Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைபுலிகள் செய்தகொலையையாம் அரசு சிங்கள ராணுவதின்மீது பழி

Featured Replies

மன்னார் பேசாலை சம்பவங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரி சாட்சியம்

மன்னார் பேசாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ரீ,ஜே.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அங்கு சாட்சியமளித்த வங்காலைப்பாடு கடற்படை முகாம் பொறுப்பதிகாரி, சம்பவ தினம் தனது முகாமைப் பாதுகாப்பதிலேயே தாங்கள் ஈடுபட்டிருந்ததாகவும், பேசாலை சம்பவத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான வெங்காலை தேவாலயம்

அன்றைய தினம் மன்னார் சன்னி விலேஜில் உள்ள கடற்படை முகாமிலிருந்தே கடற்படையினரின் மோட்டார சைக்கிள்கள் வந்ததாகவும் அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்

சனி விலேஜ் கடற்படை முகாமில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ள நீதிபதி சம்பவ தினத்தன்று எத்தனை மோட்டார் சைக்கிள்களில் யார் யார் பேசாலை பகுதிக்கு சென்றனர் என்பது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையில் மன்னார் வங்காலையில் கடந்த மாதம் 9 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வங்காலை பிரதேச இராணுவ முகாம் பொறுப்பதிகாரி சாட்சியமளித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வங்காலை மற்றும் தோமஸ்புரி இராணுவ முகாம்களிலிருந்து காவல் கடமைக்காகச் சென்றவர்களின் பெயர் விபரங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் வங்காலை பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சொன்ன செய்தி நிறுவனம்???????????

பேசாலை தேவாலயத் தாக்குதலில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை: சட்ட மா அதிபரிடம் மகிந்த ஆலோசனை

பேசாலை தேவாலயத் தாக்குதலில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் கருத்தை மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளதாக தெரிகிறது.

இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட உயர்நிலை இராணுவக் குழுவினர் தாக்குதல் நடத்தியோரை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாக்குதலில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சட்ட மா அதிபரிடம் மகிந்த கருத்து கேட்டுள்ளார்.

கடந்த யூன் 17ஆம் நாள் பேசாலை கடற்பரப்பில் கடற்சமர் நடந்ததையடுத்து 6 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மீது கடற்படையினர் கைக்குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 47 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அடிகளார் வத்திக்கானுக்கு நீண்ட கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதில் சிறிலங்கா கடற்படையினரே இக்கொடூரச் செயலைச் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் மகிந்தவும் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இராணுவத்தினர் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தும் என்று அறிவித்திருந்தார். அக்குழு தற்போது விசாரணைகளை நிறைவு செய்து தாக்குதல் நடத்தியோரை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படக்கூடும் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன

http://www.eelampage.com/?cn=27374

  • தொடங்கியவர்

புலிகள் செய்த கொலையாம் ஏன்தான் அரசங்கம் இராணுவத்தின் மீது பழி போடுதோ தெரியா :?: :idea: :!: :?: :?:

ஐயோ ஐயோ சிங்கள அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் காசைக் குடுத்து அரசியற் பரப்புரை செய்யிறாங்கள்.

தாங்களே செய்து போட்டு இப்ப எல்லாரையும் பேய்க் காட்டுறாங்கள்.சண்டைக்கு ஆட் சேக்குறாங்கள்.

இதை நாங்க எங்க போய்ச் சொல்லுறது, இவங்களுக்கு மக்கள் மேல ஒரு கரிசனையும் கிடையாது.மகிந்தரையும் விலைக்கு வாங்கிப் போட்டாங்கள். நாங்கள் இனி யாரை நம்பி பரப்புரை செய்யிறது? யாரு எங்களுக்குக் காசு தருவாங்கள்?

மதி ,குருவி எங்கயப்பா போட்டியள்? உப்பிடிச் செய்தியள் ஒண்டும் உங்கட கண்ணுக்குத்தெரியாதே? இனியும் புலிகள் தான் உந்தப் படுகொலைகளைச் செய்தது எண்டு கப்ஸா விடப் போறியளா?இல்லை அவன் மனித நேயன் எண்டு ப்லேட்டை மாத்தப் போறியளா? எதோ சொல்லுறதை கொஞ்சம் கொன்ஸிஸ்டன்டா சொல்லுங்கோ, பிறகு உங்களுக்கு விசர் எண்டு சனம் நினைக்கப் போகுது.

¿¡Ã¾÷... ²ý º¡Á¢.. ¸¡ºìÌÎò¾ þó¾ô â×ĸ¢ø ±øÄ¡õ ¿¼ì̾¡§Á...¸¼×ÙìÌ ¾Â× ¦ºöÐ ±ÎòÐ¡øÖí¸û..

ÁýÉÉ¢ì¸×õ «ÅÕ째 «øÅ¡ ¦¸¡Î츢ȡ÷¸Ç¡õ ƒÂ¡!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.