Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருள் நிரப்பி ஏவுகணைகளைத் தாக்குதலுக்குத் தயார்படுத்தியது வடகொரியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
missiles-1142013-150.jpg

தென் கொரியா மற்றும் அமெரிக்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த, எரிபொருள் நிரப்பி ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது வடகொரிய ராணுவம். இதனால் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் வடகொரிய அரசு 3வது ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த வடகொரிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் யுன் பியுங் சி எச்சரித்துள்ளார்.

  

சீனா மற்றும் ரஷ்ய நாடுகள் இந்த பிரச்னையில் தலையிட்டு வடகொரியாவின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், தென் கொரியா மற்றும் இந்நாட்டுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவை மிரட்டும் வகையில், ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது வடகொரிய அரசு.மேலும், எரிபொருள்களை நிரப்பி எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கொரிய பகுதியில் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.

 

குறிப்பாக வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹம்கியாங் மாகாணத்தின் எல்லை பகுதியில் ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எந்த நேரத்திலும் தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். இதை தடுக்க வேண்டும் என்று உலக நாடுகளை தென் கொரிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வடகொரிய தலைவராக கிம் ஜாங் யுன் பதவியேற்று ஓராண்டு முடிய போகிறது. இவருடைய தந்தை கிம் ஜாங் -2வின் நினைவு தினம் அடுத்த திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது. கிம்மின் தாத்தாவும் வடகொரியா உருவாக முக்கிய தலைவராக விளங்கியவருமான கிம்- 2 சங்கின் பிறந்த தினமும் கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் 4வது முறையாக ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாக திட்டமிட்டுள்ளது என்று தென் கொரிய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

 

இதற்கிடையில், தென் கொரியாவில் 28 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளனர். இவர்களும் தென் கொரிய வீரர்களும் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகொரியா தாக்குதல் நடத்தினால், எதிர் தாக்குதல் நடத்த இருநாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80240&category=WorldNews&language=tamil

15ஆம் திகதிக்குள் வடகொரியா தாக்குதல் நடத்தும்!

 

http://tamilworldtoday.com/archives/4494

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.