Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிய வேண்டிய கென்ய தேர்தல் முடிவுக

Featured Replies

ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிய வேண்டிய கென்ய தேர்தல் முடிவுகள்
March 9, 2013
 
கடந்த வாரம் கென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பலத்த இழுபறிக்குப் பின்னர் இன்று வெளியாகியுள்ளது.


நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த றய்லா ஒடிங்கா, உப பிரதமராக இருந்த உகுறு கென்யாட்டா ஆகிய இருவரும் முக்கிய உறுப்பினராக மோதினார்கள், மொத்தம் 9 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் உகுறு கென்யாட்டா 50.03 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

 

போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறமாட்டாது என்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டு விவகாரம் நீதிமன்று சென்றுள்ளது.

 

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதுபோன்ற நிலமை ஏற்பட்டு அதனால் உண்டான இனக்கலவரங்களில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டமையும், அதனால் இன்று வெற்றி பெற்றுள்ள உகுறு கென்யாட்டாவும், உப அதிபர் வேட்பாளர் லூற்றோவும் ஒல்லாந்து போர்க்குற்ற நீதிமன்று போக வேண்டிய நிலை இருக்கிறது.

 

அதுபோன்ற கலவராமல் தடுப்பதற்காக 2010ம் ஆண்டு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு அதன் கண்காணிப்பிலேயே தேர்தலும் நடந்துள்ளதால் மறுபடியும் இனக்கலவரம் ஒன்றை நடாத்தி முடிவைக்காண வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.

 

எதிரணிகள் வாக்களிப்பில் பல்வேறு சீர்கேடுகள் நடந்துள்ளதாக நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார்கள், சல ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் என்பதால் பதட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கிறது.

 

வெற்றிபெற்றுள்ள கென்யாட்டா 22 வீத மக்கள் உள்ள கிக்கு இனத்தில் இருந்து வந்துள்ளார், உப அதிபர் வேட்பாளர் கலன்ரி இனத்தில் இருந்து வந்துள்ளார்.

 

இந்த இரண்டு இனங்களையும் கலந்து வெற்றி எட்டித் தொடப்பட்டுள்ளது, ஆனால் சிறீலங்கா போல பல்வேறு இனக்குழுக்களின் முரண்பாடுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.

 

கடந்த 1963 ம் ஆண்டு பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து கென்யா சுதந்திரம் பெற்றபோது தற்போது வெற்றி பெற்றுள்ள உகுறு கென்யாட்டாவின் தந்தை ஜமோ கென்யாட்டா முதல் அதிபராக பதவியேற்றார் இவரே நாட்டின் பிதாமகராகவும் போற்றப்பட்டார்.

 

தந்தையின் செல்வாக்கு உகுறு கென்யாட்டாவுக்கு நாடளாவிய பரந்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளது, ஆனால் 2007 இனப்படுகொலைகளால் 1200 பேர் கொல்லப்பட்ட நிகழ்வால் சமகாலத்தில் போர்க்குற்ற விசாரணையை சந்திக்க வேண்டிய நிலையும் உள்ளது.

 

சிறீலங்காவில் தேர்தல் முடிந்ததும் சிங்களக் காடையர்கள் தமிழர்களை அடித்துக் கொல்வது போன்ற தவறை உகுறு கென்யாட்டா அன் கொம்பனி அன்று செய்துள்ளது.

 

ஆனால் உகுறு கென்யாட்டாவின் குடும்பம் கென்யாவில் மிகமிக பணக்கார குடும்பமாகும் இவருக்கு அரை மில்லியன் கெக்டேயர் பரப்பளவு நிலம் சொந்தமாக இருப்பது இதற்கு ஓர் எளிய உதாரணம்.

 

ஒரு பெரிய நிலக்கிழார் குடும்பத்தில் இருந்து வந்தவர், நாட்டின் முதல் நிலை பணக்காரர்.
கென்யாவை சுற்றி எரிந்து கொண்டிருக்கும் தன்சானியா, தென்சூடான், உகாண்டா, சோமாலியா, எதியோப்பியா நாடுகளுக்கு நடுவில் ஓரளவு கட்டுப்பாடான நாடாக இந்த நாடு திகழ்கிறது.

 

ஆபிரிக்க அமைதிக்கு இந்த நாட்டில் அமைதி நிலவவேண்டியது அவசியமென மேலை நாடுகள் நினைக்கின்றன, இதன் காரணத்தினாலேயே ஆற்றல் குன்றிய இந்த நாட்டவரான கொபி அனான் ஐ.நா செயலராக பதவியேற்றது கவனிக்கத்தக்கது.

 

இவரைப் போலவே கொரிய குடாவில் பதட்டத்தை தணிக்க தகுதி குறைந்த பான் கி மூன் ஐ.நா செயலாராக வலம் வருவதும் தமிழரின் ஒப்பீட்டு அறிவுக்கு அவசியம்.

 

சிறீலங்கா வந்த கொபி அனான் சிங்கள அரசு தடுத்த காரணத்தால் வன்னி வராமல் திரும்பியதும், பான் கி மூன் போர் முடிந்ததும் 2009 மே 23 ம் திகதி சிறீலங்கா போய் வெற்றி மாலை போட்டதும் இந்த இருவரையும் தமிழ் அடையாளம் காண அதிசிறந்த உதாரணங்களாகும்.

 

இது இவ்விதமிருக்க சிறீலங்கா அதிபர், பாதுகாப்பு செயலர், சரத்பொன்சேகா போன்றோர் போர்க்குற்ற விசாரணையை சந்திக்க வேண்டியது போல தேர்தலில் வெற்றிபெற்ற உகுறு கென்யாட்டாவும், உப அதிபரும் போர்க்குற்ற விசாரணைக்கு புறப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது.

 

கென்ய அரசியலை மிக முக்கியமாக அறிய வேண்டியது கென்யா போன்ற இனமுரண்பாடுகள் உள்ள ஈழத் தமிழரின் கடமையாகும்.

 

இந்த நாட்டில் போர்க்குற்றம் நடந்தாலும் தமது சுய இலாபத்திற்காக சீனாவும், இந்தியாவும் கண்களை மூடியபடி இங்கு எப்படி முதலிட்டுள்ளன என்பதை அறியவும் இந்தக் கற்கை அவசியமாகும்.

 

கென்யா நாட்டிலேயே அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தை பிறந்தவர் என்பது குறிப்படத்தக்கது, ஆங்கிலம், ஸ்சாகிலி மொழிகளை பேசும் கென்யாவில் 43.500.000 மக்கள் வாழ்கிறார்கள்.

 

தேர்தல் முடிவுகளை தோல்வியடைந்த றய்லா ஒடிங்கா அடியோடு மறுத்துள்ளார், கூத்தாட்டம் ஆரம்பிக்கப் போகிறது..

 


தொடர்கிறது கென்ய சுவாரஸ்யங்கள்…

 

http://www.alaikal.com/news/?p=124005

  • தொடங்கியவர்

போர்க்குற்ற நீதிமன்று போவதில் சிக்கல்..

 

கென்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள உகுறு கென்யாட்டாவும், உப அதிபரும் ஒல்லாந்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றுக்கு செல்ல வேண்டியுள்ளது.


2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உண்டான கலவரத்தில் 1200 பேர் கொல்லப்பட்டு, 600.000 பேர் இடம் பெயரக் காரணமான வன்முறைகளில் சம்மந்தப்பட்ட இவர்களுடைய கரங்களிலும் சிறீலங்கா மகிந்தராஜபக்ஷ போல இரத்தம் படிந்துள்ளது.

 

ஆனால் தேர்தல் வெற்றியும் மானிடப்படுகொலை குற்றமும் ஒரே நேரத்தில் வந்து உகுறு கென்யாட்டாவை தள்ளாட வைத்துள்ளது.

 

அதிபர் பதவியையும், போர்க்குற்ற விசாரணையையும் ஒரே நேரத்தில் இவர்கள் சந்திக்க முடியாது என்பதால் இவர்கள் சர்வதேச விசாரணையைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளது.

 

இவர்கள் மீதான சர்வதேச விசாரணைகள் மெல்ல மெல்ல சுரத்துக் கெட்டுப்போவதாக கோப்பன்கேகன் பல்கலைக்கழக கென்ய விவகார பேராசிரியர் கூறுகிறார்.

 

ஆனால் இவர்கள் வெளிநாடு போனால் கைது செய்து நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் இருக்கிறது.

 

 





மறுபுறம்..


ஆபிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் பாரிய மானிடப் படுகொலைகள் இல்லாமல் அமைதியான முறையில் நடந்தமை குறித்து டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேல் ஆனந்தம் தெரிவித்துள்ளார்.

 

சிறீலங்கா போல பல்வேறு இனங்களையும், இன மோதல்களையும், இனப்படுகொலைகளையும், போர்க்குற்றங்களையும் கொண்ட இந்த நாட்டில் நடந்துள்ள அமைதித் தேர்தலை உலகின் பல நாடுகளும் பாராட்டியுள்ளமை கவனிக்கத்தக்கது.

 

பல மில்லியன் மக்கள் கொண்ட இந்த நாட்டின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள உகுறு கென்யாட்டாவுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

ஆக தேர்தல் வெற்றியில் போர்க்குற்றம் அடிபட்டு போவதை அவதானிக்க முடிகிறது.

 

ஆடு களவெடுத்த அப்பையாவுக்கு ஆறு மாத மறியல் ஆட்களை ஆயிரக்கணக்கில் கொன்றவரோ நாட்டின் அதிபர் என்ற நம்மூரின் நீதிதான் சர்வதேச நீதியாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

 

அலைகள் 10.03.2013 ஞாயிறு மாலை

 

http://www.alaikal.com/news/?p=124062

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்க அமைதிக்கு இந்த நாட்டில் அமைதி நிலவவேண்டியது அவசியமென மேலை நாடுகள் நினைக்கின்றன, இதன் காரணத்தினாலேயே ஆற்றல் குன்றிய இந்த நாட்டவரான கொபி அனான் ஐ.நா செயலராக பதவியேற்றது கவனிக்கத்தக்கது.

 

'கொபி அனன்' கென்ய நாட்டைச் சேர்ந்தவர் அல்லர். அவரது தாய் நாடு கானா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.