை இராணுவ முகாமில் சிலர் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் போராளிகள் என கோதபாய தெரிவித்துளார்.

 

அவர்களில் சிலர் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு தனிமைக் கல்வி வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில் அவர்களுக்கு சிங்களமும் பௌத்தமும் இராணுவமுகாமில் கற்பிக்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான சிறார்கள் வேலைக்காரர்களாக இராணுவ அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்கின்றார்கள்.

 

- வீ.ஆர்.வரதராஜா

 

http://www.eelamview.com/2013/01/20/gota-kp/

 

ஏற்கனவே கே பியின் அன்னை இல்லத்திற்கு கனடிய ஈழ நாடு மற்றும்  ஒரு சில தொலைக்காட்சி வானொலியும் வேலை செய்கிறார்கள்.இப்போ நிலையே மாறி விட்டது.அமெரிக்கா கனட வாழ் தமிழர்கள் அமெரிக்காவையும்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் ஐரோப்பிய யூனியனையும் பின்பற்றினால் ஏதொ நடக்கும் டமில்ஸை நம்பினால் அம்போ தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.