Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரின்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் கைவிடப்பட்டநிலை: குளோபல் தமிழ் செய்திகளில் இருந்து..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்)

பெண்கள் உரிமைகள் குறித்து உலகம் எங்கு பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் அந்த உரிமைகள் எந்தளவிற்கு அரசுகளினால் அல்லது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது என்பது கேள்விதான். தற்கால நவீன அரசுகள் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரித்திருந்தாலும் அது எந்தளவிற்கு நடைமுறையில் இருக்கின்றது என்பதும் சந்தேகம்தான். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதை நோக்கினால் அரசுகளின் சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகள் அல்லது நெகிழ்வுத் தன்மைகள்தான் முக்கியம் என்பதை அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கா பிரித்தானியா போன்ற மேலைத்தேச நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் மனிதாபிமானம், ஜனநாயகம் என்ற வரையறைகளுக்குள் பதுங்கியுள்ளன

ஜனநாயகத்தின் முரண்பாடுகள்

அதேவேளை உள்நாட்டு யுத்தங்களும் இன மோதல்களும் பொண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பிரதான காரணமாவதுடன் பாலியல் துஸ்பிரயோகங்களை தடுக்கக்கூடி அற்பசொற்ப சட்டங்களையும், விதிகளையும் மீறுவதற்கும் அல்லது கடைப்பிடிப்பதை தவிர்ப்பதற்கும் காரணமாகின்றது எனலாம். வியாட்நாட் போர், பாலஸ்தீன யுத்தம், பங்களாதேஸ், மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு யுத்தம் இவற்றிற்கு உதாரணங்களாகும். ஜனநாயகத்தில் உள்ள முரண்பாடுகள் அல்லது ஜனநாயகத்தின் பேரிலான இனச்சமத்துவம் இன்மைகள் யுதத்திற்கு வித்திடுகின்றன ஆனால் இன விடுதலைக்காண போராட்டங்கள்தான் பெண்களின் ஜனநாயகத்தையும் அவர்களுக்குரிய சுதத்திரத்தையும் இல்லாமல் செய்துவிடுகின்றன. உள்ளுர் யுத்தம் நடைபெற்ற அல்லது நடந்துகொண்டிருக்கின்ற நாடுகளிலும் சரி யுத்தம் இல்லாம் அமைதியாக இருக்கின்ற நாடுகளிலும் சரி மனிதாபிமானம், ஜனநாயகம் என்ற கோட்பாடுகள் பெண்கள் விடயத்தில் பாதகமான நிலைமையை தோற்றுவிக்கின்றன.

மனிதாபிமானமும் ஜனநாயகமும்-

பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவளின் உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் மனிதாபிமானம், ஜனநாயகம் என்ற விதிமுறைகள் முன்னுக்கு வந்துவிடுகின்றன. அதற்காக மனிதாபிமானுமும் ஜனநாயகமும் இருக்கக்கூடாது என்பது அல்ல. பெண்கள் விடயத்தில் இந்த இரண்டும் எதிரிக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன என்பதுதான் வாதமாகும். உதாரணமாக இந்திய தலைநகர் புதுடில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யட்டிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவருக்கு 17வயது. அவன் சிறுவன் என்று பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் சம்பவம் தொடர்பான வழக்கில் அந்த சிறுவனை ஆஜர்படுத்த முடியாது என்றும் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்ப முடியாது ஏன் என்றால் அவனுக்கு இன்னும் சில மாதங்களில் 18 வயது வந்துவிடும் எனவும் கூறியுள்ள பொலிஸாhர் அவனை விடுதலை செய்து பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் நல்லது என்றும் ஆலோசணை வழங்கியுள்ளனர்.

சிறுவர் நீதிமன்றம் எங்கே?

சிறுவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்பது ஏற்புடையதுதான். ஆனால் பகிரங்கமாக பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்து அவளின் உடலையும் வீதியில் தூக்கி எறிந்த பிரதான சந்தேக நபர்களில் அந்த சிறுவனும் ஒருவன். அந்த குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டுமுள்ளான். இங்கு கேள்வி என்னவென்றால் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அங்கு சிறுவர் நீதிமன்றம் உள்ளது. அந்த நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தி குற்றத்தை விசாரிக்க முடியதா? மனிதாபிமானம், ஜனநாயகம், என்ற அடிப்படையில் அந்த சிறுவனை பொலிஸார் விடுதலை செய்ய முற்பட்டால் 16 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட ஒவ்வொரு சிறுவர்களும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட அது துர்ண்டுதலாக அமையுமல்லவா? இந்தியாவில் எடுத்ததுக்கெல்லாம் தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தும் பொலிஸார் அல்லது புலனாய்வுத் துறை ஏன் இந்த விடயத்தில் மட்டும் தனி நீதிமன்றம் அமைக்கவில்லை. அல்லது இந்த சிறுவனை கையாள்வாதற்கு தனி நீதிமன்றம் அமைக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆக பெண்கள் விடயத்தில் சட்டத்தில் உள்ள பலவீனங்கள் முன்லைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவுகளையும் வன்முறைகளையும் துண்டி விடுகின்ற செயற்பாடுகள் இந்தியாவில் மட்டுல்ல அனேகமான நாடுகளில் காணப்படுகின்றன. புதுடில்லியில் மருத்துவ பீட மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் அதேபோன்று நான்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்தியாவின் தினமனி நாளேடு குறிப்பிட்டுள்ளது. மனிதாபிமானம், ஜனநாயகம் என்பதை பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் விடயத்தில் காண்பிக்காமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் குறைந்த பட்சமேனும் அவற்றை தடுக்க முடியும். அமெரிக்காவில் விடுதிகள், சிவப்பு விளக்கு பகுதிகள் என்று கூறப்படும் இடங்களில் தொழிலுக்காக ஈடுபடுத்தப்படும் பெண்களின் பேச்சு சுதந்திரம் அல்லது பாதிப்புக்கு உள்ளாகின்றபோது முறைப்பாடு செய்யும் சுதந்திரம் தடுக்கப்படுவதாக பொஸ்ரன் என்ற நாளேட்டில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இங்கு மனிதாபிமான சட்டங்களினால் பலர் தப்பிவிடுகின்றனர். ஜனநாயகம் என்ற கருத்தின் அடிப்படையில் குற்றச் செயலில் ஈடுபட்ட பலர் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடுவதில்லை. இது இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பொருந்தும்.

வன்னியில் நடப்பது.

இலங்கையில் அரசியலமைப்பின்படி பெண்கள் சிறுவர்கள் முதியோர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்க 2005ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் வழிசமைக்கின்றது. ஆனால் இங்கு இனவேறுபாடுகள் இருப்பதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறுகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சரியாக விசாரணைகள் இடம்பெறுவதில்லை. கிளிநொச்சியில் கடந்த ஆண்டு 130 சம்வங்கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் முறைப்பாடு செய்தும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. உறவினர்களினால் பாடசாலை மாணவர்களினால் அயலவர்களினால் படையினரால் பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. முல்லைத்தீவில் 85 மன்னாரில் 95 சம்வபங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் குறைவு என அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். (இந்த மதிப்பீட்டை விட கூடுதலான சம்பவங்கள் இடமடபெற்றிருக்கலாம் எல்லா சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டவை என கூறமுடியாது)

நீதிமன்றத்திற்கு போவதற்கான அறிவுகள் அல்லது தகுந்த ஆலோசணைகள், நிதிகள் இல்லாமை பாரிய பிரச்சினையாகும். அல்லது அச்சுறுத்தல் பணம் கொடுத்து நடந்த சம்வத்தை மூடி மறைத்தல் போன்ற நடவடிக்கைகளும்; விசாரணைகளுக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்லவிடாது தடுக்கின்றது எனவும் கூறலாம்.

விதவைப் பொண்களின் பாதிப்புகள்

கிளிநொச்சி, முல்லைத்திவு மாவட்டங்களில் போரினால் கணவனை இழந்து தணிமையில் இருக்கின்ற பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாவதாக கூறப்படுகின்றது. தொழில் தேடிச் செல்லும்போது, பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும்போது, வீட்டில் தனிமையில் இருக்கும்போது பாதிப்புகள் எற்படுகின்றன. கணவனை இழந்த பெண்கள் பலர் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்பிக்க விரும்புகின்றனர். ஆனால் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அவ்வாறான சம்பவம் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்றிருக்கின்றது. கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் உறவினர்களினால் கொழும்பில் இருந்து வேலைக்கு செல்லும் தென்பகுதி ஊழியர்கள் சிலரினால் பெண்கள் ஏமாற்றப்படும் நிலை அதிகமாகும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் தென்பகுதியில் இருந்து வேலைக்கு அமர்த்தப்படும் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரினால் பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெறுகின்றது. இவ்வாறான 79 சம்பவங்கள் கடந்த ஆண்டில் மாத்திரம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரங்கேறியுள்ளன. (ஆதாரம்-பத்திரிகைச் செய்திகள்)

கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் யுதத்தினால் பாதிக்கப்பட்டு 59 வீதமான பெண்கள் கணவனை இழந்துள்ளதாக பிரதியமைச்சர் கிஸ்புல்லா விவாதம் ஒன்றில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். வடபகுதியில் 62 வீதமான பெண்கள் கணவனை இழந்துள்ளதாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தனது அறிக்கையில் கூறியிருந்தது. இப்போது மிக இலகுவாக இந்த பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெறுகின்றது. இதனை தடுப்பதற்கு இலங்கையை பொறுத்தவரை சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சட்டங்கள் உரியமுறையில் கையாளப்படுவதில்லை.

இனவேறுபாடுகள்

இன ரீதியான வேறுபாடுகள் இருப்பதனால் யுத்தகால பாலியல் வல்லுறவுகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை அல்லது கைவிடப்பட்டன. அல்லது அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணைகள் வாபஸ்பெறப்பட்டன எனலாம். ஊதாரணமாக மன்னர் பேசாலையில் 1999ஆம் ஆண்டு யூடா கமாலிற்றா என்ற 21 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்வம் தொடர்பான வழக்கு விசாரணை கைவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 1998இல் கோணேஸ்வரி என்ற 42 வயதுபெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு அவரது அந்தரங்க உறுப்பில் கைக்குண்டு வைத்து வெடிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சாட்சியம் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது. 1996இல் ரஜனி வேலாயுதப்பிள்ளை என்ற 28 வயது நிரமப்பிய பெண் யாழ் கோண்டவில் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மலசலகுழியில் விசப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையும் சாட்சியங்கள் இன்றி கைவிடப்பட்டுள்ளன. 2009இல் வேலனை வைத்தியசாலையில் தென்பகுதி வைத்தியர் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் வழக்கு விசாரணை கொழும்புக்கு மாற்றப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இறுதிப்போரில் வன்னியில் நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் எதுவும்; ஆரம்பிக்கப்படவில்லை. (இவை சில உதாரணங்கள் மட்டுமே- யுத்தகாலத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் பற்றிய முழுமையன தகவல்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை)

ஏனைய நாடுகளை விட பாலியல் வல்லுறவுகளை தடுப்பதற்கான குறைந்த பட்ச சட்டங்கள் இருந்தும் இனவேறுபாடுகளினால் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் உரியமறையில் நடத்தப்படவில்லை என்பது வெளிப்படையான உண்மைகள்.

தென்பகுதியில்

இனவேறுபாடுகளினால் வடக்கு கிழக்கில் பாலியல்வல்லுறவு குறித்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பதுபோல தென்பகுதியில் அரச அதிகாரிகள் சிலவரினாலும் இளைஞர்களினாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளும் அரசியல் செல்வாக்குகளினால் நடத்தப்படுவதில்லை. 1987-88 ஆண்டு காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியின்போது இடம்பெற்ற 25 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றிய விசாணைகளும் கைவிடப்பட்ட நிலைதான். 2005ஆம் ஆண்டு செய்யப்பட்ட பெண்கள் சிறுவர்கள் தொடர்பான திருத்தச் சட்டங்கள் உரியமறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாலியல் வல்லுறவுகளை குறைந்த பட்சம் தடுக்க முடியும். ஆனால் அரசியல் செல்வாக்குகள் மற்றும் பொலிஸாருடைய அசமந்த போக்குகள் அதனை இல்லாமல் செய்துவிடுகின்றன. சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு நீதி கடைக்காத நிலைமைதான்.

எவ்வாறாயினும் பெண்கள் பிரச்சினைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டிருந்தாலும் பாலியல் வல்லுறவு, தொழில் சமத்துவம் இன்மை போன்றவை பொதுவான பிரச்சினைகள்தான். இந்த விடயங்களை கையாள்வதற்கு அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சட்டங்கள் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். சாவதேச மனித உரிமைச்சபையும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும்; இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். இலங்கை போன்ற உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற நாடுகளில் இருக்கக்கூடிய இன வேறுபாடுகள் அதனால் ஏற்பட்டுள்ள பாலியல் வல்லுறவு பிரச்சினைகள் போன்றவறை;றை கையாள்வதற்கான பொறிமுறை ஒன்றையும் உருவாக்க வேண்டும். பெப்ரவரி 14 உலகம் எங்கும் பெண்கள் உரிமைகளுக்காக நடத்தப்படும் ஒருகோடி மக்கள் ஒன்றுசேரும் போராட்டத்தில் இந்த கோரிக்கை வலுப்பெறட்டும்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88239/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.