Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் பிரேரணை 15ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது

Featured Replies

கடந்த வருடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா நிறைவேற்றிய பிரேரணையை அடிப்படையாக கொண்டே, இந்த முறை சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் பெட்ரிக் வென்ட்ரெல் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

எனினும் அவற்i நிறைவேற்ற போதுமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திராத நிலையில், இது தொடர்பில் மேலும் செயற்பாடுகளை கோரி இந்த முறை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

இதேவேளை அமெரிக்காவின் இந்த பிரேரணை எதிர்வரும் 15ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரபிரதிநிதி ரவீநாத் ஆரியசிங்க இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.


அமெரிக்காவின் இந்த பிரேரணை எதிர்வரும் 15ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதற்கு முன்னர் இலங்கை தொடர்பிலான தவணை ஆராய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ள நாடுகளுடன் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

 

இதன் போது இலங்கையின் புனர்வாழ்வளிப்பு, மனித உரிமைகள், மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்கப்பட்ட செனல் 4வின் மோதல் தவிர்ப்பு வலயம் காணொளியின் போலித்தன்மையை தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டு நிரூபிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

குற்றச்சாட்டுகளை ஒரே நேரத்தில் முன்வைக்காமல், கட்டம் கட்டமாக அதனை ஒவ்வொரு ஆண்டும் திரைப்படங்களாக எடுத்து வெளியிடுவதில், செனல் 4 செய்தி ஊடகத்துக்கு உள்நோக்கம் உள்ளது என்பதை புலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

செனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டிருந்த இலங்கையின் கொலைக்களம் காணொளிகளில் சுட்டிக்காட்டப்பட்ட ஊடகவியலாளர் சிறிபிரியா போன்றவர்கள் விடுதலைப் புலிகளின் கேர்னல் தரத்தை கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

http://www.hirunews.lk/tamil/54446

உள்நோக்கம் என்று ஆரிய சிங்கா எதை குறிப்பிடுகிறாரோ தெரியாது. கலாம் மக்றே சொல்லும் வெளிப்படைக் காரணம் போர்குற்றவாளிகளை விசாரணை ஒன்றில் சிக்கவைப்பதேயாகும்.

 

முழுவதையும் ஒரே தடவையில் வெளியிட வேண்டுமாயின் சென்னெல் 4- தயாரிப்புக்கு இலங்கை முற்பணம் கொடுக்க முன் வரவேண்டும். இல்லையேல் எதை வெளியிடுவது என்பதில் பணமும் ஒரு காரணம்.  

 

மக்ரேயின் போன வருட வெளியீட்டில் பாலச்சந்திரனை கொலை செய்தது புலிகள் என்று கூறிவர்கள் பொய்மட்டும் தான் கூறுகிறார்கள் என்பதை காட்டவே மிகுதியை வெளியிட வேண்டிய நிர்ப்பந்ததற்கு மக்றே தள்ளப்பட்டார். 

 

இதன் பொருள் மக்றே வைக்கும் குற்றச்சாட்டு அடைப்படை உள்ளது. அதை விசாரிக்க சிறீ லங்காவுக்கு தகமை இல்லை. அது விசாரிக்கமலே ஆதாரங்களை "அவை பொய்" என்று தள்ளி வைக்கிறது என்பத்க்கும்.

 

முதல்  முறை "கொலைகளம்" ஆவணம் வெளி வந்த போது இலங்கை ரஜீவ வியசிங்காவின் வாயாடித்தனதை வைத்து  அதில் இருப்பவை பொய் என்று விவாதிக்க முயன்றது.  விசாரணை நடத்தாமல், மக்றேயுடன் தொடர்பு கொண்டு முழு ஆதரங்களையும் பெற்றுக்கொள்ளமால், வெளிப்பட்டவைக்கு மறுப்பு தெரிவிக்க  Bell Pottinger  கம்பனிக்கு பணத்தை வாரி இறைத்து  "Lies Agreed Upon" என்ற கற்பனை ஓவியத்தை தாயரித்தது. வெளிநாடுகள் "Lies Agreed Upon" மூவியை வாங்கியிருந்தால் அதை இலங்கையின் மிக பெரிய இராஜதந்திரமாக வருணிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவை அதை ஏற்க மறுத்ததால அது Back Fire ப்ண்ணி  இப்போது கணக்கு வழக்கு கேட்க்கத்தக்க ஒரு கேள்வியாக எதிர்க்கட்சிகளின் கையில் போய்  அது தங்கியிருக்கிறது.  அதற்கு மேல் "Lies Agreed Upon" சாதித்தது எதுவும் இல்லை. 

 

இதன் படி மக்ரேயின் நோக்கம் "வேண்டப்படுவது சர்வதேச விசாரணையே" என்பதாகும்.  இதற்கு உள்ளும் புறமும் வைத்து ஆரியசிங்க்க பேசவேண்டிய தேவை என்ன? இந்த பொய்யை திரிக்க தொடங்க முதல் தனது முன்னோடிகளான தாயான் ஜெயதிலகா, தமார குணநாயகம், ராதிகா குமாரசாமி போன்றவர்களை ஒரு தடவை கேட்டுப் பார்த்திருந்திருக்கலாம். 

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்- ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நாளை தாக்கல்

 

இறுதிக்கட்டப் போரின் போது அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்த போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் நாளை தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இத்தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றவு அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. இலங்கை இறுதிப் போரின் போது தமிழர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை ஏற்கனவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி கூடுதலாகவும் ஆவணப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சி உலகை உலுக்கி வருகிறது.

 

இந்த நிலையில், 47 நாடுகளை உறுப்பினர்களாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது. நாளை இந்த தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது. தீர்மான விவரம் வெளியாகவில்லை என்ற போதிலும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதில் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறிவித்து உள்ளன.

 

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச தமிழ் அமைப்புகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தமது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் தீர்மானத்தை கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் ஓட்டெடுப்பின்றி ஒரு மனதாக நிறைவேற்ற அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது.

 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/03/world-move-at-u-n-on-carnage-sri-lanka-sets-off-fury-170743.html

 

 

 

  • தொடங்கியவர்

- ஜெனீவாவிற்கு தலைமை தாங்கி சென்ற மகிந்த சமரசிங்க நாடு திரும்பி உள்ளார்
- மகிந்தாவை சந்தித்து நிறைவேறப்போகும் தீர்மானம் பற்றி ஆராயவுள்ளார்
- அடுத்த கிழமை மீண்டும் ஜெனீவா திரும்ப கூடும்

வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றவேண்டும் என்று இந்தியா விரும்புவதாக செய்திகள் வந்திருந்தன. அதனால் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய சங்கடத்துக்கு போக வேண்டிய தேவை இல்லை என்று கூறப்பட்டது. 

 

வாக்கெடுப்பில்லாமல் நிறைவேற்றப்பட்டால் இலங்கை பிரச்சனையை சர்வதேச நாடுகள் உணரத் தலைப்பட்டுவிட்டன என்பது பொருள். இல்லையேல் தொடர்ந்து பணமும் நேரமும் செலவிடுவதால் மட்டுமே அவர்களை இலங்கைக்கு எதிராக எதாவது நடவடிக்கையை எடுக்க வைக்க முடியும். 

 

ஐ.நா நமக்கு நல்ல ஆடுகளம். தலதாமளிகை ராஜதந்திரம் தனிதனி நாடுகளிம் மிக பலமாக வேலைசெய்யும் என்பதை நாம் இதுவரை பார்த்தோம். (கடையாக வந்த அவுஸ்திரேலிய நாட்டு வெளிவிவகார மந்திரி கூட அரசகுடும்பம் ஆட்கள் ஏற்றுமதி செய்வதை தவிர்த்தால் வரும் இழப்பீட்டை அவுஸ்திரேலியா தருவதாக வாக்களித்திருந்தார்.) ஆனால் ஐ.நாவைப் பொறுத்தவரை "எல்லோரையும் சிலநாட்கள் ஏமாற்றலாம்.  சிலரை எப்போதும் ஏமாற்றலாம். எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என்ற வாக்கியம் உண்மையாக்கிறது. அமெரிக்கா இதை ஐ.நாவுக்கு எடுத்து சென்றது நமக்கு நன்மையாகத்தான் முடியும்.

கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

இந்த வருடமும் இதை தான் சொல்லப்போகிறார்கள்.

 

இந்த வருடமும் இதை தான் சொல்லப்போகிறார்கள்.

 

இந்தவருடம் அதையே கடுமையாக அமுல்படுத்த சொல்லப்போயினம்.

 

அவ்வாறு அமுல்படுத்தாமல் விட்டால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கையும் விடப்படலாம்.

உண்மையாக இந்தியாவால் கடந்த தடவை பிரேரணை ஒரு வருடம் பின் தள்ளப்பட்டடுவிட்டது. 

 

போன வருடம் பிரேணை வெறுமனே இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு ஆலோசனை நிலையில்தான் இருந்தது. தனிய இலங்கை அந்த பரிசோதனை முடிவுகளை இந்த வருடம் ஐ.நா கொண்டு வரவேண்டும் என்றும் கேட்க்கப்பட்டிருந்தது. இந்த முறைதான் ஐ.நா. LLRC அறிக்கை நடை முறை படுத்துவதற்கான பிரேரணையை இலங்கைக்கு கையளிக்கும். இதில்தான் சில காலக் கட்டுப்பாடுகள் இருக்கலாம். சென்ற வருடம் எந்தக் காலக்கட்டுப்படும் விதிக்கப்பட்டிருக்கவில்லை. தனிய முன்னேற்றங்களை ஐ.நாவில் கூறும்படிதான் கேடகப்பட்டிருந்தது.

இலங்கை இந்த முறை ஐ.நா. வரும் போது எந்தப் பிரேரணை சம்பந்தமான தவறும் செய்திருக்க வில்லை.  காலக்கிரமம் நியமிக்கப்பட்டால் மட்டுமே இலங்கை எதையாவது நிறைவேற்றவிட்டால் அதைப்பற்றி குறை கூற முடியும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.