Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்மையில் தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வு - இவ்வாறான சதிவேலைகளை முறியடிக்க வேறு என்ன செய்யலாம்?

Featured Replies

தமிழக மாணவர் ஒருவருடன் அண்மையில் கதைத்த போது, அவர்கள் உண்ணாவிரதமிருக்க முடிவுசெய்து, மரியாதையின் நிமித்தம் அந்த நிறுவனத்தின் ஒரு பொறுப்பதிகாரியிடம் தமது முடிவை அறிவிக்க கும்பலாக சென்றபோது,  அவர் மாணவர் போராட்டத்தை தடுக்க பல வழிகளில் முயன்றாராம். (அவர் காங்கிரஸ் அடிவருடி என்கிறார்கள் அந்த மாணவர்கள்).

அவர்களின் உரையாடல் சுருக்கமாக

(1) முதலில் அவர், இதை நீங்கள் 2009 மே இல் செய்திருக்க வேண்டும் - இப்ப செய்வதில் அர்த்தம் இல்லை, எனவே நீங்கள் அரசியல் நோக்குடன் செய்கிறீர்கள் - எனவே அனுமதிக்க முடியாது என்றாராம்

மாணவர்கள் அப்ப செய்த தவறை இப்பவும் செய்ய விரும்பவில்லை என்றனராம்

(2) அடுத்ததாக எமது நிர்வாக மேலிடம் இதை விரும்பவில்லை என்றாராம்

அதற்கு மாணவர்கள், நீங்களும் தமிழன் என்ற முறையில் உங்கள் அனுமதியுடன் செய்த
நினைத்தோம், நீங்கள் அனுமதிக்காவிட்டாலும் நாம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துவிட்டோம் என்றனராம்

(3) அடுத்ததாக 1960 களில் மலையகத் தமிழர் வெளியேற்றப்பட்ட போது, யாழ்ப்பாண தமிழர் ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்காக நாம் எதற்கு போராட வேண்டும் என்றாராம்

அதற்கு மாணவர்கள், "சர்வதேசச் சட்டங்களை மதித்து அவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கவேண்டும்",  "அவர்களை எம்மால் ஏற்க முடியாது" என்று அன்று இந்தியா சொல்லியிருந்தால் அவர்கள் நாடற்றவர்கள் ஆகியிருக்கமாட்டார்கள். அன்றும் இந்திய அரசே தப்புச் செய்தது என்று மாணவர்கள் வாதிட்டுள்ளனர்.


(4) அடுத்ததாக அந்த பேராசிரிய கயவன் சொன்னது: மலையகத் தமிழர் வெளியேற்றப்பட்ட போது, யாழ்ப்பாண தமிழர் "வேசிகளின் மக்களான மலையகத் தமிழர் இலங்கையை விட்டு வெளியேறு" என்று சொன்னார்கள். எனவே வரலாறு தெரியாமல் அவர்களுக்காக நாம் போராடுவது எமது சமூகத்துக்கு செய்யும் துரோகம் என்றாராம்.

அதற்கு மாணவர்கள், நீங்கள் சொல்வது உண்மையோ பொய்யோ தெரியாது. சரி அவர்கள் தான் அப்படி நடந்துகொண்டால், பதிலுக்கு நாமும் அப்படியே பிரதேசவாதம் பேசுவது சரியா என்று கேட்டார்களாம். மேலும் நீங்கள் என்ன சொன்னாலும் நாம்  உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துவிட்டோம். அதில் நீங்கள் 5 நிமிடமாவது வந்து கலந்து கொண்டால் உங்களுக்கு தான் பெருமை! என்றனராம்


(5) இறுதியில் இதற்கு நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள், நாளைக்கு பிரச்சினைகள் வந்தால் நான் உதவிக்கு வரமாட்டேன். மேலும் பதாதைகள், கொடிகள் எதுவும் பிடிக்ககூடாது. பத்திரிகையாளர்கள் வரக்கூடாது என்று நிபந்தனைகள் போட்டபடி எழுந்து சென்று விட்டாராம்.

(இந்த உரையாடலை ஒலிப்பதிவுசெய்த மாணவர்கள் அதை என்னிடமும் தந்துள்ளனர். அவர்கள் அந்தப் பேராசிரியரின் - (விலங்கியல் துறை பேராசிரியர் ஆறுமுகத்தின்) - நாலாவது (4) கேள்வி தொடர்பாக உண்மையை அறியவே  என்னிடம் தொடர்பு கொண்டனர்.

அவர்களுக்கு நான் சொன்ன பதில் இதுவரை இப்படியொரு சம்பவத்தை - கூற்றை - நான் கேள்விப்படவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் ஒரு பேச்சுக்காக, இன்றுள்ள டக்லஸ் தேவானந்தா, கருணா, சுப்ரமணிய சுவாமி, ஆறுமுகம் தொண்டமான், சங்கரி  போன்ற ஒரு போக்கிரி அல்லது ஒரு குடிகாரன் எதையாவது உளறியிருந்தால் கூட - அதை யாழ்ப்பாண  தமிழர் சொன்னதாக  எடுத்துக் கொள்வது, சொல்வது  நயவஞ்சகத்தனம் என்று கூறினேன்).


மாணவர்களின் தொடர் உண்ணாவிரதம் / போராட்டம் வெற்றிகரமாக நடந்தததாக அந்த மாணவர்கள் கூறினார். ஒருநாள் அந்த நிறுவனத்தின் அதிஉயர்நிலை அதிகாரி (இன்னொரு பேராசிரியர்) போராடும் மாணவர்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடன்  சிலநிமிடங்கள் இருந்துவிட்டு சென்றதாகவும் மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கூறினர்.

இவ்வாறான (பேராசிரியர் ஆறுமுகம் போன்றவர்களின் ) சதிவேலைகளை முறியடிக்க வேறு என்ன செய்யலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.