Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கட் உடன்படிக்கை சிக்கலில்

Featured Replies

கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கும், சிறிலங்கா கிரிக்கடுக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
  
கிரிக்கட் வீரர்களுடனான சிறிலங்கா கிரிக்கட்டின் உடன்படிக்கை கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
கிரிக்கட் வருமானத்தில் 78 சதவீத கொடுப்பனவை கோரியுள்ள சிரேஷ்ட்ட கிரிக்கட் வீரர்கள் 23 பேருடன், மேலும் சில வீரர்களும் சிறிலங்கா கிரிக்கட்டுடன் உடன்படிக்கையை ஏற்படுத்த மறுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் இன்றைய தினத்துக்குள் சிறிலங்கா கிரிக்கட்டின் உடன்படிக்கையில் சிரேஷ்ட வீரர்கள் கைச்சாத்திடவில்லை என்றால், எதிர்வரும் பங்களாதேஸ் அணிக்கு எதிரான கிரிக்கட் போட்டித் தொடருக்கு புதிய அணி ஒன்றை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்த அழுத்கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், சிறிலங்கா கிரிக்கட்டுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தப் போவதில்லை என்று கிரிக்கட்வீரர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கிடையில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் நாட்டுக்காக விளையாடாமல், வேதனம் தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்துவார்களாக இருந்தால், அவர்களை விலக்குவதில் தவறில்லை என்று முன்னாள் கிரிக்கட் அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
எமது செய்திபிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம்தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது தமக்கு 250 ரூபாவே வேதனமாக வழங்கப்பட்டது.
 
தற்போது அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வழங்கப்படுகின்ற வேதன தொகை அதிகமாக இருந்தாலும், இலங்கை அணி வீரர்கள் நாட்டின் நிலவரங்களை அறிந்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இவ்வாறு வேதன அதிகரிப்பை கோரிக போராடும் வீரர்களின் விபரங்களை சிறிலங்கா கிரிக்கட் வெளிப்படுத்த வேண்டும்என்றும் அவர் கோரியுள்ளார்.
 
நாட்டில் உள்ள நாட்டுக்காக விளையாடக்கூடிய ஏனைய இளம் வீரர்களை இணைத்துக் கொள்வதற்காக, இவ்வாறானவர்களை விலக்குவதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.hirunews.lk/tamil/54466

  • தொடங்கியவர்

இலங்கை வீரர்கள் போர்க் கொடி

 

இலங்கை கிரிக்கெட் சபைக்கும் அணி வீரர்களுக்குமிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அணித் தேர்வுக் குழுத்தலைவரும் முன்னாள் கப்டனுமான சனத் ஜயசூரிய ஈடுபட்டுள்ளார்.


ஞாயிற்றுக்கிழமை மாலை சனத் ஜயசூரிய சிரேஷ்ட வீரர்களை சந்தித்து இப் பிரச்சினைக்கு உடன்பாடொன்றை எட்டும் நோக்கில் பேசவிருந்தார். கொடுப்பனவுப் பிரச்சினை தொடர்பில் இலங்கை கிரிக்கெட்  அணி வீரர்களுக்கும் ஸ்ரீ லங்கா  கிரிக்கெட் சபைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

 

அணி வீரர்களுடனான ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உடன்படிக்கை கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


கிரிக்கெட் சபையின் வருமானத்தில் 78 வீத கொடுப்பனவைக் கோரியுள்ள சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் 23 பேருடன் மேலும் சில வீரர்களும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து வருகின்றனர்.

 

அடுத்த ஓராண்டு காலத்திற்காக எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தமது நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வீரர்கள் எதிர்காலத்தில் சிக்கலை எதிர்நோக்க நேரிடுமென இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் ஜயசேகர கூறியுள்ளார்.


இலங்கை கிரிக்கெட்டிற்கும் வீரர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளதுடன், அடுத்த ஓராண்டு காலத்திற்காக ஒப்பந்தம் கைச்சாத்திட வழங்கப்பட்ட கால அவகாசமும் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது.

 

இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வு காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3176:2013-03-03-09-58-50&catid=59:cricket&Itemid=390

  • தொடங்கியவர்

வீரர்களை நீக்குவதில் தவறில்லை

 

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நாட்டுக்காக விளையாடாமல் வேதனம் தொடர்பாக மாத்திரம் அவதானம் செலுத்துவார்களாயிருந்தால் அவர்களை விலக்குவதில் தவறில்லையென்று முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 


இது குறித்து அவர் கூறுகையில்;

 

நான் எனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது எனக்கு  250 ரூபாவே வேதனமாக வழங்கப்பட்டது. தற்போது அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வழங்கப்படுகின்ற வேதன தொகை அதிகமாக இருந்தாலும் இலங்கை அணி  வீரர்கள் நாட்டின் நிலைவரங்களை அறிந்து செயற்படவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வேதன அதிகரிப்பை கோரிப் போராடும் வீரர்களின் விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார்.

 

நாட்டுக்காக விளையாடக்கூடிய ஏனைய இளம் வீரர்களை இணைத்துக் கொள்வதற்காக இவ்வாறானவர்களை விலக்குவதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கை அணி வீரர்கள்  நம்ப முடியாத வகையில் மிகப் பெருந் தொகையை வேதனமாகப் பெற்றுக்கொண்டு மேலும் அதிக தொகை கோருவது நியாயமற்றதெனவும் கூறியுள்ளார்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3175:2013-03-03-09-48-07&catid=59:cricket&Itemid=390

  • தொடங்கியவர்

பங்களாதேச நாட்டிற்கு எதிரான ஆட்டத்தில் இருந்து சங்ககார விலக்கப்பட்டார்

 

Star Cricketer Kumar Sangakkara has not been allowed to play three-day warm up game against the visiting Bangladesh cricket team starting in Matara today as he has not signed the contract with the Sri Lanka Cricket, SLC sources said a short while ago.

 

- See more at: http://www.dailymirror.lk/top-story/26120-sangakkara-dropped.html#sthash.Ty4Pies2.dpuf

 

 

 

வீரர்களின் ஒப்பந்தப் பிரச்சினை முடிவு  .


திங்கட்கிழமை, 04 மார்ச் 2013 13:58 
.
இலங்கைக் கிரிக்கெட் சபைக்கும், இலங்கை வீரர்களுக்குமிடையில் ஒப்பந்தம் தொடர்பாக இடம்பெற்றுவந்த முறுகல் நிலை தீர்க்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரியவிற்கும், வீரர்களுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பினையடுத்தே இந்த முறுகல் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கிரிக்கெட் சபை வழங்கிய ஒப்பந்தத்தில் வீரர்கள் கைச்சாத்திட மறுத்ததையடுத்து முன்னணி வீரர்கள் 23 பேரை வெளியேற்றுவதாக இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

வீரர்கள் இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் பங்குகொள்ளும் காலப்பகுதிக்கான ஊதியம் அவர்களது வருடாந்த ஊதியத்திலிருந்து கழிக்கப்படும், ஐசிசி தொடர்களில் பங்குபற்றுவதற்காக கிரிக்கெட் சபைக்கு ஐசிசி வழங்கும் தொகையில் 25 சதவீதம் வீரர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படும், வீரர்களின் மனைவிமாருக்கு வருடமொருமுறை வெளிநாட்டுத் தொடர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டுச் சுற்றுலாவிற்கான வாய்ப்பு நீக்கப்படும் உட்பட சில விடயங்கள் தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்தே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வீரர்கள் மறுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைமைக் காரியாலயத்தில் சனத் ஜெயசூரிய சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு வீரர்கள் சம்மதித்துள்ளதாக சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி பங்களாதேஷ் தொடரில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- See more at: http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/59960-2013-03-04-08-29-17.html#sthash.32xQgyJF.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.