Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

நேர்காணல்: மாணவர் ஒருங்கிணைப்பாளர் சிபி லக்ஸ்மன் - March 26, 2013

 

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

நேர்காணல்: பேராசிரியர் கன. குறிஞ்சி

 

மாணவர் போராட்டம் பற்றி குபேந்திரன் கணேசன் அவர்களுடனான நேர்காணல்- Tamil Leader இணைய செய்தித் தளத்தின் முதன்மை ஆசிரியர்

 

மாணவர்களே, திருச்சியில் காங்கிரஸ்யின் தலைவர் ஞானதேசிகன் காரை முற்றுகையிட்ட 50 மாணவர்களை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். நாம் மாணவர்களை தடிக்கொண்டு தக்கியதில் 30 பேர் காயம், 7 பேர் காவலைகிடமாக உள்ளார்கள்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .
 

575658_598864166792279_1913492914_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சென்னை அருகே வேல்டெக் பல்கலை மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தால் பல்லாவரம்- துரைப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

(முகநூல் : loyolahungerstrike)

ஆல் இந்தியா றேடியோ/all india radio
மாணவர்கள் முற்றுகை/
காவல்துறை பலத்த பாதுகாப்பு.

 

535880_598815526797143_2114939288_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

Tomorrow TYO (Tamil Youth Org.) Students Protest in Hannover, Germany
4pm - 6 pm
27.03.2013
Place: Kröpcke (near railwaystation) , Hannover

 

(முகநூல் : loyolahungerstrike)



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் “ஓயாது இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது!!! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது. மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக சென்ற மாணவர் கூட்டமைப்பினர் கைதாகியுள்ளனர்.

 

(முகநூல் : loyolahungerstrike)



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மாணவர்களே! கவனம்! உங்களை வன்முறைப் பாதையில் திருப்ப சதி நடக்கிறது. அறப் போராட்டத்தை மட்டுமே தொடருங்கள்! காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். தங்கள் பிள்ளைகளை அடித்தவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

 

(முகநூல்)



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காங்கிரஸ் புதைக்கப்பட வேண்டிய களம் மற்றும் காலம் இதுதான் !  அதையும் அறவழியிலேயே செய்கிறோம்.

 

(முகநூல் : loyolahungerstrike)
 



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

அகில இந்திய வானொலி நிலையத்தை இழுத்து மூடும் அற வழிப் போராட்டத்தை நடத்திய 200க்கும் மேற்பட்ட பல கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை தமிழக காவல்துறை கண்மூடிதனமாக தாக்கி வண்டியில் ஏற்றி உள்ளனர்.. மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் சமுதாயக் கூடத்தில் அடைக்கப் பட்டு உள்ளனர்.. மாணவ-மாணவிகள் பலர் காயமடைந்துள்ளனர்
தொடர்புக்கு 09500044452

 

(முகநூல்)

நண்பர்களே !

இந்த பக்கம் , ஈழம் அடையும் வரை , ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஏதேனும் ஒரு நாடு சரத்தை பதியும் வரை , தமிழகத்தில் வராது வந்த மாமணி போல எழுந்த தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை எப்படி ஒவ்வொரு அடுத்த கட்டதி
ற்க்குள்ளும் கொண்டு செல்லவேண்டும் என்பற்கு உதவியாக , களத்தில் உள்ள மாணவர்களிற்கு தகவல் அளித்து உதவும் ஒரு இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

தங்களது தனிப்பட்ட கோபங்களை, எதற்கும் பயன்படாத 'திட்டு' வார்த்தைகளை கொண்டு பதிய ; தங்களது ஆத்திரங்களை இங்கே எழுத்துகளில் காட்ட ; ஒரு அமைப்பை அல்லது இயக்கத்தை குறைசொல்லும் பிறிதோர் அமைப்பு அல்லது இயக்கம் அல்லது தனி நபர் என்று ; எந்த பழக்கத்தையும் இந்த பக்கத்தில் தயவு செய்து பதிய வேண்டாம் .

ஒற்றை நோக்கம் ஒரே நோக்கம் ஈழம் மட்டுமே , தமிழகத்தில் எழும் மாணவர் எழுச்சி இந்தியாவின் மன நிலையை , இந்தியாவின் இலங்கைக்கான அயலுறவு கொள்கையை மாற்றம் கொள்ள செய்யவேண்டும் என்பதுவே மாணவர் போராட்டத்தின் அச்சாணி கொள்கை.

ஈழ தமிழர்களிற்கு இந்தியாவில் (தமிழகத்தில்) எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் உணர வேண்டும் .

அதற்க்கு ஒவ்வொரு போராட்டத்தையும் பதிந்து வையுங்கள் வீடியோ , போடோக்கள் முக்கியம் .


இப்போதைக்கு காமன் வெல்த் நாடுகளில் அங்கம் வகிக்கும் ஐம்பத்து நான்கு நாடுகளிற்கும் நாம் இலங்கை படுகொலை ஆவணங்களை அனுப்பி , இனபடுகொலை செய்த இலங்கையை ராஜபக்சேவை அங்கீகரிக்காதீர்கள் என்ற முக்கிய பணியை, இணையத்தில் உள்ளாவாறே செய்ய வேண்டும்.

அதற்க்கு ஒரு சரியான ஆவண படம் தயாரிக்க வேண்டும் அதற்க்கு உதவும் நண்பர்கள் இங்கே உள்ளார்களா ? இருந்தால் பதியவும்.

அடுத்து முக்கியமாக , இந்திய அரசு உணரும் பொருட்டு அதே நேரம் தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்று , மத்திய அரசு அலுவலக முடக்க பணிகளை முன்னெடுப்பது எப்படி என்று மாணவர்கள் தம் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு கொண்டு பணிகளை செய்து வருகிறார்கள்.

எதிர்பார்த்தபடியே,இந்த பக்கத்தில் சிங்களவர்கள், ஒட்டுக்குழுக்கள் பலர் ஊடுருவி உள்ளார்கள் அவர்கள் இதை, இந்த பக்கத்தை தடை செய்ய கோரிக்கை அளிக்கலாம் , (ஏற்கனவே இரண்டு லக்ஷம் பேர் பார்த்த , நமது பக்கத்தின் ,ஒரு படத்தை தடை செய்து உள்ளார்கள்) நாமும் நாளை அல்லது நாளை மறுநாள் , இந்த பக்கத்தின் பிரதியான ஒரு இணைய தளத்தை உருவாக்க போகிறோம் . அந்த தளம் பற்றிய பதிவுகளை வெகு விரைவில் அறிவிக்கிறோம்.

நாள் ஒன்றிற்கு இருபத்தி இரண்டு மணி நேரம் இயங்கி இந்த பக்கத்தை உயிர்ப்புடன் வைத்து வருகிறோம் , இதே பணியை ஈழத்திற்காக ஈழம் அடையும் வரை எங்களது குழு செய்யும்.

விரைவில் , புதிய தளம் பற்றி அறிவிப்பை வெளியிடுகிறோம்.
Mr.KChennai

 

(முகநூல் : loyolahungerstrike)

திருச்சியில் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டு கால் உடைத்த நிலையில் இந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பல மாணவர்கள் கவலைக்கிடம். :(

 

600259_598878933457469_2047181519_n.jpg

 

 

(முகநூல் : loyolahungerstrike)

வேல் பல்கலைக்கழக மாணவர்கள் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 

527580_598885400123489_2134932440_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

Edited by துளசி

சென்னையில் நடக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கச் செல்லும் ரசிகர்களே , மாணவர்களே தயவு செய்து இது போன்ற பதாகைகள் , வாசகங்கள் எழுதிய அட்டைகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அதை விளையாட்டின் போது காட்டுங்கள். இதன் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற மக்களுக்கும் நமது செய்தியை கொண்டு போகலாம் !

 

164281_598874230124606_1398549717_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

 

Edited by துளசி

அண்மைச்செய்தி.
இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை நிறுத்த வேண்டும் எனவும்
முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்.
(முகநூல்)

 

பி.கு: யாராவது இது தொடர்பான இணைப்பை கண்டால் யாழில் இணையுங்கள். :rolleyes:


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

அவசரம் ! கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஆனந்த் இன்ஸ்டியுட் ஆப் ஹையர் ஸ்டடிஸ் கல்லூரியை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் , மேலும் அவர்களின் போராட்டத்தை வழி நடத்த ஆள் இல்லாத காரணத்தினால் அடுத்து என்ன செய்வது என்று தெரியமால் சோர்வாக உள்ளனர் , அப்பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களை சந்தித்து சரியாக வழிநடத்துங்கள் , மேலும் இணைய நண்பர்கள் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவியுங்கள் , அது அவர்களை மேலும் போராட ஊக்கமளிக்கும்

தொடர்புக்கு :-
தினேஷ் 9543845283
யூசுப் 9688260209
ஜோஸ் 9942340047

 

403002_598886040123425_707384738_n.jpg

(முகநூல் : loyolahungerstrike)



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இன்று காவல்துறையின் கடும் பாதுகாப்பை மீறி மாணவர்கள் சென்னையில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தினர்.

 

550009_598887463456616_655383466_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

Edited by துளசி

இலங்கையில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலையை கண்டித்தும் குற்றவாளி ராஜபாட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வலியுறுத்தியும் தமிழ் ஈழம் தழைக்கவும் தமிழன் என்ற உணர்வோடு நம்மையெலாம் ஒன்றுபடுத்தி தமிழர்களுக்கு ஆதரவாக தனி ஈழத்திற்கு ஆதரவாக போராடிவரும் மாணவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சாதி கட்சி கலப்படமின்றி தமிழ் இன உணர்வோடு ஐடிசி தொழிலாளர்கள் நடத்தும் பிரமாண்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நானும் கலந்துக் கொண்டு முழக்கமிட உள்ளேன் என்பதை இவ்வேளையில் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்
தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்

நாள்: 29-03-2013
இடம்: காரமடை பேருந்து நிலையம்
மேட்டுப்பாளையம், கோவை

 

253761_512475108798655_677201153_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கத்தி , கம்புகளால் மாணவர்களை தாக்கி காங்கிரஸ் காட்சி: 30 பேர் காயம், 7 பேர் காவலைகிடம்.[படங்கள்]

manavarkal-attack1.JPG

காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில்  நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனர்களை   மாணவர்கள்  சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி   அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் மாணவர்களை தாக்கி உள்ளனர் .

இதில் 30 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . 7 மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை என் மாணவர்கள் தெரிவித்துல்ல்லானர்  . இந்த  தாக்குதல் நடத்திய காங்கிரஸ் காட்சியை சேர்ந்தவர்களை  உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .

manavarkal-attack.JPG

மதுரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், திருச்சியில் காங்கிரசாரால் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து கல்லூரி மாணவர் சங்கம் சார்பாக நாளை 28-03-2013 அன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது.

 

இடம் : மதுரை காளவாசல்
நேரம் : காலை 9.30 மணிக்கு

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் :
தினேஷ் பாண்டியன் : 9994693356
ராமச்சந்திரன் : 8870384777
விக்னேஷ் : 9600422192

 

35037_598901016788594_1826145001_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக மாணவர் உண்ணாவிரதம்!

 

 

v-canadiyanmansvareunnaa%20%281%29.jpgphoto.gifதமிழக மாணவ உடன்பிறப்புகள் நடத்திவரும் தமிழீழத்துக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவிலுள்ள ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக தமிழ் மாணவர் அமைப்பு அடையாள உண்ணாவிரதத்தினை இன்று காலை 10 மணியிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.

சிறிலங்கா இனவாத அரசின் கொடூரங்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும்இ சிறிலங்காவில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்இ தமிழர்களின் தாயகப் பகுதியில் இடைக்கால நிர்வாக அலகு ஒன்று உருவாக்கப்பட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர். 

ஈழ விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவரும் தமிழக மாணவர்களுடன் இணைந்து அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை முற்றுமுழுதாக ஆதரித்தே இப்போராட்டம் நடந்து வருகின்றது.v-canadiyanmansvareunnaa%20%282%29.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


அஞ்சலகத்திற்கு பூட்டுப் போட வந்த மாணவர்கள் கைது

srilanka-7773.jpg

 

 

“ஓயாது  இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது!!! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது. மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக மாணவர் கூட்டமைப்பினர் கைதாகியுள்ளனர்.

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டுப்போடும் போராட்டம் செய்வதாக திட்டமிட்டு காலை பத்து மணிக்கு நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு பேரணியாக திரண்டு கரவொலியை முழங்கி வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வந்தனர். 

 

ஏற்கனவே மாணவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என முடிவு செய்திருந்த காவல்துறை நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களை குவித்திருந்தனர். 

 

அஞ்சலகத்திற்கு முன்பே இரும்பு தடுப்புகளை வைத்து காவல்துறையினரை வரிசையாக நிறுத்தி 50 அடிக்கு முன்பே மாணவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர். மாணவர்களோ காவல்துறையினரை அத்துமீறி பூட்டுப்போட நுழையும் போது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

செய்தி, படங்கள்: செல்வகுமார்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95378

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

பார்த்து பார்க்காமல் போகாமல் பகிரவும் - Must Share
தயவு செய்து பகிர்ந்து உலகுக்கு தெரிய படுத்தவும்

திருச்சியில் மாணவர்களை அடிக்கும் காங்கிரஸ்காரர்கள் - வேடிக்கை பார்க்கும் போலீஸ் ....

 

தமிழின மக்களே என்ன செய்ய போகிறீர்கள் ???

 

28184397321214889081295.jpg

 

 

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பலர் கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

தோழர்களே!!!

சொன்னால் புரிந்து கொள்வதற்கு சூடு, சொரணை உள்ளவனா சிங்களவன்?!!!

தமிழரின் உயிர் குடித்து, ரத்தவெறி பிடித்து, கொலைகாரக்கூத்தாடுகின்றான்!!!

அவனிடம் போய் நீதியை எதிர்பார்க்கலாமா?!!!
அறிவு, பண்பு உள்ளவனிடம் அஹிம்சையை பற்றி பேசலாம்!!!
பினந்தின்னிக்கழுகுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?!!!

பேசிப்பார்க்காமலா ஆயுதம் ஏந்தினார் எம் தலைவர்?!!!
ஆயுதம் எடுத்த பின்னரும் அமைதி வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினாரே?!!!

"காட்டுமிராண்டி" காடயனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா?!!!

சிங்களவனைப்பற்றி என்ன சொல்வது, எங்களவனே எமக்கு துரோகம் செய்யும்போது?!!!

தோழர்களே!!! உங்களை நம்பியே எமது ஈழத்தை விட்டுச்சென்றார் எம் தலைவர்!!!

ஒவ்வொரு மாணவனும் அவரின் மறுபிறப்பு!!!
ஒவ்வொரு குரலும் புலிகளின் போர்க்குரல்!!!
ஒவ்வொரு கண்ணிலும் ஈழத்தின் தாகம்!!!
ஒவ்வொரு இதயத்திலும் ஈழத்தின் வேர்கள்!!!

கனவு கண்டேன் ஈழத்தின் விடுதலைக்காய்!!!
கனவு மெய்ப்படவேண்டும்!!!

தமிழரின் தாகம்!!! தமிழீழ தாயகம்!!!

 

-முகநூல்-

 

-------------------------------------------------------------------------------------------------------
 

சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தீர்மானம்
மாணவர்களிற்கு கிடைத்த வெற்றி ; அவர்களின் போராட்ட அழுத்தத்திற்கு கிடைத்த
வெற்றி என்பதில் துளி அளவு கூட சந்தேகம் இல்லை ஆனால் மாணவர்கள் நாங்கள் ,
எங்களை பாராட்ட வேண்டும் என்று ஆசை கொள்ளவில்லை . எங்கள் அனைவரின் நோக்கம்
தமிழர்கள் இனி மேலும் கண்ணீர் விட்டு அழாதபடிக்கு ஒரு நிம்மதியான,
சுதந்திரமான, உரிமையான, அவர்களிர்க்குண்டான தேசம்; அது ஈழம் ; அதை பெரும்
வரை எங்கள் அறவழி பணி தொடரும் .

இப்போதைய தமிழக அரசின்
தீர்மானத்தை இந்திய மத்திய அரசு பரிசீலித்து , தமிழக சட்ட மன்றத்தை
மதித்து , இலங்கையுடனான தமது வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் .

அந்த மாற்றம் வேண்டும் அதுவே எங்களிற்கான வெற்றியாக இருக்கும். எங்களிற்கு தேவை வெற்று பாராட்டல்ல
.

 

-முகநூல்-

Edited by சகானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

530190_549968955033758_1060193077_n.jpg

 

WE WILL WALK AND FIGHT TOGETHER AS " STUDENT "..
தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..
COME AND JOIN OUR HANDS ==> World Wide Tamil People

 

-முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தனி தமிழ் ஈழம் வலியுறுத்தியும் ,,திருச்சியில் மாணவர்கள் காங்கிரஸ் ரவுடிகளால் தாக்கபட்டதை கண்டித்தும் ,காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய கோரியும் மதுரை மாணவர்களின் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது
 
388548_598940780117951_1774326402_n.jpg

Loyolahungerstrike

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதைலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சீ.தினேஷ் மற்றும் ஜோ.பிரிட்டோ ஆகியோரின் கூட்டறிக்கை

கடந்த மூன்று வார காலமாக “தமிழீழமே தீர்வு” என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து நடைபெற்று வரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை தமிழக சட்டமன்றம் அங்கீகரித்ததுடன், தமிழக மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானமான; “இலங்கை வாழ் தமிழர்களுக்கு” நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதே புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானத்தை “தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு” முழு மனதோடும், நன்றியோடும் வரவேற்கிறது. இக்கோரிக்கையை வென்றெடுக்க மாணவர் சமூகம் தமிழக அரசுக்கு இணைந்து பங்காற்ற வேண்டும் என அழைக்கிறோம்.

இவண்,
ஒருங்கிணைப்பாளர்கள், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

(சீ.தினேஷ்)
97911 62911

(ஜோ.பிரிட்டோ)
86789 62611

 

Loyolahungerstrike

83035989482267838731692.jpg

 

வாழ்த்துகள்....................!!!

மாணவர் போராட்டம் தொடரட்டும்.............

தமிழ்நாட்டுத் தமிழர் ஒன்று திரளட்டும்................

தரணியெங்கும் தமிழீழ விடுதலைக் குரல் ஒலிக்கட்டும்.............

பகைவர் புறமுதுகோட..............

நம் தமிழர் தாயகம் " தமிழீழம் மலரட்டும்.......................!!!

 

-முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம் தாயக தேசத்தில் எம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைக் கண்டித்து அதற்கான நீதி விசாரணை கோரி தாய் தமிழகத்தில் தமிழக மாணவரால் நடத்தப்படும் போராட்டங்களை ஆதரித்தும் , ஈழ ஆதரவுக் குரலுக்கு நன்றி தெரிவித்தும் ,புலம்பெயர் நாடுகளில் போராட்டங்களை நடத்துதற்கான காலத்தின் தேவை புலம்பெயர் சமூகத்திற்கு இருக்கின்றது.
அந்த வகையில் வரும் 28.03.2013 பிரான்ஸ் வாழ் புல‌ம்பெயர் ஈழக் கலைஞர்கள் (LIFT)அடையாள உண்ணாவிரதப் போரட்டத்தை நடத்த உள்ளார்கள்.இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் école milataire.21 place joffre,75007 paris(metro école militaire ligne ) என்ற இடத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்
நீண்ட உறக்கத்தில் இருக்கும் எம் புலம்பெயர் சமூகம், துயில் முடித்து எழுந்து போராட வேண்டும். இனியும் தூங்கினோம் வரலாற்றில் தூக்கி எறியப் படுவோம்.
அங்கே தனித்து போராடும் உறவுகளுக்கும் எம் குரல்களும் , எம் போராட்டங்களும் தான் வலுச் சேர்க்கும்.
எங்களின் விடிவுக்காய் தமிழ் நாட்டில் மட்டும் போராடாது, தரணி எங்கும் போராடும் போது தான் உலக நாடுகளின் கவனத்தை நாங்கள் ஈர்க்க முடியும்.
அந்த வகையில் புலம்பெயர் சினிமாக் கலைஞர்களாகிய எமக்கு , போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் தார்ப்பரியம் இருக்கிறது. பொது மக்களாகிய உங்களிடம் நாம் கேட்பது உங்கள் ஆதரவை மட்டுமே. எம் மக்களுக்காய் , நாமே போராட வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.எம் ஒற்றுமையான போராட்டம் தான் எமக்கான விடிய‌லைத் தரும். , அந்த வகையில் நடைபெறும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் தொடர்புகளுக்கு 0668811330
0651469892
இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்,http://www.youtube.com/channel/UCjQqOJWa8pG0CtOS6c6a6tw?feature=mheeஎன்ற இணைய முகவரியில் நேரடியாக ஒளிபரப்பாகும்

 

Loyolahungerstrike

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் சிதைக்கப்பட்டது உன் இனமாக இருந்திருந்தால் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு சிதைக்கப்பட்டது உன் சகோதரியாக இருந்திருந்தால்,

 

அங்கு நிர்வாணமாக சுடப்பட்டு சாவடிக்கப்பட்டது உன் அண்ணாக இருந்திருத்தால்,

 

அங்கு ஏதுமறியா பாலகன் இறந்தானே அது உன் தம்பியாக இருந்திருந்தால்,

 

அங்கு தாரில் முக்கி எடுத்துக் கொன்றானே அது உன் அக்காவின் குழந்தையாக இருந்திருந்தால்,

 

நிறைமாத கர்ப்பிணியை வயிற்றைக் குற்றி குழந்தையின் விரலை எடுத்தானே வலியால் துடித்து இறந்தாலே அவள் உன் அக்காவாக இருந்திருந்தால்,

 

அங்கு இனப் படுகொலைக்கு துணை போன இந்நாட்டில் நீயும் இதைத் தான் கூறியிருப்பாய்,

 

அங்கு சிதைந்தது என் இனம் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது என் அக்கா தங்கை,

 

அங்கு இறந்த பச்சிளம் குழந்தை என் அக்காளின் குழந்தை,

 

அங்கே நிர்வாணமாக சுடப்பட்டு இறந்தானே அவன் என் அண்ணன்,

 

ஏதுமறியாது 5 குண்டுகளை நெஞ்சில் வாங்கி சாய்ந்தனே அவன் என் தம்பி,

 

என் உறவுகளை அழிக்க உதவியது இந்த நாடு அந்நாட்டில் நானெப்படி இந்தியனாவேன்,

 

உனக்கு வேண்டுமானால் உன் குடும்பத்தை சிதைத்தால் அவனுடன் கூத்தடிக்க முடியும் என்னால் முடியாது!

நான் தமிழன்...

 
 
599350_560720127283310_2044053251_n.jpg
 
-முகநூல்-
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Trichy maanavarkal thakuthall... Tomorrow mrng.
8.00am ku,pdkt old bus standla ontru kuduvom maaperum poorattam. Pl's forwd to all college student's.#திருச்சி சட்ட கல்லூரி மாணவர்களை போலி கதர் குழுவினர் தாக்கியதை கண்டித்து புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டனம்.

 

Loyolahungerstrike



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் முன் மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Loyolahungerstrike

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.