Jump to content

காலம் தான் பதில் சொல்லும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை கேட்காமல்

உன்னைபற்றி நிறையவே

கனவுகள் கண்டுவிட்டேன்

நீ எனக்காக படைக்க பட்டவன்

என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன்

கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்..

சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய்

மறக்க முடியவில்லை அந்த நாட்களை

மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா?

காலம் பதில் சொல்லும்...

கனவுகள் வெறும் கனவுகளாகவே..

போதுமடா நம் உறவு..

வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு

உன்னுடன் பேசும்போதெல்லாம்

உன்னை தொலைத்த வேதனையில்

நான் வாட தயாராய் இல்லை..

சோகத்தை தணிக்க ,

எனக்கு ஏதும் வழி தெரியவில்லை

கண்ணீரை தவிர...

பாவியடா நான்...

எப்படி தனிமையில்

அவற்றை தணிப்பேன்

உன்னை மறந்து விட்டதாக

நண்பர்களிடம் கூறினாலும்

உன்னை பிரிந்த வலி

இன்னும் ரணமாய்...

என் வாழ்க்கை பக்கங்களை

நிரப்பும் போது நீ

துணையாய் இருக்க ஆசைப்பட்டேன்

கடைசியில் தோழி என்ற வார்த்தையுடன்

முற்று பெற்று விட்டாய்

என் பயணமும் நிற்கப்போவதில்லை

பக்கங்களும் குறையப்போவதில்லை

நீ இல்லாத வெற்றிடம் எனக்கு

வெற்றிக்கு வழி வகுக்குமா??

நிச்சயம் காலம் தான் பதில் சொல்லனும் !!!!!

Link to comment
Share on other sites

இதயத்தின்

வலிகளை

எழுத்தில் நீரும்

தருகின்றீர்

கண்களின்

ஈரத்தை

கவிதையின்

மையுமாக்குகின்றீர்

சோகத்தின்

வடுக்களை

உமக்கு

சொந்தமாக்குகின்றீர்

வேதனையின்

வலிகளை இங்கு

எம்முடன்

பகிர்கின்றீர்

தமிழ் எழுத்தை

இங்கு

சங்கமம்

ஆக்குகின்றீர்

உங்கள்

சோகத்தின்

வேள்வியை

இங்கு நடத்துகின்றீர்

என்னையும்

கவி

எழுதத்

தூண்டுகின்றீர்

உம்மை

ஆற்றுப்படுத

தெரியாமல் என்னைத்

தவிக்க வைக்கின்றீர்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன் நன்றி நன்றி நண்பனே.........கவியினால் என் கவிக்கு கருத்து தந்தமைக்கு... நண்பனே நீங்கள் ஆறுதல் படுத்த முடியாது தான் ஏன் எனின் என் சோகமது ஆறாத தீராத வடு நண்பனே....உங்கள் விமர்சனங்கள் சில வேளைகளில் என்னை யொசிக்கவும் வைக்கின்றது... நண்பனே நன்றி..

Link to comment
Share on other sites

இலக்கியன் நன்றி நன்றி நண்பனே.........கவியினால் என் கவிக்கு கருத்து தந்தமைக்கு... நண்பனே நீங்கள் ஆறுதல் படுத்த முடியாது தான் ஏன் எனின் என் சோகமது ஆறாத தீராத வடு நண்பனே....உங்கள் விமர்சனங்கள் சில வேளைகளில் என்னை யொசிக்கவும் வைக்கின்றது... நண்பனே நன்றி..

சோகம் தான் வாழ்க்கை அல்ல வாழ்ந்து நீயும்காட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் இலக்கியன் வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்..... நன்றி நண்பனே

Link to comment
Share on other sites

ம்ம்ம் இலக்கியன் வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்..... நன்றி நண்பனே

சோகத்தின்

வடுக்களை

மாற்றுங்கள்

இன்றுதான்

பிறந்தேன் என

நினையுங்கள்

பழமைகளை

மறக்கப்

பாருங்கள்

எதிர்காலத்தை

நோக்கை

நடவுங்கள்

சிந்தையை

நீயும்

தீட்டுங்கள்

இனிய

கவிதைகளை இங்கு

படையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டாயமாக நண்பனே நட்புகள் ஆயிரம் என்னை சூழ இருக்கும் போது எனக்கென்ன கவலை...ம்ம்ம் கட்டாயமால யாழில் என் கவிகள் தருவேன்.....என் கவிகள் யாரையும் பாதிக்காது என்ரு எனகு தெரியும் ஏன் என்றால் என் கவிகள் அனைத்தும் என் நிஜங்கள் :)

Link to comment
Share on other sites

கட்டாயமாக நண்பனே நட்புகள் ஆயிரம் என்னை சூழ இருக்கும் போது எனக்கென்ன கவலை...ம்ம்ம் கட்டாயமால யாழில் என் கவிகள் தருவேன்.....என் கவிகள் யாரையும் பாதிக்காது என்ரு எனகு தெரியும் ஏன் என்றால் என் கவிகள் அனைத்தும் என் நிஜங்கள் :lol:

உங்கள் கவிதைகளை பாடுங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் சோகத்தினால் பாதிக்கப்பட்டு பதப்பட்டிருக்கும்போது பிறக்கும் கவிகள் பல. இளவயதுக் காதல் இனிமையானது அதேபோல் தோல்வியும் தாளமுடியாததுதான். வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். வாழ்ந்து காட்டுங்கள்.

உங்களுக்கு புதிய உறவுகள் இப்போது பலர் இருக்கிறார்கள், களத்தில்!

Link to comment
Share on other sites

சோகம் இல்லாமலும் சில கவிகள் தாருங்கள் இலங்கைப் பெண்ணே :P தங்கள் காதலனுடன் இருந்த இனிமையான நினைவுகளைக் கூட இதமாக எமக்கு எடுத்துத் தரலாமல்லவா? கண்ணீரை மட்டும் கள உறவுகள் வாசிப்பதால் கொஞ்சம் உப்புக் கரிக்கின்றது... 8)

Link to comment
Share on other sites

நமக்கு தான் சோகக்கவிதை தொல்லை என்றால் நீங்களும் நல்லாய் எழுதுகின்றீர்கள்.

இனி சோகம் வேண்டாமே. ஒரு சந்தோசமான கவிதை தாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் நன்றி செல்வமுத்து இருக்கின்ற பல உறவுகளோடு நானும் சந்தோசமாக இருக்க முயற்சி செய்கின்றேன் நன்ரி நண்பனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் கௌரிபாலன் உங்கள் வேண்டுதலுக்கு இணங்க நான் கட்டாயம் சந்தோசத்துடன் கவிகள் தருவேன்... நன்றி நண்பனே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் றமா சோகம் என்றாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கு என்று சொல்லி கேள்விப்படிருகின்றேன் இப்போ அதை அனுபவித்து உணருகின்றேன் நண்பியே...ம்ம்ம் உங்கள் வேண்டுதலுக்காக நான் சந்தோசமான கவிகள் தருவேன்.... நன்றி நண்பியே

Link to comment
Share on other sites

  • 1 year later...

அருமையான கவிதை...

காதல் நட்பு என்று வியாக்கியானம் பேசுபவர்கள் படிக்க வேண்டிய கவிதை...

உன்னை கேட்காமல்

உன்னைபற்றி நிறையவே

கனவுகள் கண்டுவிட்டேன்

நீ எனக்காக படைக்க பட்டவன்

என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன்

கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்..

சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய்

மறக்க முடியவில்லை அந்த நாட்களை

மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா?

காலம் பதில் சொல்லும்...

கனவுகள் வெறும் கனவுகளாகவே..

போதுமடா நம் உறவு..

வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு

உன்னுடன் பேசும்போதெல்லாம்

உன்னை தொலைத்த வேதனையில்

நான் வாட தயாராய் இல்லை..

சோகத்தை தணிக்க ,

எனக்கு ஏதும் வழி தெரியவில்லை

கண்ணீரை தவிர...

பாவியடா நான்...

எப்படி தனிமையில்

அவற்றை தணிப்பேன்

உன்னை மறந்து விட்டதாக

நண்பர்களிடம் கூறினாலும்

உன்னை பிரிந்த வலி

இன்னும் ரணமாய்...

என் வாழ்க்கை பக்கங்களை

நிரப்பும் போது நீ

துணையாய் இருக்க ஆசைப்பட்டேன்

கடைசியில் தோழி என்ற வார்த்தையுடன்

முற்று பெற்று விட்டாய்

என் பயணமும் நிற்கப்போவதில்லை

பக்கங்களும் குறையப்போவதில்லை

நீ இல்லாத வெற்றிடம் எனக்கு

வெற்றிக்கு வழி வகுக்குமா??

நிச்சயம் காலம் தான் பதில் சொல்லனும் !!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கலைஞன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 11 MAY, 2024 | 06:25 AM   ஐக்கியநாடுகள் சபையில்  பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை  வழங்குவது குறித்து  ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது. 143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. https://www.virakesari.lk/article/183203
    • பொதிசெய்யப்பட்ட இரண்டு பாண் பாக்கெட்டுகளில் எலியின் உடலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் உயர்தர சுகாதாரம் பேணப்படும் நாடாகும். இவ்வாறான சம்பவங்கள் அங்கு நடைபெறுவது அரிதாகும். எலியின் எச்சங்கள் அதன் தயாரிப்புகளில் எவ்வாறு ஊடுருவின என்பதை ஆராய்ந்து வருவதாக குறித்த பாண் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஷிகிஷிமா தெரிவித்துள்ளார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று குறித்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜப்பானில் தூய்மை மற்றும் சுகாதாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால் உணவு விஷம் மற்றும் மோசமான தரம் ஆகியவை அண்மைக்காலத்தில் ஜப்பானிய தலைப்புச் செய்திகளாக அவ்வப்போது வருகின்றன. கடந்த ஆண்டு, அரிசி உருண்டையில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மன்னிப்புக் கேட்கப்பட்டதோடு அவை திரும்பபெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301373
    • Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 08:27 AM   இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டால் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை ஆதரவளிக்க  எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த அமெரிக்காவின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் துடிப்பான சிவில்சமூகம்  காணப்படுகின்றது, நான் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் இலங்கை அமெரிக்க சமூகங்கள் உட்பட மக்கள் மத்தியிலான தொடர்புகளை வலுப்படுத்த எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளேன். உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலிற்கு நான் ஆதரவளிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இலங்கையின் பொறுப்புகூறும் விவகாரங்களை கையாள்வதற்கான எலிசபெத் கே கோர்ஸ்டின் திறமை மாற்றுக்கருத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கான திறமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதன்போது இலங்கை நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய சட்டங்கள்  இலங்கை மக்களிற்கான சுதந்திரங்களை மேலும் முன்னேற்றமாக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து செனெட்டர் பென்கார்டின் சுட்டிக்காட்டினார். நான் தூதுவராக நியமிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் பின்பற்றவேண்டிய சர்வதேச தராதரத்திற்கு அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183206
    • சித்திரை புதுவருடத்திற்கு இலங்கை பயணம் 👍 ஓம் இலங்கையில் செய்யபடும்  சொக்லேட் மட்டும் சுவை இல்லை . முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒருவர் தன்னை தமிழன் என்று சொன்னது எனக்கும் ஆச்சரியம்
    • யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர். இதன் போது குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://thinakkural.lk/article/301368
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.