Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தியமை ஐரோப்பிய ஒன்றியத்தின்

Featured Replies

புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தியமை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரிய தவறு - மாட்டின் மக்கன்ஸ்

தமிழீழ மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவதூறு ஏற்படுத்தியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் பாரிய தவறை இழைத்துள்ளது என மாட்டின் மக்கன்ஸ் தெரிவித்துள்ளார். இன்று தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே இதமை அவர் தெரிவித்துள்ளார்.

சமாதான முன்னெடுப்புக்களில் சலக தரப்பினரும் சமத்துவமாகவும் மரியாதையுடனும் நடாத்தப்படுவது இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ள மாட்டின் மக்கன்ஸ் சகல விடயங்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் ஊடாகவும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலமாகவும் உறுதி மொழிகள் நிறைவேற்றப்படும் சமாதான முன்னெடுப்புக்கள் வாயிலாகவும் தமிழீழ மக்களுக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

ஷின் பெயின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மார்ட்டின் மெக்கின்னஸ் கிளிநொச்சி விஜயம்

20060703162201photo1ira.jpg

மார்ட்டின் மகின்னஸ், தமிழ்ச்செல்வன் சந்திப்பு

வட அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐஅர்ஏயின் அரசியல் பிரிவான ஷின் பெய்ன் அமைப்பின் தலைமை பேச்சுவார்த்தையாளரான மார்ட்டின் மெகினஸ் அவர்கள் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் உயர்மட்டக் குழுவினரைச் அவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமைகள் மற்றும், வடகிழக்கு பிரதேசத்தின் நிலைமைகள் ஆகியவை குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்ட்டின் மெகினஸ் அவர்கள், உலகிலேயே சிறந்த சமாதான முயற்சி என குறிப்பிடப்படும் அயர்லாந்தின் சமாதான முயற்சிகளின் அனுபவத்தை இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தமை தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மன்னார் பேசாலைக்கு இன்று விஜயம் செய்த இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்களின் குழு கடந்த மாதம் பேசாலை வெற்றிநாயகி மாதா கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் வங்காலைப்பாடு கடற்கரையோரம் இடம்பெற்ற அனர்த்தங்கள் ஆகியவை இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்டதுடன், அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களையும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்துள்ளது.

-பீபீசீ தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

2 ஆம் இணைப்பு) ஐரோப்பியத் தடையானது பாரிய தவறு: அயர்லாந்து விடுதலை அமைப்பின் முன்னாள் தலைவர் மக்கன்ஸ் கருத்து

[திங்கட்கிழமை, 3 யூலை 2006, 15:29 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது பாரிய தவறு என்று வட அயர்லாந்து விடுதலை அமைப்பின் முன்னாள் தலைவர் மக்கன்ஸ் தெரிவித்துள்ளார்.

வட அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏயின் முன்னாள் தலைவரும் அதன் அரசியல் பிரிவான சின்பெய்ன் பிரதிநிதியுமான மார்ட்டின் மக்கன்னஸ் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது.

விடுதலைப் புலிகளின் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப்பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மக்கன்ஸ் கூறியதாவது:

நாம் அயர்லாந்திலிருந்து வந்திருக்கிறோம். உலகில் மிகவும் வெற்றிகரமான அமைதிப் பேச்சுவார்த்தையை நாம் நடத்தியிருக்கிறோம். எமது சின்பெய்ன் இயக்கத்தின் அனுபவங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது சிறிலங்காத் தரப்பினருடனும் பகிர்ந்து கொள்ள உள்ளோம் எம்மீது பிரித்தானியா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதித்திருந்த நிலையில்தான் நாம் பேச்சுக்களை நடத்தினோம்.

அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரையும் சமதரப்பாக உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பதானது பாரிய தவறானது என்றார் மக்கன்ஸ்.

அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏ.வில் 1970 ஆம் ஆண்டில் தனது 20 ஆவது வயதில் மக்கன்ஸ் தன்னை இணைத்துக் கொண்டார். ஐ.ஆர்.ஏவின் இரண்டாம் நிலை தலைவராக 21 வயதில் பொறுப்பேற்றார்.

அயர்லாந்து விடுதலை அமைப்பான சின்பெய்ன் இயக்கத்தில் மூத்த தலைவராக உருவான மக்கன்ஸ் 1972 ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன் நடந்த பேச்சுக்களில் பங்கேற்றார். அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பல்வேறு பேச்சுக்களில் அவர் கலந்து கொண்டார்.

புதிய வட அயர்லாந்து சபையின் கல்வி அமைச்சராக 1999 ஆம் ஆண்டு நவம்பரில் தெரிவு செய்யப்பட்டார்.

http://www.eelampage.com/?cn=27283

¡÷¦º¡øÄ¢Â¢õ þÄí¨¸ «ÃÍ §¸ð¸ò¾Â¡Ã¢ø¨Ä....

¦º¡øÖÈÐ §ƒ¡÷ˆ Ò‰ ±ñ¼¡Öõ §ƒÅ¢À¢ «Å¨Ãìܼ ÀÂí¸ÃÅ¡¾¢¦ÂñÎ ¾¡§É «È¢ì¨¸Å¢ÎÐ...

´§ÃÅÆ¢ «ÊòÐôÀ¢ÊôÀÐ ¾¡ý...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.