Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோடியோவின் மூலகர்த்தா மார்கொனி: இன்று உலக வானொலி தினம்

Featured Replies

ஐ.நா.வின் கல்வி , அறிவியல்மற்றும் கலாச்சாரஅமைப்பு(யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.கடந்த 2011-ம் ஆண்டுஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாகஅறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியைஉலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது..


நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius)என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.

 

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்,மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை ,ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.பின்னர்,இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார்.

 

இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியை, 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய பிரிட்டன் பிரதமராக இருந்தசர். க்ளமன்ட் அட்லி,(1945-1951) வானொலி வாயிலாகஅறிவித்ததை, இந்தியர்கள் கேட்டறிந்ததாக சொல்கிறார்கள். முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.

 

ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்றநாடுகளில் இன்றுஉலக வானொலிதினத்தை கொண்டாட உள்ளனர். உலக வானொலி தினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன்விடுத்துள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் தகவலினை செலவின்றி கொண்டு செல்லும் மதிப்புமிக்க சாதனம் வானொலி என கூறியுள்ளார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AF%8D-222100283.html

  • கருத்துக்கள உறவுகள்

2004-06-10-old-radio.jpg

 

மனித இனத்துக்கு கிடைத்த, அரிய கண்டு பிடிப்புக்களில்... வானொலிக்கு முக்கிய பங்கு உண்டு.
மேலே... படத்தில் உள்ள மாதிரி Grundig  வானொலி, எமது வீட்டில் மூன்று தலைமுறைகளாக பாவித்து வந்தோம்.
சில வருடங்களுக்கு முன் இங்கு, Antik பொருட்கள் விற்கும் கடையில்.... இதைப் பார்த்தவுடன், உடனே வாங்கி விட்டேன்.
இன்று... அது வீட்டின் வரவேற்பறையில் உல்லாசமாக வீற்றிருக்கின்றது. :)

  • தொடங்கியவர்

தமிழர் வாழ்விலும் கலந்தது வானொலி.

 

இன்றைய கைத்தொலைபேசி தொழில்நுட்பம், சர்ரலைட் தொழில்நுட்பம் என்பன கூட வானொலியில் இருந்துதான் ஆரம்பம்.

  • தொடங்கியவர்

'வானொலிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது'

 

ஒரு ஊடகமாக வானொலியின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரும், சூரியன் எஃப் எம் வானொலியின் சிரேஷ்ட ஆலோசகருமான சி. நடராஜசிவம்.

மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வானொலி ஒலிபரப்புத்துறையும் மாற்றமடைந்து வருவதாகக் கூறும் அவர், மாறும் எதுவும் அருகாது என்றும் கூறுகிறார்.

 

பண்பலை ஒலிபரப்பில் சிறப்பாக செயற்படுகின்ற இலங்கை வானொலித்துறை, இணையத்தில் தனது காலை வலுவாக ஊன்றியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/02/130213_nadarajasivam.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்விலும் கலந்தது வானொலி.

 

இன்றைய கைத்தொலைபேசி தொழில்நுட்பம், சர்ரலைட் தொழில்நுட்பம் என்பன கூட வானொலியில் இருந்துதான் ஆரம்பம்.

 

உண்மை அகூதா. ஈழப் போர் நடந்த காலங்களில், தமிழர் பகுதிகளில் பொருளாதாரத்தடை, மின்சாரத் தடை இருந்த போது...

அந்நிய உலகிலிருந்து தமிழர் தனித்து விடப்பட்ட வேளை.... உலகச் செய்திகளை அறிய எம்மவர் சைக்கிள் டைனமோவிலிருந்து மின்சாரத்தைப் பெற்று வானொலி கேட்டார்கள்.

  • தொடங்கியவர்

எங்கள் வீட்டில் மின்சாரம் தடைப்படும்போது நாம் அடுத்த வீட்டிற்கு செல்வது வழமை. அவர்கள் வீட்டில் எப்பொழுதுமே மின்கல வானொலி பெட்டி இருந்ததும் அவர்களிடம் எங்கள் வீட்டை விட வசதியும் இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.