Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊனமுற்றோர் படுகொலை - மறந்துபோன படுகொலைகள்.

Featured Replies

EnthanasiePropaganda.jpg

 

 

"பரம்பரை நோயால் அவதிப்படும் இவருக்கு வாழ்நாள் முழுவதும் 60000 ரீச்மார்க்கள் செலவாகிறது.மக்களே இது உங்கள் பணம்."நாசிகளின் பிரச்சார போஸ்டர் 1938

 
 
 உலகில் பெரும்பாலான மக்கள் ஹிட்லர் யூதர்களை மட்டும்தான் படுகொலை செய்ததாக நினைக்கின்றனர்.ஆனால் ஹிட்லரின் நாசிப்படைகள் தங்களின் கொலைவெறியை யூதர்களை கொல்வதன் மூலம் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை.அவர்களின் கொலைவெறியை தனித்துக்கொள்ள அவர்களினால் கொல்லப்பட்ட இன்னொரு மனிதக் கூட்டம் தான் உடல் ஊனமுற்றோர்கள் மற்றும் பரம்பரை நோயால் அவதிப்படுபவர்கள்.

நாசிகளின் இந்த கொடுமையான நிகழ்ச்சித் திட்டம் T4 என்ற குறியீட்டுப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.ஹிட்லரின் நாசி கட்சியால் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படை குறிக்கோள் " இனத்தை சுத்தப்படுத்தல் " ஆகும்.ஜேர்மனிய இனத்தை வலுவற்றதாக்கக் கூடிய ஊனமுற்றவர்களிடமிருந்து இனத்தை சுத்தப்படுத்துவதாகும்.நாசி கட்சியிடம் இருந்த இந்த நம்பிக்கையே யூதர்களையும் இனப்படுகொலை செய்ய தூண்டியது.
 
இதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட நாசி சித்தாந்தத்தை அறிந்துகொள்ள வேண்டும்.தனது இனத்தை தூய்மை படுத்த நாசிகள் தேர்ந்தெடுத்த முறை அல்லது கொள்கையே யுஜெநிக்ஸ் (Eugenics).இந்த தவறான கொள்கையை தேர்தெடுத்த நாசிகல் முதலில் உடல்ரீதியாக மனரீதியாக அங்கவீனப்பட்டவர்களையும் பரம்பரை நோய்களினால் பாதிப்பட்டவர்களையும் படுகொலை செய்தனர்.
 
இந்த யுஜெநிக்ஸ் கொள்கை டார்வினின் பரிணாமக்கொள்கையாலே உருவானது.டார்வின் தனது The Origin Of Species என்ற புத்தகத்தில் இனங்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார், மேலும் அவரின் The Descent Of Man என்ற நூலில் மனித இனம் வெறும் இன்னொரு விலங்கினமே என்று குறிப்பிட்டார்.சார்லஸ் டார்வினின் ஒன்று விட்ட சகோதரரான பிரான்சிஸ் கேல்டன் ஒரு படி மேலே சென்று தனது சகோதரரின் பிழையான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு யுஜெநிக்ஸ் கொள்கைக்கு வித்திட்டார்.
 
220px-Francis_Galton_1850s.jpg

 

சார் பிரான்சிஸ் கேல்டன் 

 
1869 இல் பிரான்சிஸ் கேல்டன் எழுதிய " Heredity Geniuses " என்ற புத்தகத்தில் பிரித்தானிய வரலாற்றில் வாழ்ந்த மேதைகளைப் பற்றி விவரித்துள்ளார்.மேலும் அந்த மேதைகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனப் பண்புகளை கொண்டிருந்தார்கள் என்ற தவறான பொய்யான கருத்தை முன்வைத்தார்.பிரான்சிஸ் கேல்டனின் அந்த உரிமைக் கோரல் அதாவது அந்த மேதைகள் ஒரு குறிப்பிட்ட இன பண்புகளை கொண்டிருந்தனர் என்பது ஒரு படி மேலே சென்று அடுத்த அடுத்த நாட்டு இனங்களை விட பிரித்தானிய இனமும் அதன் ரத்தமும் மரபணுரீதியாக உயர் அந்தஸ்தைக் கொண்டது என்றார்.அதனால் அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.
 
பிரான்சிஸ் கேல்டனுக்குப் பிறகு யுஜெனிக்ஸ் என்ற தவறான கொள்கையை மூர்க்கத்தனமாக ஆதரித்தவர் தான் நாசி சிந்தனையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் டாவினின் பரிணாமக் கொள்கையை ஜெர்மனியில் பிரபலமாக்கியவருமான எர்னஸ்ட் ஹெகல்.எர்னஸ்ட் ஹெகல் யுஜெனிக்ஸ் நோக்கத்துக்காக அதாவது மனித இன மேம்பாட்டு ஆராய்ச்சி நோக்கத்துக்காக படுகொலைகளை ஆதரித்துப் பேசினார்.அவரின்   " Wonders Of Life " என்ற நூலில் " அங்கவீனக் குழந்தைகள் பெற்றவுடன் நேரம் வீணாக்காமல் கொல்லப்படவேண்டும் என்றும் அக்குழந்தைகள் இன்னும் சுயநினைவை பெறாததால் அது கொலையாக கொள்ளமுடியாது என்றும் மனித வாசமே இல்லாமல் வாதிட்டார்.அவர் தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்...
 
Hundreds of thousands of incurable people, for instance the mentally ill,
lepers, and those suffering from cancer are being artificially kept alive,
yet that brings no advantage to them or to society in general... In order to
be freed from this evil, these patients must be given a quick-acting and
effecting poison, by decision and under the observation of an authorized
commission.
 Ernst Haeckel, The Wonders of Life, New
York, Harper, 1904( Page 118-119)
 
470px-Ernst_Haeckel_5.jpg

 

எர்னஸ்ட் ஹர்க்ல் 

 
disabled.jpg

 

Nazi propaganda slide contrasting how far 5.50 German Marks will go. The cost of feeding one person with a hereditary disease for one day is the same as it would cost to feed an entire family of healthy Germans.

 

Social Darwinism த்தை நடைமுறைப்படுத்தி வந்த நாசிகள் யுஜெனிக்ஸ் என்ற தவறான கொள்கையை எந்தவிதமான மாற்றமும் இன்றி தமது நாட்டிலும் நடைமுறைப்படுத்தினர்.Susanne E Evens என்பவரால் எழுதப்பட்ட Forgotten Crimes என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்...  
 
எல்லா சமூகங்களிலும் காணப்படுவதைப் போன்று அங்கவீனம் என்பது ஒரு பொதுவான இயற்கையான விடயமாக நாசிகள் நோக்கவில்லை.நாசி  ஜெர்மனியோ அதை ஒரு இழிநிலையாக இனத்தின்பன்புக்கேடாக நோக்கினர்.உடல் அங்கவீனர்கள்,கண்பார்வையற்றவர்கள், காது கேட்க முடியாதவர்கள்.மன அழுத்தங்களுக்கு உட்பட்டவர்கள், பரம்பரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் நாசிகளின் பார்வையில் சும்மா தின்றுவிட்டு காலத்தைக் கழிப்பவர்கள் அதாவது " Useless Eaters".ஹிட்லரின் முதன்மை இனத்தை உருவாக்க நாசிகளின் முதல் பலிக்கடாவாக ஆனவர்கள் தான் அங்கவீனர்கள்.தனது ஆரிய இனத்தை தூய்மைபடுத்த லட்ச்சக்கணக்கான அங்கவீனர்களை படுகொலை செய்தான் ஹிட்லர். 
 
 
6b.2-handicap-Jewish.jpg

 

நாசிகளின் சிறையில் அங்கவீனர்கள்.

 

ஊனமுற்றவர்களின் பெருக்கத்தைக்க குறைக்க நாசிகள் கையாண்ட முறை மலடாக்கல்.இந்த கொடிய ஈவிரக்கம் அற்ற முறை 1933 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலக மகா யுத்தம் துவங்கும் வரை நாசிகளால் மேற்கொள்ளப்பட்டது.வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் வாழ்ந்த ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு பலவந்தமாக மலடாக்கப்பட்டனர்.இந்த விகாரமான அருவருப்பான நடவடிக்கையின் காரணமாக பலர் இறந்தனர்.மற்றும் பலர் பல மாதங்களாக வலியில் துடித்தனர்.மேலும் பலர் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக தன் நிலை மறந்தவர்களாக வாழ்ந்து வாழ்ந்தனர்.
 

Karl_Brandt_SS-Arzt.jpg

 

ஊனமுற்ற குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்படவேண்டும் என கூறிய Dr Karl Brandt .

 
ஹிட்லரின் திட்டம் ஒன்றன் பின் ஒன்றாக நடைமுறைக்கு வந்தது.1933 முதல் 400,000 க்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக மலடாக்கப்பட்ட்னர்.அதன் பின்னர் துவங்கிய கொலைப்படலமே Action T4 ஆகும்.

ஊனமுற்றவர்களை படுகொலை செய்யும் திட்டம் மனிதாபிமானரீதியாக ஊனமுற்றவர்களால் உருவாக்கப்பட்டது.யூதர்களை படுகொலை செய்ய நாசிகளால் பிரயோகிக்கப்பட்ட முறைகள் அனைத்தும் முதன் முதலில் ஊனமுற்றவர்களை படுகொலை செய்யவே உருவாக்கப்பட்டது.நாசிகளின் இந்த கொரூரச் செயல் கடைசியில் 275000 த்துக்கும் மேற்பட்ட அங்கவீனர்களுக்கு மரணத்தை கொடுத்தது.மேலும் Action T4 நிகழ்ச்சித் திட்டம் அல்லாமல் நாசிகள் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாடுகளில் கொன்ற அங்கவீனர்களின் எண்ணிக்கை யாருமே அறியாத ஒன்று.

Viktor_Brack_N%C3%BCrnberg_2.jpg

 

விக்டர் பராக் - Action T4 ஏற்பாட்டாளர் 

 
 
இந்த மிலேச்சத்தனமான கொடூரச் செயல் மருத்துவர்களினதும் பொது அதிகாரிகளினதும் கடமை என்றும் அவர்கள் அதை சரிவர செய்யவேண்டும் என்றும் நாசிகள் கட்டளையிட்டனர்.நாசிகளினால் மூளைசலவை செய்யப்பட்ட அவர்கள் அதை தாங்களின் பெரும் கடமையாக செய்தனர்.ஹிட்லரின் ஆட்சி கவிழ்ந்ததன் பின்னர் இந்த மருத்துவர்கள் பலருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.இது வரலாற்றில் Doctors Trail என்று அழைக்கப்படுகிறது.

402px-Bundesarchiv_Bild_183-H13374,_Phil

 

Philipp Bouhler, Head of the T4 programme

 

படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட இடங்கள்
Killing Centers

800px-Hadamar1.jpg Hadamar Euthanasia Center 800px-Hadamar_012.JPG

 

இப்படிப்பட்ட அறைகளில் விஷ வாயு புகுத்தப்பட்டு அங்கவீனர்கள் கொல்லப்படுவார்கள்.

 

hadamar.jpg

 

படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது........

 

800px-Pirna_Sonnenstein.jpg

Hartheim Euthanasia Centre 800px-Fort_VII_Pozna%C5%84_RB8.JPG

 

Bunker No. 17 in artillery wall, in world war II used by Germans as improvised gas chambers in Fort VII 



Thanks To WikiPedia.com article about Action T4 program.for more details click on below link.Action  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.