Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

LLRC பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துமாறு ஐநாவில் தென் ஆபிரிக்கா; பிரித்தானியா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
UK-seithy-150.jpg

இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானிய அரச, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் பெரனைஸ் சைடாவாசி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

  

இலங்கையின் மனிதவுரிமைகள் செயற்பாடுகள் குறித்து பிரித்தானியாவும் ஏனைய நாடுகளும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தற்போது வலுவான மீளமைப்பு திட்டமொன்று அவசியமாக இருப்பதாக பிரித்தானிய அமைச்சர் பெரனைஸ் சைடாவாசி சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=76809&category=TamilNews&language=tamil

LLRC பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துமாறு ஐநாவில் தென் ஆபிரிக்கா கோரிக்கை

February 25, 2013  09:53 pm

 

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துமாறு இலங்கையிடம் தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.


இன்று (25) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய தென் ஆபிரிக்க சர்வதேச விவகார பிரதி அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நம்பகமானதும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான வகையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் எனவும் தென் ஆபிரிக்கா தெரிவித்துள்ளது.

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=35510


 


 

1503719673uk.jpg

 

மனித உரிமையை மேம்படுத்த இலங்கை LLRC பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் - பிரித்தானியா

 

February 25, 2013  04:19 pm

 

இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த வேண்டுமாயின் கற்றுக் கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் இன்று (25) ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் அரச, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் பெரனைஸ் சைடா வாசி இவ்வாறு வலியுறுத்தினார்.

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவும் ஏனைய நாடுகளும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.


இலங்கைக்கு தற்போது வலுவான திட்டமொன்று தேவைப்படுவதாக பிரித்தானியாவின் அரச, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் பெரனைஸ் சைடா வாசி குறிப்பிட்டுள்ளார்

http://www.adaderana.lk/tamil/news.php?nid=35501

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.