Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினால் பலேர்மொ மாநில முதல்வருடன் அரசியல் சந்திப்பு

Featured Replies

 

24-01-2013 அன்று மாலை 15:30 தொடக்கம் 16:30 வரை Niscemi மாளிகையில் இ.ஈ.மக்களவையும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புளும் இணைந்து பலேர்மோ மாநில முதல்வரின் உத்தியோகபூர்வமான வாசஸ்த்தலதலமான Niscemi மாளிகையில் ஓர் அரசியல் சந்திப்பைமேற்கொண்டனர்.

italy1.JPG

                                                  

இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் இ.ஈ.மக்களவையின் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை, உப தலைவர் ஐசஸ்வின், ஆலோசகர்கள் லீனப்பு, றஞ்சித் அரசியல் ஊடக பொறுப்பாளர் தட்சாயினி தவராஐசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு  பொறுப்பாளர் திரு ஐமால், பொருளாளர் சச்சிதானந்தம், சிசிலி மாநில  தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் ஸ்ரேபனோ எட்வேட் , உறுப்பினர் சச்சியானந்தம் , தமிழர் புணர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு.கோணேஸ்வரன், விளையாட்டுச் சம்மேளன பொறுப்பாளர் திரு மோகன், சமூக நல அமைப்பு சார்பாக திரு ஜான்சன்  ஆகியோர் கலந்து கொண்டனர். 

italy4.JPG

முதலில் பலேர்மோ மாநில முதல்வரும் பேராசிரியருமான Leoluca  Orlandoஅவர்களுடன் பங்கு பற்றியவர்களின் அறிமுகம் நடை பெற்றது. தொடர்ந்து இ.ஈ.மக்களவையின் உருவாக்கமும் கடந்த இரண்டரை வருடங்களாக செயற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விபரமாக எடுத்துக்  கூறியதுடன் அதுபற்றிய ஆவணங்களும் கையளிக்கப்பட்டது. அத்துடன் சர்வதேச ரீதியாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் அரசியல் முன்னெடுப்புகள் பற்றியும் முதல்வருக்கு எடுத்துக் கூறப்பட்டதுடன், ஐக்கிய நாடு சபையின் 19து மனித உரிமை மீறல் அமர்வின் போது இலங்கைக்கெதிராக இத்தாலி வாக்களித்தது பற்றியும் உரையாடப்பட்டது.  

  

italy5.JPG

italy6.JPG                                               

தொடர்ந்து ஐக்கிய நாடு சபையின் 22து  அமர்வில் தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமை சம்மந்தமாக முன்வைக்கப்படும் வாக்கெடுப்பு கோரிக்கை பற்றி இத்தாலியின் முழுமையான ஆதரவை கோரியதுடன் 1ம் திகதி தொடக்கம் 3ம் திகதி வரை அ.ஈ.மக்களவையின் அரசியல் முன்னெடுப்பு பற்றியும், 04-03-2013 தேசியக்கட்மைப்பினால் ஒழுங்கு செய்யப்படும் மாபெரும் வெகுஐனப் போராட்டம் பற்றியும்  விரிவாக அவருக்கு எடுத்துக்கூறப்பட்டது, இதில் உள்ளடக்கப்பட்ட விடையங்கள் தமிழீழத் தேசிய சுயநிர்ணைய உரிமை பற்றியும், ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும்  தன்னாட்சி உரிமையுடன் வாழ்வதற்கான சகல அதிகாரங்களையும் கொண்டவர்கள் என்பதையும், தொடர்ந்தும் ஐ.நா தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் படியும் மனித உரிமை சம்மந்தமாக  எமக்கு இத்தால் தொடர்ந்து ஆதரவு தருவதற்கும் அவருக்கு எடுத்துக்கூறப்பட்டது .

italy3.JPG

இறுதியாக முதல்வர் அவர்கள் எமது கோரிக்கைகள் அனைத்தையும் நுன்னியமாக செவி மடுத்ததுடன் ஈ.த.மக்களவையின் தொடர்ச்சியாக ஒரு தொடர்பு சம்மந்தாமகவும், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படுமெனவும் கூறினார். பின்னர் சிறப்பு விருந்தினர் பங்கு பற்றும் ஆதரப் பிரதிப் புத்தகத்தில் இ.ஈ.மக்களவையின் தலைவர் கையழுத்து இட்டதின் மூலமும், அதன் பின் பலேர்மோ மாநகர மாளிகை வரலாறு பற்றிய சிறப்பான நூலையும் அன்பளிப்பு செய்ததின் மூலம் எமது தமிழ் தேசிய கட்டமைப்புகள்  அனைத்துக்கும் ஒரு பிரத்தியோக  அங்கீகாரம்  கிடைக்கத் தந்து கௌரவித்தார்.

நன்றி

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை

 

www.pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.