Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு டில்லிக்கு வருமாறு இந்திய எம்.பிக்கள் குழு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_5929.JPG
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக டெல்லிக்கு வருமாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தனர்.

கொழும்பு தாஜ் சமுத்திராவில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக்,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,முன்னால் துதுவர் முஹம்மத் மஹ்ரூப் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலம் இடம் பெற்ற இந்த சந்திப்பில்,தற்போதைய இலங்கையின் போருக்கு பிந்திய நிலைமைகள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீனினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன்,வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் தற்போதைய மீள்குடியேற்றத்தின் காணப்படும் தடைகள் புள்ளி விபரங்களுடன்  இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் ஒரே சமூகம் என்ற வகையில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் எவ்வித பிரச்சினைகள இல்லையென்பதை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு  கொண்டுவரப் பட்டது டன், இம்மக்களுக்கிடையில் சில அரசியல்வாதிகளும்,மதவாதிகளும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வேலைகளை செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய முஸ்லிமக்ளின் மீள்குடியேற்ற சூழலில்,இம்மக்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களோ,சர்வதேச அமைப்புக்களோ முன்வராமை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

லங்கையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லையென்றும்,இதனை அறிந்து கொள்ள தங்களுடனான சந்திப்பு வழியினை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல்வேறு சந்தரப்பங்களில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள், தொடர்பில் சர்வதேச நாடுகள்,மற்றும் அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதும்,அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை, அதே வேளை இலங்கைக்குள் காணப்படும் பிரச்சினைகளை தாங்களாகவே பேசி தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதை  மையப்படுத்தியே ,இம்மக்களது மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தவில்லையென்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதி நிதிகள் எடுத்துரைத்தனர்.

அதே வேளை  சிறுபான்மையாக வாழும் ஒரு சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சினைகள் உற்று நோக்கப்பட வேண்டியதொன்று என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு கருத்துரைத்தனர்.தாங்கள் அறிந்து கொண்ட இந்த விடயங்களை இந்தியா திரும்பியதும்,சக பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்,இன்றைய சந்திப்பின் தொடராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதி நிதிகள் குழுவொன்றை டில்லிக்கு வருகைத் தருமாறும் அழைப்பும் விடுத்தனர்.
DSC_5935.JPG

DSC_5940.JPG


 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/63608-2013-04-10-18-20-16.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்"

 

றிசாத் வன்னி மினிஸ்டர் கூபிட்டிருக்கு, சென்ட்ரல் மினிஸ்டர் ஹக்கீம கூப்பிடலயா?

 

உலமா சபை, உம்மா சபை, வாப்பா சபை, ஜிகாத் சபை அதுகளோட தான் பேச்சு வார்த்தை தேவை. அவங்களுக்கு தான் அழைப்பு விடுக்கணும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இந்தியாவில் 

இருக்கும் ஒற்றுமையை என்னவென்பது .

ஏன்  இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் சிறிலங்காவில் இருக்கும் முஸ்லீம்களுக்கு 

ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.