Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னிபிட்டிய குண்டு வெடிப்பு - மூத்த இராணுவ தளபதி பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத ஒட்டுக்குழுக்களை அரவணைத்துப் பாதுகாத்து

தமிழ் மக்கள் மீது வன்முறைகளை ஏவியவர் குலதுங்க

துணை ஆயுத ஒட்டுக்குழுக்களை அர வணைத்துப் பாதுகாப்பதிலும், அவர்கள் ஊடாக வன்னி மற்றும் மன்னார் பிரதேசங்களில் வன் முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதிலும் முன்னின்று செயற்பட்டவர் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க.

1978 இல் இராணுவத்தில் சாதாரண ஓர் அதிகாரியாக இருந்த காலம் முதலே அவர் தமிழ் பொதுமக்களுக்கு எதிரான வன்முறை களை முடுக்கி விடுவதில் தீவிரமாகச் செயற் பட்டவர்.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் வட் டாரங்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றன.

நேற்று பன்னிப்பிட்டியவில் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் ஜெனரல் பி.எஸ்.பாரமி குலதுங்க தனது காலம் முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக மிகத் தீவிரமாகச் செயற்பட்ட ஒருவர் என்றும் அந்த வட்டாரங்கள் அவரை வர்ணித்தன.

மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவின் கடந்தகாலச் செயற்பாடுகளை விவரித்து கிளிநொச்சியில் புலிகள் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு:

* தீவிர இனவாதப் போக்காளரான குல துங்கவின் தமிழருக்கு எதிரான இராணுவச் செயற்பாடுகள் 1970ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்துவிட்டன. 1978 இல் சாதாரண அதிகாரியாக இயங்கியபோதே யாழ்ப் பாணத்தில் செயற்பட்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக இருந்தவர்.

1990களின் பின்னரான இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் தமிழருக்கு எதிரான இவரது இராணுவ நடவடிக்கைகள் மிகத் தீவிரம் பெற்றிருந்தன.

1995 ஆம் ஆண்டின் பின்னர் யாழ். குடா நாடு மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளி லும் பங்கேற்று தமிழ் மக்களின் படுகொலை கள், கைது மற்றும் காணாமற்போதல் போன்ற செயற்பாடுகளுக்கும் காரணமானவர்.

தமிழீழப் பிரதேசத்தின் தொண்டையை இறுக்கும் நடவடிக்கையாக ஆனையிறவுப் பெருந்தளத்தை தொடர்ச்சியாக ஆக்கிரமிப் பில் வைத்திருக்கப் பல்வேறு நடவடிக்கைகளி லும் ஈடுபட்டவர்.

2004ஆம் ஆண்டு இவர் வன்னிப் பிராந்தி யத்தின் தளபதியாகப் பதவியேற்ற பின்னர் அங்கு தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்தன.

துணை ஆயுதக் குழுக்களான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி), ஈ.பி.டி.பி போன்றவற்றை பாதுகாப்பதிலும் அவர்களூ டாக வன்னி மற்றும் மன்னார் பிரதேசங்களில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதிலும் முன்னின்றவர்.

தமிழர் எழுச்சி நிகழ்வுகளான பொங்கு தமிழ் போன்ற நிகழ்வுகளை அடக்குவதற்குப் பெரும் பிரயத்தனம் எடுத்தவர் குலதுங்க.

தற்போது நடைமுறையில் உள்ள யுத்த நிறுத்தத்தை விரும்பாதவராகவும், அதற்கு எதிரான செயற்பாடுகளில் மறைமுகமாக ஈடுபடுபவராகவும் விளங்குபவர் குலதுங்க.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் குறிப் பிட்டன.

-உதயன்

  • Replies 52
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ ஊடுருவும் பிரிவையும் வழி நடத்தியவர் குலதுங்க

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயி ரிழந்த மேஜர் ஜெனரல் குலதுங்க இராணு வத்தின் ஆழ ஊடுருவும் படைப் பிரிவுக்குத் தேவையான ஆலோசனைகளையும், தகவல் களையும் வழங்கி அதனையும் வழிநடத்தி வந்தவர் என்று பாதுகாப்புத் துறையின் உயர் மட்ட வட்டாரங்கள் நேற்று தகவல் வெளியிட் டன.

ஆழ ஊடுருவும் படைப் பிரிவுடனும், இராணுவப் புலனாய்வுத் துறையுடனும் நருக்கமான தொடர்புகளை வைத்துச் செயற் பட்டவர் குலதுங்க. இதன் காரணமாக அவருக்குக் கடுமையான பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்தது. அவரது நடமாட்டங்கள் மட்டுப் படுத்தப்பட்டிருந்தன என்றும் அந்த வட்டாரங் கள் தெரிவித்தன.

வன்னிப் பெரு நிலப்பரப்பு உட்பட விடு தலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களுக் குள் ஆழ ஊடுருவும் படையணியின் செயற் பாடுகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.

புலிகளின் பகுதிகளுக்குள் இந்தப் படை யணி புகுந்து பல கிளைமோர் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றது. புலிகளின் தளபதிகள், முக்கிய போராளிகள் இந்தத் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். இதனால், புலிகள் கடும் சீற்றமடைந்து இருக்கின்றனர்.

இந்தப் படைப் பிரிவினரின் தாக்குதல் களில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் தளபதி ரமணன், மன்னார் மாவட்ட நடவடிக்கைச் செயற்பாட்டுத் தளபதி மகேந்தி போன்ற முக்கிய தளபதிகளைக் கூட புலிகள் இழந்துள் ளனர்.

இந்த இழப்புகளுக்குப் பதிலடியாகவே புலிகளால் திட்டமிட்டு மேஜர் ஜெனரல் குல துங்க இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட் டிருக்கிறார் என்றும் சில பாதுகாப்பு வட்டாரங் கள் சுட்டிக்காட்டின.

மேஜர் ஜெனரல் குலதுங்கவின் இழப்பு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப் பிரிவின் செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற் படுத்தும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் பற்றித் தமக்குள்

உரையாடிய இருவர் கைது!

புறக்கோட்டையில் நேற்று இப்படியும் சம்பவம்

பன்னிப்பிட்டியவில் நேற்றுக்காலை இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதல் குறித்துத் தமக்குள் பேசிக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் இருவர் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்றுக்காலை புறக்கோட்டை சீனா வீதி யில் இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற் றது. வர்த்தக நிலையமொன்றில் கடைமை யாற்றும் இரு இளைஞர்கள் பன்னிப்பிட்டிய தாக்குதல் சம்பவம் குறித்துத் தாம் அறிந்த தகவல்களைத் தமக்குள் பரிமாறி உரையா டிக் கொண்டிருந்ததை அவதானித்த பொலீ ஸார் அவர்களை அணுகி இருவரையும் கைது செய்து பொலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதன் பின்னர், கொழும்பு மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் பெ. இராதாகிருஷ்ணன் பொலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதையடுத்து, நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த இளைஞர்கள் விடுவிக்கப்பட் டனர்.

""குண்டுத் தாக்குதல் குறித்து எல்லாத் தமிழர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக எல்லா தமிழரையும் கைதுசெய் யப் போகிறீர்களா?'' என்று இராதாகிருஷ் ணன் எம்.பி. பொலீஸாரிடம் வினவிய போது, பொலீஸார் வாய்மூடி மௌனிகளாக நின்றனர் என்று கூறப்பட்டது.

இந்தக் கைதுச்சம்பவம் நேற்றுக் கொழும் பில் தமிழர்களிடையே சுவாரஸ்யமாகப் பேசப்பட்டது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.