Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவை அநீதியாக நடத்துகிறது அமெரிக்கா – கோத்தா மீண்டும் பாய்ச்சல்

Featured Replies

சிறிலங்காவை அநீதியாக நடத்துகிறது அமெரிக்கா – கோத்தா மீண்டும் பாய்ச்சல் [ வெள்ளிக்கிழமை, 25 சனவரி 2013, 03:03 GMT ] [ கார்வண்ணன் ]

gota-2013.jpgபோருக்குப் பிந்திய சிறிலங்காவுடனான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது என்றும், இருநாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா தொடர்பான கொள்கைகளை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

“சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை அமெரிக்கா அநீதியான முறையில் நடத்துகிறது. 

அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். 

ஒவ்வொருமுறையும் அவர்கள் [அமெரிக்க இராஜதந்திரிகளும், அதிகாரிகளும்] என்னைச் சந்திக்கும்போதும், எமது இராணுவத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். 

நான்காவது கட்ட ஈழப்போரின் போது, சிறிலங்காவின் வசதிகளை அமெரிக்க ஆயுதப்படையினர் பயன்படுத்திக் கொள்வதற்கான உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டது. 

இதற்கமையவே சிறிலங்காப் படையினருக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது. 

அமெரிக்காவில் கட்டளை அதிகாரிகள் மட்ட கற்கைநெறிக்கு சிறிலங்கா அரசாங்கம் பரிந்துரை செய்த மூத்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து, கொழும்பு வரவுள்ள அமெரிக்கக் குழுவுடன் கலந்துரையாடவுள்ளேன். 

சிறிலங்காவுடன் நெருக்கமான உறவு தேவை என்று பல சந்தர்ப்பங்களில் தமது குழுக்கள் கூறியதற்கு மாறாகவே, அமெரிக்கா செயற்பட்டு வருகிறது. 

தவறான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கா எடுத்த முடிவினால் பாதிக்கப்பட்ட முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க விவகாரம் அதற்கு ஒரு உதாரணம். 

போரின் போது, 53வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார் என்ற அடிப்படையிலேயே, அமெரிக்கப் பயிற்சிக்கான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் பெயரை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்திருந்தது. 

ஆனால் அவர், 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னரே அந்தப் படைப்பிரிவுக்கு தலைமையேற்றிருந்தார். 

தற்போதைய இராணுவச் செயலராக உள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க நிராகரிக்கப்பட்டது, தனியானதொரு விவகாரம் அல்ல. 

அமெரிக்காவின் இந்தக் கொள்கை மாற வேண்டும். 

இந்தியா தான் பெருமளவில் - 2800 சிறிலங்காப் படையினருக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது. 

அடுத்து. பாகிஸ்தான் 1000 படையினருக்கும், அதற்கடுத்து சீனாவும் பயிற்சிகளை அளிக்கின்றன. 

சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளுக்கு அதிக இடங்களை சீனா ஒதுக்கவுள்ளது. 

அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளை முற்றாக நிறுத்தினால், சிறிலங்கா அதிகாரிகள் சீனா, இந்தியா, பாகிஸ்தானுக்கே போக வேண்டும். 

அமெரிக்க அதிகாரிகள் குழுவின் பயணம் முன்னரே திட்டமிடப்பட்டது. 

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த காலி கலந்துரையாடலில் பங்கேற்கவே இவர்கள் கொழும்பு வரவிருந்தனர். 

அப்போது இவர்களின் பயணத்தைப் பிற்போட்டதற்காக காரணத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

அதேவேளை, அமெரிக்காவில் தற்போது சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 200 இளநிலை அதிகாரிகள் குறுகியகாலப் பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130125107658

 

2009ல் வெளிவந்த இலங்கை படைகளை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் பயன்படுத்த முயன்று தோற்ற கதைகளை பற்றி அதிகம் வெளியில் தெரியாது. அமெரிக்கா நம்பி பல தொழில் நுட்பங்களை காட்டிக்கொடுத்து முடிய, வழமை போல, அவற்றை பயன்படுத்தி கோத்தா தனது பாதுகாப்புத்துறை கம்பனிகளை திறந்தார். :lol:

கொத்தா தனது நிரந்தர வதிவிட உரிமையை அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு மாற்றவேண்டிய தேவையும் உள்ளது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.