Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டில்லி மேலிடத்தின் பாரபட்ச நடவடிக்கை, இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் த.மா.கா.,:அப்பிரச்னைகளை மையப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை, இரண்டாக உடைக்க, மத்திய அமைச்சர் வாசனும், அவருடைய ஆதரவாளர்களும் தயாராகியுள்ளனர் என்றும், லோக்சபா தேர்தலுக்கு, மூன்று மாதம் முன், மீண்டும், த.மா.கா., உதயமாகும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆறு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் துவக்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படுதோல்வி:

தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிலைப்படுத்தி, லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழர்களின், நல்வாழ்வு மீது, காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு, பிரதானமாக எழுந்துள்ளது. சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் அடைந்த படுதோல்வி, லோக்சபா தேர்தலிலும் தொடரும் என்ற பீதி, காங்கிரஸ் கட்சியினருக்கு உருவாகியுள்ளது.மத்திய அமைச்சர் வாசனின் தீவிர ஆதரவாளரான ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டாகியும், மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட, டில்லி மேலிடம், சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இரு முறை நடந்த, இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற யுவராஜா, "புதிய உறுப்பினர்களை சேர்க்கவில்லை. இணைய தளம் மூலம், உறுப்பினர்களை சேர்க்கவில்லை, கோஷ்டிகளை வளர்க்கிறார்' என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரது பதவி பறிக்கப்பட்டது.அவருக்கு, மீண்டும் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என, டில்லி மேலிட தலைவர்களிடம் வாசன் வலியுறுத்தியும், அவரது கோரிக்கை எடுபடவில்லை.

பலன் கிடைக்கவில்லை:

மூப்பனார் மறைவுக்கு பின், காங்கிரஸ் கட்சியுடன் த.மா.கா., இணைக்கப்பட்ட பின், வாசனுக்கு மட்டும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் அடைந்தாரே தவிர, அவரது ஆதரவாளர்களுக்கும், பெரும்பான்மையான தொண்டர்களுக்கும், எந்த பலனும் கிடைக்கவில்லை.தி.மு.க., கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி கழற்றி விடப்பட்டுள்ளதால், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டியிட்டால், ஒரு "சீட்'டில் கூட, காங்கிரஸ் வெற்றி பெறாது என்ற பரவலான பேச்சும் வாசனை, தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்க வைத்துள்ளது.

சோவுடன் ஆலோசனை:

த.மா.கா., துவக்குவதற்கு பின்னணியில் செயல்பட்ட, "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமியை, நான்கு முறை வாசன் சந்தித்து பேசியுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்னைக்கு, வாசன் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், அவரது அணிக்கு, தமிழக மக்களின் ஆதரவு கிடைக்கும் என, வாசன் நம்புகிறார். அதனால் தான், பிரதமர் மன்மோகன் சிங்கை, வாசன் சந்தித்து, இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வாசன் வலியுறுத்தினார்.இலங்கை விளையாட்டு வீரர்கள், தமிழகத்திற்கு வரக்கூடாது என, முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக் கூடாது என, சட்டசபையில் தீர்மானம், மத்திய அரசின் மண்ணெண்ணெய் அளவு, தமிழகத்திற்கு குறைவாக தரப்படுகிறது என, முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு ஆகிய நடவடிக்கைகளை, வாசன் வரவேற்றுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்னைக்காக, இதுவரை சோனியாவை, ஏழு முறையும், ராகுலை, நான்கு முறையும், வாசன் சந்தித்து பேசியும், தன் கோரிக்கை நிறைவேறவில்லை என்ற ஆதங்கம், வாசனுக்கு நீறு பூத்த நெருப்பாக கனன்று வருகிறது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க.,வுக்கு "செக்' :

லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றால், அ.தி.மு.க., அணியில், ம,தி.மு.க., இடம் பெறும். தே.மு.தி.க., ஓட்டு வங்கியை, ம.தி.மு.க., ஓட்டு வங்கி சமப்படுத்த முடியாது. எனவே, தமிழக காங்கிரசை, வாசன் தலைமையில் உடைக்கும் போது, நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள், ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் காமராஜர், மூப்பனார் மீது கொண்டுள்ள அபிமானிகளின் ஓட்டுக்கள், தமிழக இளைஞர் காங்கிரஸ், தமிழக மாணவர் காங்கிரசின், 80 சதவீதம் ஓட்டுக்கள், வாசன் அணிக்கு கிடைக்கும். எனவே தே.மு.தி.க., ஓட்டுக்களை சரிக்கட்ட, வாசன் அணி ஓட்டுக்கள் பயன்படும் என அ.தி.மு.க., கருதுகிறது.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பினை ஒட்டுமொத்தக் குத்தகையாக வைத்திருக்கும் காங்கிரசினதும் அதன் கைக்கூலிகளான சிதம்பரம், இந்தியப் புலனாய்வுத்துறையும் சேர்ந்து நடாத்தும் நாடகம். இவை தமிழக மக்கள ஏமாத்தி ஓட்டுக்களப் பொறுக்கி அதன்பின்பு ஒன்றுசேர்வர். தினமலர் தமிழர்க்கு எதிரான ஒரு பத்திரிகை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் மிக அவதானமாக செயல்ப்பட வேண்டும்.. காங்கிரசின் மேலிட ஆசிர்வாதத்தோடு இது நடை பெறலாம் பிரிந்து நின்று தேர்தலில் வென்றவுடன் மறுபடியும் போய் ஒட்டி கொள்வார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு, சுண்டல் போன்றே நானும் நினைக்கிறேன்..! காங்கிரஸ் எதிர்ப்பு என்பது வெறும் கைச்சின்னத்தை எதிர்ப்பது அல்ல.. மாறாக அதை இயக்கியவர்களை, இயக்குபவர்களை, இனி இயக்கப்போகிறவர்களை எதிர்ப்பது. மற்றக் கட்சிகளுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.