Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் பார்க்க வருவீக

Featured Replies

ஈழம் பாக்க வருவீக

ஈழம் பாக்க வருவீக

வந்து ஊரைப் பாப்பீங்க

உடனேதான் பாய் பாய் சொல்லிப் போவீங்க

ஒண்ணாத்தானே இருந்தோங்க

பாயில தானே படுத்தோங்க

சொக்ஸ் எல்லாம் களட்ட மறுக்கு றீக.

திரும்ப திரும்ப வருவீக

ஐஞ்சை பத்தை தருவீக

விடுமுறையை களிச்சுட்டு போயிடு வீக

வெஸ்டேன் என்று சொல் றீக

விந்தி விந்து நடக் கீக

உங்களோடை தொல்லை தாங்கலைங்க

உங்களை நீங்கள் முட்டாளாக்க வேணாம்

முட்டாளாகி நீங்க இருபது வருசம் ஆச்சு

மீனும் சோறுமோ, கூழும் கஞ்சியோ

ஏதாச்சும் இங்க இருக்குங்க

Toilet பேப்பர் கொண்டு ஊரைச் சுத்தும் நீங்க

ஊசி போட்டு வன்னி பார்க்கும் நீங்க

எப்ப வந்து எப்ப வந்து செட்டில் ஆவீக

ஆசான் காலில் விழுந்து கல்வி கற்ற நீங்க

லாம்பில் படித்து பட்டம் பெற்ற நீங்க

காதில் தோடும் காளான் வெட்டும் வெட்டி கெடுக்காதீக

இந்த ஸ்ரைலுக்காகவும் பணத்துக்காகவும் பறக்காதீக

கசூர்னா பீச்சில நீச்சல் உடையுடன் குளிக்காதீக

அக்கா தண்ணீ போடாதீக

அதுவும் இங்க போடாதீக

தமிழனின் பண்பைத்தானே கேவலப்படுத்தாதீக

பட்டு வேட்டி பட்டு சேலை உடுத்துட்டு

கையு நிறைய கழுத்து நிறைய மாட்டிட்டு

முருகனுக்கு விசா காட்டை நீங்க நீட்டாதீக

தமிழனெண்டு தமிழனெண்டு பேசிட்டு

முருகண்டியில் இளநீர் வாங்கி குடிச்சுட்டு

Can I have some more என்று கேக்காதீக

நம்ம நாட்டை பற்றியும் ஊரைப் பற்றியும் யோசியுங்க

அட! Foreign போயிதான் ஜாலியாகத்தான் திரியாதீக

அக்கா அண்ணாவைத்தான் கொஞ்சம் யோசிச்சு பாருங்க

வெள்ளைக்காரன் போலத்தானே கேவலப் படுத்தாதீக..!

- ஆக்கம் ஜீவிதன்

ஆகா யாரோ நல்லா அனுபவத்தில் எழுதியிருக்கின்றார் போல இருக்கு.

ஊசி போட்டு கொண்டு ஊருக்கு போவதில் தப்பு இருப்பதாக எனக்கு படலை? இதனால் வரும் பாதிப்புக்கள் அளப்பரியது. அனுபவத்தில் கண்டது. நானும் போகும்போது அசட்டையாக தான் போனேன். ஆனால் போய் மருத்துக்கு காசு செலவழித்தது தான் மிச்சம்.

நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் உண்மையைகளை அப்படியே கோபத்துடன் கேட்பது போல இருக்கு.. இந்த கவிதை தாயகத்திற்கு வெளிநாட்டு நாகரிகத்தை காட்ட போவோர்களுக்கு நன்றாக பொருந்தும்.

இணைப்பிற்கு நன்றி ரசிகை.

  • தொடங்கியவர்

ஆகா யாரோ நல்லா அனுபவத்தில் எழுதியிருக்கின்றார் போல இருக்கு.

ஊசி போட்டு கொண்டு ஊருக்கு போவதில் தப்பு இருப்பதாக எனக்கு படலை? இதனால் வரும் பாதிப்புக்கள் அளப்பரியது. அனுபவத்தில் கண்டது. நானும் போகும்போது அசட்டையாக தான் போனேன். ஆனால் போய் மருத்துக்கு காசு செலவழித்தது தான் மிச்சம்.

நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் உண்மையைகளை அப்படியே கோபத்துடன் கேட்பது போல இருக்கு.. இந்த கவிதை தாயகத்திற்கு வெளிநாட்டு நாகரிகத்தை காட்ட போவோர்களுக்கு நன்றாக பொருந்தும்.

இணைப்பிற்கு நன்றி ரசிகை.

ம்ம் எழுதின ஆள் ரொம்ப பீல் பண்ணித்தான் எழுதி இருக்கிறார். :P

உண்மைதான் ரசி அக்கா

நான் கூட ஊர் சென்ற சமயம் ஒரு ஈழத்து சிதம்பரம் மார்கழி திருவிழாவுக்கு சென்றிருந்தேன் நிறைய புலம் பெயர் தமிழர்கள் வந்திருச்சினம் கோவிலில் அவர்கள் வீடியோ எடுப்பதேன்ன சாத்துப்படி நகைகள் அடுக்கிறது என்று ஆண்களும் பெண்களுக்கு போட்டியாக கழுத்து நிறைய நகைகளுடன்

இதில ஒண்டு தெளிவா தெரிஞ்சுது அவர்கள் யாரும் கடவுளை பார்க்க வரயில்லை பந்தா காட்டத்தான் வந்திச்சினம் எண்டு

அடுத்து கொஞ்சப்பேர் ஏதோ தாங்கள் வெயிலையே பார்க்காதவை மாதிரி எப்பவும் இந்த வெக்கையில எப்படி இருக்கிறது எண்டு தனியாபிலிம் காட்டுவினம் இவையெல்லாம் இலங்கைல இருந்து புலலம் பெயர்ந்தவை தானே அப்ப இல்லாத வெயிலையா இப்ப பார்க்கினம்

எப்பதான் திருந்துவினமோ

உண்மைதான் ரசி அக்கா

நான் கூட ஊர் சென்ற சமயம் ஒரு ஈழத்து சிதம்பரம் மார்கழி திருவிழாவுக்கு சென்றிருந்தேன் நிறைய புலம் பெயர் தமிழர்கள் வந்திருச்சினம் கோவிலில் அவர்கள் வீடியோ எடுப்பதேன்ன சாத்துப்படி நகைகள் அடுக்கிறது என்று ஆண்களும் பெண்களுக்கு போட்டியாக கழுத்து நிறைய நகைகளுடன்

இதில ஒண்டு தெளிவா தெரிஞ்சுது அவர்கள் யாரும் கடவுளை பார்க்க வரயில்லை பந்தா காட்டத்தான் வந்திச்சினம் எண்டு

அடுத்து கொஞ்சப்பேர் ஏதோ தாங்கள் வெயிலையே பார்க்காதவை மாதிரி எப்பவும் இந்த வெக்கையில எப்படி இருக்கிறது எண்டு தனியாபிலிம் காட்டுவினம் இவையெல்லாம் இலங்கைல இருந்து புலலம் பெயர்ந்தவை தானே அப்ப இல்லாத வெயிலையா இப்ப பார்க்கினம்

எப்பதான் திருந்துவினமோ

நித்திலா நான் போனபோது மிகவும் சாதராணமாக எல்லோருடனும் பழக வேண்டும் ஆதங்கத்தில் கண்டவர்கள் எல்லோருடனும் கதைப்பேன். அதைப்பார்த்து விட்டு சொன்னார்கள் உங்களைப்பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மாதிரி தெரியலை என்று. நான் கேட்டேன் ஏன் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் நாலு காலாலோ நடப்பார்கள் என்று?

ஆனால் தாயகத்தில் இருக்கும் வெயிலை விட இங்கு சமர் நேரத்தில் வரும் வெயிலின் கோரத்தை தான் தாங்க முடியமால் இருக்கும். அங்கு என்றாலும் ஒதுங்குவதற்கு மரங்கள் என்றாலும் இருக்கும். இங்கு மரங்கள் கூட சிலநேரம் அசைவற்று இருப்பதை பார்க்க வெறுப்பாக தான் இருக்கும்.

  • தொடங்கியவர்

உண்மைதான் ரசி அக்கா

நான் கூட ஊர் சென்ற சமயம் ஒரு ஈழத்து சிதம்பரம் மார்கழி திருவிழாவுக்கு சென்றிருந்தேன் நிறைய புலம் பெயர் தமிழர்கள் வந்திருச்சினம் கோவிலில் அவர்கள் வீடியோ எடுப்பதேன்ன சாத்துப்படி நகைகள் அடுக்கிறது என்று ஆண்களும் பெண்களுக்கு போட்டியாக கழுத்து நிறைய நகைகளுடன்

இதில ஒண்டு தெளிவா தெரிஞ்சுது அவர்கள் யாரும் கடவுளை பார்க்க வரயில்லை பந்தா காட்டத்தான் வந்திச்சினம் எண்டு

அடுத்து கொஞ்சப்பேர் ஏதோ தாங்கள் வெயிலையே பார்க்காதவை மாதிரி எப்பவும் இந்த வெக்கையில எப்படி இருக்கிறது எண்டு தனியாபிலிம் காட்டுவினம் இவையெல்லாம் இலங்கைல இருந்து புலலம் பெயர்ந்தவை தானே அப்ப இல்லாத வெயிலையா இப்ப பார்க்கினம்

எப்பதான் திருந்துவினமோ

ம்ம் உண்மைதான் நித்திலா எப்படித்தான் சாமிக்கு சாத்தினமாதிரி சாத்திட்டு போறாங்களோ. ஏதோ வெளிநாட்டுல இருந்து வந்தால் வானத்துல இருந்து குதிச்ச மாதிரித்தான் நடப்பார்கள். ஆனால் எல்லாரும் இல்லை 3/4 பங்கு மக்கள். :roll:

மற்றது இங்க சமரில் உள்ள வெக்கையே விட அங்க தாங்கலாம். இங்க தான் அப்பப்பா தாங்க முடியாது பத்தி எரியுற மாதிரி இருக்கும். :cry:

ம்ம் உண்மைதான் நித்திலா எப்படித்தான் சாமிக்கு சாத்தினமாதிரி சாத்திட்டு போறாங்களோ. ஏதோ வெளிநாட்டுல இருந்து வந்தால் வானத்துல இருந்து குதிச்ச மாதிரித்தான் நடப்பார்கள். ஆனால் எல்லாரும் இல்லை 3/4 பங்கு மக்கள். :roll:

மற்றது இங்க சமரில் உள்ள வெக்கையே விட அங்க தாங்கலாம். இங்க தான் அப்பப்பா தாங்க முடியாது பத்தி எரியுற மாதிரி இருக்கும். :cry:

இந்த ஊர்ப் பிள்ளைகள் இப்படிக் கதைக்கிறதைப் பாக்க சந்தோசமாக் கிடக்குது. :lol::lol::lol:

  • தொடங்கியவர்

இந்த ஊர்ப் பிள்ளைகள் இப்படிக் கதைக்கிறதைப் பாக்க சந்தோசமாக் கிடக்குது. :):lol::lol:

:P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.