Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை முஸ்லிம்கள் நீதி கோரி ஜெனிவா செல்ல முயற்சி! - ஆதாரம் திரட்டும் பணியில் புத்திஜீவிகள் தீவிரம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முஸ்லிம்கள் நீதி கோரி ஜெனிவா செல்ல முயற்சி! - ஆதாரம் திரட்டும் பணியில் புத்திஜீவிகள் தீவிரம்!!

 

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிங்கள இனவாதக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ள முஸ்லிம் இராஜதந்திரிகள் பலர், அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும், அரசிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

 

இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தி அதனூடாகத் தீர்வுகாண முஸ்லிம் இராஜதந்திரிகளும், புத்திஜீவிகளும் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

 

முஸ்லிம் பள்ளிவாசல் தாக்கப்படுதல், ஹலால் சான்றிதழ் நீக்கப்பட்டமை, அவர்களின் கலாசார ஆடைகளை சுதந்திரமாக அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் முதலான நடவடிக்கைகளால் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இவ்வாறான நிலையிலும் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

அத்துடன், இந்தப் பிரச்சினைகளை சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதற்கு ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறித்த இராஜதந்திரிகள் கவலை வெளியிடுகின்றனர்.

 

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 22வது கூட்டத் தொடர் இடம்பெற்ற போது, இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடிப்படைவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைளை அதன் கவனத்திற்குக் கொண்டுவரும் வகையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

 

இந்நிலையில் ஐ.நாவின் கவனத்திற்கு ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை மேலும் ஆதாரபூர்வமாக அதன் கவனத்திற்குக் எடுத்துச் சென்று முறையிடுவதற்கு முஸ்லிம் இராஜதந்திரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என அறியமுடிகின்றது.

 

இதற்காக அண்மைக் காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்ற அனைத்து சம்பவங்கள் தொடர்பான முழு விவரங்களையும் ஆதாரத்துடன் திரட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=215dc786-dead-4bc0-b9a9-4ea15a8292c2

சிராணி பதவி விலக்கப்பட்ட போது அமெரிக்க தூதுவருடன் பேசிய கக்கீம், சுமந்திரன் கக்கீமை பதவி விலக கோரியதை எதிர்த்திருந்தார். இதில் அவர் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை எல்லோரையும் நீதி அமைச்சர் என்ற கதிரையில் இருந்து கொண்டு காலை வாரிய கேவலத்தனம். அதன் பின்னர் அவர் அரசுக்காக ஜேர்மன் தூதுவரிடம் சென்று அங்கு இலங்கையில் முஸ்லீம்கள் இப்போதுதான் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்று கூறினார்.

இந்த புத்தி ஜீவிகளுக்கு தம்மை விட புத்திசாலியான மனிதன் கக்கீம் இருப்பது தெரியவில்லையா?

 

கக்கீகும், புத்திஜீவிகளும் சேர்ந்துதான் இயங்குகிறார்களாயின் கக்கீம் தான் அரசிடம் பெறத்தக்க  அதிகத்தை பெற முயலும் போது, புத்திஜீவிகள் தமிழ்நாட்டு மாணவர்களின் பக்கம் கவனம் திரும்பியிருக்கும் மகிந்தா சகோதரர்கள் மீது சர்வதேச தாக்குதலை இறங்க வைக்க முயல்கிறார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.