Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்ககூடாது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சிங்கள இராணுவத்தின் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியாவை படுகொலை செய்த ராசபக்சே அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கிறோம்.

இடம்: இரயில் நிலையம், சீர்காழி - நாகை மாவட்டம்
நாள்: 12/11/2013 ( செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி அளவில்

 

1459198_422777574511066_1773308071_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட 21 அமைப்புகள் இதற்கான அழைப்பினை விடுத்துள்ளன.
அன்றைய தினம் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சென்னையில் இன்று செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்த இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதே தினத்தில் வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள கடை அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இவர்கள், இலங்கை அரசுக்கு எதிரான இந்த போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

1395257_387808151352827_2005378451_n.jpg

 

(facebook)


பொதுநலவாய் (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது எனக்கோரியும், மீறி நடந்தால் அதில் இந்தியா அரசு பங்கெடுக்கக் கூடாது எனக்கோரியும் மயிலாடுதுறையில் தொடர் வண்டி மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் கைது...

 

(facebook)

Link to comment
Share on other sites

1461499_476983412399132_1436749673_n.jpg

 

(facebook)


ராஜீவ் காந்தி சிலையை உடைத்த வீரத் தமிழர்கள் மகாலிங்கம் , தமிழன் வடிவேலு ஆகியோருக்கு நம் வாழ்த்துகளை பகிர்வோம்! காங்கிரஸ்காரர்கள் வீதியில் இறங்கி சாலை மறியல் செய்ய வேண்டுமென்றால் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தால் மட்டும் தான் அது சாத்தியமாகும். தமிழ் நாட்டில் ராஜீவ் சிலையை சேதப் படுத்துவதை தவிர வேறு எதுவும் செய்து விட முடியாது. ஆந்திராவில் ராஜீவ் காந்தியின் சிலையை இருக்கும் இடத்தில் இருந்து அகற்றி வீதியில் இழுத்து வந்துள்ளனர் தெலுங்கர்கள். அந்த நிலை இங்கு வரவில்லை என்றாலும் இது ஒரு நல்ல தொடக்கமே. விரைவில் எங்கெல்லாம் ராஜீவ் சிலை இருக்கிறதோ அங்கெல்லாம் இப்படிப்பான சிலை உடைப்பு தன்னிச்சையாக நடைபெற வேண்டும். அவ்வாறு செய்வது மட்டுமே காங்கிரஸ் காரர்களை சாலை மறியல், போராட்டம் செய்யத் தூண்டும். தொடர்ந்து காங்கிரஸ் கயவர்களை தூங்க விடாமல் செய்வதே தமிழர்களின் தலையாய பணியாக இருத்தல் வேண்டும்.

 

Rajkumar Palaniswamy
 

(facebook)


சோனியா, மன்மோகன் கொடும்பாவியை செருப்பால் அடித்து எரித்த புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழக்த்தினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்

 

1454542_454331231350155_983971001_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

Namakkal protest against congress and CHOGM.

484786_596415847100983_94417970_n.jpg

 

1459897_596415920434309_120178621_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இசைப்பிரியா படுகொலையைக் கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இசைப்பிரியா படுகொலையைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பாளை ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் வழக்கறிஞர் சந்தணசேகர், ஐஜேக மாவட்ட பொருளாளர் இசக்கிராஜா உட்பட பலர் கண்டன உரியாற்றினர்.

 

ஆர்ப்பாட்டத்தில், இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்த போது சிங்கள ராணுவத்திடம் சிக்கிய இலங்கை தமிழ் ஊடக செய்திவாசிப்பாளர் இசைபிரியாவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை வன்மையாக கண்டித்து கோஷங்கள் எழுப்பப்ட்டன.

இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று அழித்தது. பெண்கள், குழந்தைகள், அப்பாவி பொதுமக்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி படுகொலை செய்து போர் குற்றம் புரிந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த தடை விதிப்பதுடன், காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க 52 நாடுகள் நடவடிக்கை எடுக்க‌வேண்டும்.

 

இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உரிமைகளைப் பெற்றுத் தர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அது அதிபர் ராஜபட்சேவின் போர்க்குற்றங்களை அங்கீகரிப்பது போல் அமையும். எனவே இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

 

periyar%201.JPG

 

 

periyar%202.JPG

 

http://www.pathivu.com/news/27950/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

5ஆவது நாளாக 3 மாணவர்கள் உண்ணாவிரதம்! இருவருக்கு சோர்வு!

’காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிரான மாணவர்கள்’ எனும் பதாகையின் கீழ், சென்னை லயோலா கல்லூரி மாணவர் செம்பியன், புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர் இளவரசன் அப்பு, சென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி மாணவர் ரத்தினவேலன் ஆகியோர், கடந்த செவ்வாய் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகின்றனர்.

முதல் நாளன்று வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலையைத் தொடங்கிய இவர்களை, கைதுசெய்து, போராட்டத்தை நிறுத்த போலீஸ் முயன்றது. அதையடுத்து, இம்மாணவர்கள் மூவரும் சென்னை பெரம்பூரில் உள்ள-வணிகர் சங்கங்களின் பேரவை தலைமையகத்தில் உண்ணாநிலையைத் தொடர்ந்தனர். அங்கும் அவர்களைக் கைதுசெய்ய போலீஸ் முயன்றது. அங்கிருந்த வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் மற்றும் இன உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பால், போலீஸ் பின்வாங்கியது.

இன்று நவ.8ஆம் தேதியன்று ஐந்தாவது நாளாக மூன்று மாணவர்களும் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

இதற்கிடையில், இளவரசன், ரத்தினவேலனுக்கு நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

உலகுதழுவிய அறநெறிகளை அப்பட்டமாக மீறி, இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த சக்திகளுக்கு எதிராக, அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். அதே நேரம், அவர்களின் உடல்நலம் எத்தனை நாள்களுக்கு இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது.

இனப்படுகொலை நடத்திய இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! எனும் முழக்கத்துடன், காமன்வெல்த்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்குகளையும் உடனே திரும்பப் பெறவேண்டும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் மூன்று மாணவர்களும் வலியுறுத்துகின்றனர்.

 

1395207_194701537381734_1619661022_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

என் அன்பு தாய் தமிழ் உறவுகளுக்கு என் பணிவு கணிந்த வணக்கங்கள்.....

உங்கள் அனைவருக்கும் தாய்மையான வேண்டுகோள் நம் இன்று மாலை 6 மணியளவில் தந்தி தொலைக்காட்சியில் நம் உறவுகளை கொத்துக்கொத்துக்காக கொன்று குவித்த "இறுதிப்போரின் இரத்த சாட்சிகள் " "No fire zone " என்னும் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்கிறது.... இந்த செய்தியை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் பாரக்க சொல்லி வற்புறுத்துங்கள்... குறிப்பாக உங்கள் வீட்டு பெண்மணிகளை பார்க்க சொல்லுங்கள் ..... நம் போராட்டத்திற்கு இது மேலும் உதவும் .....

நாம் போராடுவது நமக்காக அல்ல நம் இனத்திற்காக ,அடிமைப்பட்டு இருக்கும் நம் தலைமுறைகளுக்காக....
தமிழா இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலையே...

 

1426153_362703257209256_1198105177_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு -பொள்ளாச்சி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பாக ... இன்று(09.11.13) காலை 9 மணி முதல் காமன்வெல்த் மாநாடு எதிர்ப்பு பற்றிய துண்டறிக்கையை பொள்ளாச்சி பேருந்துநிலையம் முன்பு மாணவர்கள் ,பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் ..

 

1390523_362731937206388_1625909452_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராகவும், இந்தியா அதைப் புறக்கணிக்க வலியுறுத்தியும், சேனல்4 வெளியிட்ட தமிழீழ ஊடகவியலாளர் இசைப்பிரியா பாலியல் வல்லுறவு மற்றும் கொலையைக் கண்டித்தும் தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் அமைப்பிலிருந்து இன்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

1461073_10152049609260992_1527436755_n.j

 

1455004_10152049609945992_1335182247_n.j

 

1441348_10152049610695992_586944021_n.jp

 

1460169_10152049613160992_1797159521_n.j

 

1385018_10152049613500992_791728609_n.jp

 

1391641_10152049613890992_926002521_n.jp

 

1459814_10152049614125992_1999501806_n.j

 

1465128_10152049614385992_1543638632_n.j

 

1393968_10152049614670992_1450920362_n.j

 

1450847_10152049615020992_220078336_n.jp

 

1461114_10152049615495992_1091238533_n.j

 

(facebook)

Link to comment
Share on other sites

09.11.2013

 

இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தாதே, பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த உண்ணாவிரத போராட்டத்தின் 5 வது நாளான இன்று முடிவுக்கு வந்தது.

ஈழத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஆனந்தி சிரிதரன் அவர்கள் கைபேசியில் தொடர்புகொண்டு உடலை வருத்தும் போராட்டத்தை கைவிட்டு மாற்று வழியில் போராட கேட்டுக்கொண்டார்.

ஆனூர் ஜெகதீசன் முன்னிலையில் சத்யராஜ் முடித்துவைத்தார்.

 

1463699_713248185353876_1341502494_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

வருகின்ற 12ஆம் தேதி , இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை கண்டித்து கடையடைப்பினை வணிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.. இதே போல ரயில் மறியல் போராட்டங்களையும் இந்த காலத்தில் நடத்தலாம் என அமைப்புகள் கூடி முடிவெடுத்திருக்கின்றன. தோழர். கோவை.ராமகிருட்டிணன் இதை அறிவித்திருக்கின்றார். இதற்கு பல அமைப்புகள் தமுமுக, எஸ்டிபிஐ, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம்தமிழர் உடபட பலரும் ஆதரவு அளித்திருக்கிறார்கள்... தோழர்களே வரும் வாரத்தில் விரிவாக பல இடங்களில் நிகழும் போராட்டங்களில் கலந்து கொண்டு “அடிமை நாடுகளுக்கு” எதிர்ப்பினை தெரிவிப்போம்.

 

Thirumurugan Gandhi

(facebook)

Link to comment
Share on other sites

நாளை நடக்கும் முழுகடையடைப்புக்கு ஆதரவாக மறைமலைநகரில் நாளை காலை 10மணிக்கு கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டம் நடைபெறவிருக்கிறது.சிறப்பு அழைப்பாளராக த.வெள்ளையன் அவர்கள் கலந்து கொள்கிறார்.வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்..

கோரிக்கை:

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!
காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு!

 

994047_696571247020755_708680668_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இனக்கொலை இலங்கையில் நடங்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தித் தொடங்கியது ஐ.டி. துறையினரின் மனிதச் சங்கிலிப் போராட்டம்.

 

1450807_10152053537575992_1110734721_n.j

 

2552_10152053538415992_1825997016_n.jpg

 

1458647_10152053538625992_1721478694_n.j

 

1425744_10152053538890992_1374485028_n.j

 

1390639_10152053539300992_154501059_n.jp

 

1456129_10152053539580992_1454123850_n.j

 

1467299_10152053539920992_1126518597_n.j

 

1458458_10152053540365992_1458163770_n.j

 

(facebook)

Link to comment
Share on other sites

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை எதிர்த்தும், அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறித்தி கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள்/மறியல்கள்/ஆர்பாட்டங்கள்/முற்றுகைகளின் தொகுப்பு:-

--------------------------------------------------------------------------

10/11/2013 அன்று நாகப்பட்டிணம் மாவட்டம் சார்பாக ரயில் மறியல்/கைது.

10/11/2013 அன்று .நீலமலை நாம் தமிழர் தமிழக எல்லை யில் மாபெரும் முற்றுகை/கைது.

10/11/2013 அன்று திருப்பூரில் தொடர் வண்டி மறியல்/கைது.

09/11/2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்/கொடும்பாவி எரிப்பு/கைது.

09/11/2013 அன்று திருவள்ளூர் கி.மாவட்டம் சார்பாக மாதவரத்தில் பட்டினிப்போராட்டம்.

07/11/2013 அன்று நாம் தமிழர் கட்சி வால்பாறை சார்பில் ஆர்ப்பாட்டம்.

08/11/13 அன்று பாலமேட்டில் உள்ள தபால் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்.

07/11/2013 அன்று திருநெல்வேலி மே.மா சார்பாக சங்கரன் கோவில் ரயில் மறியல் போராட்டம்/கைது.

07/11/2013 அன்று திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக பெருங்குடியில் ஆர்பாட்டம்/கைது.

07/11/2013 அன்று மயிலாடுதுறையில் தொடர் வண்டி மறியல் போராட்டம்/கைது.

06/11/2013 அன்று கோவையில் தொடர்வண்டியை மறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று மதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில் யானைமலையின் உச்சியில் போராட்டம்.

05/11/2013 அன்று நீலமலையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகைப் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.

05/11/2013 அன்று புதுச்சேரியில் அண்ணன் சீமான் தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம்.

04/11/2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக போராட்டம்.

01/11/2013 அன்று சிவகங்கையில் சாகும் வரை பட்டினி போராட்டம் தொடக்கம்.

01/11/2013 அன்று வேலூர் மாவட்டம் சார்பாக தபால் நிலைய பூட்டு போடும் போராட்டம்/கைது.

29/10/2013 அன்று ஆற்காடு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/கைது.

29/10/2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் விழிப்புணர்வு நடைபயணம்.

27/10/2013 அன்று கோவை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

26/10/2013 அன்று விழுப்புரத்தில் உண்ணாநிலை போராட்டம்

25/10/2013 அன்று சென்னை திருவான்மியூரில் பெருந்திரள் கண்டன பொதுக்கூட்டம்..

22/10/2013 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில்மத்திய அரசு அலுவல முற்றுகை போராட்டம்/கைது.

21/10/2013 அன்று மதுரை மாவட்டம் சார்பில் பாஸ்போர்ட் அழுவலகம் முற்றுகை/கைது.

20/10/2013 அன்று கூடலூரில் நீலமலை மாவட்டம் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதம்.

20/10/2013 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கண்டன ஆர்ப்பாட்டம்..

19/10/2013 அன்று நெல்லை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

18/10/2013 அன்று திருப்பூர் முழு கடை அடைப்பு போராட்டத்தில் பங்கெடுப்பு.

17/10/2013 அன்று கும்பகோணத்தில் தெருமுனை பிரச்சாரம்..

16/10/2013 அன்று கோவை மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசு அலுவுலக முற்றுகை/கைது.

15/10/2013 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

15/10/2013 அன்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பட்டினி போராட்டம்.

08/10/2013 அன்று கோவையில் மாணவர் பாசறை சார்பில் உண்ணாவிரதம்.

# போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி..

 

1461703_661997953839817_925601209_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

நாளை காலை (12-11-2013) 10 மணி அளவில் திருவான்மியூர் தொடர் வண்டி நிலையத்தில் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பாக யாரும் கலந்து கொள்ள கூடாது என்றும் காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் மாபெரும் தொடர் வண்டி மறியல் போராட்டம் வாருங்கள் தமிழர்களே ...........

 

நாம் தமிழர் கட்சி

தென் சென்னை கிழக்கு மாவட்டம்

 

(facebook)


"பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!
பொதுநலவாய மாநாட்டை இந்தியாவே புறக்கணி !
பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கு !
தமிழர் தாய்நிலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து !
இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்து !
அதுவரைக்கும் இலங்கை மீது பொருளாதாரத் தடை போடு!!"

என்று கோரிக்கைகளை முன்னெடுத்து நாளை காலை 10 மணிக்கு திருப்பூர் நாம் தமிழர் கட்சி தொடர்வண்டி மறியல் செய்கிறது..... தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் நாளை காலை 10 மணிக்கு திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு கூடவும்.....

 

(facebook)


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

"தனி ஈழம் அமையாவிட்டால் தனி தமிழ்நாடு உருவாகும்" என்ற கோரிக்கை முழக்கத்தோடு அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் கருமத்தம்பட்டி (கோவை) யில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

 

1457743_545278485555504_229355123_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

1459233_469763573139961_2898881_n.jpg

 

(facebook)


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காமன் வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாதென வலியுறுத்தி திருச்சி,கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் 50பேர் கைது.....

 

(facebok)

Link to comment
Share on other sites

07.11.2013

நாம் தமிழர் கட்சி சார்பாக இடம்பெற்ற தென்காசி அஞ்சல் அலுவலக முற்றுகை போராட்டம்...

 

999115_10200941178925479_66888058_n.jpg

 

1380304_10200941179085483_164515666_n.jp

 

(facebook)

Link to comment
Share on other sites

07.11.2013

பொதுநல அமைப்பிலிருந்து சிங்கள பேரினவாத இலங்கையை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

பொதுநல வய மாநாட்டை சிங்கள பேரினவாத இலங்கையில் நடத்த கூடாது.

பொதுநல வய மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாது என வலியுறுத்தியும் தமிழர்கள் விரோத இந்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்தில் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டம். போராட்டத்தில் கலந்து கொண்ட 100 நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.

 

1385437_660567137316232_1612841202_n.jpg

 

1461200_660567197316226_1035386123_n.jpg

 

1422572_660567207316225_1683607139_n.jpg

 

1450112_660567233982889_1569566897_n.jpg

 

1454994_660567277316218_1788118990_n.jpg

 

1003948_660567307316215_641520568_n.jpg

 

994058_660567373982875_350485759_n.jpg

 

1395968_660567427316203_1913702060_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா கலந்துகொள்வதா? புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.

 

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்  நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையை காமன்வெல்த்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி புதுவை சிங்காரவேலர் திடலில் பொதுகூட்டம் நடந்தது. முன்னதாக முத்தியால்பேட்டையில் இருந்து சிங்காரவேலர் திடலை நோக்கி நாம் தமிழர் கட்சியினர் எழுச்சி பேரணி நடைபெற்றது.  நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகளும்,புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் சார்ந்த நாம் தமிழர் கட்சியினரும் பொது மக்களும் திரளாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:–

மனித உரிமை, பண்பாடு, கலை, சட்டம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படுகிறது. இவை எதுவும் இல்லாத இலங்கையில் எதற்கு காமன்வெல்த் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் இனவெறி போராட்டம் நடந்தது. அதற்காக அந்த நாடு காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதற்காக பாகிஸ்தான் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இலங்கையில் 1½ ஆண்டுகளில் 1ž லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் நடைபெற்றது போர்குற்றம் அல்ல. அந்த போரே குற்றம். எனவே இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.

தங்கை இசைப் பிரியாவை போல ஆயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்த பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இன்று தமிழன் அனாதையாக நிற்கிறான்.

இலங்கை ராணுவத்தால் 520 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய அரசோ இலங்கை கடற்படைக்கு 2 போர்கப்பல் பரிசாக வழங்குகிறது. இது எந்த வகையில் நியாயம்?

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால் ராஜபக்சே அதன் செயல் தலைவராக 2 ஆண்டுகள் இருப்பார். இதன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து தப்பி விடுவார். ராஜபக்சேவின் குற்றங்களை மறைக்க இந்த மாநாடு நடக்கிறது.

மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. இது தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அரசு முடிவு எடுக்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

தமிழர்களின் உணர்வை மதிக்காமல் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் பாராளுமன்ற தேர்தலில் சரியாக பாடம் புகட்டுவோம். மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு சீமான் பேசினார்.

 

14.jpg

 

17.jpg

 

16.jpg

 

10.jpg

 

8.jpg

 

4.jpg

 

6.jpg

 

1-2.jpg

 

http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்

08.11.2013

 

திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில்  தொடர்வண்டி மறியல் (7.11.13)  போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. போராட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர்.

 

தாண்டாவாளத்தில் இறங்க கூடாது என்று சங்கரன் கோவில் ஆய்வாளர் அறிவுறுத்தியதை அடுத்து சங்கரன் கோவில் ஒருங்கிணைப்பாளர் திரு.அ.கோ.தங்கவேல் தலைமையில் திரண்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்திற்கு செல்லும் முன் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்பு தொடர்வண்டி நிலைய நடை மேடைக்கு சென்ற நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும், மாநாடு நடந்தால் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் கோசங்களை எழுப்பினர். தொடர்வண்டி வரும் வரை ஆர்ப்பட்டம் தொடர்ந்தது.

 

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், இலங்கையில் காமன்வெல்த மாநாடு நடக்க கூடாதென்றும், இலங்கையை காமன்வெல்த அமைப்பிலிருந்து நீக்க வேண்டுமென்றும், இலங்கையில் காமன்வெல்த  மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறுத்தினர். இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு மத்திய அரசு துணைபோகியிருப்பதால், இலங்கையை எதிர்பதற்கு இந்தயா பயப்படுகிறதென்றும், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால் ராஜபக்சே அதற்கு தலைவராகிவிடுவார். தலைவராக இருக்கின்ற காலம் வரை அவரை எந்தவொரு குற்றவழக்கிலும் கைது செய்ய முடியாது என்ற உள்நோக்கத்தை கவனத்தில் வைத்து இந்தியா செயல்பட்டு வருவதாக கடுமையாக குற்றம்சாட்டினர்.    தொடர்வண்டி வந்தவுடன் பயணிகளோடு நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி தோழர்கள் தொடர்வண்டி மீது ஏறி வண்டியை முற்றுகையிட்டனர். அனைவரையும் கைது செய்த காவல்துறை மாலை ஆறு மணிக்கு விடுவித்தது.

 

IMG_20131107_125225.jpg

 

IMG_20131107_130103.jpg

 

IMG_20131107_130053.jpg

 

IMG_20131107_124824.jpg

 

IMG_20131107_124011.jpg

 

http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5


காமென்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க கோரியும், காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறித்தி. 08/11/13 காலை 10 மணியளவில் மதுரை நாம் தமிழர் கட்சி அலங்காநல்லூர், பாலமேடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு .பாக்கியராசு தலைமையில், புறநகர் மாவட்ட இணை செயலாளர் திரு.செந்தில் முன்னிலையிலும் நாற்ப்பதற்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கேற்ற பாலமேட்டில் உள்ள தபால் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

செ.அசோக்,
செய்தி பிரிவு மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி,
தொடர்புக்கு:9095531064

 

1003853_535333946560450_773870036_n.jpg

 

(facebook)


நாம் தமிழர் மதுரை விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு
2013/11/08

 

நாம் தமிழர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், அங்கே நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி பெருங்குடியில் விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு 35 பேர் கைது .

 

Photo0124.jpg

 

Photo0312.jpg

 

Photo0320.jpg

 

Photo0312.jpg

 

Photo0302.jpg

 

http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8

Link to comment
Share on other sites

09/11/2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு.. நாம் தமிழர் தம்பிகள் கைது..

 

1456561_661797170526562_1962445934_n.jpg

 

10/11/2013 அன்று நாகப்பட்டிணம் மாவட்டம் சார்பாக இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த கூடாது இந்தியா கலந்துகொள்ள கூடாது என்று வலியுறுத்தி ரயில் மறியல்.. கைது செய்யப்பட்ட நாம் தமிழர் உறவுகள் மண்டபத்தில் அடைக்கப்ட்டிருக்கிரார்கள்

 

1459721_661798510526428_1359266265_n.jpg

 

1470171_661802443859368_1935243629_n.jpg

 

இலங்கை யை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி ...நீலமலை நாம்தமிழர் தமிழக எல்லை யில் மாபெரும் முற்றுகைப்போர் ...கைது

 

1466299_661803263859286_106725175_n.jpg

 

1456490_661803333859279_1082074898_n.jpg

 

1458551_661803363859276_1830011207_n.jpg

 

1453470_661803423859270_494442741_n.jpg

 

(facebook)


மதுரை வழக்கறிஞர்கள் நடத்திய அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்ற செந்தமிழன் சீமான்..

 

http://www.youtube.com/watch?v=2ej02Kd5HJs&feature=youtu.be

 

(facebook)

Link to comment
Share on other sites

எம் இரத்ததை குடித்த நாட்டில் காமென்வெல்த் மாநாடா... இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டை எதிர்த்து நாளை நடைபெறும் 12/11/13 கடையடைப்பு மற்றும் பொதுவேலை நிறுத்தம் நிகழ்வுக்கு மக்களிடமும்,வியாபார நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்க துண்டுப்பிரசுரம் நாம் தமிழர் கட்சியின் திருவள்ளுர் நடுவண் மாவட்டம் சார்பாக விநியோகம் செய்யப்படுகிறது..... எம் அன்பு உறவுகளே தயவுசெய்து நாளை நடைபெறும் போராட்ட களத்தில் அனைவரும் களமாடுங்கள் ..... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை....

 

1470152_486348978145858_492400464_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இனக்கொலை இலங்கையில் நடங்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு முழுவதுமாக புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை டி.எல்.எப்ஃ கட்டிடம் முன்பு ஐ.டி. துறையினர் 100 பேர் பங்கெடுத்த மனிதச் சங்கிலிப் போராட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

 

14171_10152053634870992_1548107115_n.jpg

 

1451570_10152053636520992_883723954_n.jp

 

1391896_10152053637555992_495664907_n.jp

 

946047_10152053638320992_1068050483_n.jp

 

1456789_10152053639145992_1027968497_n.j

 

1452531_10152053640700992_383486802_n.jp

 

548480_10152053641590992_1812871704_n.jp

 

1451539_10152053642635992_2112783473_n.j

 

1461529_10152053643380992_452028688_n.jp

 

1394411_10152053644240992_547773329_n.jp

 

1380373_10152053645245992_2101137888_n.j

 

1471163_10152053646595992_211774842_n.jp

 

1458539_10152053648130992_1548193801_n.j

 

7637_10152053651715992_1459444425_n.jpg

 

1452124_10152053663670992_60394058_n.jpg

 

1466172_10152053664400992_532867357_n.jp

 

1395793_10152053669165992_85990233_n.jpg

 

1471798_10152053677365992_656716057_n.jp

 

(facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2020   எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் கற்பனைகளை வரலாறாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இரவலாக அல்லது கடனாகப் பெற்ற பெயரே. உண்மையான ரெலோவின் தலைவரின் பெயர் தம்பித்துரை முத்துக்குமாரசாமி. இவர்  , திருநெல்வேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தற்போது இவர் உயிருடன்தான் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறார் . ஆயுதப் போராட்டம் என்றால் அதன் வரலாறு கிழக்கு மாகாணத்தில் இருந்தே வெளிப்பட்டது. 1958 இல் குடியேற்றவாசிகளான சிங்களவர்களுக்குச் சார்பாக தமிழர் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினர் வந்தனர். இவர்களை ஷொட்கன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியதுடன் அவர்கள் வந்த ஜீப்பையும் எரித்தனர் துறைநீலாவனை இன உணர்வாளர்கள். இவ்வாறு விரட்டியேரில் ஒருவரான கனகசூரியம் என்பவரும் அவரது துணைவியாரும் பின்னர் கல்முனை பட்டின சபையாக விளங்கியபோது அதன் உறுப்பினர்களாக விளங்கினர். இவர்களது மகன்தான் அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி. எம்.ஜீ.ஆரை மட்டந்தட்ட கருணாநிதி பயன்படுத்துவது அவர் மலையாளி என்று. அதனால்தான் பாதிக்கப்படும் தமிழர் தொடர்பாக எம்.ஜீ.ஆர். அக்கறை காட்டுவதில்லை என்ற சாரப்படப் பேசி வந்தார். பொறுமை இழந்த எம்.ஜீ.ஆர். ஒரு கட்டத்தில் ‘குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்தானே கருணாநிதி”, என்றார். இந்தப் பீரங்கித் தாக்குதலில் நிலைகுலைந்து விட்டார் கருணாநிதி. எப்படியோ ஓடித் திரிந்து குட்டிமணி குழுவில் எஞ்சியோரில் சிறீசபாரத்தினத்தைத் தொடர்பு கொண்டனர் தி.மு.கவினர். ‘குட்டிமணி தீவிரவாதி என்ற விடயம் கருணாநிதிக்குத் தெரியாது. வேறு வழக்கு விடயமாகக் கைதாகியிருந்தவர் என்ற அடிப்படையில்தான் இலங்கையிடம் அவரை ஒப்படைத்தார் அப்போதைய முதல்வர்” என்று ஓர் அறிக்கை விடுத்தார். அப்போதுதான் தன்னை செயலதிபர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிறீசபாரத்தினம். அந்த அறிக்கையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் வெளியுலகுக்குத் தெரிந்தது. இந்த அறிக்கைக்கு முன்னதாக பந்தண்ணா என்றழைக்கப்படும் ராசப்பிள்ளையே இதனை வழிநடத்தி வந்தார். இதற்கு முன்னதாக இக்குழு இயங்கிய விதம் குறித்து ஐயர் தனது புத்தகத்தின்33,34 ஆம் பக்கங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கதுரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அவர்கள் அப்போது ரெலோ (TELO) என்ற அமைப்பை உருவாக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர். பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பில் இருந்த எவருமே அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம். தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாக கடத்தல் தொழிலையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவும் மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல் நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கினோம்.” இதே பெருந்தன்மை குட்டிமணி அண்ணா, தங்கண்ணா ஆகியோரிடமும் இருந்தது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரி இலச்சினையுடனான அறிக்கையை ஊடகங்களுக்கு (வீரகேசரி உட்பட) வெளியிட்டனர் புலிகள். இதில் மொத்தம் 11 பேரின் மீதான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஆறாவது பெயரான தங்கராசா (முன்னாள் எம்.பி. அருளம்பலத்தின் செயலாளர்) மீதான நடவடிக்கையை குட்டிமணி குழுவினரே மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு ஒரு அறிக்கையை தாங்கள் வெளியிடப் போவதாகவும் எனவே தங்கராஜாவின் சம்பவம் குறித்து என்ன செய்வது என குட்டிமணி, தங்கத்துரையிடம் கேட்டபோது,’ நாங்கள் உங்களைப் போல கட்டுப்பாடாக இருப்பது சிரமம். எங்களின் தொழிலுடன் (கடத்தல்) உணர்வு ரீதியாக செய்யக்கூடியவற்றையே செய்யப் போகிறோம். எனவே அதனையும் புலிகளின் பேரிலேயே உரிமை கோருங்கள்”, எனக் குறிப்பிட்டதாக ஒரு சந்திப்பில் இளங்குமரன் தெரிவித்தார். இதனையே ஐயரும் தனது நூலில், ‘தங்கராஜா கொலை முயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட குட்டிமணி, தங்கதுரை சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபரத்தை மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகள் பெயரிலேயே உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராசாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.” (பக். 117) எனக் குறிப்பிடுகிறார். http://www.ilakku.org/wp-content/uploads/2020/02/WhatsApp-Image-2020-02-22-at-08.57.07.jpeg   புலிகள் – குட்டிமணி குழு ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட’துரோகத்துக்குப் பரிசு” (சுந்தரம் மீதான சாவொறுப்புக் காரணங்கள்)நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு (கிருஷ்ணா வைகுந்தவாசனின் 1982 தைப்பொங்கலன்று தமிழீழப் பிரகடனத்துக்கு எதிரான நிலைப்பாடு) என்ற தலைப்பிலான பிரசுரங்களும் புலிகளின் இலச்சினையுடனேயே வெளியிடப்பட்டன. சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் விளைவால் இனி தனித்தனியாக இயங்குவோம் எனப் பிரபாகரன் முடிவெடுத்தபோது இரு பகுதியினரும் இணைந்து மேற்கொண்ட நீர்வேலி மக்கள் வங்கி வாகனத் தொடரணியை மறித்துக் கையகப்படுத்திய பணத்தின் மீதியையும், வாங்கிய ஆயுதங்களையும் இவர்களிடம் ஒப்படைத்தார். இம்முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த சீலனிடம்,’எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இதைப் போல பல விடயங்களை உங்களால் செய்ய முடியும். குட்டிமணி அண்ணா, தங்கண்ணா இல்லாத நிலையில் அவர்களால் இது போன்ற ஒன்றைச் செய்வது சாத்தியமற்றது”, எனக் கூறினார். ஏற்கெனவே தங்கண்ணா, குட்டிமணி அண்ணா முதலானோரை தற்கொலைத் தாக்குதல் மூலமேனும் விடுவிப்போம் என்று தான் சொன்ன கருத்துத் தொடர்பாக மௌனமாக இருந்தவர்களிடம் ‘நாங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக நீங்கள் ஏதாவது முயற்சி மேற்கொண்டால் எமது உச்சக்கட்டப் பங்களிப்பை வழங்குவோம்”, எனத் தெரிவித்திருந்தார் பிரபாகரன். இதெல்லாம் நடந்தது இந்தியாவில். அப்போது செல்வம் இலங்கையில் இருந்தார். (அன்று அக்குழுவில் இருந்தவர்களில் இவர் மட்டுமே நாட்டில் எஞ்சியிருக்கிறார்.) 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் உருவானது. தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாகக் காரணமானது. தரப்படுத்தல் சட்டம் மாணவர்களுக்கு பாதகமாகக் கொண்டு வரப்பட்டபோது இந்தக் கருத்து வலுவானது. வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் ‘எண்ணிக்கை தெரியாத குற்றம்”, என்றொரு வசனத்தை சிவாஜி பேசுவார். அதுதான் செல்வத்தின் நிலையும். 1969 இல் ரெலோ உருவானதாக சொல்கிறார். பொதுவாழ்வில் ஈடுபடுவது என்பது சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. இதன் அடுத்த கட்டம் தமிழீழக் கோரிக்கை முன்வைத்த பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. வரலாற்றைத் தவறாகப் பதியக்கூடாது. ஒரு சட்டவிரோத கடத்தல் தொழில் செய்பவர்களுக்கும் பொலிஸ_க்கும் இடையே முரண்பாடு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். அதனை விடுதலைப் போராட்ட நடவடிக்கை என நிறுவ முற்படுவது வரலாற்றுத் தவறு. அடுத்த தேர்தலிலும் தனது எம்.பி. பதவியை உறுதிப்படுத்தவே 50 வருடக் கதை விடுகிறார் செல்வம். அப்போது இவருக்கு என்ன வயதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் தெரிவாவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கட்சியில் முதலாவது எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வம் அந்த நிலையை இழந்து விட்டார். எம்.பி. பதவியையேனும் தக்கவைக்கவே இந்த வரலாற்றுப் புரட்டு. மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழரின் எதிர்ப்பு ஆயுத முனையில் முதலில் புரிய வைக்கப்பட்டது துறைநீலாவணையில். பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டமாக ஆயுதவழியில் ஆரம்பித்தது 1972 இல். அது சரி மாவைக்குமா வரலாறு தெரியாது? காசி ஆனந்தனின் ‘அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்” என்ற பாடல் ஒலிக்கும்போது யார் யாருக்கு பிரபாகரன் சுட்டுக் காட்டினார் என்று சுட்டிக் காட்ட வேண்டுமா? ஐயரின் நூலில் 56 ஆம் பக்கத்தில் ‘சேனாதிராசா, காசி ஆனந்தன், பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மெரீனா பீச்சில் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கும்போது ரெலோவின் பொன்விழகுறித்த அழைப்பு விடுக்கும்போது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாக இருந்தது ஏன்? சுதுமலை முற்றுகையின்போது கிட்டு உட்பட புலிகளுக்கு இழப்பு நேராமல் முற்றுகையை முறியடித்தது தானே என்று (இச்சமரில் மேஜர் அல்பேட் வீரச்சாவு) கதை விட்ட ஜனா இப்போதும் 50 வருடக் கதை சொல்கிறார். உண்மை இப்படி இருக்கப் புதிய வரலாற்றுப் புனை கதைகளைக் கூற செல்வம், ஜனா, போன்றோர் முற்படுகின்றனர்.வரலாற்றை மறந்தவர்களுக்கு வரலாற்றில் இடமில்லாமல் போகலாம். வல்வெட்டித்துறைக்கெனத் தனியான வரலாறு உண்டு. பெருமைக்குரிய விடயங்களில் தலையானது பிரபாகரன் பிறந்த மண் என்பது. அன்னபூரணி என்ற பாய்மரக் கப்பலினை அமெரிக்காவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையே ஓட்டிச் சென்ற கடலோடிகளைக் கொண்டது. இராட்சதப் புகைக்கூண்டுகளை இலங்கை மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தக் கடலோடிகள், பர்மாவுக்கான வணிகப் பயணத்தின்போது பறந்து சென்ற புகைக்கூண்டு ஒன்று இந்தப் பாய் மரக் கப்பலுக்கு அகே வந்தபோது அதனை எட்டிப் பிடித்து அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து இலங்கை மண்ணில் இதனை உருவாக்கினர். பட்டத் திருவிழா வல்வையின் தனித்துவம், யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற இராசலட்சுமி என்ற துணிச்சல்காரி பிறந்த மண். புலிக்குப் பிறந்தது பூனையாகாது எனக் களமுனையில் நிரூபித்தவர் இவரது மகன் கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார். முன்னுக்குப் போ என்ற வார்த்தையை விட எனக்குப் பின்னே வா என்றே போராளிகளை வழிநடத்திய தளபதி இவர். போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரது படை நடத்தும் ஆற்றலையும் துணிச்சலையும் வான் வழியாக சுதுமலையில் களமிறங்கிய சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரின் முற்றுகையை முறியடித்த விதத்தை நேரடியாகக் கண்டு வியப்புற்றனர். இதன் பின்னர் சுதுமலை முகாமை விட்டுப் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, ‘போராளிகளே உங்களது ஆற்றலை, அர்ப்பணிப்பை, வீரத்தை நேரடியாகப் பார்த்தோம். தயவு செய்து எங்கள் ஊரை விட்டுப் போய்விடாதீர்கள்”, எனத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இத்தகைய வரலாறு தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் உதித்த 36 இயக்கங்களுள் வேறு எவற்றுக்கும் இல்லை. அத்தகைய தளபதி தனது சாவின் போதும் சரித்திரம் படைத்தான். இத்தகைய பெருமைகள் கொண்ட வல்வெட்டித்துறையின் சாதனைப் பட்டியல் மிக நீண்டது. உபசரிப்பிலும் இந்த மக்கள் தனித்துவமானவர்கள். போராளிகளோ மற்ற எவரோ சாப்பாட்டுக்காகக் காத்திருக்கையில் பார்சலிலோ, கிண்ணத்திலோ கறி வரும். இங்கோ தூக்கு வாளியில் கொண்டு வந்து தமது அன்பை வெளிப்படுத்துவர். இத்தகைய ஊருக்குப் பலம் சேர்க்கிறோம் என்றெண்ணி கற்பனைகளை வரலாறாக்கவோ, அதற்குத் துணை போகவோ தேவையில்லை. இன்று ச.ச.முத்து என்பவர் மூத்தபோராளி என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் சக்கைப் போடுபோட்டு வருகிறார். 1980 இற்குப் பின் இயக்கத்துடன் தொடர்பு வைத்த – இணைந்து கொண்ட எவருக்குமே இந்த முகம் பரிச்சயமற்றது. தான் மட்டுமே தலைவர் மீது விசுவாசம் கொண்டவராக நடிக்கும் நடிப்புக்கு சிவாஜி, கமல் போன்றோரெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ‘ஒரு விளக்குக் கொழுத்த ஆசைப்படுகிறார்கள்”, என்று தலைவரின் இழப்பை ஒத்துக்கொள்வோரைச் சாடுகிறார். 1979 இல் சுமார் இரு வார காலம் வீரவாகு என்ற பெயரில் விபத்தாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்தான் இந்த ச.ச.முத்து. இவர் குறித்து ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்” என்ற தலைப்பில் கணேசன் (ஐயர்) எழுதிய நூலில் பின்வருமாறு காணப்படுகின்றது. சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கற்றுக் கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர். இது தெரிய வரவே குமரப்பா, மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்பு கொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கோருகின்றனர். வீரவாகும் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்குச் சென்ற அவர் பொலிஸில் சரணடைந்து விடுகிறார்.”இத்தகைய வரலாற்றைக் கொண்ட ச.ச.முத்து பிரான்ஸில் இருந்து வெளிவரும் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார். எங்கள் மண்ணின் வரலாற்றை நா.யோகேந்திரநாதன், சாந்திநேசக்கரம் போன்றோர் தத்ரூபமாக எழுதினாலும் இவர்கள் என்றும் போராளிகளாக இருந்ததில்லை. போராளி என்று பொதுவெளியில் சொல்லிக் கொண்டதுமில்லை. அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்கவும் அனுமதித்ததில்லை. 2016 மாவீரர் நாளன்று பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக வெளிவந்த குறிப்பில் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்தவரும் – சமர்களப் போராளியும் – பெருந் தளபதிகளின் நண்பரும் – தேசியத் தலைவருடன் ஆரம்ப காலத்திலிருந்து செயற்பட்டவரும் – வரலாற்று ஆய்வாளருமான ச.ச. முத்து அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களினதும் மாவீரர்களினதும் ஒப்பற்ற தியாகங்களை நினவு கூர்ந்ததுடன் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டு நூல் வடிவில் ஆவணமாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐயரின் குறிப்பை வாசித்தபின் சமர்க்களப் போராளி என்று குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரளி என்பது புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடம் ஒரு பத்திரிகையாளர், இயக்கத்தில் வல்வெட்டித்துறையின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டார். அதற்குக் கிட்டு, ‘புலிகள் ஒரு தலைமறைவு இயக்கம். இதற்கு இரகசியம் பேணப்பட வேண்டும். அதனைத் தலைவர் ஆரம்பிக்கும்போது தனது பாடசாலை சகாக்கள், நண்பர்கள் போல நம்பிக்கைக்குரியவர்களை இணைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அந்த வகையில்தான் மாத்தையா, குமரப்பா, ரகு, பண்டிதர், சங்கர் போன்றோர் படிப்படியாக அவருடன் இணைந்து கொண்டோம். இன்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் உருவாகி வருகின்றனர். உதாரணத்திற்கு மன்னாரில் விக்ரர், இனி மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களைச் சேர்ந்தோர் பொறுப்பெடுப்பர். வன்னியிலும் மாத்தையா இனங்காணப்பட்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.” எனக் கூறினார். இதுதான் யதார்த்தம். கிட்டு குறிப்பிட்டவாறே வரலாறும் நடந்தது. இந்த விடயத்தில் இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட வேண்டும். 1983 ஏப்ரல் 07 அன்று கந்தர்மடம் வாக்குச் சாவடியில் நிகழ்ந்த தாக்குதலில் முதன்முறையாக ரி-56 ஆயுதம் கைப்பற்றப்பட்டது. கொக்குவிலில் புலிகள் இருந்த அறையொன்றுக்குள் இது கொண்டுவரப்பட்டது. பொன்னம்மான் அதனை தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு சில நிமிடம் நடனமாடினார். அடுத்தடுத்த நாட்களில் இன்னொரு தாக்குதலை விரைவாக நடத்த வேண்டும் என தலைவரிடம் வலியுறுத்தினர் சில போராளிகள், ‘நான் இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் இந்தப் போராட்டத்தில் எத்தனையோ பேர் வந்து போய்விட்டார்கள். எனக்கு மிஞ்சி இருப்பது இந்த 30 பேரும்தான். ஆகவே அவசரப்படாமல் நிதானமாக நாங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார். வந்து போனவர்களின் முகங்களில் எது எது அவரது ஞாபகத்துக்கு வந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. 1983 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு பற்றியும் குறிப்பிட வேண்டும். பல்வேறு தொடர்புகள் மூலம் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள லொட்ஜ்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் இரு இளைஞர்களுக்கிடையே சிறு முரண்பாடு. அதில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் மற்றவரிடம், ‘றெயினிங் முடிச்சு வல்வெட்டித்துறைக்குள்ளாலதானை போவாய். அப்ப பார்த்துக் கொள்ளுறன்”, என்றார் மற்றவரிடம். இந்த விடயம் தலைவருக்குத் தெரிய வந்ததும் ‘அவரை அடுத்த வண்டியிலேயே (படகு) ஊருக்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறான சிந்தனையுள்ளவர்கள் இயக்கத்துக்குச் சரிவர மாட்டார்கள்”, என உத்தரவிட்டார். இவ்வாறு சொன்ன இளைஞனுக்கு 18 அல்லது 19 வயதுதான் இருக்கலாம், அவன் செய்த தவறுக்காக மட்டுமல்ல ; இயக்கத்தில் இனி எவருக்குமே இந்த மாதிரிச் சிந்தனைகள் வரக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ’30 பேர் கொண்ட இயக்கமாக இருந்த புலிகள் இயக்கம் சீலன், ஆனந்த், செல்லக்கிளி அம்மான், என மூவரை இழந்து நிற்கிறது. இந்திய அரசு 200 பேருக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது. ஆனால், 250 பேரளவில் இப்போது வந்துவிட்டார்கள். திடீரெனப் பருத்து விட்டோம். இனித்தான் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதில் சவாலை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒரே காலகட்டத்தவர் என்றவகையில் இந்தச் சவால் சாமானியமானதல்ல” என்று பண்டிதரும் குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது விடயம் புலேந்திரன் – குமரப்பா தொடர்பானது. 1983 என்றொரு எல்லையை (திருநெல்வேலித் தாக்குதல்) தலைவர் கணிப்பிட்டிருந்தார். உண்மையில் குமரப்பா இயக்கத்தில் பிரிவு ஏற்படுவதற்கு முன்னரே அங்கம் வகித்திருந்தார். (அதிலும், புலேந்திரன் இயக்கத்துக்கு வருவதற்கு முன்னரே.) இருவருமே மாவட்டத் தளபதிகளாக விளங்கியவர்கள். எனினும் இயக்கத்தில் பிரிவு ஏற்பட்டபோது குமரப்பா, காந்தன், சாள்ஸ் போன்றோர் விலகியிருந்தனர். இவர்கள் திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர். செல்லக்கிளி அம்மான், யோகன் பாதர் போன்றோர் திருநெல்வேலித் தாக்குதலுக்கு முன்பாகவே மீண்டும் இணைந்து கொண்டனர். புலேந்திரன் மத்தியகுழு உறுப்பினர் என்று அறிவிக்கப்பட்டாலும் குமரப்பாவுக்கு இந்த நிலை வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் தலைவனாகத்தான் பிரபாகரன் நடந்து கொண்டார். தான் வகுத்த விதியை அவர் மீறவில்லை. இந்த விடயத்தைத் தேவர் அண்ணா போன்றோர் புரிந்து கொள்ளாமல் ச.ச. முத்து தொடர்பான விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்கினால் வரலாற்றைத் திரிக்க முயல்வது கவலைக்குரியது. தேங்காய், மாங்காய் வியாபாரிகள் என்ற சாக்கில் வீடெடுத்தார்கள் அப்பையா அண்ணன், சீலன் என்று கதை விடுவதும் ச.ச.முத்துவின் அழகான கற்பனை. திருநெல்வேலி தாக்குதலுக்கு முன்பாக தலைவர் சொன்னதாகவே சில விடயங்களைக் குறிப்பிட்டு தான் அந்தக் காலத்தில் இருந்ததாக நிறுவ முயல்வதும் மோசடியானது. இவற்றுக்கெல்லாம் 800 – 900 என்று Like வேறு. வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு பரவலாக்கப்படுகின்றது என்று தெரிந்தும் ஊரவன் என்ற ஒன்றுக்காக மோசடிக்கு துணைபோவது சரியானதல்ல. தேசத்தின் பாலம்”, என்ற அமைப்பு போராட்டத்தின் பங்காளர்களாக விளங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகிறது. குறிப்பாக மூதூர் மற்றும் வாகரைப் பகுதிகளில் கல்வியைத் தொடரச் சிரமப்படும் பொருளாதார நெருக்கடியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன், விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டக்களப்பு நகர் போன்ற இடங்களிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்தல், தேவையான குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைத்தல் போன்ற பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதனை ஒருங்கிணைத்துச் செயற்படுத்துபவர் முன்னாள் போராளியான லூக்காஸ் அம்மான். அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பா.நடேசனின் சகோதரர் இவர். தான் பிறந்த வல்வை மண்ணுக்கும் உதவத் தவறுவதில்லை இவர். 2002 இல் தலைவரைச் சந்தித்தபோது போராட்டத்திலிருந்து விலகிய உங்களைப் போன்றோர் பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு இம்மாதிரி உதவலாமே என அறிவுறுத்தியதுடன் உதவி தேவைப்படுவோர் பட்டியலையும் இவரிடம் வழங்கியுள்ளார். வரலாற்றைத் திரிபுபடுத்துபவர்கள் லூக்காஸ் அம்மானைப் பின்பற்றி உருப்படியாக பணியாற்றுவதுதானே வல்வை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். நன்றி – ஈழநாடு   https://www.ilakku.org/வரலாற்றை-திரிபுபடுத்துவ/
    • ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை)   விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டார். குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச்சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வட மாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிகேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது. 35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கம் மாஸ்டருக்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என சிறிதுகால தடுப்பின் பின் விடுதலையானார். முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா - யாழ்ப்பாணம்)   இறுதிப் போரில் இவரது மகள் சங்கீதா (அறிவிழி) 26.04.2009 அன்று வீரச்சாவெய்தியிருந்தார். முன்னதாக இவரது மகன் சங்கர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். (07.04.2009) இவரது சிற்றன்னை திருமதி மோட்சானந்தம் முத்துக்குமார் 10.02.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். சகோதரி முறையான கோமளா, அவரது கணவர் இராசையா தனபாலசிங்கம், மகன் பாஸ்கர் (இரு பிள்ளைகளின் தந்தை) ஆகியோர் 31.03.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். விடுதலை புலிகள் அமைப்பில் பொட்டுஅம்மானை இணைத்தவர்.1986 முதல் ஊடகவியலாளராகவும் இனங்காணப்பட்டிருந்தார். ஈழமுரசில் அரசியற் தொடரான 'குத்துக்கரணங்கள்' மாவீரரின் புகழை போராளிகளின் எண்ணத்தில் எடுத்தியம்பிய 'ஒரு போராளியின் நாட் குறிப்பிலிருந்து' என்ற தலைப்புகளில் எழுதியவர். 1990 இல் மட்டக்களப்புக்கு நடந்துபோனபோது அவதானித்து, உணர்ந்த விடயங்களை 'உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்' மற்றும் 'சிறைப்படாத சிந்தனைகள்' தொடர், மாவீரர் புகழை எடுத்தியம்பும் 'விழுதுகள்' ஆனையிறவு மீட்பு உட்பட ஓயாத அலைகள் - 3 சமர்க்களம் தொடர்பான விடயங்களை நேரில் கண்டு விபரிக்கும் தொடர் 'மீண்டும் யாழ். மண்ணில் கால் பதித்த எம் தடங்கள்' என்பனவற்றை ஈழநாதத்தில் எழுதியவர். இறுதிப் போரின் பின்னர் பூசா முதல் யாழ்ப்பாணம் வரை சுமார் 10 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் இவருக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்பின் பின் விடுதலையானவர். https://www.pathivu.com/2018/05/blog-post_288.html -----------------------------------------------------------------------------------------------------------     யோகன் எ பாதர் (பாலிப்போடி சின்னத்துரை) தந்தை செல்வா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்த வரலாறு பாசி என்று தமிழ் இளைஞர் பேரவை காலத்திலும் பின்னர் யோகன் பாதர் என ஆயுதப்போராட்டத்திலும் அழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரைக்கு உண்டு. தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த காலத்தில் காசி ஆனந்தன் அண்ணாவின் சகோதரன் சிவஜெயம் (பின்னாளில் மேஜர் சந்திரன்) கிராமம் கிராமமாக துவிச்சக்கர வண்டிகளில் சென்று தமிழ்த் தேசியத்துக்காக கடுமையாக உழைத்தவர். இவர் வடக்கிலும் சகல மாவட்டங்களுக்கும் காசி ஆனந்தன் அண்ணாவுடன் சேர்ந்து விடுதலைப் பணியாற்றியவர். தந்தை செல்வா மட்டுமல்லாது அவருக்கும் அடுத்த நிலையிலிருந்த அமிர்தலிங்கம் போன்றோருடனும் பழகியவர். மாவையும் இவருடைய பங்கை நிராகரிக்க மாட்டார். மட்டக்களப்பிலிருந்து (ஏன் கிழக்கு மாகாணத்தில் என்று கூடச் சொல்லலாம்) புலிகளில் இணைந்து கொண்ட முதற் போராளி இவர்தான். கருணா உட்பட அன்றைய போராளிகளை இயக்கத்துக்குள் உள்வாங்கியவர். இவர் போட்ட அடித்தளத்திலேயே வடக்கிலிருந்து சென்ற போராளிகளும் இணைந்து போராட்டத்தை வளர்க்க முடிந்தது.  https://thamilkural.net/thesathinkural/views/71024/
    • தோல்வியில் முடிவடைந்த முதலாம் கட்டத் திம்பு பேச்சுவார்த்தைகள்    இணைந்த அறிக்கை வெளியிடப்படுமுன்னர் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். தமிழர் தரப்பினர் முன்வைத்த வாதத்தில், தமது தொடர்ச்சியான ஆட்சேபணைகளுக்குப் பின்னர் அரசதரப்பு செய்வதாக உறுதிதந்த ஊரடங்கு உத்தரவை நீக்குதல், அரசியற் கைதிகளை விடுவித்தல் ஆகிய எந்தவிடயங்களையும் அரசு செய்யவில்லை என்று கூறினர். பதிலுக்கு தமிழர் தரப்பு மீது குற்றஞ்சுமத்திய அரசுதரப்பு, தமிழர் தரப்பால் இழைக்கப்பட்டதாகக் கூறி 73 யுத்தநிறுத்த மீறல்ச் சம்பவங்களைப் பட்டியலிட்டனர்.  அங்கு பேசிய இலங்கை அரச தரப்பின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜ‌யவர்த்தன, தான் முன்வைத்த தீர்வு யோசனையினை தமிழர் தரப்பு படித்து, சாதகமான பதிலுடன் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆவணி 12 ஆம் திகதி நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவும், இலங்கையரசும் முதலாம் கட்டப் பேச்சுக்கள் குறித்து மிகுந்த திருப்தி வெளியிட்டிருந்தன. ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பொறுத்தவரை பேச்சுக்கள் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தன. ஜெயவர்த்தன விரித்த வலையில் இந்தியா விழுந்துவிட்டது என்கிற பிரபாகரனின் நம்பிக்கை மென்மேலும் உறுதியடைந்தது. ஆகவே, ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்துவதென்று தீர்மானித்த அவர், தனது போராளிகளை அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபடுத்தலானார். ஒரு பிராந்திய வல்லரசு எனும் நிலையிலிருந்து தமிழர்களின் பிரச்சினையில் மத்தியஸ்த்தம் வகிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தினால் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியா பெருமகிழ்ச்சி அடைந்திருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்துவந்ததே இந்தியாவைப் பொறுத்தவரை பெரு வெற்றியாகக் கருதப்பட்டது. சமாதானப் பேச்சுக்களின் தரகர் எனும் நிலையிலிருந்து, பேச்சுக்களில் தீவிரத்துடன் பங்குகொண்ட இன்னொரு தரப்பு என்கிற நிலைக்கு தன்னை உயர்த்தியது குறித்தும் இந்தியா மகிழ்வடைந்திருந்தது. இதனால் இந்தியா சர்வதேச மட்டத்தில் நற்பெயரைச் சம்பாதிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவின் புதிய பிரதமர் ரஜீவ் காந்திக்குப் பாராட்டுதல்கள் வந்து குவியத் தொடங்கின. தென்னாசியாவின் அமைதிக்காக இந்தியா எடுத்துவரும் செயற்பாடுகளை அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெகுவாகப் புகழ்ந்திருந்தன.    பேச்சுவார்த்தைகள் முறிவடையாது, யுத்தநிறுத்தம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவது குறித்து இலங்கையரசாங்கம் மிகுந்த திருப்தியடைந்தது. தனது இராணுவத்தைக் கட்டியெழுப்பும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து திருப்தியடைந்த அரசாங்கம், மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான பகுதிகளில் முன்னரங்க இடைப்பகுதியினை (Buffer Zone) உருவாக்கி போராளிகளை வடக்கிற்குள் மட்டுப்படுத்தும்  காரியங்களில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கியது. நாடு திரும்பிய ஹெக்டர் ஜெயவர்த்தன,  பேச்சுவார்த்தைகள் குறித்த விடயங்களை மந்திரிசபையில் பகிர்ந்துகொண்டார். அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய ஹெக்டர், போராளிகள் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட இணங்கியிருப்பது சாதகமான நிலைமை என்று கூறினார். மேலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் முன்வைக்கப்படும் தீர்வொன்றினைப் பரிசீலினைக்கு ஏற்றுக்கொள்ள போராளிகள் இணங்கியிருப்பதும் முக்கியமான திருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், ஹெக்டர் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கொண்டிருந்த நம்பிக்கைகள் அவரது சகோதரரான ஜெயவர்த்தனவிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை இராணுவப் பலத்தின் மூலம் நசுக்கிவிடுவதே அவரது ஒரே எண்ணமாக இருந்தது. ஆகவே, தனது அரசாங்கம் நேர்மையான, சமாதானத்தை நேசிக்கின்ற அரசு என்றும், ஆனால் தமிழர்களோ  விட்டுக்கொடுப்பற்ற, பிடிவாதமான, உறுதியாக‌ முடிவெடுக்கும் திராணியற்ற தரப்பு என்றும் அரச ஊடகங்களினூடாக கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார். பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரப் பிரிவின் தலைவருடன் பேசிய ஜெயார், இந்தியா மீதும் பிரச்சாரத்தினை முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பாத்திரத்தைக் கேள்விகேட்டதுடன், இந்தியாவை, போராளிகளைக் கட்டுப்படுத்தி, வழிக்குக் கொண்டுவரும் திராணியற்ற "பிராந்திய வல்லரசு" என்று எள்ளிநகையாடும் பிரச்சாரத்திலும் ஈடுபடலானார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ரொமேஷ் பண்டாரி இலங்கைத் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஆளமான அறிவைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் அவருக்கு இருக்கவில்லை. புதிய பிரதமரான ரஜீவ் காந்திக்கு சர்வதேசத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் மழையில் தனக்கும் சிறுதுளி கிடைக்கவேண்டும் என்பதும், ரஜீவ் காந்தியின் பார்வையில் தான் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதையும் தவிர ரொமேஷ் பண்டாரிக்கு வேறு சிந்தனைகள் இருக்கவில்லை. ஆகவே, இதனை நன்கு தெரிந்துவைத்திருந்த ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும், பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்களுக்கு மிகச் சொற்பமான சலுகைகளைத் தருவதன் மூலம் யுத்தநிறுத்தகாலத்தை நீட்டிக்கவும், தமது இராணுவத்தைக் கட்டியெழுப்பவும் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். ஆனால், அவர்கள் தமது திட்டத்தில் ஒரு மனிதர் குறித்து கவனமெடுக்க முற்றாகத் தவறியிருந்தனர். அந்த மனிதர்தான் பிரபாகரன். ஆனால், ஜெயவர்த்தனவின் இராணுவ பலத்தினைக் கொண்டு தமிழரின் விடுதலை யாகத்தை முற்றாக அணைத்துவிடலாம் எனும் திட்டத்திற்குச் சவாலாக இருக்கப்போகும் ஒரே மனிதர் பிரபாகரன் தான் என்பதை லலித் அதுலத் முதலி நன்றாக‌ அடையாளம் கண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 24 அம் திகதி அவரது பிறந்தநாளுக்கு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது வீட்டிற்குச் சென்றிருந்தவேளை அவர் என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார். "சபா, உங்களுக்குத் தெரியுமா? பிரபாகரனுக்கும் இன்றைக்குத்தான் பிறந்தநாள். நாம் ஒருவரருக்கொருவர் எதிராகப் போர் புரிகிறோம், ஆனால் எம்மில் எவர் வெல்லப்போகிறோம் என்று எமக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார்.  லலித் அதுலத் முதலி குறித்த இன்னும் இரு விடயங்களை நான் பகிர்ந்துகொள்கிறேன். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்து மக்களை பிரபாகரனிடத்திலிருந்து அந்நியப்படுத்தும் உளவியற்போரினை லலித் அதுலத் முதலி ஆரம்பித்தார். அதன்படி, யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்து செயற்பட்டு வரும் பயங்கரவாதிகளை இராணுவத்தினர் தேடியழிப்பதை ஏதுவாக்குவதற்காக , அப்பகுதிகளிலிருந்து தமிழர்கள் அனைவரும் சிறிதுகாலத்திற்கு வெளியேறவேண்டும் என்று அறிவித்திருந்தார்.  யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறி, ஏனைய இடங்களில் தமது நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தங்குவதன் மூலம் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அரசுடன் நிற்பதாகவும், பயங்கரவதிகளிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியிருப்பதாகவும் காட்டமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால், எனது தந்தையார் யாழ்ப்பாணத்திலிருந்த எமது பூர்வீக வீட்டில் வாழ்ந்துவந்தார். எனது சகோதரியும் அவரது நான்கு குழந்தைகளும் அவ்வீட்டிலேயே வசித்து வந்தனர். எனது மாமியார், மைத்துனி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அவ்வீட்டிலேயே வாழ்ந்துவந்தனர். லலித் அதுலத் முதலியை நான் பின்னாட்களில் சந்தித்தபோது, அவரது அறிவித்தலினால் எனது தந்தையார்ர், மாமியார் போன்ற முதியவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். எனக்குப் பதிலளித்த லலித், "பிரபாகரனை சாதாரண‌ தமிழ்ப்பொதுமக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன்" என்று அவர் கூறினார். நான் எனது தந்தையாருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டபோது, "நடக்கிறது நடக்கட்டும், நாங்கள் இங்கேயே பொடியங்களுடன் இருக்கப்போகிறோம்" என்று கூறினார். எந்தத் தமிழ் மக்களைப் பிரபாகரனிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என்கிற எதிர்பார்ப்புடன் லலித் அதுலத் முதலி தனது அறிவித்தலினை மேற்கொண்டாரோ, அந்த அறிவிப்பு அதற்கு நேர்மறையான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனை மக்கள் இன்னும் அதிகமாக நேசிக்கும் நிலையினை அது உருவாக்கியிருந்தது. "அவங்கள் ஆருக்காகப் போராடுறாங்கள்? எங்கட உரிமைகளுக்காகத்தானே போராடுறாங்கள்? அவங்களை விட்டுட்டு எங்களால போக ஏலாது" என்று எனது தந்தை தீர்க்கமாகக் கூறினார்.  பின்னர் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் திகதி, ஆயிரம் மீட்டர்கள் கொண்ட, மக்கள் செல்லமுடியாத பாதுகாப்பு வலயங்களை லலித் அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களில் இருந்து ஆயிரம் மீட்டர்கள் வட்டத்திற்குள் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும். அப்படி வெளியேறாத பட்சத்தில் உங்களுக்கு நடக்கவிருக்கும் அழிவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று வானொலியூடாக‌ அறிவித்தார். ஆனால், மக்கள் அவரது அறிவித்தலை கண்டுகொள்ளவில்லை. ஆகவே, தனது விமானப்படையூடாக தமிழில் அச்சிடப்பட்ட அறிவித்தல்களை பொதுமக்கள் வாழிடங்கள் மீது அவர் கொட்டினார். அதனையும் மக்கள் உதாசீனம் செய்தனர்.ஒருவாரத்தின் பின்னர் மீண்டும் தமிழில் அச்சிடப்பட்ட எச்சரிக்கைகள் வானிலிருந்து அவரது விமானப்படையினரால் கொட்டப்பட்டன. அவ்வாறு அச்சிடப்பட்ட எச்சரிக்கை ஒன்றினை பிரச்சாரப்படுத்துவதற்காக டெயிலி நியூஸ் காரியாலயத்தின் ஆசிரியரான மணிக் டி சில்வாவுக்கும் லலித் அனுப்பி வைத்தார். அது தமிழில் அச்சிடப்பட்டிருந்தமையினால், என்னிடம் தந்து, "லலித் அனுப்பியிருக்கிறார், அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?" என்று என்னைப்பார்த்துக் கேட்டார் மணிக். அதனைப் படித்துவிட்டு நான் சிரித்துக்கொண்டேன். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று என்னிடம் வினவினால் மணிக். "அதில் ஒரு பிழை இருக்கிறது" என்று நான் பதிலளித்தேன். "என்ன பிழை?" என்று மீண்டும் அவர் கேட்டார். "இந்தத் துண்டுப்பிரசுரத்தின் அடியில் பிரபாகரன் ஒப்பமிட்டிருக்கிறார். ஆனால் தனது பெயரை பிரபாகரம் என்று தவறுதலாக எழுதியிருக்கிறார் என்பதனால்ச் சிரித்தேன்" என்று பதிலளித்தேன். "சிங்களவர்கள் மட்டுமே இவ்வாறான தவறுகளை புரியமுடியும். ஒரு தமிழரோ, முஸ்லீமோ "ன்" என்கிற எழுத்திற்குப் பதிலாக "ம்" என்கிற எழுத்தினைப் பாவிக்கும் தவற்றினை ஒருபோதும் செய்யப்போவதில்லை" என்று அவருக்கு விளங்கப்படுத்தினேன். உணர்ந்துகொண்ட சில்வாவும், அத்துண்டுப்பிரசுரத்தில் இருந்த தவற்றினை வெளியே கூற விரும்பவில்லை.  தமிழில் எழுதப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தின் செய்தி இதுதான், அரசாங்கம் தனது இராணுவ முகாம்களைச் சுற்றி ஆயிரம் மீட்டர்கள் சூனியப் பகுதியை உருவாக்குவதாக அறிவித்திருப்பதுடன், இப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுமாறும் அறிவித்திருக்கிறது.  ஆனால், அப்படி எவரும் வெளியேறக்கூடாது என்று உங்கள் அனைவரையும் நான் எச்சரிக்கிறேன். அப்படி யாராவது வெளியேறுவார்களாயின், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  இப்படிக்குப் "பிரபாகரம்" 1984 ஆம் ஆண்டு பங்குனியில் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற காலத்திலிருந்து லலித் அதுலத் முதலி பிரபகாரனை தனது முதலாவது எதிரியாகவே கருதிச் செயற்பட்டுவந்தார் என்பதைக் காட்டவும், பிரபாகரன் குறித்த அவரது கணிப்புச் சரியானது என்பதைக் காட்டவுமே இச்சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.   பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் - 80 களின் நடுப்பகுயில்  தன‌து நோக்கமான இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குதல், வடக்குக் கிழக்கில் அரச கட்டுப்பாட்டிலிருந்து தமிழர் பிரதேசங்களை விடுவித்தல் ஆகியவற்றுக்கு யுத்தநிறுத்தமும், பேச்சுக்களும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதனால் அவைகுறித்து பிரபாகரன் அதிகம் மகிழ்வடையவில்லை. ஜெயவர்த்தன தமிழர்களுக்கான தீர்வினை இராணுவத்தைக் கொண்டே வழங்குவார் என்பதனைச் சரியாகக் கணித்திருந்த பிரபாகரன், இராணுவத்தை எதிர்கொள்ள தனது போராளிகளை ஆயத்தப்படுத்திவந்தார். ஜெயவர்த்தனவின் உண்மையான நோக்கத்தினை நேர்த்தியாகக் கணித்திருந்தார் பிரபாகரன். பின்னாட்களில் அதுகுறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் சில பத்திரிக்கைகளுக்கும் அவர் பேட்டியளித்திருந்தார்.  கல்கத்தாவிலிருந்து வெளிவரும் "சண்டே" எனும் இதழுக்கு புரட்டாதி 5 ஆம் திகதி வழங்கிய நேர்காணலில் பிரபாகரன் இவ்வாறு கூறியிருந்தார்.  "பேச்சுவார்த்தை ஒரு நாடகம். இந்தப் போர்வையினைப் பயன்படுத்தி எமது மக்கள் மீது இலங்கை இராணுவம் இன்றுவரை அட்டூழியங்களை நடத்தி வருகிறது. எமது மக்கள் மீதான படுகொலைகள் தற்போதும் அரங்கேற்றப்பட்டு வருவதுடன், தமது வாழ்விடங்களில் இருந்தும் அவர்கள் துரத்தப்பட்டு வருகிறார்கள். இது உண்மையான யுத்தநிறுத்தமாக இருந்தால் எனது தளபதிகள் இதுகுறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு அமைவாக நாம் எமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், எமது மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை இலங்கை இராணுவம் நடத்திவருவதால், பதில் நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டியதாகியிருக்கிறது. ஆனால், இந்தச் சூழ்நிலையினைக் கவனமாகக் கையாளவேண்டிய தேவையினை நான் அறிவேன். இந்த யுத்தநிறுத்தம் கூட ஒரு சூழ்ச்சிதான் என்பதை எனது தளபதிகள் நன்கு அறிந்தே உள்ளனர். அவர்களை நான் கவனமாக வழிநடத்தவேண்டும். யுத்த நிறுத்தத்தினைப் போர்வையாகப் பாவித்து அரசாங்கம் தமிழின அழிப்பினை கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது". வீக் எனும் பத்திரிகைக்கு 1986 ஆம் ஆண்டு பங்குனியில் வழங்கிய செவ்வியில் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்,  "யுத்த நிறுத்தம் என்கிற போர்வையில் ஜெயவர்த்தன பாரிய இராணுவமயமாக்கல்த் திட்டத்தினை முடுக்கிவிட்டிருக்கிறார். இராணுவ இயந்திரத்தைக் கட்டியெழுப்ப தனது வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய தொகையினை அரசு ஒதுக்கியிருக்கிறது. கடுமையான அழிவுகளை ஏற்படுத்தும் பல கனரக ஆயுதங்களைத் தொடர்ச்சியாக அரசு தருவித்து வருகிறது. தனது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை அரசு சட்டமாக்கியிருக்கிறது. மொத்தச் சிங்களத் தேசமும் போரிற்கான தயார்ப்படுத்தல்களில் இறங்கியிருக்கிறது. தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்திற்கெதிரான பயிற்சிகளுக்காக வெளிநாட்டுக் கூலிப்படையினர் வரவழைக்கப்பட்டிருப்பதோடு, பாக்கிஸ்த்தான் அரசும் நேரடியாகவே இலங்கை இராணுவத்திற்கு உதவி வருகிறது. இவ்வாறான இராணுவமயமாக்கலில் ஜெயவர்த்தன இறங்கியிருப்பதானது, அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, தனது இராணுவத்தின் மூலம் அவர்களை அழிக்கவே கங்கணம் கட்டியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது".    யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுக்கள் குறித்து பிரபாகரன் அதிருப்தி கொண்டிருந்தபோதும், திம்புப் பேச்சுவார்த்தையினூடாக அவருக்கு சில அனுகூலங்களும் கிடைத்திருந்தன. தமிழர் தரப்பில் மிகப்பெரும் சக்தியாக அவர் உருவெடுத்திருந்ததுடன், அவருக்கான அந்த ஸ்த்தானத்தினை வழங்குவதற்கு இந்தியாவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.  திம்புப் பேச்சுவார்த்தைகளின் முதலாம் கட்டம் தோல்வியில் முடிவடைந்த 1985 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் நாள் நான் எனது வீட்டில் இருந்தேன். செய்தி ஆசிரியர் ஆரன் என்னைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு மறுநாள் கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.        
    • வினா: யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எப்படியான நிலமையில் உள்ளபோது/என்ன செய்துகொண்டு உள்ளபோது உங்களிடம்  நிதி/பொருள் உதவி கேட்டால் அல்லது பொருட்களை/சேவையை உங்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால் நீங்கள் செம கடுப்பாகுவீர்கள்? கொடுக்க மாட்டீர்கள்? •••••••  ♻️    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.