Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவதால் நாங்கள் பின்வரிசையில் நிற்கின்றோம் - கமல்: ரஜினி மௌனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rajini-kamal-seithy-150.jpg

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து உலக நாயகன் கமல் கருத்து வெளியிட்டுள்ளார். இதே வேளை இது குறித்து ரஜினி இதுவரை தனது ஆதரவையோ கருத்தையோ முன்வைக்கவில்லை. ஆனால் இந்தி நடிகர் சஞ்சய்தத்திற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். இதனால் ரஜினிக்கு எதிராக பலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கமலுடன் இடம்பெற்ற கேள்வி - பதில் பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.

  

இலங்கை இனப்பிரச்சினையில் நீங்களோ உங்கள் ரசிகர்களோ ஏன் பங்கெடுக்கவில்லை?

 

பிரபாகரனின் மகன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போல் வந்த புகைப்படத்தை பார்த்த பிறகும் நீங்கள் இந்த உணர்வில் பங்கெடுக்க தமிழனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. உணர்வுப்பூர்வமாகவே பங்கெடுக்கிறோம்.

 

கேள்வி:மாணவர்கள் இந்த பிரச்சினையில் போராடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

பதில்:மாணவர்கள் என்றால் அவர்கள் பஸ்சின் கூரை மீது ஏறி டான்ஸ் ஆடுவார்கள். ஹாஸ்டலில் சண்டை போடுவார்கள் என்று இப்படியாகத்தான் இதுவரை செய்திகள் வந்திருக்கின்றன. முதன்முதலாக இலங்கை இனப்படுகொலையை கண்டித்து போராடுவதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அவர்களின் இந்த போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணறி ஓட வைத்திருக்கிறது.என்னுடைய மகன், என் தம்பி எனக்காக பேசுகிறான். அவர்களை (மாணவர்களை) தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவர்கள் இப்போது தந்தைக்கு உபதேசம் செய்யும் பிள்ளைகளாகி இருக்கிறார்கள். யாருமே வரவில்லை என்ற நிலையில் நாங்கள் (நடிகர்கள்) வந்திருக்க வேண்டும். மாணவர்கள் சரியான நேரத்தில் வந்து விட்டார்கள். நாங்கள் பின்வரிசையில் நிற்கிறோம்.

 

சர்வதேச விசாரணை

கேள்வி:இலங்கை இனப்போராட்டத்தில் அமெரிக்கா கையாண்ட சர்வதேச விசாரணை சரிதானா?

 

பதில்:அமெரிக்காவின் எல்லா தீர்மானமும் நியாயமாக இருக்க வாய்ப்பில்லை. எல்லா பிரச்சினையிலும் அவர்கள் சாதகமாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

 

கேள்வி:அமெரிக்க தீர்மானம் தொடர்பான பிரச்சினையில் இந்திய அரசு அரசியல் செய்திருப்பதாக கருதுகிறீர்களா?

 

பதில்:என்னை ஏன் அரசியலில் இழுக்கிறீர்கள்?

 

கேள்வி:இலங்கை பிரச்சினைக்காக நடக்கும் தீக்குளிப்புகள் பற்றி உங்கள் கருத்து?

 

பதில்:ராமாயணத்தில் சீதை தீக்குளித்ததையே தவறு என்ற கோணத்தில் பார்க்கிறேன். எந்த பிரச்சினையிலும் தீக்குளிப்பை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

 

சஞ்சய்தத்

கேள்வி: பிரபல இந்திப்பட நடிகர் சஞ்சய்தத்துக்கு கோர்ட் விதித்த தண்டனை பற்றி?

 

பதில்: இது அதற்கான அரங்கம் அல்ல.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

 

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78920&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவதால் நாங்கள் பின்வரிசையில் நிற்கின்றோம் - கமல்: ரஜினி மௌனம்!

 

 

 

அடுத்த படத்துக்கு ஏதும் பிரச்சினைவரும்வரைக்கும் முன்வரிசை காலியாய் இருக்கும்..

நடிகர்களின் உண்ணாவிரத நாடகமும் கமலின் வசனமும்

 

இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் பற்றி கமல் எதுவுமே சொல்லவில்லை என்று எழுதியிருந்தாயே? விஜய் டி.வி. நிகழ்ச்சியில் எவ்வளவு தெளிவாக பேசியிருக்கிறார் பார்த்தாயா? இனியாவது அவரை குற்றம் சொல்வதை நிறுத்து.

 

 

-ரகு



மாணவர் போராட்டத்தைப் பற்றி ஆதரவாக ஏன் கருத்து சொல்லவில்லை’ என்று கமல் ‘ஆதரவாக’ பேசியதைப் பார்த்தேன்.

 

 

இந்த தந்திரமான விளக்கத்தைக் கூட குறைந்த பட்சம் நம்மை போன்றவர்கள் கேட்பதற்கு முன்னால் கொடுத்திருக்கலாம்.


‘தந்திரமான‘ என்று நான் சொல்வதற்கு காரணம் அவரின் ‘தெளிவான’ கருத்தே.

 

மாணவர் போராட்டம் வெறுமனே ஈழத்தமிழர்களுக்காக பரிதாபப் படுகிற போராட்டம் அல்ல; தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை கொலைக் குற்றவாளியாகவும், ராஜபக்சே மீதும் இலங்கை அரசின் மீதும் இனப் படுகொலை செய்வதவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்தான் அது.


மாணவர்கள் அதற்காகத்தான் மக்களை போராட அழைத்தார்கள். அவர்கள் அழைப்பின் பொருட்டே கோயம்பேடு காய்கறி வியாபாரிகள், தமிழகம் முழுக்க உள்ள கூலித் தொழிலாளர்கள், ஜ.டி கம்பெனி ஊழியர்கள் வரை ராஜபக்சேவிற்கு எதிரான முழக்கங்களோடு களம் இறங்கினார்கள்.

 

அமீர் தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் அதை வலியுறுத்திய ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

கமல் மாணவர் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? அல்லது ஆதரிக்கவில்லை? என்பதல்ல கேள்வி.

தன் படத்தின் திருட்டு விசி.டி க்கு எதிராக தன் ரசிகர்களை உசுப்பி விடும் கமல், ரஜினி போன்ற நடிகர்கள், ராஜபக்சே – இலங்கை அரசின் கொலைவெறிக்கு எதிராக ரசிகர்களிடம்கூட கருத்து சொல்லாதது ஏன்?


இலங்கை அரசுக்கு எதிராக வணிகர்கள் முதல் கமல் சார்ந்த திரைத்துறையினர் வரை போராடினார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள். எல்லாவற்றையும் பற்றி கருத்து சொல்கிற கமல், இந்த விசயத்தில் ஏன் அமைதி காக்கிறார்? (‘அவர் இலங்கை தமிழர்களுக்காக மவுனம் விரதம் இருந்தார்’ என்று எந்த ‘ஞாநி’யும் விளக்கம் கொடுக்காமல் இருந்தால் சரி.)

 

கமல் அந்தப் பேட்டியில் மாணவர்கள் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தியதாக சொல்லியிருக்கிறார். அரசியில்வாதிகளையே தூக்கி சாப்பிடுகிற அளவிற்கு அரசியல் செய்கிற கமல் போன்ற நடிகர்களையும் மாணவர்கள் அம்பலப்படுத்தினார்கள் என்பதும் உண்மை.


அந்த ‘தந்திரமான’ Attendance போடும் பேட்டியில் கமல், பாலஸ்தீன போராட்டத்தைப் பற்றி பேசுகிறார். பிரபாகரன் மகன் கொலை செய்யப்பட்டதற்காக வருத்தப்படுகிறார். இதைக் கண்டிப்பதற்கு நாம் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை மனிதனாக இருந்தாலே போதும் என்கிறார். ‘அமீர் முயற்சியில் நடந்த உண்ணாவிரத்தில் ஏன் பங்கெடுக்கவில்லை’ என்று கேட்க போகிறார்கள் என்பதற்காக உண்ணாவிரதத்தையே கேள்விக்குட்படுத்துகிறார்,

சிங்களவர்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டாலும் கண்டிப்பேன் என்கிறார். ஆனால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்க மறுக்கிறார். பிரபாகரனின் மகனை எவன் கொன்றான்? என்பதை சொல்ல மறுக்கிறார்.


 

‘ராஜபக்சே’ என்கிற வார்ததை வர மறுக்கிறது உலக நாயகன் வாயிலிருந்து.

 

‘இலங்கை அதிபர்’ ‘ராஜபக்சே’ ‘இனப் படுகொலை’ போர் குற்றவாளி’ போன்ற வார்தைகளை அவர் உச்சரிக்காமல் இருப்பதில் மிக ‘தெளிவாக’ இருந்தார்.


கோயம்பேடு மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்களிடமிருந்த அரசியல் நேர்மையில் ஒரு சதவீதம்கூட ஞானப்பழம் சாப்பிட்ட உலக நாயகனிடமில்லை.

 

http://mathimaran.wordpress.com/2013/04/01/actress-kamal-630/



**

 

நாங்க சூட்டிங் போறது மட்டும் இல்ல லேட்டு

தமிழனுக்காக போராடுனா நீ குடுப்பியா துட்டு

 

ரொம்ப பேசுனா income tax ல வைப்பாண்டா வேட்டு

**

 

 

ராஜபக்சேவை திட்டுனா ரிலீஸ் ஆகாதுடா எங்க படம் இலங்கையில…

அட்டென்டென்ஸ் போட்டா போதும் தமிழன் அடிப்பாண்டா விசிலு தியேட்டரில..

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு ஏப்ரல் 2 உண்ணாவிரதம் வைக்கிறாங்கா..?ஏப்ரல் 1 எண்டா பொருத்தமா இருக்கும் ... :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன நம்மை நாமே திசை திருப்பிக் கொள்ளும் பேச்சு. கமல் வரவில்லை, ரஜினி வரவில்லை, கவுண்டமணி வரவில்லை என்று. அவர்கள் ஏன் வர வேண்டும் என நினைக்கறீர்கள்.? இங்கே பல கோடி பேர் மெளனமாக இருக்கிறார்கள் . அதைப் பற்றி பேசுவதால் நாம் பலவீனம் அடைவது உங்களுக்கு தெரியவில்லையா.? ஒருவர் போராட்டத்துக்கு வந்தால் அவரை பாராட்டுவதில் பெரிய தவறு ஏதும் இல்லை. வராதவர்களைப் பற்றி பேசி நமது முக்கிய குறிக்கோளை விட்டு விலகிச் செல்லாதீர்கள். நாமே நம் போராட்டதை பலவீனப் படுத்த வேண்டாம். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூர்மையாக யோசிப்போம். நாம் வென்று முடிக்க வேண்டியது நிறைய உள்ளது. திரைத் துறையினர் வருவதும் வராமல் இருப்பதும் தற்போது முக்கியம் இல்லை.

 

facebook.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.