Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை-நிதின் குப்தா,அய்.அய்.டி-மும்பை.
மிகவும் சுவாரசியமானதும், நமது விழிகளை விரியச் செய்வதுமான ஒரு கட்டுரை இங்கே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ரசிக்கத் தயாராகுங்கள்.

 

இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை என்று மும்பை அய்.அய்.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் நிதின் குப்தா ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார்.

எல்லோருக்கும் இந்த பதில் சற்று வியப்பாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் நடப்பதைப் பார்த்தப் பிறகு, நான் இந்தியனாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்ற ராகுல் காந்தியின் அங்கலாய்ப்புக்கு நிதின் குப்தா கொடுத்துள்ள பதில் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
இதோ நிதின் குப்தாவின் கட்டுரை:-

உத்திரப்பிரதேசத்தைப் பார்த்து வெட்கப்படாதீர்கள். காங்கிரசு தான் உத்திரப்பிரதேசத்தை விடுதலைக்கு முன்பும், விடுதலைக்கு பிறகும் என 1939 லிருந்து 1989 வரை ஆண்டுள்ளது. உன் பாட்டி இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசர நிலைப் பிரகடனம் மற்றும் இருமுறை நடந்த இடைக்கால ஆட்சி நீங்கலாக.
இந்தியாவின் 14 பிரதமர்களில் 8 பேர் உ.பி. யில் இருந்து வந்தவர்கள்.அதில் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள்.
உங்கள் கட்சிதான் அரை நூற்றாண்டுக் காலமாகவும், அரை டசன் பிரதமர்களும் இந்த மாநிலத்தில் இருந்து நாட்டையும், மாநிலத்தையும் ஆண்டுள்ளனர்.முலாயம் சிங் ஆட்சிக்கு வந்ததற்கு காரணம், உங்கள் கட்சி உ.பி.யில் காந்தியவாதியாக தங்களுடைய கொள்கையில் நடந்துக்கொள்ளதது தான்.ஆக 50 ஆண்டு கால காங்கிரசு கட்சி மற்றும் அதன் தலைவர்களின் பொன்னான ஆட்சியினால் தான், இப்படிப்பட்ட ஒரு கட்டத்திற்கு உ.பி மாநிலம் தள்ளப்பட்டுளது என்பதை நீ சிந்தித்துப் பார்த்தால் ஒருகால் உங்களுக்கு உண்மை விளங்கலாம்.
ஆகையினால் இன்னும் நீ வெட்கப்படுவதற்கானத் தருணம் வரவில்லை அ(எ)ருமை ராகுல் அவர்களே.. கடந்த காலத்தில் உங்கள் கட்சி விவசாயிகளைச் சுரண்டவதற்காகப் பயன்படுத்திய அதே சட்டங்களையும், வழிமுறைகளையும் தான் தற்போது மாயாவதி பயன்படுத்தி வருகிறார்.

நீண்ட நெடுங்காலமாக ஆட்சியில் இருந்த உன் கட்சி ஏன் இந்தச் சட்டத்திட்டங்களை மாற்றவில்லை?
மாயாவதி செய்வதை நான் நியாயப்படுத்தவில்லை.மாயாவதி செய்துக் கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.ஆனால் உன் கட்சியின் கடந்தக்கால ஆட்சியையும், தற்போது உன் விமர்சன்ங்களையும் வைத்துப் பார்க்கும் போது, உன் நோக்கம் மற்றும் நிலைத்தன்மை மீது கேள்வி எழுகிறது.
நீ கட்டாயம் வெட்கப்பட வேண்டும்.ஆனால் ஏமாற்றமோ அதிருப்தியோ அடைய வேண்டாம். நான் சில சம்பவங்களை இங்கு எடுத்துக்காட்டாகத் தருகிறேன்.

நீ கண்டிப்பாக வெட்கப்பட வேண்டுமா?
சுவிசு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்ப்பட்டியலை ஏன் கொடுக்க மறுக்கிறார் என்பதை முதலில் பிரணாப் முகர்சியிடம் கேளுங்கள்.

அசன் அலி மீதான விசாரணையை யார் இழுத்தடிக்கிறார்கள் என்று உன் அம்மாவிடம் கேள்?
மேலும் கேள், இரணடாம் அலைக்கற்றை (2G) ஊழலில் 60% பணமூட்டை யாருக்கு கிடைத்தது என்று?
பொதுவாய விளையாட்டுப் போட்டி ஊழலில் (cwg) சில நூறு கோடிகளைத் தான் கல்மாடி களவாடினார். மீதியை யார் அள்ளிக்கொண்டார்கள்?

இந்தியன் ஏர்லைன்சை என்ன செய்தீர்கள்? ஏன் அது வருமானம் வரும் வழித்தடங்களில் பயனிக்கவில்லை? என்று பிரபுல் பட்டேலிடம் கேள்? உன் கட்சியை சேர்ந்த மந்திரிகளின் வேண்டுமென்றே செய்யப்பட்டத் தவறுகளுக்கு ஏன் வருமான வரி செலுத்தும் மக்கள் ஏர் இந்தியாவிற்கு பணம் செலுத்த வேண்டும்?
மேலும் உங்களால் ஒரு வானூர்தி சேவையை ஒழுங்காக நடத்த முடியவில்லை, நீங்கள் நாட்டை வழிநட்த்துவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது? 

எது/ஏன் உங்களை அமைதியாக வைத்துள்ளது என்று மன்(னு)மோகன் சிங்கிடம் கேள்?
கல்மாடியும், அ.ராசாவும் பலியாடுகள் தான், சில பெரியத் தலைகளின் பெயர்களைக் காப்பாற்றுவதற்காக. 1992 ல் நடந்த பங்குச் சந்தை முறைகேட்டில் எப்படி அர்சத் மேத்தாவோ அது போல.
20,000 க்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்ட போபால் நச்சு வாயுக்கசிவு சம்பவத்தின் குற்றவாளியை யார்த் தப்பிக்க விட்டார்கள்?

1984 ல் நடந்த சீக்கியர்களின் படுகொலைக்கு காரணகர்த்தா யார்?
உயர் நீதி மன்றம் இந்திரா காந்தியின் லோக் சபா வெற்றியை செல்லாது என்று அறிவித்த பின்பும், 76-77 ல் எப்படி நாட்டை அவசர நிலைக் கட்ட்த்திற்குத் தள்ளினார் என்பதையும் படித்துப் பார். அவர் எந்த அளவிற்கு மக்களாட்சியையும் நீதியையும் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் ம(மி)தித்தார் என்பதை என்னால் பந்தயம் கட்ட முடியும்.

இவற்றிற்கான விடைகள் உனக்கு ஏற்கனவே தெரியும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆக என்னுடையக் கேள்வி, மாயாவதி, உன் குடும்பம் மற்றும் உன் கட்சி இவற்றில் ஏன் இரட்டை நிலைப்பாடு அல்லது இரட்டை வேடம் கொண்டிருகிறாய்?

நான் மாயாவதியைக் கண்டிக்கிறேன். ஆனால் அவர் ஒருவரைப் பார்த்துதான் நீ வெட்கப்பட வேண்டுமா? உனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி என்ன நிலைப்பாடு? நாட்டின் முன்னேற்றத்திற்கு(இழிநிலைக்கு) அவர்களின் பங்களிப்பானது ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது.

விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்ட்தைப் பற்றி பேசுகிறாயே, உன் கட்சியின் கீழ் உள்ள விதர்பாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர், அது உன்னை வெட்கப்பட செய்யவில்லையா?
உன் கட்சி 72,000 கோடி உருவா விவசாயக் கடன்களை கொடுத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் விவசாயிகளுக்குப் போய் சேராதக்காரணத்தினால் தானே அவர்கள் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.
ஆக ஏழைக் கிராமவாசிகளுடன் உட்கார்ந்து உணவு உட்கொள்ளுவது போல புகைப்படம் எடுத்து அதன் மூலம் புகழ் தேட, ஆதாயம் தேட நினைப்பதற்குப் பதிலாக, உன் கட்சியின் கீழ் உள்ள ஆட்சிப் பகுதியில் ஏன் உன் கொள்கைகளை நீ பரிசீலிக்கக் கூடாது?

பொதுப் பணத்தை எடுத்து விவசாயக் கடங்கள் என்றப் பெயரில் கொடுத்து அந்தப் பணத்தைக் கையாடல் செய்த உன் கட்சியைப் பார்த்து வெட்கப்படு.

ஏன் உ.பி-யில் நடந்தக் கைதை மட்டும் விளம்பரப்படுத்துகிறாய்?
2001 செப்டம்பரில் போசுடன் வானூர்தி நிலையத்தில் வைத்து எப்.பி.அய் (F.B.I) யினால் நீ கைது செய்யப்பட்டாய், உன் நினைவலைகளை சற்றுப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் அ(எ)ருமை ராகுல் அவர்களே..
1,60,000 அமெரிக்க டாலர் பணத்தை எடுத்து சென்றீர்கள், ஏன் அவ்வளவு பணத்தை எடுத்து சென்றீர்கள் என்று உங்களால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. உன்னுடன் உனது தோழியான “வெரொனிக் கார்டெல்லி” இருந்தார். இவர் யார்? பிரபல போதைக்கும்பல் தலைவனின் மகள் தானே. இது எதேச்சையான நிகழ்வா என்பது வாசர்களின் சிந்தனைக்கு.

ஒன்பது மணி நேரம் நீ வானூர்தி நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தாய். பின்னர் திரு.வாஜ்பாய் அவர்களின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டாய். அதுவும் இங்கு முதல் தகவல் அறிக்கைக்கு ஒப்பான ஒரு வழக்குப் பதிவை எப்.பி.அய் மேற்கொண்டப் பிறகுதான் விடுதலை செய்தார்கள். இந்தக் கைதைக் கண்டுக்கொள்ளாமல் விடும்படி எப்.பி.அய்-யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலாக உன்னிடமிருந்து கடிதம் ஒன்றை எப்.பி.அய் கேட்டது.

“உன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனில் எப்.பி.அய்-யிடம் இதுப் பற்றி பேச எங்களுக்கு அனுமதி வழங்குங்கள்” என்று உனக்கு எழுதியக் கடிதத்தில் சுப்ரமணிய சாமி குறிப்பிட்டுள்ளார். உன்னிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்தக் கைது ஏன் முதன்மை செய்தியாக வரவில்லை ராகுல்? ஒருகால் “நான் இந்தியனாக இருக்க வெட்கப்படுகிறேன்” என்று நீ ஊடகங்களிடம் சொல்லியிறுக்கலாம்.

அல்லது நீ போலியானக் கைதைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுவாய். (உ.பி-யில் நடந்தது) உண்மையானக் கைதை அல்ல ( போசுடனில் நடந்தது). அப்படிதானே. தயவுகூர்ந்து பதிலளிக்கவும்.
எதாவது ஒரு தருணத்தில் நீ வெட்கப்பட விரும்பினால், தொடர்ந்துப் படிக்கவும்.
2004ல் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தார் என்று உன் அம்மா அழைக்கப்படுகிறார்.
இந்தியக் குடியுரிமையியல் சட்ட்த்தின் படி, வெளிநாட்டை சேர்ந்தவர் இந்தியக் குடியுரிமை பெறும் போது அல்லது குடிமகனாக ஆகும் போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியர்களுக்கான அனைத்து சட்டத்திட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும் அவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும்.(படிக்கவும் பின்ணிணைப்பு 1&2)

நீ இத்தாலியில் பிறந்தவராக இருப்பினும் நீ இத்தாலியின் பிரதமராக வரமுடியாது.அதேபோல இத்தாலி நாட்டு குடிமக்களும் இந்தியாவின் பிரதமராக வரமுடியாது, அவர் இங்கே பிறக்காமல் போனால்.
மே-17,2004, மாலை 3.30 மணிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் உன் அம்மாவிற்கு அனுப்பியக் கடிதத்தில் இதே சட்டவிதிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதே நாளில் மாலை 5 மணிக்கு பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் மன்(னு) மோகன் சிங் உள்ளே இழுத்து வரப்பட்டார். உன் அம்மாவால் இயற்றப்பட்ட மற்ற தியாகம் செய்யும் நாடகங்கள் அனைத்தும் ஒரு கண் துடைப்பே.

இப்படி இருக்கும் போது, உன் அம்மாவே வெவ்வேறு மக்களவை உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட 340 ஆதரவுக் கடிதங்களைக் குடியரசுத் தலைவர் திரு.கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அதில் ஒரு கடிதத்தில், சோனியா காந்தியாகிய நான் ரேய் பாரலியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராக ஆவதற்கு இக்கடிதத்தின் மூலம் முன்னிலைப்படுத்த விழைகிறேன்.

ஆக உன் அம்மாவிற்கு உண்மைத் தெரியும் வரை அல்லது சட்டச்சிக்கல் தெரியும் வரை அவர் மிகவும் விருப்பத்துடனேயே இருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆக உன் அம்மா எந்தத் தியாகங்களையும் செய்யவில்லை. அவரால் பிரதமராக ஆகமுடியாது என்பதே உண்மை நிலைமை.
இதைப் பார்த்து நீ வெட்கப்பட்டிருக்கலாமே அ(எ)ருமை ராகுல் அவர்களே!!!
உங்களைப் பற்றி சற்றுச் சிந்தியுங்கள்

ஆர்வார்ட் பல்கலைக்கழகத்தில் கட்டணக்கல்விப் பிரிவிலே நீ சேர்ந்தாய்.அதே ஆண்டு ராசீவ் காந்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, ஆர்வார்ட்க்கு 11 மில்லியன் டாலர் இந்துசா சகோதரர்களால் கொடுக்கப்பட்டது. பிறகு 3 மாதத்தில் நீ அந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டாய்.இதில் வருத்தம் என்னவெனில் அந்த நேரத்தில் மன்(னு)மோகன் சிங் ஆர்வார்டின் தலைமைப் பொறுப்பில் இல்லை. இல்லையெனில் உனக்கு வாய்ப்புக் கிடைத்திருந்திருக்கும்.என்ன செய்ய உன் கெட்ட வாய்ப்பு, ஒரே ஒரு மன்(னு)மோகன் சிங் தான் உள்ளார்.

ராசீவ் கொலை செய்யப்பட்டக் காரணத்தினாலேயே நீ ஆர்வார்டிலிருந்து நீக்கப்பட்டாய் என்றும் சிலக் கருத்து நிலவுகிறது. இருக்கலாம். ஆனால் பிறகு என்ன *********** நீ பொருளாதார வல்லுனர்னு பொய்ப்பேசித் திரியிர. அதுவும் ஆர்வார்டிலிருந்து.

நீ இந்தி தேர்விலும் தேர்ச்சிப் பெறவில்லை. ஆனால் நீ, மிக அதிக அளவில் இந்திப் பேசப்படும் மாநிலத்தில் இருந்து முன்னிருத்தப்பட்டிருக்கிறாய்.

உன் அம்மாவின் கல்வித் தகுதி
கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றதாக வேட்புமனுத் தாக்கலின் போது தன்னுடையக் கல்வித் தகுதியில் உன் அம்மாக் குறிப்பிட்டுள்ளார். [பார்க்க பின்ணிணைப்பு-6,7,-37அ]
கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தைப் பொருத்தமட்டில், சோனியா என்றப் பெயரில் ஒரு மாணவரும் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டது.[பார்க்க பின்ணிணைப்பு-7-39]. இது தொடர்பாக சுப்பரமணியசாமி தொடர்ந்த வழக்கில், சோனியா தனது வேட்புமனுத் தாக்கலின் போது கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சையை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனியா உயர்நிலைக் கல்வியையேத் தாண்டவில்லை, வெறும் அய்ந்தாவது மட்டுமே தேர்ச்சிப் பெற்றவர். இந்தச் சூழ்நிலையில் அவர் தன் கல்விப் பின்புலத்தை தனது இரண்டாம் அலைக்கற்றை வழக்கின் குற்றவாளி கருநா(ய்)நிதியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.

நீயும், உன் அம்மாவும் உங்களுடைய கல்வித் தகுதியை பொய்யாகக் காட்டியுள்ளீர்கள். பிறகு “அரசியலிலே படித்த இளைஞர்கள் வேண்டும்” என்று வேறு சொல்லுகிறீர்கள். காந்தி தென் ஆப்பிரிக்கா சென்று தனது பட்டப்படிப்பை முடித்து முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்று, பின்பு தென் ஆப்பிரிக்க மக்களுக்காக அவற்றை விடுத்து போராடினார். பின்புதான் இந்தியாவிற்காக போராடினார்.

ஏன் கல்வித் தகுதியைப் பொய்க் கூறவேண்டும்
தலைசிறந்த தலைவராக வருவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை தான். ஆனால் பிறகு ஏன் நீயும் உன் அம்மாவும் பொய்யான கல்வித்தகுதியைக் காட்ட வேண்டும். 

உனது கல்வித் தகுதியில் பொய் பேசியதற்காக நீ வெட்கப்பட்டிருந்திருக்க வேண்டும். இப்படி பொய் பேசியதற்கு உன்னிடம் காரணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். காரணம் இந்தியாவில் நாங்கள் கல்வியை மதிக்கின்றோம்.ஆனால் நீ ஒரு முன்மாதிரி இளைஞனாக இருக்கும் போது யார் கல்வியைக் கருத்தில் கொள்கிறார்கள்?

முன்மாதிரி இளைஞர்
நீ உன்னுடைய 38வது அகவையில் தான் முதல் முறையாக உள்ளூர் தொடர்வண்டியில் பயணப்பட்டாய். தேர்தல் பரப்புரைக்காக சில சிற்றூர்களுக்கு சென்றாய்.அதனால் முன் மாதிரி இளைஞர் என்ற பட்டத்தை வென்றுள்ளாய்.

அன்றாடம் 25 மில்லியன் மக்கள் தொடர்வண்டியில் பயணிக்கின்றார்கள்.நீ தான் முதல் ஆள், தொடர்வண்டியில் பயணித்ததற்காக முன் மாதிரி இளைஞர் என்ற பெயரைப் பெற்றுள்ளாய். ஆயிரமாயிரம் அஞ்சலக ஊழியர்கள் அஞ்சல்களை எடுத்துக்கொண்டு பல சிற்றூர்களுக்கு செல்கின்றார்கள். அவர்களில் யாருக்கும் முன் மாதிரி இளைஞர் என்ற பெயர் இதுவரைக் கிடைக்கவில்லை. நீ இளைஞனுமல்ல, முன் மாதிரயான ஆளுமல்ல. ஆனால் இன்னும் நீ முன் மாதிரி மற்றும் இளைஞர்களாக இருக்கக் கூடிய ராகுல் டிராவிட் போன்ற போட்டியாளர்களை தோற்கடிக்கிறாய்.

சேக்சுபியர் சொல்கிறார், பெயரில் என்ன இருக்கிறது என்று? அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாமே பெயரில்தான் இருக்கிறது, அதுவும் குடும்பப்பெயரில்.
உன்னுடைய குடும்பப் பெயரைப் பற்றி பேசுவோம்.

நீ உண்மையாகவே காந்தியை மதிக்கிறாயா? அல்லது பணத்தில் அவரது சிரித்தப் படம் இருக்கிறது என்பதற்காகவா? ஏனெனில் உன்னுடையக் கடவுச்சீட்டில் உன் பெயர் ராகுல் காந்தி அல்ல, ராகுல் வின்சி. நீ காந்தி என்று உன் குடும்பப் பெயரை எழுதியிருந்தால் அந்த வார்த்தைத் தரும் உணர்ச்சிகள் என்ன என்பதை பட்டறிந்து உணர்ந்திருப்பாய். உன் குடும்ப மக்கள் தான் காந்தி என்ற பெயரை தேர்தலில் போட்டியிடும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் அதிகம் பயன்படுத்துவதில்லை. அங்கதானே முழு அர்த்தமும் அடங்கியிருக்கு. கொஞ்சம் சிந்தித்துப் பார் உன்னுடையப் பெயரை ராகுல் வின்சி என்று வைத்துக் கொண்டுத் தேர்தலில் போட்டியிட்டால்.

உலகப்புகழ் பெற்ற தலைவர்களான நெல்சன் மண்டேலா, இளைய மார்டின் லூதர் கிங் மற்றும் சான் லெனான் போன்று காந்தியும் காந்தியும் ஒருவர். அவர் பெயரைக் கலங்கப்படுத்துவதுதான் வருத்தமாக இருக்கிறது. உன் நேருக் குடும்பம் மற்றும் உன் கட்சியை சேர்ந்தவர்களால், மேற்குறிப்பிட்டத் தலைவர்களைப் போல் மக்களை வசிகரிக்க இயலாதக் காரணத்தால், தேர்தலில் போட்டியிடும் போது மட்டும் காந்தியின் பெயரைப் பயன்படுத்துவது. ஆனால் கடவுச்சீட்டில் வசதியாக வேறு ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்வது. உன்னுடைய இந்த இரட்டை நிலைத் தன்மைக் குறித்து நீ வெட்கப்படலாமே.

அரசியலில் இளைஞர்கள்
இப்போது நீ அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்கிறாய். நீ முதலில் அரசியலில் சேர். ஏனெனில் நீ இன்னும் அரசியலில் சேரவில்லை, நீ சேர்ந்திருப்பது குடும்பத் தொழிலில். 
முதலில் நீ அரசியலிலே சேர்ந்து ராகுல் காந்தி என்றப் பெயரைப் பயன்படுத்தாமல் ராகுல் வின்சி என்றப் பெயரைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வென்றுக்காட்டு. பிறகு வந்து இளைஞர்களையும் படித்தவர்களையும் அரசியலிலே ஈடுபடக் கூப்பிடு.

 

அதுவரைக்கும் சச்சின் பைலட், மிலிந்த் தியோரா மற்றும் நவீன் சின்டால் போன்ற இளைஞர்கள் அரசியலிலே இணைந்துள்ளனர் போன்ற அடுத்துக்காட்டுகளைக் கொடுக்காதே. அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் அரசியல்வாதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அதேபோல அபிசேக் பச்சன் மற்றும் நடிகர்களின் மகன்கள் நடிகர்கள் அல்ல.அவர்கள் நடிகர்களாக மாறியுள்ளனர். ஆக நீ உன் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வரை இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை நிறுத்திக்கொள்வாய் எனில் நாங்கள் உன்னைப் பாராட்டுவோம்.

நாங்கள் ஏன் அரசியலிலே சேரமுடியாது
ராகுல், புரிந்துக் கொள், உன் அப்பா இறக்கும் போது சுவிசு வங்கியில் உன் குடும்பக் கணக்கில் நிறையப் பணத்தைப் போட்டு வைத்திருந்தார். சாதாரண இளைஞர்கள் வாழ்வதற்காக உழைக்க வேண்டியுள்ளது. ஆனால் உன் குடும்பம் வாழ்வதற்கு காங்கிரசு என்ற கட்சி தேவை. எங்கள் அப்பாவும் ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்திருந்தால் நாங்களும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நாங்கள் உழைக்க வேண்டியுள்ளது. எங்களுக்காக மட்டுமல்ல. உனக்காகவும் தான். அதனால் தான் எங்கள் வருமானத்தில் 30% அய் வரியாக செலுத்த வேண்டியுள்ளது.பிறகு அது வேறொரு புரியாத பெயரில், உன்னுடைய சுவிசு வங்கிக் கணக்கிற்கு அப்படியே மாறிப் போய்விடும்.

ஆக, இளைஞர்கள் அரசியலுக்கு வராத்தைப் பற்றி கவலைப்படாதே. உன்னுடைய தேர்தல் சுற்றுப்பயணங்களுக்கும், சிற்றூர்களுக்கான உலங்கு வானூர்திப் பயணங்களுக்கும் தேவையானப் பணத்தை நாங்கள் எங்கள் உழைப்பின் மூலம் சிறப்பாகவேத் தருகிறோம்.உன்னைப் போல அரசியல்வாதிகளுக்கு கொடுப்பதற்காக யாராவது ஒருவர் சம்பாதித்து தானே ஆக வேண்டியுள்ளது.

ஏர் இந்தியா, கே.ஜி வாயுப் பிரிவு, இரண்டாம் அலைக்கற்றை, பொதுவாயப்போட்டி, சுவிசு வங்கிக் கணக்கு விவகாரம், அசன் அலி, கே.ஜி.பி, எப்.பி.அய் கைது, அரசியலில் உன் குடும்பம் ஒரு பணம் பறிக்கும் எந்திரமாக மாறியிருப்பது. இவற்றைப் பற்றியெல்லாம் நீ வெட்கப்படு.

நீ காந்தியின் இரத்தவழி வந்தவன் இல்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. காந்தி என்பது ஒரு தத்துப்பெயர், கடன் வாங்கியப் பெயர். இந்தப் பெயரிக்காக உன் பாட்டி இந்திரா, மோகன்தாஸ் கரம் சந்து காந்தியின் மகனைத் திருமணம் செய்யவில்லை.

காந்தியின் உயிரணுக்களில் ஒன்றேனும் உன் அணுக்களில் இருந்தால், நீ பணத்தை மட்டுமே சம்பாதிக்கும் குறிக்கோளை கொண்டிருக்க மாட்டாய்.
காந்தி அவர்கள் தனது பெயரைப் பதிவு செய்து, உரிமம் வாங்கியிருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதற்கிடையில், சோனியா தனது பெயரின் ஆங்கில முதல் எழுத்தான S அய் நீக்கிவிட்டு $ என்ற எழுத்தையும், ராகுல் தனது முதல் எழுத்தான R என்ற ஆங்கில எழுத்திற்குப் பதிலாக புதிய இந்திய ரூபாய்க் குறியீட்டையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“நான் இந்தியன் என்று என்னை அழைத்துக்கொள்ள வெட்கப்படுகிறேன்” என்று சொல்லும் உன்னை அப்படி கூப்பிட எங்களுக்கு கூடத் தான் வெட்கமாக இருக்கிறது. பிரபல ஊடகங்களெல்லாம் உங்களால் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது மிரட்டப்பட்டோ இது போன்ற செய்திகளை வெளிவிடாமல் கட்டுப்படுத்தப் படுகின்றன.
இன்றும் சமூக ஊடகங்கள் மக்களாட்சித் தளத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது என் யூகம். இப்போது அதற்கும் தணிக்கை வைக்க முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், இங்கே கேட்கப்பட்டக் கேள்விகள் அனைத்தும், நாம் காந்தி தேசத்துக்காரர்கள், காந்திதான் தனது நாட்டின் தந்தை என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அந்த காந்தி வேறு, இந்த ஊழல் காந்திகள் வேறு என்பதை தெளிவுப்படுத்துவதற்காகத் தான்.
தங்கள் உண்மையுள்ள,

நிதின் குப்தா (ரிவால்டோ)
இளங்கலைத் தொழிற்கல்வி, அய்.அய்.டி
மும்பை.

https://profiles.google.com/118294610711808419417/buzz/WcpWRLQSXEf

ஐயா இதெல்லாம் சாதாரண பாமர மக்களை உசுப்பேற்றுவதற்காக கூறப்பட்ட நாடக வார்த்தைகள். படித்த நீங்கள்இதையெல்லாம் கேட்டுத்  தொலைப்பீர்கள் என்று எனக்கெப்படித் தெரியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.