Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கைக்கான இந்திய உதவிகள் தொடரும்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

130411093719_indian_foreign_sec_512x288_

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் போக்குவரத்து மற்றும் தொலைதொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கும், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவி வழங்கி வருகின்றது. இந்த உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலர் ராகவன் கிளிநொச்சியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களின் சேதமடைந்த வர்த்தக நிலையங்களைப் புனரமைப்பதற்கான இந்திய அரசின் நிதியுதவியை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். 

இலங்கை வணிகர் மன்றங்களின் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கமைய இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன், 1230 வர்த்தகர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த சில மாதங்களாக, வட இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ள அவர் அங்கு குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார வளர்ச்சியில் அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

விரைவில் தலைமன்னார் - ராமேஸ்வரம் கப்பல் சேவை

அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுவதற்காகத் தான் அங்கு வரவில்லை எனக் கூறிய அவர், வடபகுதியில் அழிந்து போயுள்ள ரயில் பாதைகளை அமைப்பதிலும், காங்கேசன்துறை துறைமுகத்தை மீள கட்டியெழுப்பவும், உதவியுள்ள இந்திய அரசாங்கம், கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவையைப் போன்று தலைமன்னார் - ராமேஸ்வரம் கப்பல் சேவையையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். 

இந்திய வீட்டுத்திட்டப் பணிகள் நல்லமுறையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதை நேரில் கண்டதாகக் கூறிய அவர், யாழ்ப்பாணத்தின் மீன்வலை உற்பத்தி தொழிலகத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கான உதவியையும், பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பணிகளை மேம்படுத்துவதற்கான இயந்திரத் தொகுதியையும் இந்தியா வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

இச்த வைபவத்தி;ல் இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம், இந்தியத் தூதரகத்தின் முதல் செயலளார் ஜஸ்டின் மோகன், நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், வணிகர் மன்றங்களின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத் தலைவர்கள், வணிகர் மன்றங்களின் ஒன்றியத்தின் ஆலோசகர் டபிள்யு.ஜே.சூசைரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130411_indianhelps.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவி எண்டு ஏமாத்துறாங்கள்.

 

உந்த கப்பல் சேவை எல்லாம் ஓல்ட் பாசன்,

 

எரித்ரியாவில இருந்து எயர்போர்ஸ் 1 னில வந்து இரணை மடுவில இறங்கேக்க  தான் உவைக்கு புரியும் புலிகள் யாரண்டு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கைக்கான உதவிகள் இந்தியாவினால் நிறுத்தப்பட்டால்

இலங்கையில் இருக்கும் ஒட்டுக்குழுக்களுக்கு ஆபத்தாம்

அதனால் தொடரவேண்டிய நிலையில் இந்தியா இருக்கின்றது :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.