Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்!: கோகுல இந்திரா, சிவபதி, விஜய்க்கு 'கல்தா'!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து கோகுல இந்திரா, என்.ஆர். சிவபதி மற்றும் டாக்டர் விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக வைகைச் செல்வன், கேசி வீரமணி, பூனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். புதிய அமைச்சர்கள் மூவரும் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்கின்றனர். இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில். சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய் மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சிவபதி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச் செல்வன், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. கேசி வீரமணி மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. டிபி பூனாட்சி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் மூவரும் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்கின்றனர். வைகைச் செல்வனுக்கு பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு துறையும், கேசி வீரமணிக்கு சுகாதாரத் துறையும், டிபி பூனாட்சிக்கு கதர் கிராமத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கேபி முனுசாமிக்கு கூடுதலாக சட்டத்துறையும், கதர் கிராமத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியனுக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி பறிக்கப்பட்ட கோகுல இந்திரா சென்னை அண்ணா நகரில் இருந்தும், சிவபதி முசிறி தொகுதியில் இருந்தும், டாக்டர் விஜய் வேலூரில் இருந்தும் சட்டசபைக்கும் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். இதுவரை 15 அமைச்சர்கள் டிஸ்மிஸ்!: தமிழக அமைச்சரவை தற்போது 8வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி அதிமுக அரசு பொறுப்பேற்றது. ஜுன் மாதம் 27ம் தேதி தமிழக அமைச்சரவை முதல்முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் தற்போது நீக்கப்பட்ட 3 அமைச்சர்களுடன் மொத்தம் 15 பேர் இதுவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே சட்டத் துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சி.சண்முகவேலு, எஸ்.பி.சண்முகநாதன், புத்தி சந்திரன், எஸ்.பி.வேலுமணி, செந்தமிழன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.பி.உதயகுமார், எம்.பரஞ்ஜோதி, செல்வி ராமஜெயம், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம் என அமைச்சர்களாக இருந்தவர்கள் நீக்கப்பட்டனர். தற்போது இந்தப் பட்டியலில் கோகுல இந்திரா, சிவபதி, விஜய் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர்.

Thatstamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழக அமைச்சரவை கடந்த, 20 மாதங்களில், ஒன்பதாவது முறையாக மாற்றிஅமைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்களாக இருந்த, சிவபதி, கோகுல இந்திரா, டாக்டர் விஜய் ஆகியோர், அமைச்சர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளனர். அரசு கொறடா வைகை செல்வன், பூனாட்சி மற்றும் வீரமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 20 மாதங்களில், பல்வேறு காரணங்களுக்காக, எட்டு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒன்பதாவது முறையாக, நேற்று தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா மாற்றம் செய்துள்ளார்.

அறிவிப்பு:

நேற்று காலை, விவேகானந்தர் இல்ல விழாவிற்கு சென்று, கோட்டைக்கு திரும்பிய முதல்வர், அங்கு விவசாயிகளை சந்தித்த பின், மீண்டும் சிறுதாவூர் சென்று விட்டார். இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு, நேற்று மாலை வெளியானது. இதன்படி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த சிவபதி, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய் ஆகியோர், தமிழக அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பதில், தமிழக அரசு கொறடாவாக இருந்த வைகை செல்வன், பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் மொழி மற்றும் கலாசாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அருப்புக்கோட்டையில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர்.

பதவி பிரமாணம்:

ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வீரமணி, சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ., பூனாட்சி, கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியனுக்கு, சுற்றுலாத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் இருந்த, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, புதிய

அமைச்சர்கள் வைகை செல்வன், வீரமணி, பூனாட்சி ஆகியோர், இன்று காலை, சென்னை ராஜ்பவனில் நடக்கும் விழாவில், அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்கு, கவர்னர் ரோசய்யா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

பதவிகளை பறிக்கும் சட்டத் துறை?

அமைச்சரவை மாற்றத்தில், சட்டத் துறைக்கு நியமிக்கப்படும் அமைச்சர்கள், தொடர்ந்து பதவியை இழந்து வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், முதலில், இசக்கி சுப்பையா அத்துறையின் அமைச்சரானார். அதன் பின், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, செய்தித் துறை அமைச்சராக இருந்த, செந்தமிழனிடம் சட்டத் துறை வழங்கப்பட்டது. பின், செந்தமிழனின் அமைச்சர் பதவியும் பறிபோனது. எம்.எல்.ஏ., மரியம் பிச்சை இறந்ததால், இடைத்தேர்தலில் வென்ற பரஞ்ஜோதி, சட்டத்துறை அமைச்சரானார். அவர் மீது, பெண் ஒருவர் அளித்த புகாரால் அவருக்கும் அமைச்சர் பதவி பறிபோனது. அதன் பின், சட்டத் துறை, சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்டது. அவரது பதவி, கடந்தாண்டு, அக்டோபர் 3ம் தேதி பறிக்கப்பட்டது. தொடர்ந்து, இத்துறை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிவபதிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. தற்போது, சிவபதியும் பதவி இழந்துள்ளார். இதையடுத்து, சட்டத் துறை, மூத்த அமைச்சரான முனுசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள், "பயோடேட்டா':

டாக்டர் வைகை செல்வன்:

(பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்) விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.,வான இவர், கடந்த, 1968ம் ஆண்டு, சின்னமலைப்பட்டியில் பிறந்தார். எம்.ஏ., பி.எல்., பிஎச்.டி., முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளராகவும் உள்ளார். தமிழக சட்டசபை

Advertisement

கொறடாவாக இருந்த மோகன், ஊரக தொழில்துறை அமைச்சராக மாற்றப்பட்ட நிலையில், கொறடா பதவி, வைகை செல்வனை தேடிவந்தது. தற்போது இவர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலராக உள்ளார்.

டி.பி.பூனாட்சி:

(கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை) திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர், கடந்த, 1951ம் ஆண்டு, நெய்வேலி கிராமத்தில் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த இவருக்கு, திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். விவசாயத் தொழில் செய்து வந்த இவர், 1996 மற்றும் 2001ல், அ.தி.மு.க., ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார்.

கே.சி. வீரமணி:

(சுகாதார துறை) வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வான வீரமணி, ஜோலார்பேட்டையில், 1964ல் பிறந்தார். பி.ஏ., படித்துள்ள இவருக்கு, திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். வியாபாரம் செய்து வருகிறார். கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வைச் சேர்ந்த பொன்னு சாமியை எதிர்த்து போட்டியிட்டு, 23 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Dinamalar

அம்மாட அமைச்சரவையில அமைச்சரா இருக்கிறதும் பாக்க மாடு மேய்க்க போகலாம் 2 வருடம் கூட இன்னும் ஆக வில்லை அதற்குள் 15 அமைச்சர்கள் மாற்றம் :D

  • கருத்துக்கள உறவுகள்

டி.பி.பூனாட்சி:

(கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை) திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர், கடந்த, 1951ம் ஆண்டு, நெய்வேலி கிராமத்தில் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த இவருக்கு, திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். விவசாயத் தொழில் செய்து வந்த இவர், 1996 மற்றும் 2001ல், அ.தி.மு.க., ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார்.

 

அமைச்சராக கல்வி ஒரு பொருட்டே இல்லை போல.

  • கருத்துக்கள உறவுகள்

8வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்!: கோகுல இந்திரா, சிவபதி, விஜய்க்கு 'கல்தா'!

சங்கீத கதிரையில மூனு பேர் அவுட்டு... ஆத்தா பாட்டை நிப்பாட்டிட்டு ..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னைக்கு அமைச்சர் செந்தூர பாண்டியனின் கட்சி பதவி காலி .....:D ஆத்தா இன்னும் உக்கிரமா ஆடிட்டு தான் இருக்கா 5 வருஷம் முடிறத்துக்குள்ள அனைத்து அ தி மு க சட்ட மன்ற உறுப்பினர்களும் முனால் அமைச்சர்கள் ஆகி இருப்பார்கள்.......

அ தி மு க வை பொறுத்த வரை கட்சி தலைமையே கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் மீறி யாரவது அமைச்சர்கள் காசு பாத்தா அம்புட்டு தா

கருணாதி இந்த விஷயத்தில கில்லாடி அமைச்சர்கள் அவருக்கு வெட்டிறத வெட்டிட்டு தாராளமா காசு பாக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.