Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்கு எதிராக யாழில் 15 இல் உண்ணாவிரப் போராட்டம் -அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசுக்கு எதிராக யாழில் 15 இல் உண்ணாவிரப் போராட்டம் -அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு
பிப் 3, 2013
     
யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை படையினர் அழிப்பதைக் கண்டித்தும், மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில் விரைவில் மக்களை மீள்குடியேற்றுமாறு அரசை வலியுறுத்தியும் எதிர்வரும் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
 
காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை தெல்லிப்பழை தூப்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ள என்று இதனை ஏற்பாடு செய்துள்ள வலிகாமம் வடக்கு இடம்பெறயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜே.வி.பி. நவசமசமாஜக் கட்சி ஐக்கிய சோசலிஷக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள், கல்விச் சமூகத்தினர், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளுமாறு வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
 
யாழ். தொண்டமானாறு தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான உயர் பாதுகாப்பு வயலங்களினுள் அமைந்துள்ள தமிழ் மக்களின் வீடுகள், கட்டடங்கள் படையினரால் இடித்தழிக்கப்படுவதைக் கண்டித்தும், இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியிகளில் விரைவில் மக்களை மீள்குடியேற்றுமாறு அரசை வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
 
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 6ம்  நாள் கொழும்பில் இந்த பாரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பாத யாத்திரை மற்றும் விசேட பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் குடும்ப நிர்வாகத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
 
காலணித்துவத்திற்கு எதிரான மக்கள் அமைப்பு என்ற அமைப்பினால் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த பாதயாத்திரை லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தில் ஆரம்பமாகி பொரளை ஊடாக ஹைட் மைதானம் வரையில் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் அடக்குமுறைகளும், எச்சரிக்கைகளும் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மேலும் மேலும் வளர்க்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.