Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா முஸ்லீம்களும் அவர்களின் ஆயுதக் குழுக்களும் - விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா முஸ்லீம்களும் அவர்களின் ஆயுதக் குழுக்களும் - விக்கிலீக்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:44 GMT ] [ நித்தியபாரதி ]


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சிறிலங்கா ஜம்தீ இஸ்லாம், தௌகிட் ஜமாத், தப்லீக் ஜமாத் மற்றும் ஜமதீ முஸ்லீம் ஆகிய நான்கு முஸ்லீம் குழுக்கள் செயற்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வோசிங்டனுக்கு அறிவித்ததாக விக்கலீக்ஸ் இரகசியச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி யூன் 09, 2004 அன்று 'நம்பகமானது' எனக் குறிப்பிடப்பட்டு சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்றி ஜே.லன்ஸ்ரெட்டால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக விக்கிலீக்ஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

"உள்ளக புலனாய்வின் முன்னாள் அதிகாரியான M.I. CADER என்பவர் தற்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்று தனியார் துறை ஒன்றில் பணிபுரிகிறார். இந்த அதிகாரி இறுதியாக முஸ்லீம் உள்ளக புலனாய்வுப் பிரிவு தொடர்பில் பணியாற்றியிருந்தார். சிறிலங்கா உள்ளக புலனாய்வில் பணியாற்றிய இந்த அதிகாரி சிறிலங்காவில் செயற்படும் முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் போன்றன தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்" இவ்வாறு அமெரிக்கத் தூதுவரின் இரகசியக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

"சிறிலங்காவின் கிழக்கில் செயற்படும் முஸ்லீம் குழுக்களை பாகிஸ்தானி ஒழுங்கமைப்பாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன்மூலம் முஸ்லீம் இளைஞர்கள் ஜிகாத், ஒசாமா, சதாம் போன்ற பல்வேறு பெயர்களுடன் சிறிலங்காவில் இயங்கிவரும் முகாங்களில் பயிற்சி பெறுகின்றனர். இந்த முகாங்களில் சுய பாதுகாப்பு தொடர்பாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் இங்கே ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகக் கற்பிக்கப்படுகிறதா என்பது அறியப்படவில்லை.

ஜிகாத்தில் போராடுவதற்காக சில சிறிலங்கா முஸ்லீம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றனர். இந்த முகாங்களில் பயிற்றுவிக்கப்படும் அடுத்த தொகுதியினர் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்கள் அங்கு பணிபுரிவதற்காக அல்லது கல்லூரிகளில் இணைவதற்காக அனுப்பப்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு சவுதியைச் சேர்ந்த World Assembly of Muslim Youth - WAMY என்கின்ற சிறிலங்காவில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று உதவுகின்றது என தகவல் வழங்குனர் கருதுகிறார்" என சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றியவர் தனது இரகசிய செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

"கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களை [தமிழீழ விடுதலைப் புலிகள்] எதிர்ப்பதற்காகவே சிறிலங்காவில் முஸ்லீம் ஆயுதக் குழு செயற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என இத்தகவலை வழங்கியவர் கருதுகிறார். ஏப்ரலில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட அரசியற் கட்சியான சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பு தனது ஆதரவை வழங்கியிருந்தது. இந்த அமைப்பில் 125 முக்கிய உறுப்பினர்கள் உள்ளனர். இந்த இஸ்லாமிய அமைப்பானது இராணுவ, புலனாய்வு, மத, அரசியல் கட்சிகளைக் கொண்டுள்ளது. இதன் அரசியற்கட்சித் தலைவரான மொகமட் அமீர் அலி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் கீழ் ஏப்ரலில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

அண்மையில் மட்டக்களப்பு பகுதியிலிருந்து வெளியேறிய, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போன்று வேறு தரப்புக்களிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பு கொண்டுள்ளதாக நம்பப்படுவதாக தகவல் வழங்குனர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட ஆயுதங்களையும் இந்த அமைப்பு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதன் உறுப்பினர்கள் இந்தியாவின் கஸ்மீர் பகுதியில் இராணுவப் பயிற்சியைப் பெறுவதாக தகவல் வழங்குனர் நம்புகிறார். இவர்கள் கஸ்மீரில் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் இத்தகவல் வழங்குனர் நம்புகின்றார். இந்தியாவின் பாதாள உலகைச் சேர்ந்தவரான டாவூட் இப்ராகிமுடன் சிறிலங்காவில் செயற்படும் இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பு தொடர்பைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. அமெரிக்காவின் நலன்களை இலக்கு வைத்து இந்த முஸ்லீம் ஆயுதக் குழு செயற்படுவதாக இத்தகவல் வழங்குனர் நம்பவில்லை" என அமெரிக்கத் தூதுவரின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிறிலங்காவின் கிழக்கிலுள்ள திருகோணமலை மாவட்டத்தில், நொக்ஸ் குழு, ஒசாமா குழு, ஜெற்றி குழு [அடிப்படையில் துறைமுகப் பணியாளர்களைக் கொண்டது] ஆகிய மூன்று குழுக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பால் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பணியாற்றுகின்றனர். இந்த மூன்று குழுக்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் துணையுடன் செயற்படுகின்றன. சிறிலங்காவின் கிழக்கில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், 150 ஆயுததாரிகளைக் கொண்ட முஜாகுதீன் குழு செயற்படுகிறது. இது திருகோணமலையில் செயற்படும் ஒசாமா குழுவை விட பலம் மிக்கது என தகவல் வழங்குனரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என அமெரிக்கத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"சிறிலங்காவின் பாதாள உலகத்திற்கும் முஸ்லீம் ஆயுதக் குழுக்களுக்கும் மிகப் பலமான தொடர்பிருப்பதாக இத்தகவல் வழங்குனர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தொடர்பானது ஆள், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. (கிழக்கில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்கள் மீனவர்களாவர்) சிறிலங்காவிலுள்ள பலமான பாதாள உலகக் கும்பல் கொழும்பின் மாலிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்ததாகும் என தகவல் வழங்குனர் உறுதிப்படுத்துகிறார். புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த போது கைவிடப்பட்ட ஆயுதங்களை இந்த பாதாள உலகக் கும்பல் கைப்பற்றிக் கொண்டதாக நம்பப்படுகிறது" என அமெரிக்கத் தூதரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

"புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் அமைச்சர் அதாவுல்லாவின் கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் முஸ்லீம் மத விவகார அமைச்சானது முஸ்லீம் ஆயுதக்குழுவுக்கு ஆதரவளிக்கின்றது. அமைச்சர் அதாவுல்லா எப்போதும் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையை எதிர்த்தே கருத்துக் கூறுவார். ஆனால் இவர் பாதாள உலகக் கும்பலான பன்டா குழுவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதாக நம்பப்படுகிறது. இந்தக் குழுவில் 50-60 பேர் காணப்படுகின்றனர். இந்தக் குழு அம்பாறை மாவட்டத்திற்கு நிதி மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. பன்டா குழு அமைச்சர் அதாவுல்லாவுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதாக நம்பப்படுவதாக தகவல் வழங்குனர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஒசாமா குழுவுக்கு ஆயுத மற்றும் தந்திரோபாய பயிற்சிகளை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது" என அமெரிக்கத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தத் தகவலை வழங்கியவர் இத்தகவலை உறுதிப்படுத்தாவிட்டாலும் கூட சிறிலங்காவின் கிழக்கில் முஸ்லீம் ஆயுத அமைப்பு செயற்படுகின்றது. இது சிறிலங்காவின் கலாசார, அரசியல் மற்றும் மத விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றது. தகவல் வழங்குனரால் குறிப்பிடப்பட்ட அரசியற் கூட்டணிகள், மாணவர் செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், ஆயுதக் குழுக்கள், பாதாள உலகக் கும்பல்கள் போன்றன தொடர்பான தகவல்கள் சிறிலங்காவில் அமெரிக்க நலனை அச்சுறுத்துவதற்கு முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன என்பதை மதிப்பாய்வு செய்வதற்கான நல்லதோர் வாய்ப்பாக காணப்படுகின்றது.

முஸ்லீம்களைக் கொண்ட பாதாள உலகக் கும்பல்களால் தற்போது பரவலாக ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. போலியான அமெரிக்க கடவுச்சீட்டுக்கள், ஆவணங்கள், நுழைவிசைவுகள் போன்றன வழங்கப்படுகின்றன. இவற்றைக் கண்டறிவதற்கு இத்தகவல்கள் உதவுகின்றன. தற்போது முஸ்லீம்களால் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் நடவடிக்கையானது சிறிலங்கா, இந்தியா, சைப்பிரஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறுகிறது. அமெரிக்கா இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது சிறிலங்காவில் கிழக்கில் உள்ள புலிகள் அமைப்பால் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காகவே முஸ்லீம் ஆயுதக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது பணியை விரிவுபடுத்தலாம். இதனால் இது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இந்த விவகாரத்தை சிறிலங்காவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்தும் கண்காணிக்கும்" என இச்செய்திக் குறிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல் வழிமூலம் : Colombo Telegraph
மொழியாக்கம் : நித்தியபாரதி


http://www.puthinappalakai.com/view.php?20130407108065

இப்பொழுது பிரசுரிக்கப்படும் இந்த செய்தி பொது பல சேனாவிற்கு பலம் சேர்ப்பதாக அமையும்.

Who's the informer ?

Who's the informer ?

 

இணைவுக்கு நன்றி. யாழ் களம் தமிழ் களம், எனவே தமிழில் எழுதுங்கள்.

கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, மாளிகாவத்தை, நீர்கொழும்பு, குருநாகல், சிலாபம், புத்தளம், வவுனியா, மன்னார் பகுதிகளில் கடந்த 15 வருடங்களில் முளைத்த முஸ்லிம்களின் பெரும்பாலான பெரிய ஹோட்டல்களின், உணவகங்களின் பின்னணியில் இந்த இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களே உள்ளன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.