Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பூரில் சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக கல்லூரி மாணவர்கள் நடத்தி வந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அமீத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் ஈழத்தமிழர்கள் முகாம் உள்ளது. இங்கிருக்கும் தமிழர்கள் இன்று ஒன்றுகூடி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தூக்கிடக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில் காலை 11.30 மணியளவில் இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தனர்.

ஆம்புலென்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அந்த நேரத்திலும் தனி ஈழம் வேண்டும் என அவர்களின் உதடுகள் உச்சரித்தபடியே இருந்தது.

இதே போல பெரியார் பல்கலைகழக வாசலிலேயே பல்கலைகழக மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிபுரம் மாவட்ட தோழர்களின் மிக முக்கிய கவனத்திற்கு!!!

காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நாளை (20.03.2013) காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் பெரியார்நகர் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரையில் மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாணவ சமூகம் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நம் தொப்புள் கொடி உறவுகளுக்கான ஆதரவினை தந்து பேரணியை வெற்றியடையச் செய்யவும். தொடர்புக்கு தோழர்கள்-9940911235, 9659241174, 9094522380 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து கல்லூரிகளும் பாகுபாடின்றி கட்டாயம் பங்கேற்கவும். தோழர்களின் வருகையை உறுதி படுத்தவும். முடிந்தவரை அனைத்து தோழர்களும் இச்செய்தியை பகிருங்கள், பரப்புங்கள். மிக்க நன்றி!

Kancheepuram district is very important to the attention of our friends!

Kancheepuram District All School - College - University Student Federation of the day (20.03.2013) at around 9 in the morning, the first district of Kanchipuram periyarnakar Pachaiyappa College men's head office is scheduled to rise to the massive student rally. Student community and the general public, providing support for a mass rally to be successful in our relations to the umbilical cord. Contact comrades -9940911235, 9659241174, 9094522380 and contact numbers. All colleges must participate pakupatinri. In order to confirm the arrival of friends. Share best news of all comrades, Spread. Thank you very much!

மாணவர்கள் போரட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய
இலங்கை அரசுகளை கண்டித்தும் சென்னை ராமபுரம் தகவல் தொழில்நுட்ப
பூங்காவின்(DLF IT Park) வாயிலில் 600 க்கும் மேற்பட்ட கணினி பொறியாளர்கள்
மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஐ.நா இலங்கை மீது கடுமையான
தீர்மானத்தை கொண்டுவரவும் தொடர் முழக்கமிட்டோம்.

 

Human chain protest by IT professionals for support students strike and roaring against Sri lankan govt.

 

https://www.facebook.com/tamilnaduhungerstrike

 

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை கொடுக்க பட்ட பின்னர் கல்லூரி வளாகத்தில் நுழையாமல் சுங்கான் கடை தேசிய நெஞ்சாலையில் ஈழ தமிழர்களுக்கு நீதி கேட்டு போராடிய மாணவர்களை குண்டர்கள் மூலம் கலைத்த்தும் , மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு மாணவர்களை சஸ்பென்ட் செய்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளது மிகவும் கண்டிக்க தக்கது.

உயர்ந்த லட்சியங்களுக்கு போராடும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் பழி வாங்குவது எனது தமிழ் இன உணர்வு இல்லை என்பதையும் போராட்டத்தை தாங்கி கொள்ள முடிய வில்லை என்பதையும் காட்டுகிறது.. இதை ஒவ்வெரு மாணவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கண்டிக்க வேண்டும். உடனே கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட்டை திரும்ப பெற வேண்டும்..

கல்லூரி தொடர்பு எண் 04652 232 560 http://www.sxcce.edu.in/web3/advisoryboard.html மேலும் இந்த இணைப்பில் ஆலோசனை குழுவினரின் தொலைபேசி எண்கள் உள்ளன.. தொடர்பு கொண்டு சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மெரினா கடைகரையில் மாணவர்கள் 10 மணியளவில் ஒன்று கூடுவோம்.

ஒரு கோடி மாணவர்கள் .

"எதிர்வரும் 20-03-2013 (புதன்) அன்று நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" -

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.

தொடர்புக்கு:-

ஒருணைப்பாளர்கள்

மதுரை

வெங்கட்ராமன் -94438 49163

தஞ்சாவூர்

கெளதமன் -97866 03669

திருவாரூர்

சு.பாலசுப்ரமணியன் -9750030006,

மன்னார்குடி

துரை.அருள்ராஜன் -9952213636,

திருத்துறைப்பூண்டி

ப.பழனி -9750277873

  • கருத்துக்கள உறவுகள்

" இனியொரு இனியொரு விதி செய்வோம்

விதியினை மாற்றும் விதி செய்வோம் "

ஆயுதம் எடு ஆணவம் சுடு

தீபந்தம் எடு தீமையை சுடு

இருளை எரித்துவிடு

ஏழைக்கும் வாழ்வுக்கும் இருக்கின்ற இடைவெளி குறைத்து,

நிலை நிறுத்து

அட கொட்டத்தின் விட்டத்தை, சட்டத்தின் வட்டத்தை உடைத்து.

காட்டுக்குள் நுழைகிற காற்றெதுவும்

காலணி எதுவும் அணிவதில்லை.

ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால்

ஆயுதம் எதுவும் தேவையில்லை.

அனைத்து பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் தஞ்சையில் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

தஞ்சை பகுதி நண்பர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் நண்பர்களே மாணவர்களை வாழ்த்த தொடர்பு எண்கள்

விஸ்ணு வரதன்

7598167241

அருண் உதயா

7373169407

சதிஷ்குமார்

8122616410

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வேண்டும்- சுப்ரமணிய சுவாமி திருவாய் மலர்ந்து உள்ளார் .

தமிழகத்தில் ஈழ பிரச்சினை பெரிதாக வெடிக்கும் பொழுதெல்லாம் , சுப்ரமணிய சாமி பெயர் அடிபடும் , தமிழர்களிற்கு எதிரான நிலையை எப்போதும் எடுத்து, பேசி தமது இருப்பை காட்டி கொண்டு அரசியல் செய்பவர் சுப்ரமணிய சாமி .

மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுதும் எரிந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் , மாணவர்களை முதல்வர் ஜெயலலிதா அடக்க முடியாவிட்டால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை சில காலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தனது ட்விட்டர் தளத்தில் திருவாய் மலர்ந்து உள்ளார் .

சுப்ரமணிய சாமி எங்கு உள்ளீர்கள் ? நீங்கள் அதையே தமிழகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு சொன்னால் செய்தி வேகமாக சேருமே ?

ஈழத்தை வென்று எடுப்போம் எனும் உறுதியுடன் இடிந்தகரை இளையோர்கள்

ஈழ தமிழர்களின் இரத்தம் இன்னும் காயவில்லை என அதே ரத்த சுவடுகளுடன் ஈழத்தை

வென்று எடுப்போம் எனும் உறுதியுடன் இடிந்தகரை இளையோர்கள்

  நாளை

காலை 9 மணிக்கு மெரீனா கடற்கரையில் சென்னையின் முக்கிய கல்லூரி 10,00000

மாணவர்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்(மொத்தம் 16 கல்லூரிகள்). மருத்துவ

கல்லூரிகளும் கலந்துகொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

விருத்தாசலத்தில்

திட்டமிட்டபடி இன்று காலை 11.30 மணி அளவில் வந்தடைந்த குருவாயூர் ரயிலை

ஒரு மணி நேரம் மறித்து தங்களது எதிர்ப்பை மத்திய அரசிற்கு காட்டினார்கள்

( மேலும் குருவாயூர் ரயில் இந்த ஒரு மணிநேர தாமதத்தினால் 5மணி நேரம்

காலதாமதமாக செல்லும் என்று எதிர்பார்க்க படுகிறது ) 6 கல்லூரியை சேர்ந்த

நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் , அவர்களை கைது செய்த

காவல்துறை ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை 6 மணிக்கு விடுவித்தது

தமிழகம்

முழுவதும் மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும்

மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே

கூடிய 1,000-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் இலங்கைக்கு

எதிராக கோஷம் எழுப்பினர்.

 

 

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வேண்டும்- சுப்ரமணிய சுவாமி திருவாய் மலர்ந்து உள்ளார் .

தமிழகத்தில் ஈழ பிரச்சினை பெரிதாக வெடிக்கும் பொழுதெல்லாம் , சுப்ரமணிய சாமி பெயர் அடிபடும் , தமிழர்களிற்கு எதிரான நிலையை எப்போதும் எடுத்து, பேசி தமது இருப்பை காட்டி கொண்டு அரசியல் செய்பவர் சுப்ரமணிய சாமி .

மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுதும் எரிந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் , மாணவர்களை முதல்வர் ஜெயலலிதா அடக்க முடியாவிட்டால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை சில காலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தனது ட்விட்டர் தளத்தில் திருவாய் மலர்ந்து உள்ளார் .

சுப்ரமணிய சாமி எங்கு உள்ளீர்கள் ? நீங்கள் அதையே தமிழகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு சொன்னால் செய்தி வேகமாக சேருமே ?

நான் இதை எழுத வேண்டும் என்று நினைதேன். ஆனால் சபேசன் மாதிரியே சகுணம் பார்த்துவிட்டு விட்டேன்.

இப்போதைய போராட்டம் ஜெயலலிதா அரசுக்கு எதிராக மாதிரி படுகிறது. காங்கிரஸ்-கருணாநிதி ஊடல் நாடகம் நடித்துக்கொண்டு காங்கிரஸ் தமிழ்நாட்டில் கவுனர் ஆட்சிகொண்டு வந்தால் நிச்சயம் கருணாநிதியை மத்திய தேர்தலில் கவிழ்க்கலாம். ஜெயலலிதா மானிலத்தில் வருவதும் தடுக்க முடியாது.

Requesting all Tamils who are protesting and supporting students struggle pls Hold

this flag in our shoulders to show to this world that we need TamilEelam, தமிழீழ விடுதலை மாணவர் கூட்டம்மைப்பு சார்பாக அணைத்து

மாவட்டங்களுக்கும் தமிழீழ வரை படத்தை கொடியாக மாற்றி அதை நாம் நடத்தும்

அணைத்து போராட்டங்களிலும் ஏந்தி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையை

தலைமை இடமாக கொண்டு தகவல் தொழல் நுட்ப ஊழியர்கள் மற்றும் இளைஞர்களால்

நடத்தபடும் Save Tamil Movement நாளை (20.03.2013) புதன் அன்று ஒ எம் ஆர்

சாலையில் (பழைய மகாபலிபுரம் சாலை) உள்ள டைடல் பார்க் முன்பு மனித சங்கிலி

போராட்டம் அறிவித்து உள்ளது, தொழல் நுட்ப ஊழியர்களும் மற்ற துறைகளில்

உள்ளவர்களும், பொது மக்களும் பெரும் அளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது

உள்ளது.

பெதவையில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழீழம் வேண்டி உண்ணாவிரதம் !!!
வாழ்துச்சொல்ல
sivaprakash:9942659498
boopathi:9578467659
balaji:9788814842

 

உரிமைகளை ஒரு போதும் அறியாமையால் இழந்து நிற்க வேண்டாம்.

கடமைகளை ஒரு போதும் தட்டி கழிக்க வேண்டாம். இது உரிமைகளை வென்றெடுக்க
வேண்டிய தருணம்... கடமைகளை தவறாமல் ஆற்றி முடிக்க வேண்டிய தருணம்.

நாளை ஒன்று கூடுவோம் .

Edited by சகானா

ஈழத்

தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் பொறியியல்

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையில் அனைத்து பொறியியல் கல்லூரிகள் சார்பாக அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் அருகில் நாளை 20-03-2013 காலை 9 மணிக்கு போராட்டம்.

விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் :

Ram siddarth -9944547414

Dhinesh Pandian -9994693356

அனைத்து மாணவர்களும் எனது மனமார்ந்த நன்றிகள்

மற்றும் வாழ்த்துக்கள்... களமாடி வெற்றி காண களத்தில் உங்களோடு நாங்கள்

எப்போதும் இருக்கிறோம்...

வெற்றி பயணமிது...

================

வெற்றியை நோக்கிய பயணமிது...

வீரு கொண்டு புறப்படுவோம்...

நம்பிக்கை நிறைந்த நெஞ்சங்களும்..

வீரம் நிறைந்த தோள்களும்...

களமாடுகின்றன இங்கே...

வெற்றிய நோக்கிய பயணமிது...

வென்று.... காப்பது... நம் கடமை...

காத்திருந்தது....

கவலை கொண்டிருந்தது... போதுமென்று...

பொங்கியெழுந்ததும் சரியே...

வெற்றியை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்..

விரும்பியவர்கள் நம் கால் தடங்களை தொடரட்டும்..

அனைத்து சகோதர- சகோதரிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.... வாழ்த்துக்களும்...

கடந்த எட்டு நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ் உணர்வாளர்கள் உண்ணாவிரத பந்தலிலேயே அவசர கால மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஆனால் இன்று அங்கு வந்த
கல்லூரி நிர்வாகமும்,காவல் துறையும் மருத்துவ குழு கல்லூரிக்குள்
வரக்கூடாது என்று வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
மாணவர்களின் உடல் நிலை பற்றியும்,அவர்களுக்கு கட்டாயம் அவசர சிகிச்சை தேவைப்படும் என்று செவிலியர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும்
காவல்துறையானது மருத்துவ உபகரணங்களை எடுத்து வெளியே வீசி சென்றது.


 

Edited by சகானா

"தமிழீழ விடுதலைக்கான போராட்ட முழக்கங்கள்"

மத்திய அரசே! மத்திய அரசே!

மௌனம் காட்டும் மத்திய அரசே!

மனிதநேயம் இல்லாமல்

மரமாய் போன மத்திய அரசே!

இரக்கம் இல்லா அரக்கனுக்கு

இணங்கி போகும் மத்திய அரசே!

ஆட்டம் போடும் சிங்களவன்

அடியாள் நீ தான் மத்திய அரசே!

ஆயிரமாயிரம் தமிழர்கள் அழிய

ஆயுதம் தந்த மத்திய அரசே!

இலங்கைகாரன் சொல் படி நடக்கும்

எடுபிடி ஆள் நீ மத்திய அரசே!

கொத்துக் கொத்தாய் குண்டுகள் போட்டு

செத்து விழுந்த காட்சிகள் கண்டும்,

வாயை திறந்து தட்டிக்கேட்க

வக்கில்லாத மத்திய அரசே!

பாலகன் முகத்தை பார்த்துப் பார்த்துப்

பாழும் நெஞ்சும் துடிக்கிறதே,

பாவிகளே உங்களுக்கு

பாசம் கொஞ்சமும் கிடையாதா?

உலகமே பதைபதைத்து

ஓலமிட்டு கதறும் போது,

வெளி உறவு வேசம் போட்டு

வேடிக்கைகள் செய்கின்றாய்!

மரணத்தின் ஓலங்கள்

மாநிலம் எங்கும் ஒலிக்கும் போது,

மௌனம் காத்து நிற்பது தான்

மனிதநேய கொள்கையா ?

புத்தன் வேசம் போட்டுக் கொண்டு

பூதங்கள் அங்கு ஆட்டம் போட,

பயிற்சிக் களம் அமைத்து தந்து

பாவம் செய்த மத்திய அரசே!

நடுகடலில் மீனவரை

நாயாய் வந்து சுடுகின்றான்!

தமிழன் என்றால்

இன்னும் கொஞ்சம் தைரியமாக கொல்கின்றான்!

அழுது நாங்கள் சொன்ன போதும்

அமைதி காத்த மத்திய அரசே!

நாங்களும் இந்தியர் என்ற

நம்பிக்கை உனக்கு இல்லையா ?

"ஆம்" என்றால்

அவனை எதிர்க்கும் ஆண்மை கூட இல்லையா?

இறையாண்மை என்று சொல்லி

இலங்கைக்காரன் வால் பிடிக்கும்,

ஈனச் செயலை மத்திய அரசே!

இனியாவது நிறுத்திக்கொள்!

மண்டி போட்டு மண்டி போட்டு,

மௌனம் காத்து வாழ்ந்தது போதும்!

இனப் படுகொலை செய்தவனுக்கு

இறுதிச் சடங்கை செய்திடுவோம்!

ஈழத்தமிழர் வாழ்வுக்காக

இன்னுயிரும் தந்திடுவோம்,

தனி ஈழம் அமைந்திடவே

தமிழர்கள் ஒன்றாய் குரல் கொடுப்போம!

உலகத் தமிழர் எல்லோரும்

ஒரு தாய் வாயிற்று பிள்ளைகளே!

எல்லைகள் தாண்டி படந்திருக்கும்

எங்கள் உயிர் பாசக் கொடி,

எழுச்சி தமிழர்கள் எல்லோருக்கும்

என்றும் ஒரே தொப்புள் கொடி!

பதுங்குதல் என்பது கூட

பாயும் புலியின் செயல் தானே?

ஒற்றை கொக்காய் காத்து நின்று

சிங்கள மீன்களை கொத்திடுவோம்!

ஓங்கி உயர உலகம் வியக்க

உயர்ந்த நம் கொடி ஏற்றிடுவோம்!

உலகில் உள்ள தமிழருக்கெல்லாம்

ஒரே ஒரு உறைவிடமாய்,

புயல்கள் ஒன்றாய் மையம் கொண்ட

புலிகளுக்கெல்லாம் புகலிடமாய்,

நாளை மலரும் தமிழீழம்

நமக்கான தனி ஈழம்..

ஓய்வு இல்லா சூரியனாய்

உறக்கம் கொள்ளா கடல் அலையாய்,

உறைந்து நிற்கும் அனல் நெருப்பாய்,

ஒரு நாள் வெடிப்போம் எரிமலையாய்!!

வாழ்வில் சாவும் ஒருமுறை தான்

வந்தால் மடிவோம் வீரர்களாய்,

வரலாறு நம்மை வாசிக்கும்

வரும் தலைமுறை நேசிக்கும்!

-செங்கதிர்

மாணவ

புரட்சி தீயீன் தொடர் ஜீவாலைகளாக இன்று திருப்பூர் மாவட்டம் மூலனூர்

பேரூராட்சியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. இது நாளை வரை மூலனூரில்

தொடரும் அதன்பின் இதே கட்டமைப்போடு தாராபுரம் நகரில் கால வரையின்றி தொடரும்

என அறிவிப்பு செய்துள்ளனர் போராட்ட ஒருங்கினைப்பாளர்கள். இந்த இட

மாற்றத்திற்க்கான காரணம் காவல் துறையின் கடுமையே ஆகும் என்றும்

அறிவித்துள்ளனர்.

இப்போராட்ட குழுவினர் தொடர்புக்கு :

ரூபன் -8870737070

கிங்ஸ்லி -9952650743

மேலும் இன்று பழநி பழனியாண்டவர் கலை கல்லூரி மாணவர்களும் தொடர் கால

நிர்ணயமற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். 3-நாட்களாக கல்லூரி

வளாகத்துக்குள் நடைபெற்ற இவர்களின் போராட்டம் இன்று கல்லூரி வாயிலின்

முன்பு நடைபெற்றது. நேற்று இரவு 12 மணி வரை காவல் துறையினரிடம் வாக்கு

வாதம் நடைபெற்றுள்ளது இதனடுத்தே போராட்டம் கல்லூரிக்கு வெளியே எடுத்து

வரப்பட்டுள்ளது.

இப்போராட்ட குழுவினர் தொடர்புக்கு :

சரவணன் : 9597996059

மணி ; 7845583908

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும்  தங்கள் பணி  சகானா

நேரத்திற்கும் உழைப்புக்கும் ஊக்கவிப்புக்கும் நன்றிகள்

54409910151336261814147.jpg

மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்.
இடம்: திருநெல்வேலி பாளை பேருந்து நிலையம் அருகில் ஜோதிபுரம் திலீபன் திடல்
நாள்: 21 03 2013
தொடர்புக்கு: 9047723844

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாளை காலை 9 மணி அளவில் ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் வேலூர் மாணவர் கூட்டமைபு சார்பாக நடத்தும் இலங்கைக்கு எதிரான ஆர்பாட்டம்.
தொடர்புக்கு : 9003509619

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Madras High court Advocates Association, and other Madras District court Association சார்பில் நாளை 20-03-2013 கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம். அனைரும் காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்படுகிறார்கள் .

 

(முகநூல்)
 



ஈழ விடுதலைப் போராட்டத்தில் திருநெல்வேலியில் ரயில் மறியல் செய்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர்…

 

598952_4614934931073_2006345502_n.jpg

 

(முகநூல்)

 

திருப்பூரில் நடைபெற்ற போராட்டம்

 

5345_464617326945559_254267062_n.jpg

 

486643_555281814505581_1864149924_n.jpg

 

390378_555281511172278_953331007_n.jpg

 

269290_555281361172293_402479258_n.jpg

 

253778_555281271172302_23174661_n.jpg

 

259959_555281184505644_1161389739_n.jpg

 

484149_555280707839025_1972331517_n.jpg

 

300729_555280677839028_5585751_n.jpg

 

426494_555280504505712_930704686_n.jpg

 

6108_555280417839054_1912111102_n.jpg

 

482352_555280264505736_1195853596_n.jpg

 

480983_555280254505737_694171875_n.jpg

 

481309_555280217839074_1638370839_n.jpg

 

230966_555278771172552_187387793_n.jpg

 

388788_555278694505893_490504523_n.jpg

 

485906_555278374505925_1395033787_n.jpg

 

544382_555278347839261_600501659_n.jpg

 

531474_555278817839214_402219164_n.jpg

 

484191_555280297839066_1460697395_n.jpg

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.