Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பரிசீலிக்காது நிராகரித்தமைக்கு பாஜக கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

153959543522.jpg

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பரிசீலிக்காது நிராகரித்தமைக்கு பாஜக கண்டனம்

இலங்கைக்கு எதிரான தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்காமல் நிராகரித்ததற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவிப்பதாக இல.கணேசன் கூறினார். 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 

தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த 3 தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை கூட செய்யாமல் நிராகரித்துள்ளது. 

இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அம்மாநில மக்களின் எண்ணம். 

அதனை இந்த மைனாரிட்டி காங்கிரஸ் அரசு, நிராகரிக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். இருந்தாலும், அமைச்சர் பேட்டியில் ஒரு மாநில அரசு மட்டும் தானே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுமா தீர்மானம் கொண்டுவந்துள்ளது எனக்கூறியுள்ளார். இதை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக கண்டிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

(தினகரன்)

இல கணேசனின் கட்சியான பாரதீய ஜனதா கட்சி கூட எந்த ஆதரவையும் மாணவ / மக்கள் எழுச்சிற்கு அளித்ததாக தெரியவில்லை. இந்த கூறி கூட குறுகிய அரசியல் நோக்கம் மட்டுமே கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள். அங்குள்ள தமிழர்கள் ராவண படையை சேர்ந்தவர்கள். சிங்களமும், தமிழும் சமஸ்கிருதத்தின் குழந்தைகள். இந்தியா இலங்கையை முழுமையாக ஆதரிக்க வேண்டும்..

- - எல்.கே. அத்வானி

* அப்பாடா அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வராதுன்னு சந்தோச பட்டுட்டு இருக்கும் நெஞ்சங்களுக்கு. சுண்டெலி போய் பெருச்சாளி வரப் போகுது. சொல்லிட்டேன்.

facebook.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தமிழ் சமுதாயம் வேறுபட்டதால்தான் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவிக்கின்றனர்

 

download-2.jpgகோபி நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக மாணவர்கள் இடையே பெருத்த எழுச்சி ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 1960-ம் ஆண்டுக்கு பிறகு இதுபோன்ற எழுச்சி வந்துள்ளது. இந்த நிலைவர காரணமே தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஒரு மித்த கருத்து இல்லாததே ஆகும்.

அதனால்தான் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதீய ஜனதாகட்சி இலங்கையில் உள்ள தமிழர்கள் உரிமைகள் பெற வேண்டும். சர்வ சுதந்திரமாக இருக்க வேண்டும் இதற்கு உலக நாடுகள் இடையே ஆதரவு கிடைக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.

தமிழக மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு தள்ளி போவதால் வாழ்க்கை ஒரு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. 1960ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நிறையபேர் தங்கள் வாழ்ககையை தொலைத்தனர். இலங்கையில் தமிழ் சமுதாயம் வேறுபட்டதால் தான் தமிழர்கள் சொல் லொண்ணா துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

கேரளாவில் 2 மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்கு 2 இத்தாலி வீரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுமுறைக்காக இத்தாலி சென்றனர். அங்க இருந்து மீண்டும் இந்தியாவுக்கு வர மறுத்தனர்.

உடனே கேரளாவில் உள்ள 20 எம்,பி.க்கள் குரல் கொடுத்ததால் இத்தாலி வீரர்கள் இந்தியா திரும்பினர். ஆனால் பாண்டிச்சேரி உள்பட தமிழகத்தில் உள்ள 40 எம்.பி.க்கள் ஒருமித்த கருத்தோடு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் வாக்கு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி பேசி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

பாரதீய ஜனதா, இந்திய கம்னியூஸ்ட் போன்ற கட்சிகளின் தமிழகத்துப் பிரிவுகள் மட்டும் எங்களுக்கு ஆதரவு தந்தாலும் வட இந்தியாவில் உள்ள அக்கட்சிகளில் இருக்கிற பெரிய தலைவர்கள் ஆதரவு தருவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.