Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் காலங் கடந்த ஞானம்

Featured Replies

இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை: பிரித்தானிய தூதுவர்

இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை- அந்த ஏற்பாடு போதுமானதும் வலுவானதும் அல்ல என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி வார வெளியீட்டுக்காக அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரித்தானியா புலிகள் நேரடி பேச்சுக்கு தடையில்லை

கேள்வி: பிரித்தானியா விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளமையானது விடுதலைப் புலிகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா?

பதில்: அப்படி ஒரு முட்டுக்கட்டை இருப்பதாக நாம் பார்க்கவில்லை. சமாதான முன்னெடுப்புகளில் விடுதலைப் புலிகளை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவர்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கொள்கையை பிரித்தானியா கொண்டுள்ளது.

கேள்வி: விடுதலைப் புலிகளைப் பிரித்தானியா தடை செய்துள்ளபோதும் பிரித்தானியாவுடன் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கொண்டுள்ள உறவு தொடருமா?

பதில்: அன்ரன் பாலசிங்கம் பிரித்தானியப் பிரஜை. அவர் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமை உண்டு. பிரித்தானியா விடுதலைப் புலிகளை 2001 ஆம் ஆண்டிலேயே தடைசெய்து விட்டது. புலிகளுக்கு எதிரான தடைகொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. அந்த வகையில் புலிகளுக்கு எதிரான தடை பிரித்தானியாவில் அன்ரன் பாலசிங்கம் விடயத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.

அன்ரன் பாலசிங்கம் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகூட இந்த விடயத்தில் பெரியளவில் மாற்றத்தைக் கொண்டுவரும் நிலையில் இல்லை.

பிரித்தானியா இலங்கைக்கு வழங்கிய அரசியலமைப்பு தமிழரை பாதுகாக்கத் தவறிவிட்டது

கேள்வி: இலங்கை பிரித்தானியாவின் காலணியாக 150 வருடங்களுக்கு மேல் இருந்தது. இன்று இலங்கையில் நிலவுகின்ற இன முரண்பாடுகளுக்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த பிரித்தாளும் கொள்கையே காரணமெனக் கூறப்படுகின்றது. இது பற்றி தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: நான் அரசியல்வாதியல்ல என்பதை முதலில் கூறிக்கொள்கிறேன். இலங்கையில் பிரித்தானியரின் பிரித்தாளும் கொள்கை தொடர்பாக சிறிது காலத்திற்கு முன் சில அரசியல்வாதிகளுடன் நான் கலந்துரையாடினேன். பிரித்தானியா விட்ட மாபெரும் தவறு இலங்கையை ஒன்றாக்கியமையே என அவர்கள் கூறினார்கள்.

பிரித்தானியர் 1796 இல் இலங்கைக்கு வந்தபோது இங்கு மூன்று அரசுகள் இருந்தன. பொதுவான நிர்வாக முறைக்கு வசதியாக பிரித்தானியர் இலங்கையை ஒரே நாடாக்கினர்.

1832 கோல்புறுக் சீர்த்திருத்தத்தையடுத்து இலங்கையின் அனைத்து பகுதிகளும் ஒரு நிர்வாக அமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது.

பிரித்தானிய ஆட்சியின் கீழ் உலகின் பாதிக்கு மேற்பட்ட நாடுகளில் பிரித்தாளும் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கைக்கென மட்டும் விஷேடமான கொள்கையாக பின்பற்றப்படவில்லை.

உண்மையில் பிரித்தானியாவை விமர்சிப்பதாயின் ஒரு விடயத்தை முக்கியப்படுத்தி விமர்சிக்கலாம். அது பிரித்தானியா விட்டுச் சென்ற அரசியலமைப்பாகவே இருக்கும். அதாவது பிரித்தானியா இலங்கையை விட்டு வெளியேறும் போது சோல்பரி அரசியலமைப்பை விட்டுச் சென்றது. இந்த அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கென தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவே பிரித்தானியா கருதியது.

குறிப்பாக தமிழர்களின் உரிமைகள் இதன்மூலம் பாதுகாக்கப்படும் என்றே பிரித்தானியா எண்ணியது. ஆனால் அந்த ஏற்பாடு போதுமானதல்லஇ வலுவானதல்ல என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. பிரித்தானியாவின் தாராளக் கொள்கை இவ்வளவு தூரம் பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிட்டன. இதற்காக நான் மனவருத்தமடைகின்றேன்.

பிரித்தானிய மண்ணில் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை பிரித்தானியா கொண்டு வருவதற்கு ஏதுவாக பிரித்தானிய மண்ணில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா?

பதில்: பிரித்தானிய மண்ணில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

அவ்வாறு செய்வதென்பது முட்டாள்தனமான விடயமாகவே அமையும்.

ஆனால் பிரித்தானிய பிரைஜைகள் இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சிக்குப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் பிரித்தானியப் பிரைஜைகள் என்ற வகையில் பிரித்தானியாவின் கவனமும்இ கவலையையும்இ அக்கறையையும் எமது பிரஜைகள் மீது நேரடியாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்புகூட தொண்டர் நிறுவனமொன்றில் பணிபுரியும் பிரித்தானிய பிரஜைகள் இருவர் திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் சிக்கியுள்ளனர்.

எனவே பிரித்தானியப் பிரஜைகள் பாதிக்கப்படுவதை எம்மால் கண்களை மூடிக்கொண்டு பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

பலாத்காரமாக நிதி சேகரிப்பு

இது மாத்திரமல்ல பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகம் நிதி சேகரிக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களால் நிதி வழங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியத் து}துவரின் பதில்களில் மிக நுண்ணறிவு கொண்ட ஒரு இராஜதந்;திரியின் அனுபவமும் திறமையும் தென்படுகின்றது. தமிழரின் இன்றைய பிரச்சனைகளுக்குக் காரணம் பிரித்தானியா விட்டுச்சென்ற சோல்பரி அரசியல் அமைப்பே என்பதை அவர் ஏற்றிருப்பது ஆறுதலளிக்கிறது. இலங்கைக்கு சமாதானத்தை நோக்கி முன்னேற இன்னும் சிலகாலம் தேவையா அல்லது இதுவே அந்தத் தருணமா என்பதை தீர்மானிக்கவேண்டிய பொறுப்பு இலங்கை மக்களுக்கு உள்ளது என்பதை அயர்லாந்தை உதாரணப்படுத்தி மிக அறிவு, அனுபவபுூர்வமாக அவர் சொல்வது சிந்தனைக்குரியது. எப்படியும் ஒரு தீர்வு வந்தேயாகவேண்டும் என்பதில் அவருக்குள்ள நம்பிக்கை எமக்கில்லாததுவே வேதனையான விடயமாகும்.

  • தொடங்கியவர்

அவர் தமிழ்ப் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியை வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கும் வந்து விட முடியாது.

காரணம் இவர்களும் இப்பொழுது அரசியல்வாதிகளைப் போலப் பேசக் கற்றுக்கொண்டு விட்டார்கள்.

எப்படியும் ஒரு தீர்வு வந்தேயாகவேண்டும் என்பதில் அவருக்குள்ள நம்பிக்கை எமக்கில்லாததுவே வேதனையான விடயமாகும்.

காரு., சிங்கள தலைமைப்பற்றி 50 வருடமாக அறிந்தவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை வராது.

நீரும் தூதுவர் போல்புதிது போல் தெரிகிறது. வரலாற்றுப் புத்தகங்களை நேரம் இருந்தால் நூலகத்தில் எடுத்து வாசித்து பார்க்கவும்.

தந்தை செல்வாவின் வாய் போராட்டத்தில் தொடங்கி இன்று பிரபாகரனின் ஆட்லறி யில்வந்து நிற்கிறது நம்பிக்கையீனம்

அவர் தமிழ்ப் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியை வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கும் வந்து விட முடியாது.

காரணம் இவர்களும் இப்பொழுது அரசியல்வாதிகளைப் போலப் பேசக் கற்றுக்கொண்டு விட்டார்கள்.

8) 8) 8) 8) 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.