Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கு இந்தியாவில், சில வேளையில் உறவினர் தமது மூத்தோரை ஓசைப்படுத்தாது கொன்று விடுவர் – ரொறன்ரோ ஸ்ரார்

Featured Replies

வலியற்ற கொலையின் பண்புநெறியும் சட்டமும் குறித்து இந்தியாகூட விவாதித்திருக்க, எவரிடம் நீர் கேட்கின்றீர் என்பதைப் பொறுத்து, தெற்கு மாநிலமான தமிழ் நாட்டின் மூன்று மாகாணங்கள், ஓசையில்லாது உள்@ரில் விளைந்துவந்த கருத்தொன்றை பத்து அல்லது நூறு ஆண்டாக, எடுத்துச் செல்கிறது.
இன்னம்ரெட்டியார்பட்டி, இந்தியா — தெற்கு இந்தியாவின் அந்த வறிய பகுதியில், தனது மனைவி, பிள்ளைகளோடு உடல்வலுவற்ற தாயை வீட்டில் விட்டுவிட்டு, மைக்கேல் ஒரு துணி நெய்யப்படும் ஆலைக்கு வேலைக்குச் சென்றான். அவன் சில மணி நேரத்தின் பின்பு திரும்பிவந்தபோது அவனுடைய மனைவியினால் நஞ்சு போன்ற நீரம் பருக்கி நஞ்சூட்டி, ‘தாலிக்கூதல்’ என அறியப்படுகின்ற, உள்ளூர் வகையான இரக்கக் கொலை செய்யப்பட்டிருந்த அவனது தாயாருடைய உடல் ஒரு நாற்காலியில் இருத்தி வைக்கப்பட்டு, பூக்கள் போட்டு அழகூட்டப்பட்டிருக்க, சிற்றூர் மக்கள் அதனைச் சுற்றிநின்றனர்.

மூபத்து ஆண்டுக்குப் பின்பு, மனைவிமேல் கூடாத எண்ணத்தை நெஞ்சில் அவன் நிறுத்தவில்லை. “எனது தாயார் பிணியுற்றும் வலியோடும் இருந்ததோடு சரியாக உண்ணவுமில்லை” “நானாக அதனைச் செய்ய நிதைதிருந்தேன் அந்த நேரம் சுற்றிச்செல்ல போதுமான உணவு இருக்கவில்லை” என்றான் 62 அகவை மைக்கேல்.

வலியற்ற கொலையின் பண்புநெறியும் சட்டமும் குறித்து இந்தியாகூட விவாதித்திருக்க, எவரிடம் நீர் கேட்கின்றீர் என்பதைப் பொறுத்து, தெற்கு மாநிலமான தமிழ் நாட்டின் மூன்று மாகாணங்கள், ஓசையில்லாது உள்@ரில் விளைந்த கருத்தொன்றைப் பத்து அல்லது நூறு ஆண்டாக, எடுத்துச் செல்கிறது.
2010ல் உயர்ந்தோரது வழக்கும் மூத்தோரது உரிமைக் குழுக்களும் காட்டிய எதிர்ப்பின் பின்பு இந்தியாவினது ஒரு சிறு மூலையில் அந்தப் பழக்கம் குறைந்து விட்டது. ஆனால் பன்னிரண்டோ நூறோ தொகையான ‘கருணைக்’கொலை அல்லது தலைக்கு வார்த்தல் ஓசைப்படுத்தாது ஒவ்வோர் ஆண்டும் நிகழ்வதாக மக்கள் சொல்கின்றனர்.

“வலியற்ற இறப்பு எனச் சிலரும் மற்றையோர் கொலை எனவும் சொல்கின்றனர”; என குமுகப் பாதுகாப்புத் தலைவர் றாஜேஸ்வர் தேவரக்கொண்டா கூறுகிறார்.
இது பல்வேறு வடிவங்களை எடுக்கமுடியினும், பொதுவான அணுகுமுறையாவது, ஒருமுறை ஒரு மூத்த உறவினர் கடுமையாக நோய்வாய்ப்பட, குடும்பத்தினால் அவரைப் பேண இயலாது போயின், ஒரு நாள் குறிக்கப்படும். பெரும்பாலும் உறவினர் இறுதி வணக்கம் செலுத்த, அல்லது பங்குகொள்ள அழைக்கப்படுவர். அந்த நோயுற்றிருப்பவரை எண்ணெய்யால் குளிப்பாட்டுவர். தலையில் குளிர் நீரையும் அதிகளவான தேங்காய்ப் பாலையும் விட்டு, தேய்த்துக் கசக்கிட இறப்பு நேரும்.

நோயுற்ற அல்லது மெலிவுற்ற ஒருவரது உடல் வெப்பத்தைக் குறைப்பதனால் அகப்பூ(hநயசவ)வினது இயக்கத்தை நிறுத்தமுடியும்: அத்தோடு கூடிய அளவான நீரகங்கள் குடிப்பதனால் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டில் தடையைத் தூண்டலாம்: இவ்வாறு முதுமை மருத்துவத்துறை மருத்துவர் றாஜ நட்றாஜன் கூறினார்.
மாறுபாடானதாக, நாள் குறிக்கப்பட்டோரைக் கட்டாயப்படுத்தி மாட்டுப்பாலைப் பருக்கி, அவர்கள் மூக்கை விரலால் நசித்து இறுக்கி மூடுவர். இவ்வாறு செய்வதை “பால் மருத்துவம்” என அழைப்பர் — இது “மூச்சு விடும் சிக்கல்களை” உண்டாக்கும் என்று காந்திக்கிராம சிற்றூர் நிறுவன குமுகவியல் பேராசிரியர் எஸ் குருசாமி தெரிவித்தார்.

‘தாலிக்கூதல்’ — மரபுவழியாக 50 அகவை, மற்றும் அகவைகூடிய திறமையிழந்தோரும், இளமையையிருந்தாலும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்போரும் குறிவைக்கப் படுவர். பிறந்த நாள் அல்லது திருமணம் போல இது இயற்கையானதாகும் எனச் சிலர் கூறுவர். “இது வெறும் வாழ்க்கையின் சுழற்சிதான்” என பேரையூரிலுள்ள சிற்றூர் உழவர், அகவை 60ஆன காளிமுத்து கூறினார்.
south-india-600x359.jpg
முடிவுகாலத்தில் மட்டும் செய்வதாக குமுகம் கூறிடினும், குமுக ஏற்புடைமை தவறு இழைப்பதிலும் முடிவுற்றிருக்கிறது: பொறுமையில்லாத குடும்ப உறுப்பினர், “இவற்றை விரைவுபடுத்துகின்றனர்”, சொத்தினை தமது கட்டுப்பாட்டினுள் கொணர, சில வேளையில் இணங்குகின்ற மருத்துவர், அல்லது போலி மருத்துவரது துணையோடு தேங்காய்ப் பாலுக்கு மாற்றீடாக நஞ்செனத் துண்டுகட்டப்பட்ட எரிநறா(யுடஉழாழட)வை அல்லது குழிசைகளைக் கொடுக்கின்றனர் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்,

இக்காலத்தில் அவர்களது சொத்துக்காக, இளம் மக்கள் தடிமன் அல்லது மெல்லிய நலக்குறைவாயினும், சிலவேளையில் ‘தாலிக்கூதல்’ வேண்டும் என்கின்றனர் எனச் சொல்கின்றார் விருதுநகர முதியோர்க்கு முதியோர் நிறுவன இயக்குநர் இளங்கோ றாஜரத்தினம். முதியோர் இந்தப் பழக்கத்தால் கடுமையாக அச்சம் கொண்டுள்ளனர்: அவர்கள் முகத்தில் அச்சத்தின் அழுத்தத்தை உங்களால் காண முடியும்.
சில வேளையில், குறிவைக்கப்பட்டோர் அதனை அறிந்து தப்பி ஓடி விடுவதும் உண்டு.

மற்றையோர் தமது தலைவிதியை வெறுமனே ஏற்பதனால், இரக்கக்கொலையை வேண்டுகின்றனர்: அவர்கள் இறப்பதற்கு அணியமாயுள்ளனர், ஏனெனில் குமுகம் அவர்களைப் பயனற்றோர் என உணரவைக்கிறது.

இரக்கக்கொலையின் வரலாறு தெளிவற்றதாக உள்ளது. ஆனால் சிலர், ஓர் அரச குமரனது வருத்தமுற்றிருந்த மாமியார், அமைதியாக இறப்பதற்கு அவர் துணை புரிந்தமைக்காக, அது பிரிட்டி~; பேரரசுக்கு முன்பு தொடங்கியதாகக் கூறுவர். மற்றையோர், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும், உள்@ரின் நலிவுற்ற பொருண் மியத்தாலும் 1950க்கு கிட்டிய காலத்தே தொடங்கியிருக்கலாம் என ஐயுறுகின்றனர்.

இரக்கக்கொலைக்கு ஆதரவு அளித்ததனால் கூட்டுக் குடும்பங்களைப் பார்த்த ஒரு குமுகம், படிப்படியாக மிகச் சிறிய குடும்பமாக மாறுவதைக் காண்கிறது: இது முதியோர் மீது குறைந்த குமுக மதிப்பு வைக்கிறது. பெண்டிர் நிலை இந்தியாவில் பெரும்பாலும் தாழ்ந்திருந்தாலும் ஆடவர் அடிக்கடி இரக்கக்கொலையால் பாதிக்கப்படுவர்.

“ஒரு முதிய மாந்தன் தனக்குத்தானும் துளிர்நீர்(வநய) வைத்துக் குடிக்கவோ பேரப்பிள்ளைகளைக் கவனிக்கவோ மாட்டார். அதே நேரத்தில் முதிய பெண்டிர் பயனுடையோராக இருக்கின்றனர்” தேவறக்கொண்டா இவ்வாறு கூறினார்.

தாம் யாரோ ஒருவருடைய துன்பத்தைப் போக்குவதாக பல மக்கள் உணர்கின்றனர் என்றார் குருசாமி. அவர் இரக்கக்கொலையை நெறிமுறை தழுவியதென்பதிலும் பார்க்க, குடும்பம் எடுக்கும் முடிவாகப் பார்க்கிறார். நீர் எதனையும் செய்யலாம்: ஆனால் அது இரக்கக் கொலையை நிறுத்தாது என, இன்னம்ரெட்டியார்பட்டி ஓய்வுபெற்ற ஒருவரான 63 அகவை தனுஸ்கோடி சொன்னார். நமது பண்பாட்டில், வீட்டில் ஒரு சிக்கல் ஏற்பட்டால், குடும்பமேயொழிய, அரசு அதனைக் கையாளுவதில்லை.

நேரடியாக வலுவான பண்பாட்டோடு மோதுவதிலும் பார்க்க, கல்வியளித்தல் மூலமாக அடிப்படைக் குமுக பொருண்மிய மேம்பாட்டைக் கொண்டுவருவதற்கும் வலியின்மைக் கவனிப்பை மேம்படுத்தற்கு அழைப்பு விடுப்பதற்கும் முயற்சி எடுக்கின்றனர் என ஆர்வலர் கூறுகின்றனர்.படிப்படியான ஓய்வூதியங்கள் பரவுதல் எத்துணை ‘சாதாரண’மானதாக இருப்பினும் அதுவும் துணைபுரிகிறது. “நீர் இறந்துவிட்டால் உம்மால் ஓய்வூதியத்தைக் கொண்டுவரமுடியாது.” “இப்பொழுது உயிரோடு உம்மை வைத்திருப்பதில் குடும்பங்கள் அக்கறை காட்டுகின்றன” என றாஜரத்தினம் கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.