Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈகி முருகதாசன் நினைவு நாள் மற்றும் ஐ.நா.வுக்கு எதிரான முற்றுகைப் போர் - அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Featured Replies

முருகதாசன் எனும் ஈழத்து இளைஞன் பிப்ரவரி 12, 2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரிலுள்ள ஐ. நா. அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தின் முன்பு தீயிட்டு தன் இன்னுயிரை தமிழீழ மக்களுக்காக ஈகம் செய்தார்.

10022013%20018.JPG

 

“உலகத் தமிழ் சமூகத்துக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து ஒன்று கூடுங்கள். நம் மக்கள் உரிமைகளை மீட்டிடவும், உலகின் பல்வேறு தேசிய இனங்களின் மனங்களையும், இதயங்களையும் வென்றெடுக்கவும் கைகோர்த்துக் குரலெழுப்புங்கள். இது ஒரு மாபெரும் கடைசி வாய்ப்பு. என் உடல் மீது எரிகிற நெருப்பு உங்களை விடுதலைக்கு இட்டுச்செல்கிற தீவட்டியாகட்டும். உடலால் உங்களை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், உங்கள் இதயத்தின் மிக அருகே இருக்கிறேன்” என்று சக்தி மிக்க வார்த்தைகளுடன் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

 

சிங்களப் பேரினவாதம் 2008-2009 ஆண்டு காலகட்டத்தில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்துகொண்டிருந்தபோது, ஐ.நா. சபையும், அதன் உறுப்பு அமைப்புகள் சிலவும், சர்வதேச சமூகமும் நம்பிக்கைக்குரியன அல்ல என்பதை உலகுக்கு உரக்க எடுத்துரைத்தார் முருகதாசன். இந்த அமைப்புக்கள் அரச பயங்கரவாதத்தை ஆதரிப்பவை, துன்புறும் ஏழை மக்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டா என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டினார்.

 

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சார்ல்ஸ் பெற்றி எனும் ஐ.நா. ஊழியர் ஒருவர் தயாரித்து 13.11.2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை முருகதாசனின் தீர்க்கதரிசனக் கருத்துக்களை உறுதிப்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தது போல, காவல்காரனே களவு செய்தது போல, ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன், அவரது மருமகன் சித்தார்த் சாட்டர்ஜி, ஐ.நா. ஊழியர் விஜய் நம்பியார், அவரது தம்பியும் ராஜபக்சே அரசின் இராணுவ ஆலோசகருமான சதீஷ் நம்பியார், ஐ.நா. ஊழியர் ஜான் ஹோம்ஸ் போன்ற பலர் தமிழீழத் தமிழருக்கு எதிராக ஒரு மாபெரும் கபட நாடகத்தை, துரோகத்தை அரங்கேற்றினர்.

 

தன் மக்களுக்காக இன்னுயிர் ஈந்த ஈகி முருகதாசன் அவர்களை நினைவு கூர்ந்து, தமிழர்களை வஞ்சித்த ஐ.நா.வின் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது காலத்தின் கட்டாயம்; ஒவ்வொரு தமிழனின் கடமை. “மே 17 இயக்கம்” முன்னெடுக்கும் இந்தக் கடமையில் இடிந்தகரை மக்களாகிய நாங்களும் இணைந்துகொள்கிறோம். பிப்ரவரி 12, 2009 அன்று காலை 10 மணிக்கு போராட்டப் பந்தலில் ஈகி முருகதாசனுக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு, ஐ.நா.வின் அயோக்கியதனத்தை ஓர் ஆங்கில ஆவணமாக தயாரித்து, எங்கள் பகுதி தமிழ்க் கடலில் மிதக்க விடுவது என்று தீர்மானித்திருக்கிறோம். அனைவரும் வருக. வணக்கம்.

 

போராட்டக் குழு

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

பிப்ரவரி 11, 2013

 

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=NoiD4h0VihM

 

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.