Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச காணிகளின் அதிகாரம் வடக்கு ஆளுநரின் கையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரச காணிகளின் அதிகாரம் வடக்கு ஆளுநரின் கையில்
 
வடமாகாணத்தில் உள்ள அரசகாணிகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந் திரசிறி. 
 
நாவற்குழியில் புதிதாக சிங்களக் குடியேற்றமொன்று அமைக் கப்பட்டுவரும் நிலையிலும், அரச காணிகளை படையினரின் பாவனைக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற்று வரும் நிலையிலும் அவசர அவசரமாக அரச காணிகளின் அதிகாரத்தை ஆளுநரின் கைகளில் ஒப்படைத்தமை தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனடிப்படையில்  வடக்கு மாகாணத்தி லுள்ள அரச காணிக ளின் பயன்பாடு தொடர் பாக நடவடிக்கைகளை முற்றுமுழுதுமாகத் தீர் மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமையவே இலங்கையின் வேறெந்த மாகாண ஆளுநருக்கும் இல்லாத இந்த அதிகாரம் வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதுநாள் வரையும் அரச காணி தொடர்பான நடவடிக்கைகளுக்கு குறித்த காணிகள் அமைந்துள்ள பகுதிக்குரிய பிரதேச செயலரே பொறுப்பாக இருந்து வந்தார். ஆயினும் தற்போது ஜனாதிபதியின் விசேட ஆலோசனையின் படி வடக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலர்களிடமிருந்த இந்தப் பொறுப்பு திடீரென ஆளுநரின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 
 
இதுதொடர்பான அறிவுறுத்தல் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்களுக்கும் மற்றும் பிரதேச செயலர்களுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டுள்ளது. 
 
எனினும் இதுவரை குறித்த அதிகார மாற்றம் தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் நேற்று மாலை வரை அவை கிடைக்கவில்லை என்று பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
புதிய நடைமுறையின் படி இனிமேல் அலுவலகச் செயற்பாடுகள், முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை வாடகை அல்லது குத்தகைக்கு எடுப்பவர்கள் குறித்த பிரதேச கிராம அலுவலர், பிரதேச செயலர், அரச அதிபர் ஊடாக வடமாகாண ஆளுநரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
அரச காணிகளை ஏற்கனவே வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விவரங்களும் திரட்டப்படவுள்ளன. அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு உரிய முறையில் பயன்படுத்தப்படாதுள்ள  அரச காணிகளை மீளப் பொறுப்பேற்கவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
வடமாகாணத்திலுள்ள முப்படையினரும், பொலிஸாரும் கூட அரச காணிகளைப் பயன்படுத்துவது தொடர்பிலும்  இந்த நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.
வடமாகாணத்திலுள்ள அரச காணிகளின் பயன்பாடுகள் தொடர்பில் முறையான ஒரு நடைமுறையைக் கையாளும் பொருட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமையவே இது நடைமுறைக்கு வருகின்றது என்று ஆளுநர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதுபற்றி வடமாகாணத்திலுள்ள 5 அரச அதிபர்களுக்கும் தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று நாளைமறுதினம் புதன்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
 
இந்தப் புதிய நடைமுறை மூலமாக, அரச காணிகளின் பயன்பாடுகள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதோடு, காணி சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியைப் பெறத் தவறும் பட்சத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
வடக்கிலுள்ள அரச காணிகளைப் படையினருக்கு வழங்குவதில் தீவிரமாக இருக்கும் ஆளுநர், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வடக்கிலுள்ள அரச காணிகளை கையகப்படுத்தப்படலாம் என்றும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதற்கு அரச காணிகளைக் கையகப்படுத்தவே இந்தத் திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென்றும் தமிழ் மக்கள் தரப்பில் பலத்த சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
04 பெப்ரவரி 2013, திங்கள் 8:00 மு.ப

இந்த உண்மைகளை செய்திகளை வெளியில் கொண்டுவரும் உதயன் மீது டக்ளஸ் என்ற குற்றவாளி ஆயிரம் கோடி கேட்டு வழக்கு தாக்கல் செய்து தந்து சிங்கள தமிழின அழிப்பிற்கு உதவுகின்றான்  :(

நகரசபைக் காணிகளை அபகரிக்கும் கழிவொயில் சந்திரசிறி மீது கூட்டமைப்பு வழக்குப் போடாது! வழக்குப் போட இருப்பதாக அறிவிக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.