Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கமலஹாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கமலஹாசன்

 

 

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்தி உள்ள நடிகர் கமலஹாசன், தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து இன்று  கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், " எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை.

அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன். மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன்.
 

 

ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.

சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார். அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நான் சட்டத்தையும், எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

இதனிடையே,  தனது படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாளை வெளியாக இருந்த விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு 2 வார கால தடை விதித்துள்ளது. இப்போது விஸ்வரூபம் ரிலீஸ் ஹைகோர்ட் கைகளில்!

 

http://news.vikatan.com/?nid=12156

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை நீக்கி உத்தரவிடக் கோரி படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான கமல்ஹாசன் போட்டுள்ள வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 28ம் தேதி வரை தடை நீடிக்கும் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

 

இதனால் திட்டமிட்டபடி விஸ்வரூபம் நாளை தமிழகத்தில் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவை அறிவித்துள்ளன.

 

இதையடுத்து தமிழக அரசு 2 வார காலத்திற்கு இப்படத்தை திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளது.

 

இதை எதிர்த்து தற்போது நடிகர் கமல்ஹாசன் சட்டத்தின் உதவியை நாடியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய தணிக்கைக் குழு அனுமதி தந்த பிறகும் தடை விதிப்பது சட்ட விரோதம் என கூறியுள்ளார். மேலும் இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இதையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசனின் வக்கீல்களுக்கும், அரசு வக்கீலுக்கும் இடையே காரசாரமான வாதம் நடந்தது.

 

தடை செய்யும் அளவுக்கு இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளோ அல்லது வசனங்களோ ஏதாவது இருக்கிறதா என்று கமல்ஹாசனின் வக்கீல்கள் கேட்டபோது அதற்கு அரசுத்தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதையடுத்து தொடர்ந்து வாதிட்ட கமல்ஹாசனின் வக்கீல்கள், மலேசியாவிலும், கத்தாரிலும் இப்படத்திற்கு எந்த ஆட்சேபனையும் வரவில்லை. தடை செய்யப்படவும் இல்லை. இந்த நாடுகளில் இப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வந்து விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இதைத் தடை செய்துள்ளனர் என்று வாதிட்டனர்.

 

இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி, படத்தை ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளி வைக்க முடியுமா என்று கமல்ஹாசன் தரப்பு வக்கீல்களைப் பார்த்து கேட்டார். அதற்கு கமல்ஹாசன் தரப்பில் கூறுகையில், திட்டமிட்டபடி ஜனவரி 25ம் தேதி படத்தை திரையிடாவிட்டால் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி வெங்கட்ராமன், இந்தப் படத்தை நான் 26ம் தேதி பார்க்கிறேன். அதன் பிறகு இப்படத்தை திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா, வேண்டாமா என்ற முடிவுக்கு வரலாம். எனவே ஜனவரி 28ம் தேதி வரை படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று அறிவித்தார்.

 

நாளை ரிலீஸ் இல்லை

உயர்நீதிமன்றம் 28ம் தேதி வரை தடை தொடரும் என அறிவித்து விட்டதால் விஸ்வரூபம் நாளை திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கமல்ஹாசன் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/01/kamal-hassan-approaches-madras-hc-remove-viswaroopamban-168496.html

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் மீதான தடை சரியல்ல - மத்திய அரசு மறைமுக கருத்து

 

 

டெல்லி: தணிக்கை வாரியம் ஒரு திரைப்படத்திற்கு அனுமதி கொடுத்து விட்டால் அதை தடை செய்வது குறித்து பலமுறை யோசிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை சரியல்ல என்பதை மத்திய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து மணீஷ் தீவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு படம் சரியா, தவறா என்பது குறித்து முழுமையாக பரிசீலிக்கும் பொறுப்பில் தணிக்கை வாரியம் உள்ளது. தணிக்கை வாரியம் ஒரு படத்தைப் பரிசீலித்து அதை அங்கீகரித்து சான்றிதழ் அளித்த பின்னர் அதை தடை செய்வது என்பது பலமுறை யோசித்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு அது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மீறுவதாக அமைந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும் என்றார் திவாரி. இதன் மூலம் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை சரியல்ல என்பதை மத்திய அரசு மறைமுகமாக கூறியிருப்பதாக தெரிகிறது

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/centre-comments-on-viswaroopam-ban-168530.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் கமல்!...

 

இதில கருத்துச்சொல்லப்போனால், எனக்கு எதிராகவும் ஒரு கூட்டம் களம் இறங்கும்!! அதனால் த...வி..ர்...க்...கி...றே..ன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கமல்!...

 

இதில கருத்துச்சொல்லப்போனால், எனக்கு எதிராகவும் ஒரு கூட்டம் களம் இறங்கும்!! அதனால் த...வி..ர்...க்...கி...றே..ன்.

பயப்படாமல் கருத்து வையுங்கோ?களம் வெள்ளை வான் வைச்சோ ஆட்களை கடத்தப் போகின்றது...?. :D

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.