Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய இனத்தின் தலைவர் பிரபாகரன்! தமிழகத்தில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்கள் பதில்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thalaivar%20annaai.jpg

தமிழ் தேசிய இனத்தின் தலைவர் யார் என்ற கேள்விக்கு மேதகு வே .பிரபாகரன் என பதில் கூறியிருக்கிறார்கள் சிறார்கள். ஆம் தமிழகத்தின் காவேரி பாசன பகுதியில் ஒன்றான  திருவாரூர் மாவட்டம்  மருதம்கமழ்வெளி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் வினாடி வினா போட்டியில் இவ்வினா கேட்கப்பட்டிருந்தது. யாருடைய தலையீடுமின்றி சிறியவர்களின் வாயிலிருந்து பிரபாகரன் என பதில் வந்துள்ளது. 
 
நாம் இந்தியர்கள் என்றார்கள் எம் பாட்டன்மார்கள். இல்லை நாம் திராவிடன் என்றார்கள் எங்கள் தகப்பன்மார்கள். இல்லை நாம் தமிழர் என மார்தட்டி சொல்கிறார்கள் இன்றைய இளைஞ்சர்களும் சிறார்களும். 
 
இந்தியனாகவும் திராவிடனாகவும் வாழ்ந்தவர்கள் இப்பொழுதுதான் தமிழனாக தனது சுயத்தின்பால் வாழ தொடங்கி உள்ளார்கள். திராவிடன் என சொல்லி எம்மை வளர்த்தவர்கள் தமிழ் தேசியம் பெறுவதென்பது மரத்தின் கீழ் நின்று எட்டா கனியை பார்த்து கொட்டாவி விடுவதற்கு சமம் என புகட்டினார்கள். தமிழர்களாக இருந்து தமிழ் தேசியம் பெறுவதென்பது மரத்தின் மீது ஏரி கனியை பறிப்பதற்கு சமம் என இன்றைய இளைஞர்கள் சரியாக புரிந்து வைத்துள்ளனர் எனவேதான் நான் இந்தியனும் அல்ல திராவிடனும் அல்ல நாம்  தமிழர்  என கூறி களமிறங்கி உள்ளார்கள். 
 
ஆனால் இவ்வாறு களம் காணுபவர்கள் மிக சொற்பமே என என்னும் போது மனம் வெதும்புகிறது. காரணம் தமிழகத்தில் தமிழன் தமிழனாக இல்லை அவன் மதவாதியாகவும் சாதியவாதியாகவும் வாழ்கிறானே தவிர இனவாதியாக வாழ்வதில்லை. 
 
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட தமிழனை நினைக்கும்பொழுது. 
இந்து எனது மதம் என்றான் இசுலாம் எனது மதமென்றான் கிறித்ததவம் எனது மதம் என்றான் ஆனால் வள்ளுவமும் புறநானூறும் அகநானூறும் எனது மதம் என்று சொல்ல மறந்தான் இல்லை மறுத்தான் தமிழகத்தில் தமிழன் என்ற டிபயரில் வாழ்ந்துவரும் தமிழன். 
 
அதனால்தான் டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட போது  பொங்கியவன் தூத்துக்குடி ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட போது அமைதி காத்தான். 
 
அது ஏனோ தெரியவில்லை தமிழ் சாதிக்கு மட்டும் இப்படி ஒரு சாபக்கேடு. 
 
மதம் சாதி அரசியல் கட்சி கடந்து தமிழராய் ஒன்றிணைவோம். தமிழர் அரசை அமைப்போம். 
 
தமிழீழத் தாகத்துடன் தமிழகத்தில் இருந்து புலிமறவன். 
 
ஈழதேசம்

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=18535:2013-01-22-17-03-02&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

திருவாரூர் மாவட்ட  மருதம்கமழ்வெளி கிராம சிறுவர்களுக்கு நன்றிகள் பல....

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூர் மாவட்ட  மருதம்கமழ்வெளி கிராம சிறுவர்களுக்கு நன்றிகள் பல....


இந்தப்பெருமை சீமானையே  சேரும்.

 

உண்மைதான் விசுக்கு அண்ணா
 

திருவாரூர் மாவட்ட  மருதம்கமழ்வெளி கிராம சிறுவர்களுக்கு நன்றிகள் பல....

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.