Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றுக்கணக்கான தமிழ்த் திரை நட்சத்திரங்களுடன் பனி விழும் மலர் வனத்தில் வந்திறங்கினார் இளையராஜா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நூற்றுக்கணக்கான தமிழ்த் திரை நட்சத்திரங்களுடன் பனி விழும் மலர் வனத்தில் வந்திறங்கினார் இளையராஜா!  
[Tuesday, 2013-02-12 11:48:26]
 
75 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரை நட்சத்திரங்களும், பிரபல பாடகர்களும் புடை சூழ இன்று ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார் இசைஞானி இளையராஜா. பனி விழும் அழகான வேளையில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பெரும்பாலானோர் விமானங்களில் வந்திறங்கிய காட்சி பனி விழும் மலர்வனத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா குழுவினரின் " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி ரொறொன்ரோவில் உள்ள ரோஜர்ஸ் சென்ரரில் நிகழ உள்ளது. இதற்காக வந்திறங்கிய திரைநட்சத்திரங்கள் அனைவரையும் ட்ரினிட்டி இவன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர்களான Dunstan, கிசான் ஆகியோரோடு இணைந்து கனடாவில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும் வரவேற்றார்கள்.
  
கடந்த முறை போல் அல்லாது இந்த முறை இசைஞானி மிகுந்த சுறுசுறுப்புடன் , புன்முருவலுடனும் காணப்பட்டார். ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த இளையராஜா , கனடாவில் வந்திறங்கும் போது தன்னுடைய பிரபல பாடல்களில் ஒன்றான பனிவிழும் மலர் வனமே நினைவுக்கு வருவதாகக் கூறியதோடு ,
 
பனி விழும் மலர் வனம் நிகழ்ச்சிக்கு உங்கள் வரவே எங்களுக்கு வரம் எனவும் கூறி அசத்தினார்.
 
கன்னத்தில் முததமிட்டால் படத்தில் குழந்தையாக தன் அற்புதமான நடிப்பின் மூலம் நம் மனங்களைக் கொள்ளை கொண்ட பார்த்திபன் மகள் கீர்த்தனா.....யப்பா அந்தக் குழந்தையா இது என நம்ப முடியாத அளவிற்கு வளர்ந்து பெரிதாகி அசத்தலான அழகுடன் தேவதை போன்று வந்திறங்கியது வரவேற்க வந்திருந்தோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது என்று தான் கூற வேண்டும்
 
தமிழ் திரைப்படங்களில் தனக்கே உரித்த தனிப்பாணியில் எப்போதும் , எதிலும் வித்தியாசமாக இயங்கி வரும் பார்த்திபன் வரவேற்க வந்திருந்த ஊடகவியலாளர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினார். இராமாயணத்தில் ராமனுக்கு அணில் உதவியதைப் போலவே இந்த பிரமாண்ட விழாவில் தனது பங்களிப்பும் எனக் கூறினார் பார்த்திபன்.
 
தமிழ் திரையுலகமே திரண்டு வந்துள்ள இந்த மாபெரும் பிரமாண்ட " எங்கேயும் எப்போதும் " ராஜா இன்னிசை விருந்திற்கு மக்கள் கூட்டம் அலை மோதுவதோடு மட்டுமல்லாமல் இந்த வருடத்தின் மிகப் பெரிய இன்னிசை நிகழ்வாகவும் இது அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை..
 
இந்நிகழ்விற்கான நுழைவுச் சீட்டுக்களை ரொறொன்ரோவில் உள்ள அனைத்து தமிழ்க் கடைகளிலும் ட்ரினிட்டி இவன்ட்ஸ் இணைய தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.


Rajha-arrived-110213-toronto-seithy--(1)

 

Rajha-arrived-110213-toronto-seithy--(2)

கனடாவில் ட்ரினிட்டி ஈவண்ட்ஸ்(Trinity Events ) நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கு ’’எங்கேயும் எப்போதும் ராஜா’’ மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா குழுவினர் கனடா வந்திறங்கினர்.

எங்கேயும் எப்போதும் ராஜா மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் 70 கலைஞர்கள் கனடா வந்திறங்கினர். மாலை 4.30 மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.

எற்கனவே கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ம் திகதி நடக்கவிருந்த இவ் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டது யாவரும் அறிந்ததே.

இளையராஜா அவர்களுடன், நடிகர் பார்த்திபன், பார்த்திபனின் மகள் நடிகை கீர்த்தனா (கன்னத்தில் முத்தமிட்டால்), பாடகர் சத்யன், பாடகி ரம்யா, அனிதா, பிரியா ஹிமேஷ் ஆகியோருடன் இசைநடத்துனர் பிரபாகரும் வந்து சேர்ந்துள்ளர்கள்.

இசைக்குழுவினர்களில் ஒரு பகுதியினரும் வந்தடைந்தனர். தற்பொழுது வந்துள்ளவர்கள் ஒரு பகுதியினர் மட்டுமே, மீதமுள்ளவர்கள் சிறு குழுக்களாக அடுத்தடுத்த விமானங்களில் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த இளையராஜா இது ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை வழங்குவதற்காக எனது வாத்தியக் குழுவுடன் வந்திருக்கிறேன்.

நிச்சயமாக என்னால் என்னுடைய சிறந்த இசையைக் கொடுக்க முடியும். நிச்சயம் உங்களை நான் இசை வெள்ளத்தில் பரவசமடையச் செய்வேன். அதற்காக நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம்.

நீங்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசை மழையில் நனைந்து பரவசம் அடைய வேண்டும் என இளையராஜா கேட்டுக் கொண்டார்.

மேலும் அங்கு வந்திருந்த பார்த்திபன் கருத்து தெரிவிக்கும் போது:

இவ் இசை நிகழ்ச்சியில் பல குண்டக்க மண்டக்க நகைசுவை நிகழ்வை நான் உங்களுக்காக தருவேன் இசையோடு நகைச்சுவையும் கலந்து இந் நிகழ்வு அமையப் போகின்றது.

எனவே நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு சந்தோசத்தில் மகிழ வேண்டும் என பார்த்தீபன் கேட்டுக்கொண்டார்.

மற்றும் இந் நிகழ்ச்சிக்காக மேலும் 30 கலைஞர்கள் வருகை தந்து பல நிகழ்வுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலர்தினம் (Valentine Day), மற்றும் கனடா குடும்ப தினங்ளை (Family Day Long weekend) ஒட்டி இந்நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றும் வரை பொறுமை காத்த அனைத்து ரசிகர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, இந்நிகழ்ச்சிக்கு எல்லோரையும் வருகவென வரவேற்கிறார்கள் ட்ரினிட்டி இவன்ட்ஸ் குழுவினர்.

மேலதிக விபரங்களுக்கு

www.trinityeventsonline.com

 

 

இளையராஜாவின் இசைக்குழுவினர் டொரண்டோ விமானநிலையத்தில் வந்திறங்கிய அற்புதமான புகைப்படங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.